Tuesday, December 31, 2013

காதல் தூது சென்ற அன்னம்! - வனபர்வம் பகுதி 53

Swan as love messenger | Vana Parva - Section 53 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன், பீமன், தமயந்தி குறித்து பிருகதஸ்வர் வர்ணிப்பது; அன்னம் நளனிடம் பேசுவது; அன்னம் தமயந்தியிடம் பேசுவது...

பிருகதஸ்வர் சொன்னார், "வீரசேனன் மகனான நளன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் {நளன்} பலம் வாய்ந்தவனாகவும், அழகனாகவும், குதிரைகளை (குதிரைகள் பற்றிய அறிவை) அறிந்தவனாகவும், விரும்பிய அனைத்து சாதனைகளைச் செய்தவனாகவும் இருந்தான். அவன் {நளன்} தேவர்களுக்குத் தலைவனைப் போல மன்னர்களுக்குத் தலைமையானவனாக இருந்தான். எல்லோருக்கும் மேம்பட்டவனான அவன், புகழில் சூரியனைப் போல இருந்தான். அவன் நிஷாதர்களுக்கு மன்னனாக இருந்து, வேதமறிந்த அந்தணர்களின் நன்மையில் எண்ணம் உள்ளவனாகவும், பெரும் வீரத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் {நளன்} உண்மை பேசுபவனாகவும், பகடையில் விருப்பம் உள்ளவனாகவும், பெரும் பலம் வாய்ந்த படைக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அன்பால் விருப்பமுள்ளவனாகவும், பெரும் ஆன்மாவால் ஆசைகளை அடக்கியும் வாழ்ந்தான். அனைவரையும் காத்து, வில்லாளிகளில் முதன்மையானவனாக இருந்து, மனுவைப் போன்றவனாக இருந்தான்.


அவனை {நளனைப்} போலவே விதரப்பர்கள் {விதரப்ப நாட்டு மக்கள்} மத்தியில், பீமன் என்றொருவன் (பீமன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன்) இருந்தான். அவனும் {பீமனும்} பயங்கரமான பராக்கிரமும், வீரமும் கொண்டவனாகவும், குடிமக்களுக்கு நன்மை செய்பவனாகவும், அனைத்து அறங்கள் கொண்டவனாகவும் இருந்தான். ஆனால், (இவையெல்லாம் இருந்தும்), பிள்ளையில்லாதிருந்தான். அவன் நிலைத்த மனதோடு, ஒரு பிள்ளையைப் பெறுவதற்காக தன்னால் ஆன அளவு முயன்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, (ஒரு நாள்), அவனிடம் தமனர் என்ற பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி}, வந்தார். ஓ மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, அறநெறிகளை அறிந்த பீமன், பிள்ளை பெற விரும்பி, தனது மனைவியுடன் சேர்ந்து அந்த சிறப்புமிக்க முனிவரை மரியாதையுடன் வரவேற்று திருப்தி செய்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த தமனர், அந்த மன்னனுக்கும் {பீமனுக்கும்} அவனது மனைவிக்கும் ரத்தினம் போன்ற மகளையும், உயர்ந்த ஆன்மாவும், பெரும் புகழையும் கொண்ட மூன்று மகன்களையும் வரமாகக் கொடுத்தார். அவர்கள் {அந்தக் குழந்தைகள்) முறையே தமயந்தி, தமன், தாந்தன், தமனன் ஆவர். அந்த மூன்று மகன்களும் அனைத்து சாதனைகளையும் செய்பவர்களாகவும், கொடூரமான முகத்தோற்றம் கொண்டவர்களாகவும், கடும் பராக்கிரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். கொடியிடை கொண்ட தமயந்தி, அழகாலும், பிரகாசத்தாலும், அருளாலும், அதிர்ஷ்டத்தாலும், உலகத்தால் கொண்டாடப்படுபவள் ஆனாள். அவள் பருவ வயதை அடைந்த போது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பெண் பணியாட்களும், பெண் அடிமைகளும், சச்சிக்காக {இந்திரனின் மனைவிக்காக} காத்திருப்பதைப் போல அவளுக்காக காத்திருந்தனர்.

பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள் {தமயந்தி}, அனைத்து ஆபரணங்களும் பூண்டு, மேகங்களில் இருக்கும் பிரகாசமான மின்னல் போல, தனது பணிப்பெண்களுக்கு மத்தியில் பிரகாசித்தாள். அகன்ற விழி கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போலவே பெரும் அழகு படைத்திருந்தாள். தேவர்களுக்கு மத்தியிலோ, யக்ஷர்களுக்கு மத்தியிலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அதைப்போன்ற அழகு கொண்ட பெண்ணை அதற்கு முன்னர் யாரும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ கிடையாது. அந்த அழகான மங்கை, மகிழ்ச்சியால் தேவர்களின் இதயத்தைக் கூட நிறைத்தாள்.

