Tuesday, January 07, 2014

மாயத்துறவிகளின் தீர்க்கதரிசனம் - வனபர்வம் பகுதி 64இ

Damayanti met some ascetics | Vana Parva - Section 64c | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

ஆசிரமத்தை அடைந்த தமயந்தி, அங்கு வசித்த முனிவர்களிடம் நலன் விசாரித்தல்; அவள் வந்த காரணத்தை முனிவர்கள் கேட்டல்; தமயந்தி தனது கணவனைக் குறித்து சொல்லுதல்; முனிவர்கள் தீர்க்கதரிசனமாக சில சங்கதிகளைச் சொல்வது…

அந்தக் கானகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த துறவிகள், தமயந்தியிடம், "நல்வரவு!" என்று சொன்னார்கள். பிறகு அந்தத் துறவிகள் அவளுக்கு உரிய மரியாதை செலுத்தி, "அமர்ந்து கொள். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்று கேட்டனர். அதற்கு அந்த பெண்களில் சிறந்தவள் {தமயந்தி}, "பாவமற்றவர்களே, சிறந்த அருள் பெற்ற துறவிகளே, உங்கள் தவங்களும், வேள்வி நெருப்பும், அறச்சடங்குகளும், உங்கள் வகைக்குண்டான கடமைகளும் நன்றாக நடைபெறுகிறதா?" என்று கேட்டாள் {தமயந்தி}.


அதற்கு அவர்கள், "ஓ அழகான சிறப்புமிக்க பெண்மணியே, {மேற்கண்ட} எல்லாவிதத்திலும் செழிப்புடனே இருக்கிறோம். ஆனால், ஓ குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே, நீ யார் என்பதையும், எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்பதையும்  எங்களுக்குச் சொல். உனது அழகான உருவத்தையும், பிரகாசமான காந்தியையும் கண்டு நாங்கள் மலைக்கிறோம். உற்சாகம் கொள். துயரப்படாதே. ஓ பழியற்றவளே, அருளப்பட்டவளே, நீ இந்தக் கானகத்தின் தேவதையா? அல்லது இந்த மலையின் தேவதையா? அல்லது இந்த நதியின் தேவதையா? என்பதை எங்களுக்குச் சொல்" என்றனர்.

தமயந்தி அந்தத் துறவிகளிடம், "ஓ அந்தணர்களே, நான் இந்த கானகத்துக்கோ, மலைக்கோ, ஓடைக்கோ தேவதையல்ல. ஓ துறவுச்செல்வம் பெற்ற முனிவர்களே, நான் மானுடப்பிறவி என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் எனது வரலாற்றை விவரமாகச் சொல்கிறேன். நீங்கள் கேளுங்கள். பீமன் என்ற பெயர் கொண்டு விதரப்ப்பத்தை ஆளும் பெரும் பலம்வாய்ந்த ஆட்சியாளராக ஒரு மன்னர் இருக்கிறார். ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களே, நான் அவரது மகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெரும் புகழ்வாய்ந்தவரும், வீரரும், போர்க்களத்தில் எப்போதும் வெற்றி பெறுபவரும், கற்றவரும், நிஷாதர்களின் ஞானமுள்ள ஆட்சியாளருமான நளன் என்ற பெயர் கொண்டவரே எனது கணவர். தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டு, இரு பிறப்பாளர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தன்னை அர்ப்பணித்து, நிஷாதர்களின் குல வழியைக் காத்து, பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும், உண்மையுடன், அனைத்துக் கடமைகளையும் அறிந்தும், சத்தியத்தில் தடுமாற்றமில்லாமலும், எதிரிகளை வீழ்த்தியும், தேவர்களுக்கு சேவை செய்தும், எதிரியின் நகரங்களை வென்றும், அருள் நிறைந்தும் இருக்கும் நளன் என்ற பெயர் கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவர் தேவர்களின் தலைவனது பிரகாசத்துக்கு ஈடானவராவார். அந்த எதிரிகளை அழிக்கும், அகன்ற கண்களுடைய, முழு நிலவின் நிறத்தில் இருப்பவரே {நளரே} எனது கணவர்.

