Tuesday, October 01, 2013

மன்னர்களுக்கு மரியாதை செய் - சபாபர்வம் பகுதி 35

Offer Arghya to the kings | Sabha Parva - Section 35 | Mahabharata In Tamil

(அர்க்கியாஹரணப் பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பழையன நினைவுகூரும் நாரதர்; பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் மன்னர்களுக்கு அர்க்கியம் கொடுக்கக் கட்டளையிடல்; யுதிஷ்டிரன் யாருக்கு முதலில் அர்க்கியம்   கொடுப்பது என்று கேட்டல்; பீஷ்மர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கச் சொல்லல்; சகாதேவன் முதல் அர்க்கியத்தை கிருஷ்ணனுக்கு கொடுத்தல்; சேதி நாட்டு மன்னன் கோபப்படல்…..

கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை

வைசம்பாயனர் சொன்னார், "வேள்வியின் இறுதி நாளில் புனித நீரை மன்னன் மேல் தெளிக்க வேண்டிய நேரத்தில்[1], நன்கு மதிக்கப்பட வேண்டிய பிராமண முனிவர்களும், அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களும் சேர்ந்து வேள்வி மண்டபத்தின் உள் இணைப்புக்குள் {யாக சாலைக்குள்} சென்றனர்.(1) அங்கே வசதியாக அமர்ந்த அந்தச் சிறப்புமிக்க முனிவர்கள், நாரதரைத் தங்களில் முதன்மையாகக் கொண்டு, அந்த அறையில் தேவலோக முனிவர்களைப் போலவும், பிரம்மனின் மாளிகையில் அமர்ந்திருந்த தெய்வீக முனிவர்கள் போலவும் அங்கே வீற்றிருந்தனர். அம்முனிவர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்கள் உரையாடல்களைத் தொடங்கினர்.(2,3) இன்னும் சில காலத்தைக் கழிக்க நினைத்த அம்முனிவர்கள், பிரம்மனின் அவையில் அமர்திருந்த தேவர்களைப் போலத் தங்களை நினைத்துக் கொண்டு விவாதத்தை தொடங்கினர், "இஃது இப்படித்தான்"" என்றும், "இஃது இப்படி இல்லை'' என்றும் "இஃதுவும் இப்படித்தான்" "இது வேறுமாதிரியாக இருக்க முடியாது" என்றும் பலர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.(4) 

[1] கும்பகோணம் பதிப்பில், "அபிஷேசனீயமென்னும் ராஜஸூயத்துக்கு அங்கமான ஸோமயாகஞ் செய்யுங்காலத்தில்" என்றிருக்கிறது.

வாதப்போர் புரிந்து கொண்டிருந்தவர்களில் சிலர், தங்கள் பேச்சுத்திறமையால் பலவீனமான கட்சியை பலமானதாகவும், பலமானதை பலமற்றதாகவும் ஆக்கினர்.(5) இறைச்சித்துண்டைத் தூக்கியெறியும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பருந்து அஃது ஆகாயத்தில் இருந்து விழுமுன்னரே அதைப் பிடிப்பது போல, அந்த வாதப் போராளிகள் பெரும் புத்திசாலித்தனத்துடன் எதிராளிகள் பேச்சில் உள்ள குறைகளைக் கண்டு பிடித்துப் பேசினர்.(6) அவர்களில் சிலர் அறவிதிகளிலும், நோன்புகளிலும், பல உரைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் அவர்களது பேச்சு இனிமையாக இருந்தது.(7) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, வேள்வி மேடையானது, தேவர்களாலும், பிராமணர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டு, விண்ணில் பதிக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களைப் போல பெரும் அழகுடன் இருந்தது.(8) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அந்தப் பீடத்தின் அருகில் சூத்திரரோ, நோன்பு நோற்காதவரோ எவரும் இல்லை.(9) வேள்வியால் பிறந்த செல்வத்தை அடையும் யுதிஷ்டிரனின் நற்பேற்றைக் கண்ட நாரதர், பெரிதும் நிறைவடைந்தார்.(10) அந்த க்ஷத்திரியர்களின் பெரும் கூட்டத்தைக் கண்ட நாரத முனிவர், ஓ மனிதர்களின் மன்னா {ஜனமேஜயா}, சிந்தனையில் ஆழ்ந்தார்.(11) ஓ மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவர் {நாரதர்} பழங்காலத்தில் பிரம்மனின் மாளிகையில்,[2]அனைத்து தேவர்களின் உயிர் பகுதிகளும் பூமியில் அவதரித்திருப்பது குறித்து தான் கேள்விப்பட்டதை நினைத்துப் பார்த்தார்(12). ஓ குரு குலத்தின் மகனே {ஜனமேஜயா}, அந்தக் கூட்டம் (அவதாரம் செய்திருக்கும்) தேவர்களின் கூட்டம் என்பதை அறிந்த நாரதர், தனது மனத்தில் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய ஹரியை {விஷ்ணுவை} நினைவுகூர்ந்தார்.(13) 