மனிதர்களில் புலியான நளன், மூன்று உலகத்திலும் தனக்கு இணை இல்லாதவனாக இருந்தான். அவன் அழகில் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருந்தான். இவற்றால் வியப்படைந்த கட்டியக்காரர்கள் திரும்பத் திரும்ப நளனின் பெருமைகளைக் கொண்டாடி தமயந்தியிடத்திலும், தமயந்தியின் பெருமைகளை நிஷாத ஆட்சியாளன் {நளன்} இடத்திலும் புகழ்ந்தார்கள். திரும்பத் திரும்ப ஒருவர் நற்குணங்களை மற்றவர்கள் கேள்விப்பட்டு ஒருவர் மேல் ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே ஈர்க்கப்பட்டனர். அந்த ஈர்ப்பு, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா} வளர ஆரம்பித்தது.

பிறகு, நளன் தனது இதயத்தில் இருந்த காதலைக் கட்டுப்படுத்த முடியாதவனானான். அவன் நீண்ட நேரத்தைத் நந்தவனத்துடன் சேர்ந்த தனது உள் அறையில் {அரண்மனையில்} கழிக்க ஆரம்பித்தான். அங்கே {நந்தவனத்தில்}, அந்த வனத்தில் தங்க இறகுகள் கொண்ட அன்னங்கள் பல உலவுவதைக் கண்டான். அவற்றில் ஒன்றைத் தன் கரங்களால் பற்றினான். அதன் காரணமாக அந்த விண்ணதிகாரி {அன்னம்}, நளனிடம், "உன்னால் நான் கொல்லப்படலாகாது. ஓ மன்னா, நான் உனக்கு ஏற்புடைய ஒரு காரியத்தைச் செய்வேன். ஓ நிஷாதர்களின் மன்னா {நளனே}, உன்னைத் தவிர வேறு யாரையும் (தனது தலைவனாக அடைய) தமயந்தி விரும்பாதவாறு, அவளிடம் நான் உன்னைக் குறித்துப் பேசுவேன்" என்றது.

இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {நளன்}, அந்த அன்னத்தை விடுவித்தான். அந்த அன்னப்பறவைகள் தங்கள் சிறகுகளை விரித்து விதரப்ப நாட்டுக்குச் சென்றன. விதரப்ப நாட்டுக்கு வந்த அந்தப் பறவைகள், அவற்றைக் கண்ட தமயந்தியின் முன் பறந்தன. பணிப்பெண்களுக்கு மத்தியில் இருந்த தமயந்தி, இயல்புக்கு மிக்க தோற்றம் கொண்ட அந்தப் பறவைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நேரத்தைக் கடத்தாமல் அந்த விண்ணதிகாரிகளைப் {அன்னங்களைப்} பிடிக்க முயன்றாள். இதன் காரணமாக, அந்த அன்னங்கள், அந்த அழகான மங்கையர் கூட்டத்திற்கு முன்பு, எல்லா திசைகளிலும் பறந்தன. அந்த மங்கையரும் ஒவ்வொருவரும் ஒரு அன்னத்தின் பின்னாக அந்தப் பறவைகளைத் தொடர்ந்து சென்றனர். தமயந்திக்கு முன் ஓடிய அன்னம், அவளை {தமயந்தியைத்} தனிமையான இடத்திற்குப் பிரித்து அழைத்துச் சென்று, மனிதக் குரலில் அவளிடம், "ஓ தமயந்தி, நிஷாதர்களில் நளன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருக்கிறான். அவன் அசுவினிகளின் அழகுக்கு நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இணை இல்லாதவனாக இருக்கிறான். உண்மையில் அவன் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருக்கிறான். ஓ அழகான நிறம் கொண்டவளே, ஓ கொடியிடையாளே, நீ அவனுக்கு மனைவியானால், நீ வாழ்வதற்கும், உனது அழகுக்கும் ஒரு காரணம் இருக்கும். நாங்கள் தேவர்களையும், கந்தர்வர்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும், மனிதர்களையும் கண்டிருக்கிறோம். ஆனால் நளனைப் போன்ற ஒருவனை நாங்கள் இதுவரை கண்டதில்லை. ஆண்களில் நளன் தலைமையானவன் ஆனது போல, நீயும் உனது பாலினத்தில் {பெண்ணினத்தில்} ரத்தினம் தான். சிறந்தவர்களுடன் சிறந்தவர்கள் சேரும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது" என்றான் {அன்னப்பறவை}.

ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, அன்னத்தால் இப்படிச் சொல்லப்பட்ட தமயந்தி, அவனிடம் {அன்னத்திடம்}, "நீ இதே போல நளனிடமும் {அவரிடமும்} சொல்" என்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, "அப்படியே ஆகட்டும்" என்று விதரப்பனின் மகனிடத்தில் சொன்ன அந்த முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவன் {அன்னப்பறவை}, நிஷாதர்களின் நாட்டிற்குத் திரும்பி, அனைத்தையும் நளனிடம் கூறினான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்