Wednesday, January 08, 2014

சேதிக்குச் சென்ற வணிகர் கூட்டம் - வனபர்வம் பகுதி 64ஈ

The Merchants going to Chedi | Vana Parva - Section 64d | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி பயங்கரமான காட்டைக் கடந்து ஒரு அகலமான பாதையை அடைந்து அங்கே ஒரு பெரிய வணிகர் கூட்டத்தைக் கண்டது.

துறவிகள் மறைந்ததைச் சிறிது நேரம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இனிய புன்னகை கொண்ட பீமனின் மகளான தமயந்தி, தனது கணவனை {நளனை} நினைத்து துயரத்தால் பீடிக்கப்பட்டு, தனது முகத்தின் நிறத்தை இழந்தாள். அக்கானகத்தின் வேறொரு பகுதிக்குச் சென்று ஒரு அசோக மரத்தைக் கண்டாள். அந்தக் கானகத்தில் அடர்த்தியான இலைகளுடன் அழகாகப் பூத்துக் குலுங்கிய அந்த மரங்களில் முதன்மையான மரத்தில் பறவைகள் இன்னிசை பாடிக் கொண்டிருக்கும்போது, கண்களில் கண்ணீருடனும், துயரத்தால் தடைபட்ட குரலுடனும் அந்த மரத்திடம், தமயந்தி, "கானகத்தின் இதயப்பகுதியில் இருக்கும் அருள் நிறைந்த மரமே, பூக்களால் அலங்கிக்கப்பட்டு இந்த மலைகளின் மன்னன் மேல் அழகாக இருக்கிறாய். ஓ அழகான அசோகமே, நீ என்னை இந்தத் துயரில் இருந்து விரைவாக விடுவிக்க மாட்டாயா? எதிரிகளைக் கொல்பவரும், தமயந்தியின் அன்புக்குரிய கணவருமான மன்னன் நளர், அச்சத்திலிருந்தும் துயரத்திலிருந்தும், தடைகளிலிருந்தும் விடுபட்டவராக இருப்பதை நீ கண்டாயா?


பாதி ஆடையுடுத்தி, கண்ணுக்கினிய நிறத்துடன் இருக்கும் துயரத்தால் தாக்கப்பட்டு கானகத்துக்கு வந்த அந்த வீரரும், நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது அன்புக்குரியவருமான எனது கணவரைக் கண்டாயா? ஓ அசோக மரமே, என்னை இந்தத் துயரத்தில் இருந்து விடுவி! ஓ அசோகமே, அசோகம் என்றால் துயரை அழிப்பவன் என்று பொருள் ஆகையால் உனது பெயரை நிலைநிறுத்து" என்று கேட்டாள். பிறகு அந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, துயரம் நிறைந்த இதயத்துடன் இருந்த அந்த பெண்களில் சிறந்தவளான பீமனின் மகள் {தமயந்தி}, அந்தக் கானகத்தின் பயங்கரமான பகுதிக்குள் நுழைந்தாள். தனது தலைவனைத் தேடியவாறு சுற்றி வந்த அந்த பீமனின் மகள் {தமயந்தி} பல மரங்களையும், ஓடைகளையும், பார்ப்பதற்கு இனிய மலைகளையும், பல விலங்குகளையும், பறவைகளையும், குகைகளையும், செங்குத்தான பாறைகளையும், அற்புதமான தோற்றம் கொண்ட பல ஆறுகளையும் கண்டாள். அப்படியே முன்னேறிச் சென்ற போது, ஒரு அகலமான பாதையை அடைந்து ஒரு வணிகர்க்குழு அங்கே குதிரைகளுடனும், யானைகளுடனும் குளிர்ந்த தெளிந்த நீரைக் கொண்ட நதியின் கரையில் இறங்குவதைக் கண்டாள். அந்த நதி பார்ப்பதற்கு அழகானதாகவும், அகலமானதாவும், பிரம்புப் புதர்களால் மூடியபடியும், கொக்குகள், சக்கிரவாகப் பறவைகள், மீனுண்ணும் பறவைகள் ஆகிவற்றின் ஒலியால் நிறைந்தும், ஆமைகள், முதலைகள், மீன்கள் ஆகியவற்றுடன் ஏராளமான தீவுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

