Sunday, January 12, 2014

நளனைத் தேடும் பணி ஆரம்பம்! - வனபர்வம் பகுதி 69

Search for Nala began! | Vana Parva - Section 69 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

அரசத் தாய் சுதேவனிடமிருந்து தமயந்தியைப் பற்றிய உண்மைகளை அறிதல்; தமயந்தியின் மச்சத்தைக் கொண்டு, அவள் தனது சகோதரியின் மகள் என்பதை அரசத்தாய் அறிதல்; தமயந்தியை அவளது சொந்த நாட்டுக்கு அனுப்புதல்; தமயந்தியின் வற்புறுத்தலாம் பீமன் நளனைத் தேடி அந்தணர்களை மீண்டும் அனுப்புதல்…

சுதேவன் சொன்னான், "பீமன் என்ற பெயரில், அறம் சார்ந்து, விதரப்ப்பத்தின் சிறப்புமிக்க ஆட்சியாளராக ஒருவர் இருக்கிறார். இந்த அருளப்பட்ட மங்கை, அவரது மகளாவாள். இவள் தமயந்தி என்ற பெயரால் பரந்து அறியப்பட்டிருக்கிறாள். வீரசேனன் மகனும், நிஷாதர்களை ஆளும் மன்னனுமான ஒருவன், நளன் என்ற பெயரில் இருக்கிறான். இந்த அருளப்பட்ட மங்கை {தமயந்தி}, ஞானமும், நீதியும் கொண்ட அந்த ஏகாதிபதியின் {நளனின்} மனைவியாவாள். தனது தம்பியால் {புஷ்கரனால்} பகடையில் வீழ்த்தப்பட்டு, நாட்டை இழந்த அந்த மன்னன் {நளன்}, தமயந்தியுடன் சேர்ந்து யாரும் அறியாமல் சென்றுவிட்டான். நாங்கள் தமயந்தியை இந்த உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறோம். கடைசியாக இந்தப் பெண், உமது மகனின் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள்.


இவளின் {தமயந்தியின்} அழகை விஞ்ச இந்த உலகில் வேறு எந்தப் பெண்ணும் கிடையாது. எப்போதும் இளமையுடன் இருக்கும் இந்த மங்கையின் {தமயந்தியின்} புருவத்திற்கு மத்தியில், தாமரையைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான மச்சம், பிறப்பில் இருந்தே இருக்கிறது. (முன்) நாங்கள் பார்த்தபோது, மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சந்தினைப் போல, (முன்னெற்றி) தூசியால் (பூசப்பட்டு) அது மறைந்திருந்தது. செழிப்பையும், செல்வத்தையும் குறிப்பதற்கு படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே வைக்கப்பட்ட குறியீடான அது, வளர்பிறையின் முதல் நாள் {பிரதமையன்று} தோன்றும் சந்திரன் மேகத்தால் மறைக்கப்பட்டது போல, லேசாகத் தான் தெரிந்தது. உடல் தூசியால் மூடியிருந்தாலும், இவளது அழகு மறையவில்லை. இவள் தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லையெனினும், அது {மச்சம்} இன்னும் வெளிப்படையாக இருந்து தங்கம் போல மின்னுகிறது.  தேவதையைப் போன்ற இந்தப் பெண்ணை {தமயந்தியை}, வெப்பத்தை வைத்தே நெருப்பைக் கண்டுபிடிப்பது போல், இவளது உருவத்தையும், அந்த மச்சத்தையும் வைத்தே நான் கண்டுபிடித்தேன்" என்றான் {பிராமணன் சுதேவன்}.


ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சுதேவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுனந்தை, தமயந்தியின் புருவங்களுக்கு மத்தியில் இருந்த மச்சத்தில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். அதன்பிறகு அது {அந்த மச்சம்}, மேகத்தில் இருந்து வெளிப்பட்டு வானத்தில் தெரியும் சந்திரனைப் போலத் தெரிந்தது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மச்சத்தைக் கண்டதும், சுனந்தையும், அரசத்தாயும் அழத்தொடங்கி, தமயந்தியை வாரி அணைத்தபடி சிறிது நேரம் அமைதியாக நின்றனர். கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அரசத்தாய், மென்மையான வார்த்தைகளால், "இந்த மச்சத்தை வைத்து, நீ எனது சகோதரியின் மகள் என்பதை அறிந்தேன். ஓ அழகான பெண்ணே {தமயந்தியே}, உனது அன்னையும் நானும், தசார்ண நாட்டு ஆட்சியாளரான சுதாமனின் மகள்களாவோம். அவள் மன்னர் பீமனுக்கு {விதரப்ப்ப நாட்டு மன்னனுக்கு} அளிக்கப்பட்டாள். நான் வீரபாகுவுக்குக் {சேதி நாட்டு மன்னனுக்குக்} கொடுக்கப்பட்டேன். தசார்ண நாட்டில் இருக்கும் எங்களது தந்தையின் அரண்மனையில் நான் உனது பிறப்பைக் கண்டேன் {சேதி நாட்டு அரசத்தாய் தமயந்தியின் சித்தி}. ஓ அழகானவளே {தமயந்தி} உனக்கு, எனது வீடும் உன் தந்தையின் வீடு போன்றதே. ஓ தமயந்தி, இந்த செல்வங்கள் எனக்கு எப்படியோ அதபோலத்தான் உனக்கும்" என்றாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்டதும், தனது அன்னையின் சகோதரியை வணங்கி, "அறியப்படாமல் இருந்தும், நான் இங்கே உம்முடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். எனது விருப்பங்கள் அனைத்தும் திருப்தியாகச் செய்யப்பட்டன. என்னை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள். நான் தங்கியிருந்தவரை எப்படி மகிழ்ந்தேனோ அப்படியே இனிமேலும் சந்தேகமற இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் தாயே, நெடுநாளாக நாடு கடந்து இருக்கிறேன். ஆகையால், (நான் செல்வதற்கு) எனக்கு  நீங்கள் உத்தரவு வழங்க வேண்டும் எனது மகனும் மகளும் எனது தந்தையின் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார்கள். தந்தையையும் தாயையும் பிரிந்து, துயருடன் அவர்கள் எவ்வாறு தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ? எனக்கு ஏற்புடையதை நீங்கள் செய்ய வேண்டுமென்றால், நேரங்கடத்தாமல், ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் விதரப்ப்பத்திற்குச் செல்ல விரும்புகிறேன்" என்றாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் (தமயந்தியின்) அன்னையின் சகோதரி {அரசத்தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, "அப்படியே ஆகட்டும்" என்றாள். ஓ பாரதர்களின் தலைவனே {யுதிஷ்டிரா}, அந்த அரசத்தாய் தனது மகனிடம் அனுமதி பெற்று, அதிகமான மெய்க்காவலர்களுடனும், முதல்தரமான ஆடைகள், பானங்கள் மற்றும் உணவும் கொடுத்து, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அனுப்பி வைத்தாள். விரைவாக அவள் {தமயந்தி} விதரப்ப்ப நாட்டை அடைந்தாள். அவளது உறவினர்களை அனைவரும் (அவளது வரவால்) மகிழ்ந்து, அவளை மரியாதையுடன் வரவேற்றனர். தனது உறவினர்களும், பிள்ளைகளும், தனது பெற்றோர் இருவரும், பணிப்பெண்கள் அனைவரும் நலமாக இருப்பதைக் கண்ட சிறப்புமிக்க தமயந்தி, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களையும், அந்தணர்களையும் மேன்மையான முறையில் வழிபட்டாள். தனது மகளை {தமயந்தியைக்} கண்ட மன்னன் {பீமன்}, மிகவும் மகிழ்ந்து, சுதேவனுக்கு ஆயிரம் பசுக்களையும், பல செல்வங்களையும், ஒரு கிராமத்தையும் கொடுத்தான்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இரவைத் தனது தந்தையின் மாளிகையில் கழித்து களைப்பில் இருந்து மீண்ட தமயந்தி தனது அன்னையிடம், "ஓ தாயே, உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், மனிதர்களில் வீரரான நளரைக் கொண்டு வர (அக்கறையுடனும், சிரமம் பாராமலும்) முயற்சிக்க வேண்டும்" என்றாள். இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட வணக்கத்திற்குரிய ராணி சோகத்தில் ஆழ்ந்தாள். கண்ணீரால் குளித்த அவளால் {ராணியால்} பதில் சொல்ல இயலவில்லை. அவளது {தமயந்தியின்} துயர்நிலையைக் கண்டு, அந்த உள் அறைகளில் {அந்தப்புரத்தில்}  இருந்தவர்கள் அனைவரும் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் உரக்க அழுதனர். பிறகு ராணி பலம்பொருந்திய ஏகாதிபதியான பீமனிடம், "உமது மகள் தமயந்தி, தனது கணவனை நினைத்து {அழுது} புலம்புகிறாள். ஓ மன்னா {பீமரே}, தனது நாணம் அனைத்தையும் விட்டு, தனது மனதில் இருப்பதை அவளே என்னிடம் தீர்மானமாகச் சொன்னாள். அந்த நீதிமானை (நளனை), உமது மக்கள் {பணியாட்கள்} தேடட்டும்" என்றாள்.

அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {பீமன்} அந்தணர்களிடம் "நளனைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயலுங்கள்" என்று சொல்லி எல்லாப்புறங்களுக்கு அனுப்பினான். விதரப்ப்ப ஆட்சியாளனால் {நளனைத் தேட} உத்தரவிடப்பட்ட அந்த அந்தணர்கள், தமயந்தியின் முன் தோன்றி, தாங்கள் மேற்கொள்ளப்போகும் பயணத்தைக் குறித்து அவளிடம் சொல்லினர். அவர்களிடம் அந்த பீமனின் மகள் {தமயந்தி}, "நீங்கள் சென்று, அனைத்து நாடுகளிலும், அனைத்து சபைகளிலும் "ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது  எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும்." என்று சொல்லுங்கள். காற்றின் துணையால் நெருப்பு கானகத்தை உட்கொண்டுவிடும். ஆகையால், அவர் என் மீது பரிதாபம் கொள்ளும் வகையில் இதையும் இதற்கு மேலும் சொல்லுங்கள்.

(மேலும்) "மனைவியாகப்பட்டவள் எப்போதும் கணவனால் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் இருக்க வேண்டும். கடமைகள் அனைத்தையும் அறிந்து, நல்லவராக இருக்கும் தாங்கள், ஏன் அந்த இரு கடமைகளையும் {பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் [உணவு அளித்தல்]} புறக்கணித்தீர்? புகழும், ஞானமும், நல்ல பிறப்பும், அன்பும் உடைய நீர் ஏன் இப்படி அன்பில்லாமல் நடந்து கொண்டீர்? இவையெல்லாம் எனது நற்பேறுகள் தொலைந்ததனால் நடக்கின்றன என்று அஞ்சுகிறேன்" என்று சொல்லுங்கள். இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, யாராவது உங்களுக்கு பதிலளித்தால், அந்த மனிதரைக் குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். அவர் யார்? அவர் எங்கு வசிக்கிறார்? என்பதை அறிந்து கொள்ளுங்கள். மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, இந்தப் பேச்சைக்கேட்டு யார் உங்களிடம் பதில் பேச விழைகிறாரோ, அவரின் அந்த வார்த்தைகளை என்னிடம் {எனது கவனத்திற்கு} கொண்டு வாருங்கள். நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளைக் கேட்கும் யாரும், இது என்னால் உத்தரவிடப்பட்ட வார்த்தைகள் என்றோ அல்லது நீங்கள் என்னிடம் திரும்ப வருவீர்கள் என்றோ அறிந்து கொள்ளாதவாறு பேசுங்கள். பதில் சொல்லும் அவர், செல்வந்தரா, அல்லது ஏழையா, அல்லது சக்தியற்றவரா, என்றும் அறிந்து கொள்ளுங்கள். உண்மையில் அவர் குறித்த அத்தனையும் அறிந்து கொள்ளுங்கள்" என்று {அந்த அந்தணர்களிடம்} சொன்னாள் {தமயந்தி}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி தமயந்தியால் உத்தரவிடப்பட்ட அந்தணர்கள் அனைவரும், பேரழிவில் சிக்கியிருக்கும் நளனைத் தேடி, எல்லாத் திக்குகளுக்கும் சென்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நகரங்களிலும், நாடுகளிலும், கிராமங்களிலும், துறவிகள் இருக்கும் இடங்களிலும், இடையர்கள் இருக்கும் இடங்களிலும் {இடைச்சேரிகளிலும்} அந்த அந்தணர்கள் அவனை {நளனைத்} தேடினர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் தமயந்தி சொல்லியபடி செய்தனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்