Sunday, January 12, 2014

"கண்டேன் நளனை!", என்றான் பர்ணாதன். - வனபர்வம் பகுதி 70

"I saw Nala!" said Parnada | Vana Parva - Section 70 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

பர்ணாதன் என்ற அந்தணன், அயோத்தி சென்று பாகுகனைச் சந்தித்துப் பேசியதாகவும், அவன் நளனாக இருக்கக்கூடும் என்றும், தமயந்தியிடம் வந்து சொல்வது; சந்தேகத்தின் அடிப்படையில் தமயந்தி சுதேவனை ரிதுபர்ணனின் நாட்டுக்கு அனுப்பவது; சுதேவனிடம் நளன் தமயந்திக்கான சமாதானத்தைச் சொல்வது…

பிருகதஸ்வர் சொன்னார், "பிறகு நீண்ட காலம் கடந்ததும், பர்ணாதன் என்ற அந்தணன் ஒருவன் {விதரப்ப்ப} நகரத்திற்குத் திரும்பி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, "ஓ தமயந்தி, நிஷாதர்களின் மன்னனான நளனைத் தேடி, அயோத்தி நகருக்குச் சென்று, பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்) முன் நின்றேன். ஓ பெண்களில் சிறந்தவளே, நான் உனது வார்த்தைகளை அந்த அருளப்பட்ட ரிதுபர்ணன் முன்னிலையில் திரும்பச் சொன்னேன். ஆனால், நான் திரும்பத் திரும்ப அவற்றைச் சொன்னாலும், அதைக் கேட்ட அந்த மனிதர்களின் ஆட்சியாளனோ {ரிதுபர்ணனோ}, அல்லது அங்கிருந்த அரசவையினரோ எதற்கும் பதில் சொல்லவில்லை. பிறகு, நான் அந்த ஏகாதிபதியால் {ரிதுபர்ணனால்} அனுப்பப்பட்ட பிறகு, ரிதுபர்ணனின் சேவையில் ஈடுபட்டிருக்கும் பாகுகன் என்ற பெயர் கொண்ட மனிதன் என்னை அணுகி அழைத்தான்.


குட்டைக் கைகளுடன், காணச்சகியாத் தோற்றம் கொண்ட அந்த பாகுகன், மன்னனின் {ரிதுபர்ணனின்} தேரோட்டியாக இருக்கிறான். அவன் வேகமாக வண்டி ஓட்டுவதில் நிபுணனாகவும், சமையற்கலையை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்டவன், அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, திரும்பத் திரும்ப அழுது, எனது நலத்தை விசாரித்து, பிறகு என்னிடம், "என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள்.  அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதாரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது" என்று சொன்னான். அவனது வார்த்தைகளைக் கேட்டதும், நான் விரைந்து இங்கு வந்துவிட்டேன். இப்போது நீ அனைத்தையும் கேட்டுவிட்டாய். மன்னனுக்கு {பீமருக்கு} இது குறித்துச் சொல்லிவிட்டு, உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்" என்றான் {பர்ணாதன்}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பர்ணாதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, கண்கள் நிறைந்த கண்ணீருடன் தனது தாயிடம் வந்து, "ஓ தாயே, மன்னர் பீமரிடம், எனது இந்தக் காரியம் குறித்து எதுவும் தெரியப்படுத்தக்கூடாது. உனது முன்னிலையில், நான் அந்தணர்களில் சிறந்த சுதேவனை {இக்காரியத்தில்} நியமிக்கப் போகிறேன். நீ எனது நன்மையில் விருப்பமுள்ளவளாக இருந்தால், மன்னர் பீமர் எனது காரியத்தை அறியாதவாறு நடந்து கொள். என்னை எப்படி எனது நண்பர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து சேர்த்தானோ அப்படியே நளரைக் கொண்டு வரும் காரியத்திற்காக, உரிய அறம் சார்ந்த சடங்குகளைச் செய்த பிறகு, காலந்தாழ்த்தாமல் சுதேவன் அயோத்தியா நகரத்திற்குச் செல்லட்டும்" என்றாள். பர்ணாதன் களைப்பில் இருந்து மீண்டதும், விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, அவனை வணங்கி, நிறைந்த செல்வத்தைக் கொடுத்து, "ஓ அந்தணரே, நளர் இங்கு வந்ததும், நான் உனக்கு இன்னும் அதிகமான செல்வத்தை அளிப்பேன். ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நான் விரைந்து எனது (தொலைந்த) தலைவனை மீட்க ஏதுவாக, நிச்சயம் யாராலும் செய்ய முடியாத செயற்கரிய சேவையை எனக்காக நீ செய்திருக்கிறாய்" என்றாள்.

இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட உயர்ந்த மனம் கொண்ட அந்தணன் {பர்ணாதன்}, அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசீர்வாதங்கள் செய்து, தனது காரியம் வெற்றியடைந்ததெனக் கருதி தனது இல்லத்திற்குச் சென்றான். அவன் சென்ற பிறகு, துன்பத்தால் ஒடுக்கபட்ட தமயந்தி, ஓ யுதிஷ்டிரா, தனது தாயின் முன்னிலையில் சுதேவனை அழைத்து, "ஓ சுதேவா, பறவையென நேராக அயோத்தியா நகரத்திற்குச் சென்று, மன்னன் ரிதுபர்ணனிடம், "பீமனின் மகளான தமயந்திக்கு மற்றொரு சுயம்வரம் நடக்கப் போகிறது. அனைத்து மன்னர்களும், இளவரசர்களும் அங்கே செல்கின்றனர். நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில், அந்த விழா நாளை நடைபெறப் போகிறது என்று காண்கிறேன். ஓ எதிரிகளை அடக்குபவரே {ரிதுபர்ணா}, உம்மால் முடியும் என்றால், காலந்தாழ்த்தாமல் செல்லும். வீரனான நளன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரியாததால், நாளை சூரியன் உதித்ததும் அவள் {தமயந்தி}, தனது இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள்" என்று சொல்" என்றாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட சுதேவன் கிளம்பினான். அவன் என்ன சொல்ல {தமயந்தியால்} வழிநடத்தப்பட்டானோ, அதை ரிதுபர்ணனிடம் சொன்னான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்