Monday, December 23, 2013

எவரும் அறியா பாசுபதம் உனதே! - வனபர்வம் பகுதி 40

Unknown Pasupata  is yours! | Vana Parva - Section 40 | Mahabharata In Tamil

(கைராத பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனனின் முற்பிறவியை எடுத்துக் கூறிய சிவன், அவனை வரம் கேட்க பணித்தல்; அர்ஜுனன் பிரம்மசிரம் வேண்டுதல்; சிவன் அர்ஜுனனுக்கு பாசுபதத்தை அளித்தல்; ஏற்கனவே பறித்த காண்டீவத்தையும் அளித்து, விண்ணுலகம் செல்லப் பணித்தல்...

மகாதேவன் {சிவன்} சொன்னான், "உனது முற்பிறவியில் நீ நாராயணனின் நண்பனான நரனாக இருந்தாய். பதரியில் [1] ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ கடுந்தவத்தில் இருந்தாய். உன்னிலும், ஆண்மக்களில் முதன்மையான விஷ்ணுவிலும் பெரும் பலம் வசிக்கிறது. நீங்கள் இருவரும் உங்கள் பலத்தால் இந்த முழு அண்டத்தையும் தாங்குகிறீர்கள். ஓ தலைவா {அர்ஜுனா},  உனது கடுமையான வில்லின் நாணொலி சத்தம் . நீயும், கிருஷ்ணனும், இந்திரனின் முடிசூட்டலின் போது தானவர்களைத் தண்டித்தீர்கள்.

[1] இங்கு பதரி என்று குறிக்கப்படுவது, பத்ரிநாத் ஆகும்.  பத்ரிநாத் நரன் மலை, நாராயணன் மலை என்ற இரு சிகரங்களுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு ஆகும். இதன் வழியாகவே பாண்டவர் சொர்க்கம் சென்றனர். பத்ரி நாத்தில் திரௌபதி இறந்து வீழ்ந்தாள். இங்கு அமர்ந்தே வியாசர் மஹாபாரதம் சொன்னதாகவும், அருகில் ஓடிய சரஸ்வதி நதியை சத்தமிடாமல் இருக்கச் சொல்ல நதி பூமிக்கடியில் சென்று பிறகு குகைவழியாய் வெளிப்பட்டு அலக்நந்தாவில் கலக்கிறது.

ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, உனது கைகளுக்குப் பொருந்தும் இந்த வில்லான காண்டீவம் அப்போதும் உன் கையில் இருந்தது. ஓ ஆண்மக்களில் முதன்மையானவனே, எனது மாய சக்தியைப் பயன்படுத்தியே நான் அதை {காண்டீவத்தை} உன்னிடம் இருந்து பறித்தேன். ஓ பிருதையின் {குந்தியின்}  மகனே {அர்ஜுனா}, உனக்குச் சரியாகப் பொருந்தும் இந்த இரட்டை அம்பறாத்தூணிகள் மீண்டும் வற்றாததாக ஆகும். ஓ குரு குலத்தின் மகனே {அர்ஜுனா}, உனது உடல், வலியில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடும். உனது வீரம் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கும். நான் உன்னிடம் திருப்தி கொண்டுள்ளேன். ஓ ஆண்மக்களில் முதல்வனே, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். ஓ அனைத்து எதிரிகளையும் தண்டிப்பவனே, ஓ சரியான (தகுதி வாய்ந்தவர்களுக்கு) மரியாதை கொடுப்பவனே, உனக்கு ஈடான ஆண்மகன் தேவலோகத்தில் கூட இல்லை. எந்த க்ஷத்திரியனும் உன்னைவிட மேன்மையானவன் இல்லை" என்றார் {சிவ பெருமான்}.

அர்ஜுனன் சொன்னான், "ஓ காளையைக் குறியீடாகக் கொண்டிருக்கும் சிறப்புமிக்க தெய்வமே, நீ நான் விரும்புவதை அருள்வதாக இருந்தால், ஓ தலைவா, உன்னால் தாங்கப்படும் தெய்வீகமான ஆயுதமான பிரம்மசிர ஆயுதத்தைப் பெற விரும்புகிறேன். யுக முடிவில் மொத்த அண்டத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அந்த ஆயுதத்தின் துணை கொண்டு, ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, நான் ஒரு புறமும், கர்ணன், பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணர் ஆகியோர் மறு புறமும் நின்று கடும்போரிடும்போது உமது கருணையால் நான் வெற்றியை அடைவேன். தானவர்கள், ராட்சசர்கள், தீய ஆவிகள், பிசாசுகள், கந்தர்வர்கள், நாகர்கள் என அனைவரையும் உட்கொள்ளும் அந்த ஆயுதத்தை ஏவும் போது அதில் இருந்து ஆயிரக்கணக்கான கடும் கதாயுதங்களும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் உற்பத்தி செய்யும். அந்த ஆயுதத்தைக் கொண்டு நான் பீஷ்மர், துரோணர், கிருபர், எப்போதும் இழிவாகவே பேசும் கர்ணன் ஆகியோருடன் நான் போரிடுவேன். ஓ பகனின் கண்களை அழித்த சிறப்புமிக்கவனே, அவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெறுவதே எனது முதன்மையான விருப்பமாகும்" என்றான்.

