Tuesday, January 14, 2014

நளனை விட்டு வெளியேறிய கலி! - வனபர்வம் பகுதி 72

Kali came out of Nala! | Vana Parva - Section 72 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

வேகமாக நளன் தேரை ஓட்டிச் சென்ற போது, ரிதுபர்ணனின் மேலாடை விழுவது; நளன் ரிதுபர்ணனை அம்மேலாடையை எடுக்க அனுமதியாதது; ரிதுபர்ணன் தனது திறமையைச் சொல்வது; நளன் நம்பாதது; ரிதுபர்ணன் தான்றி மரத்தின் இலைகளையும் கனிகளையும் எண்ணிச் சொல்வது; நளன் அதை நம்பாது எண்ணி உண்மை கண்டறிந்து அதிசயிப்பது; நளன் ரிதுபர்ணனிடம் இருந்து பகடையின் ரகசியத்தை அறிவது; கலி நளனை விட்டு அகலுவது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "வானத்தில் பறந்து செல்லும் பறவையைப் போல நளன் விரைவாக ஆறுகளையும், மலைகளையும், கானகங்களையும், தடாகங்களையும் கடந்து சென்றான். அப்படி அவன் {நளன்} சென்று கொண்டிருக்கும்போது, எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பங்காசூரனின் மகனது {ரிதுபர்ணனின்} மேலாடை தரையில் விழுந்தது. அப்படி அவனின் {ரிதுபர்ணனின்} மேலாடை விழுந்ததும், அந்த உயர்ந்த மனம் கொண்ட ஏகாதிபதி நேரத்தைக் கடத்தாமல் உடனேயே நளனிடம், "நான் அதை {விழுந்த மேலாடையை} எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ ஆழ்ந்த புத்திகூர்மை கொண்டவனே {பாகுகனே-நளனே}, மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் குதிரைகளை நிறுத்து. நான் வார்ஷ்ணேயனைக் கொண்டு அந்த ஆடையை எடுத்து வரச் செய்கிறேன்" என்றான்.

அதற்கு நளன் அவனிடம் {ரிதுபர்ணனிடம்}, அந்த ஆடை வெகுதூரத்தில் விழுந்து கிடக்கிறது. நாம் ஒரு யோஜனை தூரம் {எட்டு மைல்கள் அல்லது 13 கிலோமீட்டர்கள்} கடந்து வந்துவிட்டோம். ஆகையால் அதை நம்மால் மீட்டெடுக்க முடியாது" என்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா} நளன் இப்படிச் சொன்னதும், அந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, அக்கானகத்தில் கனிகள் நிறைந்த தான்றி {Vibhitaka tree = தான்றி மரம்} மரத்தைக் கண்டான். அந்த மரத்தைக் கண்டதும் அம்மன்னன் பாகுகனிடம் விரைவாக, "ஓ தேரோட்டியே, கணக்கீட்டில் {எண்ணிக்கை அறிவில்) எனது உயர்ந்த திறமையைப் பார். எல்லா மனிதர்களும் அனைத்தையும் அறிந்துவிடுவதில்லை. அனைத்து அறிவியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கிடையாது. ஓ பாகுகா, ஞானம் முழுவதும் {உலகத்தின் மொத்த ஞானத்தையும்} ஒரே மனிதனிடம் காணப்படுவதில்லை.  இந்த மரத்தில் இருக்கும் இலைகளும் கனிகளையும் விட, தரையில் உதிர்ந்து கிடக்கும் அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் நூற்றி ஒரு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது {இலைகளில் நூறும், கனிகளில் ஒன்றும் அதிகம் என்றும் கதைகளில் கேட்டிருக்கிறேன்}. அந்த மரத்தின் இரு கிளைகளில் ஐம்பது லட்சம் (5 million} இலைகளும், இரண்டாயிரத்து தொண்ணூற்று ஐந்து கனிகளும் இருக்கின்றன. வேண்டுமானால் இந்த இரு கிளைகளையும் மற்ற கிளைகளையும் ஆராய்ந்து பார்" என்றான்.

