Thursday, January 16, 2014

புஷ்கரனை வென்ற நளன்! - வனபர்வம் பகுதி 78

Nala won Pushkara! | Vana Parva - Section 78 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன் சிறு படையுடன் தனது நாட்டுக்குத் திரும்பி புஷ்கரனை சூதுக்கு அழைப்பது; புஷ்கரனின் ஏளனம் மற்றும் பேராசை; நளன் புஷ்கரனை வெல்வது; புஷ்கரனுக்கு பாதி நாட்டைக் கொடுப்பது…

பிருகதஸ்வர் சொன்னார், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அங்கே {குண்டினத்தில்} ஒரு மாதம் தங்கிய பிறகு, பீமனின் அனுமதியுடன், சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு நிஷாதர்களின் நாட்டுக்குச் சென்றான். வெள்ளை நிறத்திலான தனித்தேருடன், பதினாறு {16} யானைகளும், ஐம்பது {50} குதிரைகளும், அறுநூறு {600} காலாட்படையுடனும் அந்த ஒப்பற்ற மன்னன் {நளன்} பூமியை நடுங்கச் செய்து, நேரத்தைக் கடத்தாமல் கோபத்துடன் அங்கு {நிஷாதர்களின் நாட்டுக்குள்} நுழைந்தான். வீரசேனனின் பலம்பொருந்திய மகன் {நளன்} புஷ்கரனை அணுகி, அவனிடம் {புஷ்கரனிடம்}, "நான் பெரும் செல்வம் ஈட்டியிருக்கிறேன். நாம் மீண்டும்  {பகடை} விளையாடலாம்.

அனைத்தையும் சேர்த்து தமயந்தியையும் பந்தயப் பொருளாக வைக்கிறேன். ஓ புஷ்கரா நீ உனது நாட்டைப் பந்தயப் பொருளாக வை. விளையாட்டு ஆரம்பமாகட்டும். இதுவே எனது நிச்சயமான உறுதிப்பாடு. நீ அருளப்பட்டிரு, நம்மிடம் உள்ள அனைத்தையும் சேர்த்து நமது உயிரையும் பந்தயத்தில் வைப்போம். வென்ற பிறகு, ஒருவர் மற்றவரின் செல்வத்தையோ நாட்டையோ அடையலாம், உடைமையாளன் கேட்கும்போது அதைப் பந்தயம் வைப்பது உயர்ந்த கடமை என்று விதிநெறிகள் சொல்கின்றன. அல்லது பகடை விளையாடுவதில் உனக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், ஆயுதங்களால் ஆன விளையாட்டு தொடங்கட்டும். மன்னா {புஷ்கரா}, ஒற்றை ஆளாகப் போரிட்டு நீயோ நானோ அமைதியை அடைவோம். இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வருவதாகும். அதை எந்தச் சூழ்நிலையிலும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டாவது மீட்பதே சிறந்தது என்று பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள். ஓ புஷ்கரா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு. பகடையுடன் சூதா? அல்லது வில் வளைத்துப் போரா?" என்று கேட்டான்.

நிஷாதனால் {நளனால்} இப்படிச் சொல்லப்பட்ட புஷ்கரன், தனது வெற்றி குறித்த நிச்சயத்தோடு சிரித்துக் கொண்டே அந்த ஏகாதிபதியிடம் {நளனிடம்}, "ஓ நைஷாதா {நளா}, நற்பேறினாலேயே நீ மீண்டும் பந்தயம் செய்வதற்கான செல்வத்தைச் சம்பாதித்தாய். தமயந்தியின் தீயூழ் {துரதிர்ஷ்டம்} முடிவுக்கு வரப்போவதும் இந்த நற்பேறாலேயே. ஓ மன்னா {நளா}, நற்பேறாலேயே நீ உனது மனைவியுடன் இன்னும் உயிருடன் இருக்கிறாய். ஓ பெரும் பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {நளனே}, உனது செல்வத்தையும் தமயந்தியையும் வெல்வேன் என்றும், அவள் {தமயந்தி} சொர்க்கத்தில் இந்திரனுக்காகக் காத்திருக்கும் அப்சரஸ் போல எனக்காகக் காத்திருப்பாள் என்றும் தெளிவாகத் தெரிகிறது. ஓ நைஷாதா {நளா}, நான் தினமும் உன்னை நினைவு கூர்ந்தேன். நான் உனக்காகவே காத்திருந்தேன். ரத்த சம்பந்தமில்லாதவர்களுடன் சூதாடுவதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. குற்றமற்ற குணங்கள் கொண்ட அழகான தமயந்தியை இன்று வென்று, என்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்வேன். உண்மையில், அவளே {தமயந்தியே} எனது இதயத்தில் எப்போதும் குடியிருந்தவள்" என்று பதில் சொன்னான் {நளனின் சகோதரனான தம்பி புஷ்கரன்}.

