Tuesday, January 14, 2014

தனது பிள்ளைகளைக் கண்ட நளன்! - வனபர்வம் பகுதி 75

Nala saw his children! | Vana Parva - Section 75 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி மீண்டும் கேசியினை அனுப்பி பாகுகனின் நடத்தையைக் கண்காணிக்கச் செய்தல்; பாகுகனின் இயல்புக்கு மிக்க செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்த கேசினி விரைவாக வந்து அச்செய்தியை தமயந்தியிடம் சொல்லல்; தமயந்தி மீண்டு கேசினியை அனுப்பி சூடான இறைச்சியைக் கொண்டு வரச் செய்தல்; பாகுகனே நளன் என்று உறுதி செய்துகொண்டு, தனது பிள்ளைகளைக் கேசினியுடன் அனுப்பி வைத்தல்; பிள்ளைகளைக் கண்ட பாகுகன் பெருந்தொனியுடன் அழுதல்…

பிருகதஸ்வர் சொன்னார், "அனைத்தையும் கேட்ட தமயந்தி துயரத்தில் ஆழ்ந்து, அந்த மனிதரே நளன் என்று சந்தேகித்து, கேசினியிடம், "ஓ கேசினி, நீ மறுபடியும் சென்று பாகுகரின் நடத்தையை அமைதியாகக் குறித்துக் கொள். ஓ அழகானவளே, அவர் ஏதாவது நிபுணத்துவத்துடன் செய்தால், அவர் அதைச் செய்யும்போது நன்றாகக் கூர்ந்து கவனித்துக் கொள். மேலும், ஓ கேசினி, அவர் உன்னிடம் நீரோ நெருப்போ கேட்கலாம். அப்போது நீ அவரது காரியத்தைத் தடை செய்வதற்காக, அதைக் கொடுப்பதற்கு எந்த அவசரத்தையும் காட்டாதே. அவரது நடத்தைகளை நன்றாகக் குறித்துக் கொண்டு இங்கே வந்து என்னிடம் சொல். பாகுகரிடம் மனிதச் செயலையோ, மனிதர்களுக்கு மீறிய {தெய்வ} செயலையோ கண்டால் மற்ற அனைத்துடன் சேர்த்து எனக்கு வந்து தெரிவி" என்றாள்.


இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட கேசினி, குதிரைகளின் மரபுகளை அறிந்த அந்த மனிதனின் நடத்தைகளைக் குறித்துக் கொண்டு திரும்பி வந்தாள். பிறகு, உண்மையில் அங்கு பாகுகனிடம் தான் கண்ட மனித செயலையும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட {தேவ} செயல்கள்  அத்தனையும் சொன்னாள். கேசினி, "ஓ தமயந்தி, அனைத்துக்கூறுகளிலும் இத்தகு கட்டுப்பாடும் ஆற்றலும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதோ கேட்டதோ கிடையாது. தாழ்வான பாதைகளில் அவர் வரும்போது ஒரு போதும் குனிவதில்லை. ஆனால் அவர் வருவதைக் கண்டு அந்தப் பாதையே வளர்ந்து, அவரது உருவம் எளிதாகச் செல்லும் அளவிற்கு இடம் கொடுக்கிறது. அவர் அணுகும்போது நுழையமுடியாத குறுகிய துளைகளும் இவருக்காக வழிவிட்டு அகன்றுவிடுகின்றன.