அதற்கு நளன் தேரை நிறுத்தி அம்மன்னனிடம், "ஓ எதிரிகளை நசுக்குபவரே {ரிதுபர்ணரே}, எனது அறிவுக்கு எட்டாத ஒரு காரியத்தைச் சொல்லி, நீரே உம்மைப் புகழ்ந்து கொள்கிறீர். ஆனால், ஓ ஏகாதிபதி, அந்தத் தான்றி மரத்தை வெட்டி நான் எனது புலன்களால் கிடைக்கும் சாட்சிகளைக் கொண்டு {எண்ணிப் பார்த்து} அதை உறுதி செய்வேன். ஓ மன்னா,  அப்படி உண்மையிலேயே நான் எண்ணிப் பார்த்தால் அது ஊகங்களின்படி இருக்காது {உண்மையாகக் கூட இருக்கலாம்}. ஆகையால், உமது முன்னிலையிலேயே, ஓ ஏகாதிபதி {ரிதுபர்ணரே}, நான் இந்த தான்றியை வெட்டுவேன். அது {நீர் சொன்னது போலச்} சரியாக இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, உமது முன்னிலையிலேயே நான் அதன் கனிகளையும் இலைகளையும் எண்ணுவேன். அதுவரை வார்ஷ்ணேயன் இந்தக் குதிரைகளின் கடிவாளத்தைச் சிறிது நேரம் பிடிக்கட்டும்" என்றான் {பாகுகனாக இருக்கும் நளன்}.

அந்தத் தேரோட்டியிடம் {பாகுகன் என்ற நளனிடம்} அம்மன்னன் {ரிதுபர்ணன்}, "விரையமாக்குவதற்கு நேரம் இல்லை" என்றான். ஆனால் பாகுகன் பணிவுடன், "சிறிது நேரம் காத்திருக்கவும். நீர் அவசரத்தில் இருக்கிறீர் எனில், வார்ஷ்ணேயனை தேரோட்டியாகக் கொண்டு செல்லும். சாலை நேராகவும் சமமாகவுமே இருக்கிறது" என்றான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதற்கு பாகுகனைச் சமாதானப்படுத்த ரிதுபர்ணன், "ஓ பாகுகா, நீயே ஒரே தேரோட்டி, உனக்கு இணையானவன் இந்த உலகத்தில் இல்லை. மேலும், நீ குதிரைகளின் மரபுகளை அறிந்திருக்கிறாய். நான் விதரப்ப்பத்திற்குச் செல்வது உனது உதவியின் மூலம்தான் ஆகும் என்று நினைக்கிறேன். நான் என்னை உனது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். நீ எனக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்துவது உனக்குத் தகாது. மேலும், ஓ பாகுகா, நீ இன்றே என்னை விதரப்ப்பத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சூரிய உதயத்தைக் காணச் செய்தாயானால், நீ விரும்பும் எதையும் நான் உனக்குக் கொடுப்பேன்" என்றான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.

அதற்கு பாகுகன், "நான் உமது வார்த்தைகளை ஏற்கிறேன். இந்தத் தான்றியை (அந்த மரத்தின் இலைகளையும் கனிகளையும்} எண்ணி முடித்ததும், விதரப்ப்பத்திற்கு முன்னேறுவேன்" என்று பதில் சொன்னான். பிறகு அந்த மன்னன் {ரிதுபர்ணன்}, அவனிடம் {நளனிடம்} தயக்கத்துடன், "எண்ணிப்பார். இந்தக் கிளையின் பகுதியில் இருக்கும் இலைகளையும் கனிகளையும் எண்ணியதும், நீ எனது உறுதியை {எண்ணிக்கையை} ஏற்று திருப்தியடைவாய்" என்றான். அதன்பிறகு பாகுகன் {நளன்} விரைவாகத் தேரில் இருந்து இறங்கி அந்த மரத்தைச் சாய்த்தான். அப்படி எண்ணி முடித்ததும் கனிகளின் எண்ணிக்கை, அம்மன்னன் சொன்னது போலச் சரியாக இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்து, "ஓ ஏகாதிபதி, இந்த உமது சக்தி அற்புதமானது. ஓ இளவரசரே, நீர் எதைக் கொண்டு இதை உறுதி செய்தீரோ அந்தக் கலையை அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்  {பாகுகன் என்ற நளன்}.