தெளிவற்று தற்பெருமை பேசுபவனின் {புஷ்கரனின்} வார்த்தைகளைக் கேட்ட நளன் கோபம் கொண்டு தனது வாளால் அவனது தலையை வெட்ட விரும்பினான். இருப்பினும், கண்கள் கோபத்தால் சிவந்திருந்தாலும் நளன் புன்னகையுடன், "நாம் விளையாடலாம். ஏன் இப்போது பேசுகிறாய்? என்னை வீழ்த்தி, நீ விரும்பும் எதையும் சொல்" என்றான். பிறகு புஷ்கரனுக்கும் நளனுக்கு இடையில் விளையாட்டுத் தொடங்கியது. ஒரே வீச்சில் தனது செல்வங்களையும், பொக்கிஷத்தையும், தனது தம்பியின் {புஷ்கரனின்} உயிரையும் பந்தயத்தில் வென்ற நளன் அருளப்பட்டவனே. வெற்றியடைந்த மன்னன் புஷ்கரனிடம் சிரித்துக் கொண்டே, "ஒரு முள்ளும் இல்லாத இந்த முழு நாடும் எந்தத் தடையும் இல்லாமல் எனதாயிற்று. ஓ மன்னர்களில் இழிந்தவனே, உன்னால் விதரப்ப்பத்தின் இளவரசி மீது பார்வையைக் கூடச் செலுத்த முடியாது. ஓ மூடனே, இப்போது நீயும் உனது குடும்பமும் அவளது அடிமைகளாகச் சுருக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உனது கைகளால் எனக்கு ஏற்பட்ட முந்தைய தோல்வி உனது செயலால் ஏற்படவில்லை. ஓ மூடனே, அதை நீ அறியமாட்டாய். கலியே இவை அனைத்தையும் செய்தான். ஆகையால், மற்றவர்கள் குறையை நான் உன் மீது சுமத்தமாட்டேன். நீ தேர்ந்தெடுப்பது போல உனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள். நான் உனக்கு உனது உயிரைத் தருகிறேன். உனக்கு (பரம்பரைச் சொத்தில்) உனது பங்கையும், அனைத்துத் தேவைகளையும் அளிக்கிறேன். ஓ வீரனே, சந்தேகமற உன் மேல் நான் கொண்ட பாசம் முன்பு போலவே இருக்கும். உடன்பிறந்த பாசமும் என்னிடம் அழியாது. புஷ்கரா, நீ எனது தம்பி, நீ நூறாண்டு காலம் வாழ வேண்டும்" என்றான் {நளன்}.

கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்ட நளன் இப்படி தனது தம்பிக்கு ஆறுதல் கூறி, மீண்டும் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு, சொந்த நகரத்திற்குச் செல்ல அவனுக்கு அனுமதி கொடுத்தான். நிஷாத ஆட்சியாளனால் {நளனால்} ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படி ஆறுதல் அளிக்கப்பட்ட புஷ்கரன், அந்த நீதிமானான மன்னனை வணங்கி, கரங்கள் கூப்பியபடி அவனிடம் {நளனிடம்}, "உமது புகழ் அழிவற்றதாக இருக்கட்டும். ஓ மன்னா, எனக்கு உயிரையும், புகலிடத்தையும் கொடுத்த நீ பத்தாயிரம் {10000} வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்" என்றான்.

பிறகு மன்னனால் {நளனால்} மகிழ்ச்சிப் படுத்தப்பட்ட புஷ்கரன் அங்கே ஒரு மாதம் வசித்து, பெரும் படையுடனும், கீழ்ப்படியும் பணியாட்களுடனும், தனது உறவினர்களுடனும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது சொந்த நகரத்திற்குச் சென்றான். பிறகு அந்த மனிதர்களில் காளை இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசித்து அழகாக இருந்தான். அந்த அருளப்பட்ட நிஷாதர்களின் மன்னன் {நளன்}, புஷ்கரனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனைச் செழிப்பாக்கி, பிரச்சனைகளில் இருந்து அவனை விடுவித்து, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட தனது அரண்மனைக்குள் நுழைந்தான். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அப்படி தனது அரண்மனைக்குள் நுழைந்து தனது குடிமக்களுக்கு ஆறுதல் அளித்தான். அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களும், தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியால் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். நாட்டின் அதிகாரிகளைத் தலைமையாகக் கொண்ட மக்கள் தங்கள் கரங்களைக் கூப்பி, "ஓ மன்னா {நளரே}, இந்த நாடு மற்றும் நகரம் முழுவதும் இருக்கும் நாங்கள் உண்மையிலேயே இன்றுதான் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இன்று, நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} தலைவனாக அடைந்த தேவர்கள் போல, எங்களது ஆட்சியாளனை அடைந்துவிட்டோம்" என்றனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்