Monday, January 06, 2014

புலியிடம் பேசிய தமயந்தி - வனபர்வம் பகுதி 64அ

Damayanti's speech unto a tiger | Vana Parva - Section 64a | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

வேடனை அழித்த தமயந்தி, நளனைத் தேடி காடு முழுவதும் அலைவது; நளனை நினைத்துப் புலம்புவது; புலியிடம் பேசுவது...

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தமயந்தி அந்த வேடனை அழித்த பிறகு, வெட்டுக்கிளிகளின் கீச்சொலிகளால் நிறைந்த அந்தத் தனிமையான பயங்கரக் காட்டில் தொடர்ந்து முன்னேறினாள். அந்தக் காடு, சிங்கங்களாலும், சிறுத்தைகளாலும், ருருக்களாலும் {மான்களாலும்}, புலிகளாலும், எருமைகளாலும், கரடிகளாலும் நிறைந்திருந்தது. அது பலவகையான பறவைகளாலும், பாதிப்படைந்த திருடர்களாலும், மிலேச்ச குடிகளாலும் மொய்க்கப்பட்டிருந்தது. அது சாலம் {ஆலமரமாக இருக்க வேண்டும்}, மூங்கில், தவம், அஸ்வதம் {அரசு}, திந்துகம், இங்குதை, கின்சுகம் {பலாசு}, அர்ஜுனம் {மருது}, நிம்வம் {அரிஷ்டம்}, தினிசை {ஸ்யந்தனம்}, சல்மலை {முள்ளிலவு}, ஜம்பு {நாவல்}, மா, லோத்ரம், கதேச்சு {கருங்காலி}, தேக்கு, பிரம்பு, பத்மகம், அமலாஹம் [Amalaha] {நெல்லி}, ப்லக்ஷம், கடம்பு, உதும்பரம் [Udumbara]{அத்தி}, பதரி [Vadari]{இலந்தை}, வில்வம், ஆலமரம், பிரியாளம், பனை, பேரீச்சம், ஹரிதகம் {கடுக்காய்}, விபிதகம் {தான்றி} ஆகிய மரங்களைக் கொண்டிருந்தது.


பல பறவைகளால் இன்னிசையெழுப்பப்பட்டு, அற்புதமான காட்சிகளும், பல நதிகளும், ஏரிகளும், குளங்களும், பல்வகை பறவை மற்றும் விலங்குகளையும், பலவகைப்பட்ட தாதுக்களையும் கொண்ட பல மலைகளை விதரப்ப்ப இளவரசி {தமயந்தி} கண்டாள். அவள் எண்ணற்ற பாம்புகளையும், குட்டிச்சாத்தான்களையும், கடும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசர்களையும், தடாகங்களையும், குளங்களையும், சிறு குன்றுகளையும், சிற்றோடைகளையும், அழகான தோற்றம் கொண்ட நீரூற்றுகளையும் கண்டாள். அந்த விதரப்ப்ப இளவரசி {தமயந்தி}, எருமைக்கூட்டங்களை அங்கே கண்டாள். காட்டுப் பன்றிகளையும், கரடிகளையும், பல பாம்புகளையும் அந்தக் கானகத்தில் கண்டாள். அறம், புகழ், நற்பேறு, பொறுமை ஆகியவற்றால் பாதுகாப்பாக இருந்த தமயந்தி அந்தக் கானகத்தில் தனியாக நளனைத் தேடிக் கொண்டிருந்தாள். பீமனின் அரச மகள் {தமயந்தி}, தனது தலைவனின் பிரிவால் மட்டுமே துயருற்று, அந்தப் பயங்கரமான காட்டில் எதைக்குறித்தும் அஞ்சாமல் இருந்தாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, துயர்நிறைந்த அவள் {தமயந்தி} ஒரு கல்லில் அமர்ந்து, கணவனால் ஏற்பட்ட துயரின் காரணமாக தனது உறுப்புகள் அனைத்தும் நடுங்கப் புலம்பினாள், "ஓ நிஷாதர்களின் மன்னா {நளரே}, ஓ அகன்ற மார்பும் பலம் பொருந்திய கரங்களும் கொண்டவரே, ஓ மன்னா, இந்தத் தனிமையான கானகத்தில் என்னை விட்டு நீர் எங்கு சென்றீர்? ஓ வீரரே, குதிரைவேள்விகளையும் {அசுவமேத வேள்வியையும்} இன்னபிற வேள்விகளையும் செய்தீர், (அந்தணர்களுக்கு} தாராளமாகப் பரிசுகளைக் கொடுத்தீர், என்னிடம் மட்டும் ஏன் பொய்யாக நடக்கிறீர்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, ஓ பெரும் பிரகாசம் கொண்டவரே, ஓ மங்களமானவரே, எனக்கு முன்பாக நீர் ஏற்ற உறுதிமொழியை நினைத்துப் பாரும்.

