Wednesday, October 02, 2013

சிசுபாலன் நிந்தனை - சபாபர்வம் பகுதி 36

Sisupala reproving| Sabha Parva - Section 36 | Mahabharata In Tamil

(அர்க்கியாஹரணப் பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : சிசுபாலன் யுதிஷ்டிரனையும், பீஷ்மரையும், கிருஷ்ணனையும் நிந்தித்தல்….

Sishupala reproving Krishna

சிசுபாலன், "ஓ குரு குலத்தவனே, இந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் இந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, ஒரு மன்னனைப் போன்ற அரச வழிபாட்டுக்குத் தகுதியற்றவன்.(1) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தாமரைபோன்ற கண்களை உடைய இவனை {கிருஷ்ணனை} வலிந்து வழிபடும் இந்நடத்தை சிறப்பு மிக்க பாண்டவர்களுக்குத் தகாதது.(2) பாண்டுவின் மகன்களே, நீங்கள் குழந்தைகளாக இருக்கிறீர்கள். அறம் மிக நுட்பமானதென்பதால், நீங்கள் அஃதை அறியவில்லை. கங்கையின் மகன் பீஷ்மரும் குறைந்த அறிவுடனேயே இருக்கிறார். அதனால் தான் (உனக்கு இப்படி அறிவுரை வழங்கி) அறவிதிகளை மீறி நடக்கிறார்.(3) ஓ பீஷ்மரே, உம்மைப்போல அறம் மற்றும் ஒழுக்கத்தை அறிந்தும் விருப்பப்படி {இஷ்டப்படி} நடப்பவன், நேர்மையானவர்கள் மற்றும் ஞானவான்களுக்கு மத்தியில் இருந்து விலக்கப்பட வேண்டியவனாவான்.(4) ஒரு மன்னனாகக் கூட இல்லாத இந்த தசார்ஹா குலத்தவன் இந்த மன்னர்களுக்கு மத்தியில் எப்படி இந்த வழிபாட்டை ஏற்கலாம்? மேலும் அவன் எப்படி உம்மால் வழிபடப்படலாம்?(5)

ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணன் வயதில் மூத்தவன் என்று நீ மதிப்பிட்டிருந்தால், இதோ வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை} இருக்கிறார், எப்படி அவர் {வசுதேவர்} முன்னிலையில் அவரது மகனை {கிருஷ்ணனை} நீ வழிபடலாம்?(6) வாசுதேவனை {கிருஷ்ணனை} உன் நலம் விரும்பியாகவோ, ஆதரவாளனாகவோ மதிப்பிட்டிருந்தால், இதோ துருபதன் இருக்கிறார்; எப்படி மாதவன் {கிருஷ்ணன்} (முதல் மரியாதையான) வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான்?(7) ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணனை குருவாக மதிக்கிறாயா? துரோணர் இங்கிருக்கும்போது விருஷ்ணி குலத்தவன் எப்படி வழிபடப்படலாம்?(8)

ஓ குருவின் மகனே, கிருஷ்ணனை ரித்விஜனாக மதிக்கிறாயா? துவைபாயனர் {வியாசர்} இங்கிருக்கும்போது கிருஷ்ணன் உம்மால் எப்படி வழிபடப்படலாம்?(9) சந்தனுவின் மகனும், விரும்பிய போது இறக்கும் வரம் பெற்றவருமான கிழவன் பீஷ்மர் இங்கிருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(10) ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த வீரன் அஸ்வத்தாமன் இருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(11) மனிதர்களில் முதன்மையானவனும், மன்னர்களின் மன்னனுமான துரியோதனனும், பாரத இளவரசர்களின் குருவான கிருபரும் இங்கிருக்கும்போது, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(12)  ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, கிம்புருஷர்களின் குரு துருமனையும் தாண்டி கிருஷ்ணன் ஏன் வழிபடப்பட்டான்? ஒப்பற்ற பீஷ்மகனும், அனைத்து நற்குறிகளும் கொண்ட மன்னன் பாண்டியனும், மன்னர்களில் முதன்மையான ருக்மியும், ஏகலவ்யனும்[1], மத்ர மன்னன் சல்யனும் இங்கிருக்கும்போது, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} நீ ஏன் கிருஷ்ணனுக்கு முதல் வழிபாட்டைச் செலுத்தினாய்?(13,14) 

[1] யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியில் ஏகலவ்யனும் கலந்து கொண்டிருக்கிறான்.

அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் தனது பலத்தைக் குறித்து செருக்கு கொண்டவனும், பெரும் பலத்துடன் கூடியவனும், பல மன்னர்களைத் தனது சொந்த பலத்தால் மட்டுமே வென்றவனும், பிராமணர் ஜமதக்னேயரின் {பரசுராமரின்} விருப்பத்திற்குரிய சீடனுமான கர்ணன் இருக்கிறான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவனையும் தாண்டி நீ ஏன் முதல் வணக்கத்தை கிருஷ்ணனுக்குச் செலுத்தினாய்?(15,16) 

மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் / கிருஷ்ணன்}, வேள்விப் புரோகிதனும் அல்ல, குருவும் அல்ல, மன்னனும் அல்ல. இவற்றை எல்லாம் அறிந்தும், ஓ குருக்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, என்ன லாபத்தைக் கருதி நீ இக்காரியத்தைச் செய்தாய்?(17) ஓ பாரதா {யுதிஷ்டிரா} மதுசூதனனுக்கு முதல் மரியாதை செய்வதுதான் உனது விருப்பமென்றால், இத்தனை மன்னர்களை இங்கே அழைத்து அவர்களை ஏன் அவமதித்தாய்?(18) குந்தியின் சிறந்த மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அச்சத்தாலோ, லாப விருப்பத்தாலோ சமாதானத்தால் வெல்லப்பட்டோ நாங்கள் கப்பம் கட்டவில்லை.(19) மறுபுறம் ஏகாதிபத்திய மாட்சிமைக்கான அவனது {யுதிஷ்டிரனின்} விருப்பத்தில் இருந்த அற நோகத்திற்காகவே கொடுத்தோம். அப்படியிருந்தும் அவன் {யுதிஷ்டிரன்} எங்களை அவமதித்து விட்டான்.(20) 

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வேறு எந்த செயலால் எங்களை இவ்வளவு அவமதிக்க முடியும்? திரண்டிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில் அரச லட்சணம் இல்லாத கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை வழங்கபட்டதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?(21) உண்மையில் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அறத்துக்கான பொது மதிப்பைக் காரணமே இல்லாமல் அடைந்திருக்கிறான். இல்லையென்றால் தகுதியில்லாத ஒருவனுக்கு மரியாதை செய்து அறத்தின்கண் வீழ்வானா?(22) விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} பிறந்த இந்த இழிந்தவன் {கிருஷ்ணன்}, நியாயமற்ற முறையில் மன்னன் ஜராசந்தனைக் கொன்றான்.(23) யுதிஷ்டிரன் நேர்மையைக் கைவிட்டுவிட்டான். அர்க்கியத்தை {தீர்த்தத்தை} முதலில் கிருஷ்ணனுக்குக் கொடுத்து தனது அற்பத்தனத்தைக் காட்டிவிட்டான்.(24) 

ஓ ஜனார்த்தனா, ஆதரவற்ற குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்சம் கொண்டவர்களாகவும், அற்பர்களாகவும் இருக்கிறார்கள். ஓ மாதவா {கிருஷ்ணா}, உனக்கு முதல் மரியாதை செய்யும் போது, அதற்கு நீ தகுதியில்லாதவன் என்று அவர்களுக்கு நீயாவது சொல்லியிருக்க வேண்டாமா?(25) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அற்பமான இளவரசர்களால் {பாண்டவர்களால்} கொடுக்கப்படும் போதும், உனக்குத் தகுதியில்லாத மரியாதையை ஏன் நீ ஏற்றாய்?(26) தூய்மையாக்கப்பட்ட நெய் கிடைக்கப்பட்ட நாய், அதைத் தனிமையில் உண்பதைப் போலவே உனக்குத் தகுதியில்லாததை ஏற்றுக் கொண்டு பெரும் மரியாதை கிடைத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.(27) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதில் இந்த ஏகாதிபதிகளுக்கு எந்த அவமானமுமில்லை; மறுபுறம் நீயே குருக்களை {கௌரவர்களை} அவமதித்து இருக்கிறாய்.(28) நிச்சயமாக, ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா / கிருஷ்ணா}, ஆண்மையைற்றவனுக்கு மனைவி எவ்வாறானவளோ, கண்ணில்லாதவனுக்கு அற்புதமான காட்சி எவ்வாறானதோ,  மன்னனல்லாத உனக்கு செய்யப்பட்ட அரச வழிபாடும் அவ்வாறானதேயாகும்.(29) யுதிஷ்டிரன் யார் என்பதும், பீஷ்மன் யார் என்பதும் காணப்பட்டது. இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} யார் என்பதும் காணப்பட்டது. நிச்சயமாக, அவரவர்கள் எப்படியோ அப்படியே காணப்பட்டது" என்றான் {சிசுபாலன்}.(30) 

இந்த வார்த்தைகளைப் பேசிய சிசுபாலன், தனது சிறந்த இருக்கையில் இருந்து எழுந்து, மன்னர்களையும் அழைத்துக் கொண்டு, சபை விட்டு வெளியேறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்