விரைவாகச் செல்ல நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பாகுகனிடம் {நளனிடம்}, "எண்ணிக்கையில் உள்ள நிபுணத்துவத்தைப் போல நான் பகடையிலும் நிபுணன் என்பதை அறிந்து கொள்" என்றான். அதற்கு பாகுகன் {நளன்}, "ஓ மனிதர்களில் காளையே, இந்த அறிவை எனக்குக் கொடும். பதிலுக்கு குதிரைகளின் அறிவை நான் உமக்குக் கொடுக்கிறேன்" என்றான். பாகுகனின் நல்லெண்ணத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதிய மன்னன் ரிதுபர்ணன், {அந்தத் தேரோட்டி கொண்டிருந்த) குதிரைகளின் மரபு ஞானத்தில் இருந்த மயக்கத்தால், "அப்படியே ஆகட்டும்" என்றான். "உன்னால் பரிந்துரைக்கப்பட்ட படி, நீ பகடை அறிவியலை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். ஓ பாகுகா, நான் பெற வேண்டிய குதிரை அறிவியலைக் குறித்து நீ சொன்னதில் உறுதியோடு இரு" என்று சொன்னான். இப்படிச் சொன்ன ரிதுபர்ணன், நளனுக்கு அந்த அறிவைப் {நளன் விரும்பிய பகடை அறிவியலை} போதித்தான். நளன் பகடை அறிவியலைக் கற்றுக் கொண்டதும், அவனது உடலில் இருந்து {பாம்பு} கார்க்கோடகனின் கடும் விஷத்தைக் கக்கிக் கொண்டு, கலி {கலி யுகம்} வெளியேறினான்.

பிறகு, (தமயந்தியின் சாபத்தால்) பாதிக்கப்பட்ட கலி (நளனின் உடலில் இருந்து) வெளியேறியபோது, அந்தச் சாபத்தின் நெருப்பும் கலியை விட்டது. உண்மையில், நெடுங்காலம் கலியால் பாதிக்கப்பட்ட மன்னன் {நளன்}  கீழான உடலைப் பெற்றிருந்தான். இதனால் நிஷாதர்களின் ஆட்சியாளனான அந்தக் கலா [Kala = கலா (அ) காலன்] {நளன்}, கோபத்தில் கலியைச் சபிக்க எண்ணினான், ஆனால் அதற்குள் பயந்து போன கலி, நடுக்கத்துடனும், கூப்பி கரங்களுடனும், "ஓ மன்னா {நளா},  உனது கோபத்தைக் கட்டுப்படுத்து. உனக்கு நான் சிறப்பைத் {புகழைத்} தருவேன். இந்திரசேனனின் தாய் {தமயந்தி}, நீ அவளைக் கைவிட்டபோதே, என்னைக் கோபத்தில் சபித்துவிட்டாள். அப்போதிருந்து உனக்குள் இருந்து நான் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதியே, ஓ வீழ்த்தப்பட முடியாதவனே, நான் தினமும் இரவும் பகலும் அந்த பாம்புகளின் இளவரசன் {கார்க்கோடகன்} விஷத்தால் எரிந்து வருகிறேன். நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். பயந்து போய், உனது பாதுகாப்பைக் கோரும் என்னை நீ சபிக்காமல் இருந்தால், உனது கதையைக் {நளனின் கதையைக்} கவனத்துடன் உரைக்கும் மனிதர்கள், என்னைக் குறித்த {கலியின்-கலிகாலத்தின்} பயத்தில் இருந்து நிச்சயம் விடுபடுவார்கள் {மனிதர்களுக்கு} என்னைக் {கலிகாலத்தைக்} குறித்த பயம் உண்டாகாது}" என்றான் {கலி என்ற கலிகாலம்}.

இப்படி கலியால் சொல்லப்பட்ட மன்னன் நளன், தனது கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்படி பயந்துபோயிருந்த கலி விரைவாக அந்தத் தான்றி மரத்துக்குள் நுழைந்தான். கலி அந்த நைஷாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, மற்றவர்களின் பார்வைக்கு தெரியாதவாறு {தன்னை மறைத்து அரூபமாக} இருந்தான். தனது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மரத்தின் கனிகளை எண்ணி முடித்திருந்த அம்மன்னன் {நளன்}, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, உயர்ந்த சக்தியை அடைந்து, அந்தத் தேரில் ஏறி, குதிரைகளை விரைவாகச் செலுத்தி, பெரும் சக்தியுடன் முன்னேறினான். கலியின் தொடுதலால், அந்தத் தான்றி மரம், அந்நேரத்திலிருந்தே {மனிதர்களால்} விலக்கப்பட்ட மரமானது.

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நளன் அந்த குதிரைகளில் முதன்மையானவற்றை விரைவுப்படுத்தினான். அவை சிறகுகள் கொண்ட உயிரினங்களைப் போல மீண்டும் காற்றில் ஏறியது. நளன் சென்ற பிறகு, கலியும் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கலியால் கைவிடப்பட்ட அந்த பூமியின் தலைவனான் மன்னன் நளன், தனது சொந்த உருவத்தை ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பேரிடரில் இருந்து விடுபட்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்