Friday, December 27, 2013

அர்ஜுனனின் சாதனைகள் அற்புதமானவை! - வனபர்வம் பகுதி 49

The feats of Arjuna are marvelous! | Vana Parva - Section 49 | Mahabharata In Tamil

(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)

திருதராஷ்டிரன் சொன்ன துரியோதனின் தீய நடத்தைகளை சஞ்சயன் ஆமோதிப்பது; சிவன் அர்ஜுனன் சந்திப்பு பற்றி சஞ்சயன் கூறுவது; அர்ஜுனனின் சாதனைகளையும், துரியோதனின் தீமைகளையும் திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…

சஞ்ஜயன் சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் குறித்து நீர் சொன்னது அனைத்தும் உண்மையே. ஓ பூமியின் அதிபதியே {திருதராஷ்டிரரே}, நீர் சொன்னதில் எதுவும் பொய் இல்லை. அளவிடமுடியா சக்தி கொண்ட பாண்டவர்கள், தாங்கள் மணந்த புனிதமான புகழ் கொண்ட மனைவியான கிருஷ்ணை {திரௌபதி}, சபை நடுவே இழுத்து வரப்பட்டதைக் கண்டதால் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் மற்றும் கர்ணனின் கொடும் வார்த்தைகளையும் கேட்டு அவர்கள் {பாண்டவர்கள்} ஆத்திரமடைந்திருக்கின்றனர்.


அதனால் அவர்கள் {பாண்டவர்கள்}  என் கணக்குப்படி {குருக்களை} மன்னிக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பதினோரு {11} உருவங்களில் இருக்கும் தேவர்களுக்குத் தேவனான ஸ்தானுவை {சிவனை} அர்ஜுனன் எப்படிப் போர்க்களத்தில் திருப்திப்படுத்தினான் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களின் சிறப்புமிக்க தலைவனான கபதர்தின் {சிவன்}, பல்குனனைச் {அர்ஜுனனைச்} சோதிக்க எண்ணி, வேடன் {கிராதன்} உரு கொண்டு அவனுடன் போரிட்டான். லோகபாலர்களும், தங்கள் ஆயுதங்களை அந்த குரு குல காளைக்கு {அர்ஜுனனுக்கு} கொடுக்க வேண்டி, அந்த அழிவில்லா சக்தி கொண்டவனுக்கு {அர்ஜுனனுக்கு} காட்சியளித்தனர்.

பல்குனனைத் {அர்ஜுனனைத்} தவிர உலகத்தில் வேறு எந்த மனிதன், சொந்த உருவங்களில் இருக்கும் அந்தத் தேவர்களைக் காண முயற்சி செய்வான்? எட்டு {8} உருவங்கள் கொண்ட மகேஸ்வரனாலேயே போர்க்களத்தில் அர்ஜுனனை பலவீனப்படுத்த முடியாதபோது, வேறு எவரால்தான் அவனைப் பலவீனப்படுத்த முடியும்? திரௌபதியை இழுத்து வந்ததால் கோபமூட்டப்பட்ட பாண்டுவின் மகன்களால் உமது மகன்கள் பயங்கரமான அச்சமூட்டும் பேரிடரை தாங்களாகவே வரவழைத்துக் கொண்டனர். திரௌபதிக்குத் தனது தொடைகள் இரண்டையும் காட்டிய துரியோதனனைக் கண்ட பீமன் நடுங்கும் உதடுகளுடன், "இழிந்தவனே, பதிமூன்று {13} வருடங்கள் கழிந்து, உனது அந்தத் தொடைகளை, கடுமையாக இறங்கும் எனது கதைகளைக் கொண்டு சிதைப்பேன்" என்று சொன்னான்.

