Tuesday, January 07, 2014

மலையிடம் பேசிய தமயந்தி - வனபர்வம் பகுதி 64ஆ

Damayanti's speech unto a mountain | Vana Parva - Section 64b | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி நளன் குறித்து மலையிடம் புலம்புவது; பிறகு மூன்று நாட்கள் நடந்து ஒரு ஆசிரமத்தை அடைந்து துறவிகளைக் காண்பது…

அழுது கொண்டிருந்த தமயந்தி, மலையை நோக்கி, "இந்தக் கானகத்தில் எனது புலம்பலைக்கேட்டுக்கொண்டிருக்கும் மலைகளின் அரசனிடம் கேட்கிறேன், கடலை நோக்கி ஓடும் சுத்தமான நீர் கொண்ட பல நதிகளை கிரீடமாக அணிந்து, உயர்ந்த புனிதமான மலைகளையும், சொர்க்கத்தை முத்தமிடும் பல வண்ண அழகிய சிகரங்களையும், பல தரப்பட்ட தாதுகளும், பல தரப்பட்ட மன்னர்களின் ரத்தினங்களாலும் நிறைந்து இந்த அகன்ற கானகத்தின் பதாகை {Banner} போல இருக்கும் இந்த மலையிடம் கேட்கிறேன். 


சிங்கங்களாலும், புலிகளாலும், யானைகளாலும், காட்டுப்பன்றிகளாலும், மான்களாலும், எல்லாப்புறமும் (இன்னிசையை) எதிரொலிக்கும் பல வகை பறவைகளாலும், கின்குசம் {பலாசு}, அசோகம், வாகுலம் {மகிழம்}, புன்னகம் {புன்னை}, பூத்திருக்கும் கர்ணிகரம் {கோங்கு மரம்}, தவம், பிலாக்ஷம், போன்ற மரங்களாலும் நிறைந்து, நீர்க்கோழிகளால் மொய்க்கப்படும் நீரோடைகளையும், முகடுகளையும், உச்சிகளையும் கொண்டிருக்கும் புனிதமானவனே {மலையே}, ஓ மலைகளில் சிறந்தவனே, ஓ அற்புதக் காட்சி தருபவனே, ஓ கொண்டாடப்படுபவனே உன்னிடம் கேட்கிறேன்.

ஓ மங்களகரமானவனே {மலையே}, ஓ பூமியின் தூணே, நான் உன்னை வணங்குகிறேன். உன்னை அணுகும் நான், உன்னை வணங்குகிறேன். ஒரு மன்னனின் {பீமனின்} மகளென்றும், ஒரு மன்னனின் {வீரசேனனின்} மருமகள் என்றும், ஒரு மன்னனின் {நளனின்} மனைவியென்றும், தமயந்தி என்ற பெயர் கொண்டவள் என்று என்னை அறிந்து கொள். நால்வகை மனிதர்களையும் காத்து, விதரப்ப்பர்களை ஆளும் பூமியின் அதிபதியான பீமன் என்ற பெயர் கொண்டவரே எனது தந்தை. ராஜசுயம், அசுவமேதம் ஆகிய வேள்விகளைச் செய்து அந்தணர்களுக்கு நிறைந்த பரிசுகளைக் கொடுத்தவரே அந்த மன்னர்களில் சிறந்தவர் {பீமர்}, அழகான அகன்ற கண்களை உடையவரும், வேதங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவருமான அவர் {பீமர்}, உண்மை பேச்சு கொண்டு, அப்பழுக்கற்ற குணம் கொண்டு, சூழ்ச்சியற்று, மென்மையானவராக, வலிமை நிறைந்து, பெரும் செல்வத்தைக் கொண்டு, அறநெறிகள் அறிந்து, தூய்மையாக இருந்து, அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, விதரப்ப்ப நாட்டு குடிமக்களை காத்து வருகிறார் {பீமர்}. ஓ புனிதமானவனே {மலையே}, உன்னிடம் இப்படிவந்து நிற்கும் நான் அவரின் {பீமரின்} மகள் என்பதை அறிந்து கொள்.

மனிதர்களில் சிறந்த, நிஷாதர்களின் கொண்டாடப்படும் ஆட்சியாளர், உயர் புகழ் கொண்ட வீரசேனன் என்ற பெயர் கொண்டவரே எனது மாமனார். அந்த மன்னரின் மகனும், வீரரும், அழகரும், குழப்ப முடியாத ஆற்றல் கொண்டவரும், தனது தந்தையின் வழி வந்த நாட்டை ஆட்சி செய்பவரான நளன் என்ற பெயர் கொண்டவர். ஓ மலையே, அந்த எதிரிகளைக் கொல்பவரும், புண்ணியஸ்லோகா என்ற பெயராலும் அழைக்கப்படுபவரும், தங்க நிறம் கொண்டவரும், அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், வேதங்களை அறிந்தவரும், நாநலம் மிக்க நீதிமானும், சோமத்தைப் பெருமடக்காகக் குடிப்பவரும், நெருப்பை வழிபடுபவருமாகிய அந்த மன்னர் {நளர்}, வேள்விகளைக் கொண்டாடுபவராவார். அவர் தாராளவாதியாகவும், போர்க்குணமுள்ளவராகவும், (குற்றவாளிகளைப்) போதுமான அளவு தண்டிப்பவராகவும் இருக்கிறார். நான் அவரின் {நளரின்} அப்பாவி மனைவி, அவரது ராணிகளில் தலைமையானவள் (the chief of his queens) [1], உனது முன்னிலையில் நிற்கிறேன். ஓ மலைகளில் சிறந்தவனே, செல்வத்தை இழந்து, கணவரையும் இழந்து, பாதுகாப்பற்று, துயரத்தால் பீடிக்கப்பட்டு, எனது கணவரைத் தேடி நான் இங்கு வந்திருக்கிறேன்.