மன்னர் பீமர் ரிதுபர்ணனின் உணவுக்காக பல வகையான விலங்குகளின் இறைச்சியை அனுப்பி வைத்தார். அங்கே இறைச்சியைச் சுத்தப்படுத்துவதற்காக பல பாத்திரங்கள் இருந்தன. அவர் {பாகுகன் -நளர்} அவற்றைப் பார்த்த உடனேயே அவை (நீரால்) நிரம்பின. பிறகு இறைச்சியைக் கழுவிய பிறகு, உணவைச் சமைக்க ஆரம்பித்தார். அவர் கை நிறைய புல்லை எடுத்துக் கொண்டு சூரியனுக்கு நேராகக் காட்டினார். அது தானாகவே திடிரென்று பற்றிக் கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு நான் இங்கு வந்துவிட்டேன். மேலும், அவரிடம் நான் மேலும் ஒரு அற்புதத்தைக் கண்டேன். ஓ அழகானவளே, அவர் நெருப்பைத் தொடுகிறார். ஆனால், அது அவரைச் சுடவில்லை. அவர் சில மலர்களை எடுத்து மெதுவாக அவற்றை அழுத்தினார். அவரது கையால் அழுத்தப்பட்ட அம்மலர்கள் தங்கள் சுய உருவை இழக்கவில்லை. மாறாக அவை சாம்ப நிறம் {அதிக நிறம்} கூடி, மேலும் நறுமணமாயிற்று. இந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு நான் இங்கே விரைவாக வந்துவிட்டேன்" என்றாள்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "அறம்சார்ந்த நளனின் இச்செயல்களைக் கேட்டு, அவனது நடத்தைகளைக் கொண்டு அவனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனை மீட்டு விட்டதாகவே கருதினாள். இந்த அனைத்துக் குறிப்புகளாலும் பாகுகன்தான் தனது கணவன் என்று சந்தேகித்த தமயந்தி, மீண்டும் அழுதுகொண்டே கேசினியிடம் மென்மையான வார்த்தைகளால், "ஓ ஆழகானவளே, மீண்டும் ஒரு முறை சென்று, அடுக்களையில் {சமையல் செய்யும் இடம்} (அவரால்) சமைத்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை பாகுகன் அறியாமல் எடுத்துக் கொண்டு வா" என்றாள் {தமயந்தி}.

தமயந்திக்கு ஏற்புடையதை எப்போதும் செய்ய விழையும் கேசினி, இப்படிக் கட்டளையிடப்பட்டதும் பாகுகனிடம் சென்று, சூடான இறைச்சியை எடுத்துக் கொண்டு நேரம் கடத்தாமல் விரைவாக வந்தாள். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இறைச்சியை கேசினி தமயந்தியிடம் கொடுத்தாள். நளனால் சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை ஏற்கனவே உண்டிருக்கும் தமயந்தி, தனது பணிப்பெண்ணால் கொண்டுவரப்பட்ட இறைச்சியை சுவைத்துப் பார்த்தாள். அதன் பிறகு பாகுகன்தான் நளன் என்ற தீர்மானத்திற்கு வந்து, இதயத்தின் துயரத்தால் உரக்க அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா} துக்கத்தில் மூழ்கி, தனது முகத்தைக் கழுவிக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கேசினியுடன் அனுப்பி வைத்தாள். பாகுகன் என்ற மாற்று உருவத்தில் இருந்த மன்னன் {நளன்}, இந்திரசேனையையும் அவளது சகோதரனையும் {இந்திரசேனனையும்} அடையாளம் கண்டு, விரைவாக முன்னேறி, அவர்களை வாரி அணைத்து, தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.

தேவர்கள் போன்று இருந்த தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, பெரும் துக்கத்தால் இதயம் ஒடுக்கப்பட்டு, பெருந்தொனியில் உரத்த வார்த்தைகள் சொல்லி அழ ஆரம்பித்தான். தனது உள்ளப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பின், திடீரென பிள்ளைகளை விட்டு விட்டு, கேசினியிடம், "ஓ அழகான மங்கையே, இந்த இரட்டையர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றே இருக்கின்றனர். எதிர்பாராமல் இவர்களைச் சந்தித்ததால் நான் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் வேறு நிலத்தில் {நாட்டில்} இருந்து வந்திருக்கும் விருந்தாளிகள், நீ அடிக்கடி என்னிடம் வந்தால், மக்கள் தவறாக நினைப்பார்கள். ஆகையால், ஓ அருளப்பட்டவளே, சுகமாக செல்" என்றான் {நளன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்