Monday, September 09, 2013

"அரண்மனை கட்டிக் கொடு!" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1

"Build a Palace" said Krishna! | Sabha Parva - Section 1 | Mahabharata In Tamil

(சபா கிரியா பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் :மயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாதேர் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் [ஜயா] என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், அர்ஜுனனை வழிபட்ட மய தானவன் {Maya Danava}, கரங்கள் கூப்பி இனிமையான வார்தைகளால் தொடர்ந்து அவனிடம் {அர்ஜுனனிடம்},(1) "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நான், கிருஷ்ணன் எனும் பிரவாகத்திலிருந்தும் {ஆற்று வெள்ளம்}, என்னை உட்கொள்ள விரும்பிய பாவகனிடமிருந்தும் (நெருப்பிடமிருந்தும்) உன்னால் காக்கப்பட்டேன். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்" என்று கேட்டான் {மயன்}.(2)

அர்ஜுனன், "ஓ பெரும் அசுரனே {மயனே}, ஏற்கனவே உன்னால் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன (இந்த உனது சலுகையுடன் சேர்த்து). நீ அருளப்பட்டிரு. நீ விரும்பிய இடத்திற்கு செல். நாங்கள் உன்னிடம் எப்படி அன்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறோமோ, அதே போல நீ என்னிடம் அன்பாகவும் திருப்தியுடனும் இரு!" என்றான் {அர்ஜுனன்}.(3)

மயன், "ஓ மனிதர்களில் காளையே {அர்ஜுனனே}, ஓ மேன்மையானவனே, நீ என்ன சொன்னாயோ அதற்கு நீ தகுதி உடையவனே, ஆனால் ஓ பாரதா {அர்ஜுனா}, உனது மகிழ்ச்சிக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.(4) நான் அசுரர்களில் விஸ்வகர்மாவான ஒரு பெரும் கலைஞன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, எனது நிலைக்கேற்ப, நான் உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்" என்றான் {மயன்}.(5)

அர்ஜுனன், "ஓ பாவமற்றவனே {மயனே}, "உடனடி மரணத்திலிருந்து நீ (என்னால்) காக்கப்பட்டதாக கருதுகிறாய். அது அப்படியே இருந்தாலும், நான் எனக்காக உன்னை எதையும் செய்ய வைக்க முடியாது.(6) அதே வேளையில், ஓ தானவா, நான் உனது நோக்கங்களை சலிப்பூட்ட {நிராகரிக்க} விரும்பவில்லை. நீ கிருஷ்ணனுக்கு ஏதாவது செய். அதுவே நான் உனக்கு செய்த சேவைகளுக்கு போதுமான பதிலுதவியாக இருக்கும்" என்றான் {அர்ஜுனன்}.(7)

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மயனால் உந்தப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, மயனிடம் என்ன சாதனையைச் செய்யச் சொல்வது என்று சிறிது நேரம் சிந்தித்தான்.(8) பிரபஞ்சத்தின் தலைவனும், அனைத்து பொருட்களின் படைப்பாளியுமான கிருஷ்ணன், தனது மனத்தில் ஒரு முடிவுக்கு வந்து மயனிடம்,(9) "ஓ திதியின் மகனே {மயனே}, கலைஞர்களில் முதன்மையானவனே, நீதிமானான யுதிஷ்டிரனுக்கு நீ நன்மை செய்ய விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கும்படி, ஒரு சிறப்பு வாய்ந்த {அரண்மனை போன்ற} சபை (கூட்டமன்றம்-Meeting hall) (உன்னால்) கட்டப்படட்டும்.(10) உண்மையில், இந்த மனித உலகில் உள்ள மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கும் போது, கவனத்துடன் பரீட்சித்துப் பார்க்கப்பட்டாலும் போலி செய்ய முடியாதவாறு அந்த அரண்மனையை நீ கட்ட வேண்டும்.(11) மேலும், ஓ மயனே, அந்த மாளிகை தேவ, அசுர, மனித வடிவமைப்புகளின் கலவையாக இருக்குமாறு நீ அதைக் கட்ட வேண்டும்" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட மயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, தேவர்களின் அரண்மனையைப் போன்ற ஒரு உன்னதமான அரண்மனையை உடனடியாக {மனத்தில்} கட்டினான்.(13) பிறகு, இந்த அனைத்து காரியங்களையும் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும், பார்த்தனும் (அர்ஜுனனும்) தெரிவித்து, அவனுக்கு மயனை அறிமுகப்படுத்தி வைத்தனர்.(14) யுதிஷ்டிரன் மயனை உரிய மதிப்புடன் வரவேற்று, அவனுக்குத் {மயனுக்குத்} தகுந்த மரியாதையைச் செய்தான். மேலும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயன் அந்த வரவேற்பை உயர்வாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டான்.(15) ஓ பாரத குலத்தின் ஏகாதிபதியே {ஜனமேஜயா}, திதியின் பெருமைக்குரிய மகனான அவன் {மயன்}, பாண்டுவின் மகன்களுக்கு, தானவ விருஷபர்வனின் கதையை உரைத்தான்.(16) பிறகு அந்த கலைஞர்களில் முதன்மையானவன் {மயன்}, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களுக்கு அரண்மனையைக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.(17) கிருஷ்ணன் மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் அனுமதி பெற்ற பெரும் வீரம் கொண்ட சிறப்பு வாய்ந்த தானவன் {மயன்}, ஒரு அதிர்ஷ்டமான நாளில் அடித்தளத்திற்கான {அஸ்திவாரத்திற்கான} ஆரம்பக்கட்ட சடங்குகளைச் செய்து,(18) நன்கு கற்ற ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு இனிமையான பாலும் அரிசியும் {பாயாசமும்}, பல வகையான ஆடம்பரப் பரிசுகளையும் கொடுத்து நிறைவை ஏற்படுத்தினான்.(19) பிறகு, பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில், அனைத்து பருவ காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ஐயாயிரம் சதுர முழத்தைக் கட்டடத்திற்காக அளந்து எடுத்தான் {மயன்}" {என்றார் வைசம்பாயனர்}.(20)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்