[1] சம்ஸ்க்ருத மூலத்தில் ராணிகளில் தலைமையானவள் என்ற வார்த்தை இல்லை என்று விவாத மேடையில் நண்பர் தாமரை அவர்கள் விளக்கியிருக்கிறார். அந்தச் சுலோகத்தின் பொருள்: "மிக உயர்ந்தவரும், போர்க்குணமுள்ளவரும், உரைக்கப்பட்ட நீதி வழிகளிலே நடப்பவருமான அவருடைய {நளரின்} அதிர்ஷ்டமற்ற அப்பாவி மனைவி இங்கே வந்திருக்கிறேன். அனைத்தையும் இழந்து, கணவனால் கைவிடப்பட்டு, அனாதையாகிப் பாதுகாப்பற்று பாரதர்களில் காளையும், மனிதர்களில் சிறந்துவருமான அவரை நாலாபுறங்களிலும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றும் அவர் அங்கு விளக்கியிருக்கிறார்.

ஓ மலைகளில் முதன்மையானவனே, (வானத்தை நோக்கி) உயர்ந்த கோபுரங்கள் போன்ற நூறு சிகரங்கள் கொண்ட நீ, இந்தப் பயங்கரக் கானகத்தில் மன்னன் நளரைக் கண்டாயா? பெரும்பலம் வாய்ந்த யானையின் நடை கொண்ட, பெரும் புத்திகூர்மை கொண்ட, நீண்ட கரங்கள் கொண்ட, கடும் சக்தி கொண்ட, பராக்கிரமும், பொறுமையும், வீரமும், உயர்ந்த புகழும் கொண்ட நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது கணவருமான சிறப்புவாய்ந்த நளரைக் கண்டாயா? ஓ மலைகளில் சிறந்தவனே, இப்படித் தனியாக துக்கப்பட்டு, துயரத்தில் மூழ்கிய என்னை, துயரத்தில் இருக்கும் உனது மகளாகக் கருதி, இன்று எனக்கு ஆறுதல் வார்த்தை சொல்லமாட்டாயா?" என்று புலம்பினாள்.

மீண்டும் அவள் {தமயந்தி}, "ஓ வீரரே {நளரே}, ஓ பராக்கிரமம் நிறைந்த போர்வீரரே, ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, ஓ உண்மைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரே, ஓ பூமியின் தலைவா, நீர் இந்தக் கானகத்தில் இருந்தால், ஓ மன்னா {நளரே}, உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொள்ளும்" என்றும் "ஓ மென்மையான, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த, அமிர்தம் போன்ற இனிய குரலுடன் "விதரப்ப்பரின் மகளே" என்று தனித்துவமான உச்சரிப்புடன், வேதங்களின் இனிய நாதத்தைப் போன்று வளமையான பரிசுத்தமான வார்த்தைகளை இனி நான் என்று கேட்பேனோ? மன்னா {நளரே}, நான் பயந்திருக்கிறேன். ஓ அறம்சார்ந்தவரே, எனக்கு ஆறுதல் அளியும்" என்றாள் {தமயந்தி}.

இப்படி மலைகளின் முதன்மையான மலையிடம் பேசிய தமயந்தி, பிறகு வடக்கு நோக்கி சென்றாள். இப்படியே மூன்று பகலும், மூன்று இரவும் நடந்த அந்தப் பெண்களில் சிறந்தவள், தேவலோகச் சோலை போன்று இருந்த துறவிகளின் ஒப்பற்ற ஒரு தவச்சோலையை அடைந்தாள். வசிஷ்டர், பிருகு, அத்ரி போன்ற கடும் உணவுக்கட்டுபாடு கொண்டவர்களும், மனங்களை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும், புனிமானவர்களுமான துறவிகள் வசித்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டாள். அத்துறவிகளில் சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் (உதிர்ந்த) இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். அத்துறவிகள் அனைவரும் ஆசையைக் கடந்து, மேம்பட்ட அருளை அடைந்து, மரப்பட்டைகளையும், மான் தோல்களையும் ஆடையாக அணிந்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். துறவிகள் வசித்த அந்தத் துறவில்லத்தைக் {ஆசிரமத்தைக்} கண்டும், அங்கே நிறைந்திருந்த மான் கூட்டம் மற்றும் குரங்களுகளைக் கண்டும் தமயந்தி மகிழ்ந்தாள். அழகான புருவங்களும், நீண்ட கூந்தலும், அழகான இடையும், பருத்த மார்பும், முகத்தை அலங்கரித்த அழகான பற்களும், கருத்த பெரிய அழகான கண்களும் கொண்ட அப்பாவியும் அருள்நிறைந்தவளுமான அந்தப் பெண்களில் சிறந்த தமயந்தி, பிரகாசத்துடனும் பெருமையுடனும் அந்த துறவில்லத்திற்குள் நுழைந்தாள். கடுந்தவங்கள் பயின்று முதிர்ந்த அந்த துறவிகளை வணங்கி, பணிவுடன் நின்றாள்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்