ஓ ஏகாதிபதி {நளரே}, வானத்தில் பறக்கும் அன்னங்கள் உமக்கு எதிரிலும் எனக்கு எதிரிலும் என்ன பேசின என்பதை நினைத்துப் பாரும். ஓ மனிதர்களில் புலியே, நீர் கற்ற அங்கங்கள், உப அங்கங்களுடன் கூடிய நான்கு வேதங்கள் முழுமையையும் ஒரு புறமும், உண்மை மறு புறமும் இருக்கும்போது சமமாகவே இருக்கும். ஆகையால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, ஓ மனிதர்களின் தலைவா, அவற்றை நினைத்து, முன்பு என்னிடம் சொல்லிய வார்த்தைகளை உண்மையாக்குவதே உமக்குத் தகும். ஐயோ, ஓ வீரரே, ஓ நளரே, ஓ பாவமற்றவரே, நான் இந்த பயங்கராமன கானகத்திலேயே அழியப் போகிறேன். ஓ நீ ஏன் எனக்கு பதில் அளிக்கவில்லை?  கடும் பசியில் இருக்கும், கடும் முகத்தோற்றம் கொண்ட இந்தப் பயங்கரமான கானகத்துக்கு அரசன் {சிங்கம்}, தனது தாடைகளை விரித்து என்னை பயத்தால் நிறைக்கிறது. நீர் ஏன் என்னைக் காக்க வரவில்லை? 'உன்னைவிட எனக்கு அன்பானவள் யாரும் இல்லை' என்று சொன்னீரே.

ஓ அருளப்பட்டவரே, ஓ மன்னா, நீர் முன்பு பேசிய வார்த்தைகளுக்கு நன்மை செய்யும். ஓ மன்னா {நளரே}, உம்மால் காதலிக்கப்பட்டும், என்னால் நீர் காதலிக்கப்பட்டும், உணர்விழந்து அழுது கொண்டிருக்கும் உமது அன்பான மனைவிக்கு ஏன் பதிலளிக்க மறுக்கின்றீர்? ஓ பூமியின் மன்னா, ஓ மரியாதைக்குரியவரே, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, ஓ அகன்ற கண்கள் உடையவரே, உடல் மெலிந்து, இடரால் பாதிக்கப்பட்டு வெளிர் நிறம் கொண்டு, நிறமாற்றம் அடைந்து, பாதி ஆடையுடன், மந்தையில் இருந்து பிரிந்த வெள்ளாடு போல அழுதுகொண்டு, புலம்பிக் கொண்டிருக்கும் என்னை ஏன் கருதிப்பாராமல் இருக்கிறீர்?

ஓ ஒப்பற்ற இறையாண்மை கொண்டவரே, உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கும் தமயந்தியான நான் இந்தப் பெரும் கானகத்தில் தனிமையில் உம்மிடம் பேசுகிறேன். அப்படியிருந்தும் ஏன் எனக்கு மறுமொழி கூறாமல் இருக்கிறீர்? ஓ மனிதர்களின் தலைவா, ஓ உன்னத பிறப்பும் நடத்தையும் கொண்டு அருள் நிறைந்த அங்கங்கள் கொண்டவரே, நான் இன்று உம்மை இந்த மலையில் காணவில்லையே! ஓ நிஷாதர்களின் மன்னா, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, ஓ எனது துயரை அதிகரிப்பவரே {நளரே}, சிங்கங்களாலும், புலிகளாலும் முற்றுகையிடப்படும் இந்தப் பயங்கரமான காட்டில் நீ படுத்துக் கொண்டிருக்கிறீரா? அமர்ந்திருக்கிறீரா? நின்று கொண்டிருக்கிறீரா? அல்லது இங்கிருந்து சென்றுவிட்டீரா? இதை அறிந்து கொள்ள, "மன்னன் நளரை இந்தக் கானகத்தில் கண்டீரா?" என உம்மீது கொண்டிருக்கும் துயரத்தால் நான் யாரிடம் கேட்பேன்? "என்னைப் பிரிந்தவரும், உயர் ஆன்மா கொண்ட, எதிரிகளின் படையை அழிக்கும் அழகானவருமான நளரைக் கண்டீரா?" என்று இந்தக் கானகத்தில் நான் யாரிடம் விசாரிப்பேன். "நீ தேடும் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய மன்னர் நளர் இங்கே தான் இருக்கிறார்" என்ற இனிமையான வார்த்தைகளை இன்று நான் யாரிடம் கேட்பேன்?"

இதோ கானக மன்னனான அழகான முகம் கொண்ட புலி, நான்கு பற்களுடனும், பெரிய கன்னங்களுடனும் வருகிறது. அதனிடம் நான் பயமில்லாமல் இப்படிப் பேசுவேன். நான் அதனிடம் "நீயே விலங்குகளின் மன்னன், நீயே இந்தக் கானகத்திற்கும் மன்னன். என்னை விதரப்ப்ப மன்னனின் மகளாகவும், எதிரிகளை அழிக்கும்  நிஷாத மன்னனின் {நளரின்} மனைவியாகவும் இருக்கும் தமயந்தி என்று அறிந்து கொள். இடர்பாடுகள் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டு, நான் தனிமையில் இந்தக் கானகத்தில் எனது கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஓ விலங்குகளின் மன்னா, நீ அவரைக் கண்டிருந்தால் எனக்கு (நளர் குறித்த செய்தியைக் கூறி} ஆறுதல் கூறு. ஓ கானக மன்னா, நளரைக் குறித்து உன்னால் பேச முடியவில்லை என்றால், ஓ விலங்குகளில் சிறந்தவனே, நீ என்னை விழுங்கி இந்தப் பெரும் துன்பத்தில் இருந்து என்னை விடுதலை செய்." என்பேன் {என்றாள் தமயந்தி}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்