பாண்டுவின் மகன்கள் அனைவரும் அடிப்பதில் முதன்மையானவர்கள்; அவர்கள் அனைவரும் அளவற்ற ஆற்றல்படைத்தவர்கள்; அவர்கள் அனைவரும் அனைத்து விதமான ஆயுதங்களையும் அறிந்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தேவர்களாலும் வீழ்த்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் மணந்த மனைவியின் {திரௌபதியின்} அவமானத்தைக் கண்டு ஆத்திரமுற்ற பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்}, கோபத்தால் உந்தப்பட்டு, போர்களத்தில் உமது மகன்களைக் கொல்வார்கள் என்று நான் கருதுகிறேன்" என்றான் {சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ தேரோட்டியே {சஞ்ஜயனே}, பாண்டுவின் மகன்களிடம் அத்தகு கொடும் வார்த்தைகளைப் பயன்படுத்திய கர்ணன் எப்படிப்பட்ட கலக்கத்தை ஏற்படுத்துவிட்டான். கிருஷ்ணையைச் சபைக்கு இழுத்து வந்ததே பகைக்குப் போதுமான காரணியாக இல்லையா? அண்ணனும் குருவுமானவன் நேர்மையான பாதையில் நடக்காத போது எனது தீய மகன்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? பார்வையற்றவனாகவும், சுறுசுறுப்பாக இயங்கமுடியாதவனாகவும் என்னைக் கண்ட எனது இழிந்த மகன் {துரியோதனன்}, ஓ தேரோட்டியே {சஞ்சயா}, என்னை முட்டாள் என்று நம்பி எனது வார்த்தைகளைக் கேளாதிருக்கிறான். இழிந்தவர்களான கர்ணன், சுபலன் {சகுனி} மற்றும் அவனது {துரியோதனனின்} பிற ஆலோசகர்கள், எதையும் சரியாகப் புரிந்து கொள்ளத் திறனற்ற எனது மகனின் தீமைகளுக்கும் கீழ்த்தரமான இச்சைகளுக்கும் இடம் கொடுக்கிறார்கள் {அவனை ஊக்கப்படுத்துகிறார்கள்}.

அளவற்ற ஆற்றல் கொண்ட அர்ஜுனன் கோபத்துடன் அடிக்கும் கணைகளை விட்டு விட்டால் கூட, அவன் மெதுவாக அடிக்கும் கணைகளே எனது மகன்களை உட்கொண்டு விடும். மந்திரங்களால் தெய்வீகக் கணையாக மாற்றப்படும் பலம்வாய்ந்த அர்ஜுனனின் கணைகள் அவனது பெரிய வில்லில் இருந்து கிளம்பும் போது, தேவர்களைக் கூட அது தண்டித்துவிடுமே. மூவுலகங்களுக்குத் தலைவனும் ஹரியும் ஆனவனை {கிருஷ்ணனை} தனது ஆலோசகனாகவும், பாதுகாப்பாளனாகவும், நண்பனாகவும் கொண்டிருப்பவனான, பாவிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தன்னால் வெற்றிகொள்ள முடியாத எதையும் சந்திக்க மாட்டான். ஓ சஞ்சயா, மகாதேவனின் கரங்களால் அவன் அணைத்துக் கொள்ளப்பட்டான் என்று அர்ஜுனன் குறித்து நாம் கேள்விப்படுவது மிகவும் அற்புதமானதாகும்.

தாமோதரனால் உதவி செய்யப்பட்ட அர்ஜுனன், காண்டவ வனத்தை எரிப்பதில் அக்னிக்கு துணை செய்தது இந்த உலகத்தால் சாட்சியாகக் காணப்பட்டது. ஆகையால், பீமன், பார்த்தன் {அர்ஜுனன்}, சத்துவத குலத்தைச் சார்ந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் கோபம் கொண்டால், நிச்சயம் எனது மகன்களும், அவர்களது {எனது மகன்களின்} நண்பர்களும், சுபலர்களும் போரில் அவர்களுக்கு {பீமன், அர்ஜுனன், கிருஷ்ணனுக்கு} இணையாக மாட்டார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்