அவர் {நளர்} பெரும் வேள்விகளைச் செய்தார். அவர் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றவர், போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பவர், பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் போன்றவர். உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த மன்னர் {நளர்}, சூதாட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற குறுகிய மனம் படைத்த ஏமாற்றுக்கார மனிதர்களால் பகடை விளையாட அழைக்கப்பட்டு, செல்வத்தையும் நாட்டையும் இழந்தார். மன்னர்களில் காளையான அவரது மனைவியே நான் என்றும் எனது பெயர் தமயந்தி என்றும், (தொலைந்து போன) எனது தலைவனைக் {நளரை} கவலையுடன் தேடிவருகிறேன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.  இதயத்தின் சோகத்தால், போரில் நிபுணத்துவம் வாய்ந்த, உயர் ஆன்மா கொண்ட, ஆயுதங்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்த எனது கணவர் நளரைத் தேடுவதற்காக கானகங்களையும், மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும், குளங்களையும், காடுகளையும் சுற்றி வருகிறேன். அந்த நிஷாதர்களின் தலைவரான மன்னன் நளர், உங்களுக்குச் சொந்தமான இந்த காண்பதற்கினிய துறவியில்லத்திற்கு வந்தாரா? ஓ அந்தணர்களே, புலிகளாலும் மற்ற விலங்குகளாலும் முற்றுகையிடப்படும் பயங்கரம் நிறைந்த இந்தக் காட்டின் வழியே அவருக்காகவே வந்தேன். இன்றும் சில பகல் மற்றும் இரவுகளுக்குள் நான் மன்னன் நளரைக் காணவில்லையென்றில், நான் எனது உடலைக் கைவிட்டு எனக்கு நன்மையைத் தேடிக் கொள்வேன். அந்த மனிதர்களில் காளை இல்லாத இந்த எனது வாழ்வு எதற்குப் பயன்படும்? எனது கணவரின் காரியமாக துன்பத்துடன் நான் வாழ்வது எவ்வாறு?" என்றாள்.

கதியற்று அந்தக் கானகத்தில் அழுது கொண்டிருந்த பீமனின் மகளான தமயந்தியிடம், அந்த உண்மை பேசும் துறவிகள், "ஓ அருளப்பட்டவளே, ஓ அழகானவளே, வருங்காலம் உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை எங்கள் தவச்சக்தியால் நாங்கள் பார்க்கிறோம். நீ விரைவில் அந்த நைஷாதனைக் காண்பாய். ஓ பீமனின் மகளே, நீ நிஷாதர்களின் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமான நளன் துன்பங்களில் இருந்து விடுதலையடைவதை நீ காண்பாய். ஓ அருளப்பட்ட மங்கையே, உனது தலைவனான மன்னன் {நளன்}, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு அனைத்து வகையான ரத்தினங்களையும் அணிந்து, எதிரிகளைத் தண்டித்து, எதிரிகளின் இதயத்தில் பயங்கரத்தை உணரச் செய்து, நண்பர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி, அனைத்து அருளாலும் முடிச்சூடப்பட்டு அதே நகரத்தை ஆள்வதை நீ காண்பாய்" என்றனர்.

நளனின் அன்புக்குரிய ராணியான அந்த {விதரப்ப்ப நாட்டு} இளவரசியிடம் இப்படிப் பேசிய அந்த துறவிகள், அவர்களது புனிதமான நெருப்புகளுடனும், ஆசிரமத்துடனும் அவள் {தமயந்தி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்கள். அந்தப் பெரும் அற்புதத்தைக் கண்ட மன்னன் வீரசேனின் மருமகளான குறையற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி ஆச்சரியத்தில் மூழ்கினாள். அவள் தனக்குத் தானே, "நான் கண்டது கனவா? என்ன நிகழ்வு இப்போது நடந்தது? அந்தத் துறவிகள் அனைவரும் எங்கே? அந்த ஆசிரமம் எங்கே? மேலும், புனிதமான நீருடன் காண்பதற்கு இனிய பல வகையான கோழிகளின் {அல்லது வளர்ப்புப் பறவைகளின் என்றும் கொள்ளலாம்} ஓய்விடமாக இருந்த அந்த ஆறு எங்கே? பூக்களுடனும், கனிகளுடனும் இருந்த அந்த அழகிய மரங்கள் எங்கே" என்று நினைத்தாள் {தமயந்தி}.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்