பவன் {சிவன்}, "ஓ பலம் மிக்கவனே {அர்ஜுனனே},  எனக்குப் பிடித்த எனது ஆயுதமான பாசுபதத்தை {பாசுபதாயுதத்தை} நான் உனக்குத் தருகிறேன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ அதைத் தாங்கவும், விடுக்கவும், திரும்பப்பெறவும் தகுதி வாய்ந்தவன். தேவர்கள் தலைவனோ {இந்திரனோ}, யமனோ, யக்ஷர்களின் மன்னனோ, வருணனோ அல்லது வாயுவோ இது குறித்து {இந்த ஆயுதம் குறித்து} அறியமாட்டார்கள். அப்படி இருக்கும்போது மனிதர்கள் இதுகுறித்து எவ்வாறு அறிவார்கள்? ஆனால், ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, பலம் குறைந்த எதிரியின் மேல் இதை விடுத்தால் இந்த முழு அண்டமும் அழிந்துவிடும். ஆகையால், சரியான காரணம் இல்லாமல் இந்த ஆயுதத்தை விடுக்கக்கூடாது. இந்த மூன்று உலகிலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில், இந்த ஆயுதத்தால் அழிக்க முடியாதவர் யாரும் இல்லை. இந்த ஆயுதத்தை மனதாலும், கண்ணாலும், வார்த்தைகளாலும், வில்லாலும் தொடுக்கலாம்" என்றார் {சிவ பெருமான்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பிறகு அண்டத்தின் தலைவனை {சிவபெருமானை} அணுகி, மிகவும் கவனத்துடன், "எனக்கு அதை உணர்த்தும்" என்றான். பிறகு மகாதேவன் {சிவன்}, யமனின் சீற்றத்துடன் கூடிய அந்த ஆயுத ஞானத்தை பாண்டுவின் மகன்களில் சிறந்தவனுக்கு {அர்ஜுனனுக்கு}, அதைத் தொடுப்பது திரும்பப் பெறுவது ஆகிய புதிர்களுடன் கொடுத்தான். பிறகு அந்த ஆயுதம், இதற்கு முன் உமையின் தலைவனான சங்கரனிடம் காத்திருந்தது போல அர்ஜுனனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. அர்ஜுனன் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.

அந்தக் கணத்தில் மலைகள், சோலைகள், மரங்கள், கடல்கள், கானகங்கள், கிராமங்கள், நகரங்கள், சுரங்கங்களுடன் கூடிய முழு உலகமும் நடுங்கியது. ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள், துந்துபி ஆகியவற்றின் ஒலி கேட்டது. அந்தக் கணத்தில் சூறாவளியும் சுழற்காற்றும் வீசத்தொடங்கியது. அளவற்ற சக்தி கொண்ட அர்ஜுனனிடம் தங்கி அந்த ஆயுதத்தின் சீற்றத்தைக் கண்டு தேவர்களும், தானவர்களும் அஞ்சினர். அளவற்ற சக்தி கொண்ட பல்குனனின் {அர்ஜுனனின்} உடலில் இருந்த அனைத்துத் தீமைகளையும், தனது தீண்டலால் அந்த முக்கண் தெய்வம் {சிவன்} விரட்டினான். அந்த முக்கண் தெய்வம் அர்ஜுனனிடம் "விண்ணுலகம் செல்"  என்று கட்டளையிட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு, அர்ஜுனன் அந்த தெய்வத்தை வழிபட்டு, தலைவணங்கி, கரங்கள் கூப்பி அவனைப் {சிவனைப்} பார்த்தான். பிறகு, தேவலோகவாசிகளின் தலைவன் {சிவன்}, மலையின் மார்பில் தனது வசிப்பிடத்தை வைத்திருக்கும் அந்தப் பிரகாசமிக்க தெய்வம், அந்த உமையின் கணவன், ஆசைகளை முழு கட்டுக்குள் வைத்திருந்து அனைத்து அருளுக்கு ஊற்றக்கண்ணாக இருக்கும் அந்த தெய்வமான பவன் {சிவன்}, தானவர்களையும் பிசாசுகளையும் அழிக்கவல்ல காண்டீவம் என்ற வில்லை மனிதர்களில் முதன்மையான அர்ஜுனனுக்குக் கொடுத்தான். அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பனி நிறைந்த சமவெளிகளையும்,  குகைகளையும், சாய்வான நிலங்களையும், தன்னகத்தே கொண்டு, வானத்தில் உலவும் பெரும் முனிவர்களுக்கு ஓய்விடமாக இருக்கும் அந்த மலையை விட்டு, அந்த தேவர்களுக்குத் தேவன் {சிவன்} உமையுடன் சேர்ந்து வானத்தில் உயர்ந்து சென்றான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்