Saturday, December 21, 2013

அர்ஜுனனின் கடும் தவம் - வனபர்வம் பகுதி 38

Arjuna's fierce austerity | Vana Parva - Section 38 | Mahabharata In Tamil

(கைராத பர்வம்)

அர்ஜுனன் கடுந்தவத்தை மேற்கொள்வது; அந்த தவத்தால் ஏற்படும் அனலைத் தாங்க முடியாமல் முனிவர்கள் அனைவரும் பரமசிவனிடம் சென்று அர்ஜுனன் குறித்து முறையிடுவது; பரமசிவன் தக்கது செய்வதாக வாக்களிப்பது.

*ஜனமேஜயன் சொன்னான், "ஓ சிறந்தவரே {வைசம்பாயணரே}, களங்கமற்ற சாதனைகள் கொண்ட அர்ஜுனன் ஆயுதங்கள் அடைந்த வரலாற்றை நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். மனிதர்களில் புலியான பெரும் பலம் வாய்ந்த கரங்களும், பெரும் சக்தியும் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தக் கானகத்தில் தனிமையாக எப்படி நுழைந்தான். வேதமறிந்தவர்களில் முதன்மையானவரே, அங்கே வசிக்கும்போது அர்ஜுனன் என்ன செய்து கொண்டிருந்தான்? சிறப்பு வாய்ந்த ஸ்தானுவும், தேவர்கள் தலைவனும்  அவனால் {அர்ஜுனனால்} எப்படி திருப்திசெய்யப்பட்டார்கள்? ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவரே, உமது உதவியால் நான் அவற்றைக் கேட்க விரும்புகிறேன். நீரே அனைத்தையும் அறிந்தவர்; தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் நீர் அறிவீர். ஓ அந்தணரே, பழங்காலத்தில் தோல்வியைக் கண்டிராத தாக்குபவர்களில் முதன்மையான அர்ஜுனனுக்கும், பவாவுக்கும் இடையில் நடைபெற்ற பெருமளவில் இயல்புக்கு மிக்க, இணையற்ற போரைக் குறித்துச் சொல்லும். அதைக் கேட்கும் போது மயிர்க்கூச்சம் ஏற்பட்டு விரைத்துக் கொள்ளும். மனிதர்களில் சிங்கம் போன்றவர்களின் இதயங்களும், பிருதையின் {குந்தியின்} வீர மைந்தர்களின் {பாண்டவர்களின்} இதயங்களும் கூட, இதைக்கேட்டவுடன், தங்கள் தாழ்மையை உணர்ந்து ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியால் நடுக்கமுற்றன. அர்ஜுனன் வேறு என்னவெல்லாம் செய்தான் என்று எனக்கு முழுமையாகச் சொல்லும். ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} வரலாற்றைக் கேட்கும்போது மிகச்சிறிய அளவுகூட நிந்திக்கப்படத்தக்க செயல்கள் எனக்குத் தெரியவில்லை. ஆகையால் அந்த வீரனின் வரலாற்றை முழுமையாக எனக்குச் சொல்லும்," {என்றான் *ஜனமேஜயன்}


வைசம்பாயனர் சொன்னார், "ஓ குருக்களில் புலியே {ஜனமேஜயனே}, அற்புதமானதும், நீளமானதும், நிகரற்றதுமான அந்த சிறந்த வீரன் சம்பந்தமானதை நான் உனக்கு விவரிப்பேன். ஓ பாவங்களற்றவனே, குறிப்பாக, தேவர்களுக்குத் தேவனான முக்கண்ணனை {சிவனை} அர்ஜுனன் சந்தித்தது தொடர்பாகவும், அந்த சிறந்த தேவனுடன் அவனுக்கு ஏற்பட்ட மோதலையும் பற்றி கேள்.

"யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அளவற்ற வீரம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} தேவர்களின் தலைவனான சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனான சங்கரரையும் {சிவனையும்) பார்க்கக் (காம்யக வனத்தைவிட்டு) கிளம்பினான். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட பலம் வாய்ந்த அர்ஜுனன், தனது நோக்கம் வெற்றியடைவதற்காக தெய்வீக வில், தங்கப்பிடி கொண்ட வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வடக்கே இமயம் நோக்கி சென்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}, மூவலகத்திலும் போர்வீரர்களில் முதன்மையான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, அமைதியான மனமும், காரியங்களில் உறுதியும் கொண்டு தன்னை முழுதாக அக்காரியத்திற்கு அர்ப்பணித்து நேரத்தை இழக்காமல் தவ நோன்புகள் நோற்றான். முட்செடிகளும், மரங்களும், மலர்களும், பலதரப்பட்ட பழங்களும் நிறைந்த, பலவகையான் சிறகு கொண்ட உயிரினங்கள் வசித்த, பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் உலவும், சித்தர்களும் சாரணர்களும் ஓய்ந்திருக்கும் பயங்கரமான கானகத்துள் அவன் {அர்ஜுனன்} தன்னந்தனியாக நுழைந்தான். மனிதர்களற்ற அந்த வனத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} நுழைந்த போது, சொர்க்கத்தில் சங்கநாதங்களும், பேரிகைகளும் கேட்கப்பட்டன. அடர்த்தியான பூமழை பூமியின் மீது விழுந்தது. வானத்தில் பரவிய மேகங்கள் கனமான நிழலை உண்டாக்கின. பெரும் மலைகளின் அடிவாரத்தில் இருந்த அந்தக் கடினமான வனப்பகுதிகளைத் தாண்டிய அர்ஜுனன், விரைவில் இமயத்தின் மார்பை அடைந்தான். அங்கே சிறிது நேரம் தங்கி பிரகாசிக்க ஆரம்பித்தான். அங்கு சிறகுள்ள பாடகர்கள் {பறவைகளின்} இனிய இசையைக் கேட்டான். ஏராளமான விரிவடைந்த பசுமையான மரங்களையும் கண்டான். கடுமையான எதிர் சுழிப்புகளால் ஆங்காங்கே முறிந்த, வைடூரியம் போன்ற நீர்ச்சுழல்கள் கொண்ட நதிகளையும் கண்டான். அந்த நதிகளில் அன்னங்களும், வாத்துகளும், கொக்குகளும் இசையை எதிரொலித்துக் கொண்டு சென்றன. அந்த நதிக்கரைகளில் ஆண் கோகிலப் பறவைகளின் {குயில்களின்} பொங்கி வரும் கீதமும், மயில்கள் மற்றும் கொக்குகளின் இனிய இசையும் நிறைந்திருந்தது. அந்தப் பெரும்பலம்வாய்ந்த போர் வீரன் {அர்ஜுனன்}, சுத்தமான, புனிதமான, அருந்துவதற்கு சுவையான அந்த நதிகளையும், அழகான அதன் கரைகளையும் கண்டு மிகவும் மகிழ்ந்தான். அப்படி மகிழ்ந்த கடும் சக்தி கொண்ட உயர்ந்த ஆன்மாவான அர்ஜுனன், அந்த மகிழ்ச்சிகரமான கானகப் பகுதியில் தன்னை கடுமையான தவத்திற்கு அர்ப்பணித்தான்.

கரிய மான் தோலையும், ஒரு குச்சியையும் கொண்ட புல்லாலான கந்தலுடை அணிந்து, தரையில் உதிர்ந்து விழும் இலைகளை உண்டிருந்தான். மூன்று இரவுகளுக்குள்ளான இடைவெளியில் பழங்கள் உண்டு தனது முதல் மாதத்தைக் கடத்தினான். இரண்டாவது மாதத்தை ஆறு நாள்களுக்கு ஒரு முறை உண்டும், மூன்றாவது மாதத்தை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உண்டும் கடத்தினான். நான்காவது மாதம் வந்தது. அப்போது பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.

பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, "பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்" என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, "பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்" என்றார் {சிவன் பெருமான்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "உண்மை பேசும் அந்த முனிவர்கள், மகாதேவனின் {சிவனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
***************************************************************************
*ஜனமேஜயன்
"மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ

*விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன். அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்தே இந்த மகாபாரதம். வைசம்பாயனர் உரைத்ததை கேட்ட புராணங்களில் சிறந்த ஞானம் கொண்ட “சௌதி” என்பவர் நைமிசாரண்யம் சென்று அங்கு கூடியிருந்த முனிவர்களுக்கும் தவசிகளுக்கும் உரைத்ததே நாம் இன்று படிக்கும் இந்த மகாபாரதம்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்