Monday, December 30, 2013

உன்னைவிட பரிதாபத்துக்குரியவன் நளன்! - வனபர்வம் பகுதி 52ஆ

Nala lived more piteous than thee! | Vana Parva - Section 52b | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)-(Nalopakhyana Parva)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி பீமனால் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த பாண்டு மகனின் {பீமனின்} தலையை முகர்ந்து பார்த்து, அமைதிப்படுத்தி, "ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, சந்தேகமற நீ காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} துணையுடன், பதிமூன்றாவது {13} வருட முடிவில் சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வாய். ஆனால் ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, ஓ தலைவா, காலம் வந்துவிட்டது என்ற உனது தீர்மானத்தைப் பொறுத்தவரை, பொய்மை என்னிடத்தில் இல்லாத காரணத்தால், நான் பொய்மையைப் பேச அஞ்சுகிறேன். ஓ குந்தியின் மகனே {பீமா}, மோசடிகளின் துணை இல்லாமலேயே, ஒடுக்கமுடியாத தீய துரியோதனனையும் அவனது கூட்டாளிகளையும் நீ கொல்வாய்" என்றான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான யுதிஷ்டிரன் பீமனிடம் பேசிக் கொண்டிருந்த போது, அங்கே சிறப்பு மிகுந்த முனிவரான பிருகதஸ்வர் {Rishi Vrihadaswa}வந்தார். அந்த அறம்சார்ந்த துறவியைத் தன் முன் கண்ட நீதிமானான மன்னன் {யுதிஷ்டிரன்} விதிப்படி மதுபர்க்கம் {தேன், தயிர், நெய் மற்றும் வெண்ணையின் கலவை} கொடுத்து அவரை {முனிவர் பிருகதஸ்வரை} வழிபட்டான். அந்தத் துறவி அமர்ந்து, புத்துணர்ச்சி அடைந்ததும், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன் அவர் அருகே உட்கார்ந்து, அவரை நிமிர்ந்து பார்த்து, மிகவும் பரிதாபகரமான தொனியில்,

"ஓ புனிதமானவரே {முனிவர் பிருகதஸ்வரே}, பகடையில் திறனுள்ள தந்திரமான சூதாடிகளால் அழைக்கப்பட்டு, எனது செல்வம், நாடு ஆகியவற்றை சூதில் இழந்தேன். நான் பகடையில் திறமையானவனும் கிடையாது. எனக்கு ஏமாற்றவும் தெரியாது. பாவிகள் நியாமற்ற முறைகளைக் கைக்கொண்டு என்னை விளையாட்டில் வீழ்த்தினர். எனது உயிருக்கும் மேலான அன்பான மனைவி {திரௌபதி} பொதுச்சபையின் மத்தியில் இழுத்துவரப்பட்டாள். இரண்டாவது முறையும் என்னை வீழ்த்தி, மான்தோலுடுத்த வைத்து, துயரமான வனவாழ்க்கையை இந்தக் கானகத்தில் வாழும்படி என்னை அனுப்பினர். தற்சமயம் நான் கானகத்தில் துயர்நிறைந்த வாழ்க்கையை துயர்நிறைந்த இதயத்துடன் வாழ்ந்து வருகிறேன். சூதாடும்போது அவர்கள் கடுமையான கொடும் மொழிகளால் பேசியதும், அந்த பகடையாட்டம் சம்பந்தமாக எனது நண்பர்களும் குடிமக்களும் என்னைப்பற்றி பேசியதும் என் மனதிலேயே இருக்கின்றன.

அந்த வார்த்தைகளை நினைத்து நினைத்து இரவு முழுவதும் (தூங்காமல்) துயர் கொள்கிறேன். யாரை நம்பி எங்கள் அனைவரின் வாழ்வுகளும் இருக்கின்றனவோ அந்த சிறப்புமிக்க காண்டீவத்தைத் தாங்குபவனையும் {அர்ஜுனனையும்} இழந்து, கிட்டத்தட்ட உயிரற்றனாகவே நான் இருக்கிறேன். அன்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அந்த இனிய பேச்சு கொண்ட, பரந்த இதயம் கொண்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, அனைத்து ஆயுதங்களையும் பெற்று, எங்களிடம் திரும்பி வருவதை நான் என்று காண்பேன்? என்னைவிட தீயூழ் {துரதிர்ஷ்டம்} கொண்ட மன்னன், வேறு எவனாவது இந்த பூமியில் இருக்கிறானா? இது போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு முன்பு நீர் கண்டதோ கேட்டதோ உண்டா? என்னைப் பொறுத்தவரை, என்னைவிட இழிந்த மனிதன் வேறு எவனும் இருக்க மாட்டான்" என்றான் {யுதிஷ்டிரன்}.

பிருகதஸ்வர் சொன்னார், "ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, 'என்னைவிட பரிதாபகரமான மனிதன் வேறு எவனும் இல்லை' என்று சொல்கிறாய். ஓ பாவமற்ற ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நீ கேட்பதாயிருந்தால், வரலாற்றில் உன்னைவிட இழிந்த நிலையை அடைந்த மன்னனின் வரலாற்றைச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன் பிறகு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தத் துறவியிடம் {பிருகதஸ்வரிடம்}, "ஓ சிறப்பு மிகுந்தவரே, இதுபோன்ற நிலைக்கு வீழ்ந்த அந்த மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். சொல்லும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

பிருகதஸ்வர், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கீழே வீழாதவனே, உனது தம்பிகளுடன் சேர்ந்து கவனமாகக் கேள். நான் உன்னைவிட பரிதாபகரமான நிலையை அடைந்த ஒரு இளவரசனின் வரலாற்றைச் சொல்கிறேன். நிஷாதர்களின் கொண்டாடப்பட்ட மன்னனான வீரசேனன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவனுக்கு அறம், பொருள் அறிந்த மகனாக நளன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அந்த மன்னன் {நளன்} புஷ்கரன் என்பவனால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டு, பேரிடரை அடைந்து, தனது மனைவியுடன் கானகத்தில் வாழ்ந்தான் என நாம் கேள்விப்படுகிறோம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவன் {நளன்} கானகத்தில் வாழ்ந்த போது, அவனுடன் அடிமைகளோ, தேர்களோ, தம்பிகளோ அல்லது நண்பர்களோகூட கிடையாது. ஆனால் நீயோ தேவர்களைப் போன்ற உனது வீர சகோதரர்களாலும், பிரம்மாவைப் போன்ற மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களாலும் சூழப்பட்டிருக்கிறாய். ஆகையால், துயருறுவது உனக்குத் தகாது" என்றார் {பிருகதஸ்வர்}.

யுதிஷ்டிரன், "ஓ நாவண்மை படைத்தவர்களில் முதன்மையானவரே {முனிவர் பிருகதஸ்வரே}, சிறப்புமிக்க நளனின் வரலாற்றை விரிவாகக் கேட்க நான் விரும்புகிறேன். ஆகையால், அதை எனக்கு நீர் உரைக்க வேண்டும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்