[2] பார்க்க: அவதாரங்களின் உயிர்பகுதிகள்- ஆதிபர்வம் பகுதி – 67 ஆ

அனைத்துப் பொருட்களையும் படைத்தவனும், அனைத்து தேவர்களிலும் மேன்மையானவனுமான நாராயணன், தேவர்களை அழைத்து, "பூமியில் நீங்கள் பிறந்து, ஒருவரை ஒருவர் கொன்று, மீண்டும் விண்ணுலகம் வாருங்கள்" என்று கட்டளையிட்ட நாராயணன், அந்த தேவர்களின் எதிரிகளைக் கொல்பவன், எதிரி நகரங்களை அடக்குபவன், தனது வாக்கைத் தானே காக்க, க்ஷத்திரிய குலத்தில் பிறந்திருக்கிறான் என்பதை நாரதர் அறிந்திருந்தார்.(14,15) அண்டத்தின் தலைவனான சம்பு என்று அழைக்கப்படும் மேன்மையான புனிதமான நாராயணன், தேவர்களுக்கு இப்படி ஆணையிட்டு, தானும் யது குலத்தில் பிறந்து, குலத்தை தழைக்க வைப்பதில் முதன்மையானவனாக இருந்தான் என்பதையும்,(16) பெரும் நற்பேறு பெற்ற அந்தக-விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} அவதரித்து, நட்சத்திரங்களுக்கு மத்தியில் மின்னும் சந்திரனைப் போல இருக்கிறான் என்பதையும் நாரதர் அறிந்திருந்தார்.(17) 

எதிரிகளை வாட்டுபவனும், தனது கரத்தின் வலிமைக்காக இந்திரனுடன் கூடிய தேவர்களால் எப்போதும் புகழப்படுபவனுமான ஹரி {விஷ்ணு}, மனித வடிவில் இந்தப் பூமியில் வாழ்கிறான் என்பதையும் நாரதர் அறிந்திருந்தார்.(18) தானே தோன்றியவனான அவனே, பெரும் பலம் கொண்ட இந்த க்ஷத்திரியக் கூட்டத்தை பூமியில் இருந்து எடுத்துக் கொள்வான் என்றும், வேள்வியில் அனைவராலும் வழிபடப்படும் எல்லையற்ற பேரறிவாளனான ஹரியே அல்லது நாராயணனே ஒப்பற்ற தலைவன் என்றும் அறிந்திருந்தார். பெரும் புத்திக்கூர்மையை கொடையாகக் கொண்ட நாரதர், அனைவரிலும் முதன்மையானவர், அறமறிந்தவர், இவையாவும் நினைத்துப் பார்த்து, அந்த ஞானமுள்ள மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியில் அதிர்ச்சிகர உணர்வுகளுடன் அமர்ந்திருந்தார்.(19-21)

பிறகு பீஷ்மர், ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனிடம், "ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப மன்னர்களுக்கு அர்க்கியம் (மரியாதைக்குரிய பொருள்) வழங்கப்படட்டும்.(22) ஓ யுதிஷ்டிரா! கேட்பாயாக. குரு, வேள்விப் புரோகிதர், உறவினர், ஸ்நாதகர், நண்பர், மன்னர், ஆகிய அறுவரும் அர்க்கியம் பெற தகுதியுடையவர்கள். இவர்களில் யாரும் ஒருவனுடன் ஒரு முழு வருடத்திற்கு இருப்பாரானால், அவர் அர்க்கியம் கொடுத்து வழிபடத்தகுந்தவரே. இந்த மன்னர்கள் நம்முடன் சில காலமாக தங்கி வருகின்றனர். எனவே, ஓ மன்னா, இவர்கள் அனைவருக்கும் கொடுக்க இங்கே அர்க்கியம் கொண்டு வரப்படட்டும். இங்கு இருப்பவர்களிலேயே முதன்மையானவருக்கு முதல் அர்க்கியம் கொடுக்கப்படட்டும்" என்றார் {பீஷ்மர்}.(23-25)

பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ பாட்டா {பீஷ்மரே}, ஓ குரு குலத்தவரே, இங்கிருப்பவர்களில் யார் முதன்மையானவர் என்பதையும், யாருக்கு நம்மால் அர்க்கியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(26)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, சந்தனுவின் மகன் பீஷ்மர், தனது புத்திகூர்மையால், கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன் என்பதைத் தீர்மானித்து,(27) "(கிருஷ்ணன் என்ற பொருளில்) ஒளிர்வனவற்றில் சூரியனைப் போல தனது சக்தியாலும், பலத்தாலும், ஆற்றலாலும் நம்மிடையே ஒளிர்பவன் இவன்.(28) சூரியனற்ற பகுதியில் சூரியன் இருப்பது போலவோ அசைவற்ற இடத்தில் திடீர்த் தென்றலைப் போலவோ அவனாலேயே நமது இந்த வேள்வி மேடை பிரகாசமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது" என்றார்.(29) 

பீஷ்மரால் ஆணையிடப்பட்டவனும், பேராற்றல் கொண்டவனுமான சகாதேவன், அற்புதமான பொருட்களின் கலவையான முதல் அர்க்கியத்தை விருஷ்ணி குலத்தின் கிருஷ்ணனுக்குக் கொடுத்தான்.(30) கிருஷ்ணனும் முறைப்படி அதை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வழங்கப்பட்ட வழிபாடுகளைக் கண்டு சிசுபாலனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(31) பலம் வாய்ந்த அந்த சேதி நாட்டு மன்னன், சபையின் மத்தியில் பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் வசைபாடியபிறகு, வாசுதேவனைப் {கிருஷ்ணனை} பழிக்கத் தொடங்கினான்"[3] {என்றார் வைசம்பாயனர்}.(32)

[3] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "மஹாபலசாலியான அந்தச் சிசுபாலன், ஸபையில் பீஷ்மரையும், தர்மராஜரையும் இகழ்ந்து கிருஷ்ணனைத் தூஷித்தான். அவர்களுடைய இங்கிதத்தையும், கருத்தையுமறிந்த ஸஹதேவன் கோபித்தான். அபிமானமுள்ளவர்களும், பலசாலிகளுமான அரசர்களுக்கு முன் ஸஹதேவன் பாதத்தைத் தூக்கிக் காண்பித்தபோது ஸஹதேவன் தலையில் பெரும் பூமாரி பொழிந்தது. பிறந்ததுமுதல் யாதவர்களுக்கு விரோதியான சிசுபாலன் சொல்லலானான். "கேட்டவன் குற்றமுள்ள கர்ப்பத்தில் {அன்னிய புருஷ ஸம்பந்த்தாலுண்டான கர்ப்பம்} பிறந்த அரசன்; அரசன்; மறுமொழி சொன்னவன் {எப்போதும் தாழ்ந்த இடத்திற்குச் செல்லும்} நதியின் மகன்; பூஜையைப் பெற்றுக் கொண்டவன் இடையன்; கெடுத்தவன் குற்றமுள்ள கர்ப்பத்தில் பிறந்தவன். இங்குள்ள ஸபையோரனைவரும் ஊமை போலிருக்கின்றனர். என்ன சொல்வது?" என்றான். அவன் இவ்வாறு சொல்லி நகைத்து உடனே தர்மராஜாவை நோக்கி மறுபடியும் பேசலானான், "பாண்டவனே, பூஜைக்குரிய மற்றவர்களிருக்க இடையனைப் பூஜித்தையே. நீ அவனை எல்லோருக்கும் மேற்பட்டவனாகப் பார்க்கிறாயா? மற்றவர்களைப் பார்க்கவேயில்லையா? நண்பனே, அதிகமாகப் பார்ப்பதும், பாராமலிருப்பதும் இவ்விரண்டும் காரியத்தைக் கெடுப்பவைகள்; இவற்றுள் நீ எடையெடுத்துக் கொண்டாய்" என்றிருக்கிறது. கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் இந்தப் பகுதி இல்லை.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்