அந்தக் கவிகைகளைக் {நாடோடிகளின் வண்டி} கண்டவுடன் அந்த அழகானவளும், நளனின் கொண்டாடப்பட்ட மனைவியும், பைத்தியம் பிடித்த காட்டுவாசி போல இருந்தவளுமான தமயந்தி, துயரத்தால் ஒடுக்கப்பட்டு, பாதி ஆடையுடன், மெலிந்து, நிறம் மங்கி, அழுக்கடைந்து, தூசு போர்த்திய கூந்தலுடன், அதன் {வண்டியின்} அருகில் சென்று அதற்கு மத்தியில் நுழைந்தாள். அவளைக் கண்ட சிலர் பயத்தால் ஓடினர், சிலர் ஆர்வத்துடன் பார்த்தனர், சிலர் சத்தம் போட்டனர், சிலர் அவளைப் பார்த்துச் சிரித்தனர், சிலர் அவளை வெறுத்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவள் மேல் பரிதாபப்பட்டு, அவளிடம் {தமயந்தியிடம்}, "ஓ அருளப்பட்டவளே, யார் நீ? யாருக்குச் சொந்தமானவள்? இந்தக் கானகத்தில் எதைத் தேடுகிறாய்? உன்னைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம். நீ மானுடப்பிறவிதானா? ஓ அருளப்பட்டவளே, உண்மையைச் சொல். நீ இந்த வனத்திற்கோ, அல்லது அந்த மலைக்கோ அல்லது சொர்க்கத்தின் திக்குகளுக்கான தேவதையா? நாங்கள் உனது பாதுகாப்பைக் கோருகிறோம். நீ யக்ஷப் பெண்ணா? அல்லது ராட்சசப் பெண்ணா? அல்லது தேவலோக மங்கையா? ஓ குற்றமற்ற குணங்கள் கொண்டவளே,  எங்களுக்கு அருள் வழங்கி எங்கைக் காப்பாற்று. ஓ அருளப்பட்டவளே, இந்தக் கவிகைகள் விரைவாகச் சென்று செழிப்பை அடையவும், நாங்கள் நன்றாக பாதுகாப்புடன் இருக்கவும் தக்க செயலைச் செய்" என்றனர்.

இப்படி அந்தக் கவிகைக்காரர்களால் சொல்லப்பட்டதும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்த, துயரத்தால் ஒடுக்கப்பட்ட இளவரசி தமயந்தி, "ஓ கவிகையின் தலைவா, வணிகர்களே, இளைஞர்களே, முதியவர்களே, குழந்தைகளே, இந்தக் கவிகைகளுக்குச் சொந்தக்காரர்களான நீங்கள் என்னை மானுடப்பிறவி என்று அறிந்து கொள்ளுங்கள். நான் ஒரு மன்னனின் {மன்னன் பீமனின்} மகள், ஒரு மன்னனின் {மன்னன் வீரசேனனின்} மருமகள், ஒரு மன்னனின் {மன்னன் நளனின்} மனைவியுமாவேன். நான் எனது தலைவனின் காட்சியைக் காண ஆவலுடன் இருக்கிறேன். விதரப்ப்பத்தின் ஆட்சியாளர் எனது தந்தையே, எனது கணவர் நிஷாதர்களின் தலைவனான நளன் என்ற பெயர் கொண்டவர். வீழாத அருள் உடைய அவரை நான் இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அன்புக்குரியவரான மன்னன் நளரை, அந்த மனிதர்களில் புலியை, எதிரிப் படையை அழிப்பவரை நீங்கள் காண நேர்ந்திருந்தால் எனக்கு விரைவாகச் சொல்லுங்கள்" என்றாள் {தமயந்தி}.

அதன்பிறகு அந்தப் பெரும் கவிகைகளின் தலைவனான சுசி என்ற பெயர் கொண்டவன், குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தியிடம், "ஓ அருளப்பட்டவளே, எனது வார்த்தைகளைக் கேள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் ஒரு வணிகன். நானே இந்தக் கவிகைகளுக்குத் தலைவனாக இருக்கிறேன். ஓ ஒப்பற்ற மங்கையே, நளன் என்ற பெயர் கொண்ட எந்த மனிதனையும் நான் காணவில்லை. மனிதர்கள் வசிக்காத இந்தப் பரந்த கானகத்தில், யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும், புலிகளும், கரடிகளும், மற்ற விலங்குகளும் மட்டுமே இருக்கின்றன. உன்னைத்தவிர, நான் வேறு எந்த மனிதனையோ பெண்ணையோ இங்கு காணவில்லை. ஆகவே, யக்ஷர்களின் மன்னனான * மணிபத்ரன்  எங்களுக்கு உதவி செய்வதாக" என்றான். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அவள் {தமயந்தி} அந்த வணிகர்களிடமும், அந்தக் கூட்டத்தின் தலைவனிடமும், "இந்தக் கவிகைகள் எங்கு செல்கின்றன என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள். அதற்கு அந்தக் குழுவின் தலைவன், "ஓ பெரும் மன்னனின் மகளே, சேதியை ஆளும் உண்மை பேசும் சுபாஹுவின் நகரத்திற்கு லாபம் கருதி இந்தக் கவிகைகள் செல்கின்றன" என்றான் {வணிகர் தலைவன் சுசி}.

------------------------------------------------------------------------

*மணிபத்ரன் - குபேரனுக்கு அடுத்த யக்ஷர் தலைவன். அவன் காடு மற்றும் மலைகளைக் கடக்கும் வணிகர்களைக் காக்கும் தேவனாவான்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்