Thursday, January 16, 2014

பகடை அறிவை அடைந்தான் யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 79

Yudhishthira learnt dice lore | Vana Parva - Section 79 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன் தமயந்தியைத் தனது நாட்டிற்கு அழைத்து வந்து மகிழ்ச்சியாக இருந்ததைச் சொன்ன பிருகதஸ்வர், யுதிஷ்டிரனும் அப்படியே இருப்பான் என்று சொன்னது; யுதிஷ்டிரனுக்கு பிருகதஸ்வர் பகடை அறிவைக் கொடுப்பது; யுதிஷ்டிரன் அர்ஜுனனின் கடும் தவத்தைக் கேள்விப்பட்டு துன்புறுவது; அந்தணர்களுடன் உரையாடியது...

பிருகதஸ்வர் சொன்னார், "நகரம் துயரமற்று மகிழ்ச்சியுடன் அங்கே விழா தொடங்கிய போது, பெரிய படையுடன் சென்று மன்னன் {நளன்} தமயந்தியை (அவளது தந்தை பீமனின் வீட்டிலிருந்து) அழைத்துவந்தான். பகைவர்களைக் கொல்லும் பயங்கர பராக்கிரமும், அளவிடமுடியா ஆன்மாவும் கொண்ட அவளது தந்தையான் பீமனும் தனது மகளுக்கு உரிய மரியாதைகளைச் செலுத்தி அனுப்பி வைத்தான். மகனுடனும் மகளுடனும் வந்த விதரப்ப்பத்தின் இளவரசியின் வருகையை அடுத்து, மன்னன் நளன் தனது நாட்களை, நந்தனம் எனும் சோலையில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் போல மகிழ்ச்சியாகக் கழித்தான்.


அழியாப் புகழ் கொண்ட அந்த மன்னன் {நளன்}, தனது நாட்டை மீட்டெடுத்து, ஜம்பு தீபகற்பத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவனாக, அதை மீண்டும் ஆளத் தொடங்கினான். அவன் {நளன்} எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து பரிசுகளை அந்தணர்களுக்குப் பெருமளவில் கொடுத்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் உனது இரத்த உறவுகளுடனும் சொந்தங்களுடனும் அதே போல விரைவில் பிரகாசிப்பாய். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இப்படியே எதிரிகளின் நகரங்களை அடக்கும் மன்னன் நளன், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பகடையாட்டத்தின் தொடர்ச்சியாக தனது மனைவியுடன் துன்பத்தில் மூழ்கினான். மேலும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த துன்பங்கள் அனைத்தையும் நளன் தனியாகவே அனுபவித்து, தனது செழிப்பை மீட்டெடுத்தான். ஆனால் நீயோ!, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதயத்தை அறத்தில் நிலைக்க வைத்து, உனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} இந்தக் கானகத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறாய். ஓ ஏகாதிபதி, நீ தினமும் வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்த அருளப்பட்ட அந்தணர்களுடன் கலந்து கொள்வதால், துன்பத்திற்கான காரணம் உனக்கு சிறியதே.

நாகன் கார்க்கோடகன், தமயந்தி, நளன், அரச முனி ரிதுபர்ணன் ஆகியவர்களைத் தவிர்த்து இந்த வரலாறு தீமைகளை அழிக்கவல்லது. ஓ மங்காப் புகழ் கொண்டவனே, கலியின் ஆதிக்கத்தையும் அழிக்கும் இவ்வரலாறு, ஓ மன்னா, இதைக் கேட்கும் உன்னைப் போன்ற மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (வெற்றியில்) உறுதியற்ற மனித முயற்சியை நினைவுகூர்ந்து, நீ செழிப்பிலோ, துரதிர்ஷ்டத்திலோ மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அடைவது உனக்குத் தகாது. இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு, ஓ மன்னா, துன்பத்தை வளர்க்காமல் ஆறுதலடை. ஓ பெரும் மன்னா, துன்பமடைந்து ஏங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தகாது. உண்மையில், விதியின் தான்தோன்றித்தனத்தையும், முயற்சியின் கனியற்ற தன்மையையும் நினைவுகூரும் தன்னை அடக்கிய மனிதன் மன அழுத்தம் கொண்டு துன்புறமாட்டான்.

நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லா காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான். மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ வளர்க்கும் பயத்தை (யாரும் தன்னை பகடைக்கு அழைத்துவிடுவார்களோ என்ற பயத்தை) ஒரே முறையில் நான் அகற்றிவிடுவேன். ஓ ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் பகடையின் அறிவியலை முழுமையாக அறிவேன். நான் உன்னிடம் திருப்தியடைந்துள்ளேன். ஓ குந்தியின் மகனே, அந்த அறிவைப் பெற்றுக்கொள். நான் உனக்குச் சொல்கிறேன்" என்றார் {பிருகதஸ்வர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு மன்னன் யுதிஷ்டிரன், இதயத்தில் மகிழ்ந்து, பிருகதஸ்வரிடம், "ஓ சிறப்புமிக்கவரே, பகடையின் அறிவியலை நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன்" என்றான். பிறகு அந்த முனிவர் {பிருகதஸ்வர்} பாண்டுவின் உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} பகடையின் அறிவைக் கொடுத்தார். அப்படிக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் துறவி ஹயசீர்ஷம் என்ற புனிதமான நீர்நிலைக்கு குளிப்பதற்காகச் சென்றார்.



மாமல்லபுரத்தில் காணப்படும்
"அர்ஜுனன் தவம" சிற்பம் 
உறுதியான நோன்புகள் நோற்கும் யுதிஷ்டிரன், பிருகதஸ்வர் சென்ற பிறகு வந்த அந்தணர்களின் மூலமும், வெவ்வேறு திக்குகளிலிருந்தும், இடங்களில் இருந்தும், மலைகள் மற்றும் கானகங்களில் இருந்தும் வந்த துறவிகள் மூலமும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் பெரும் புத்திகூர்மை கொண்ட அர்ஜுனன், காற்றை மட்டுமே உண்டு கடுந்தவத்தில் இருப்பதை அறிந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, இதுவரை யாரும் செய்யாத கடும் தவத்தைச் செய்வதாகக் கேள்விப்பட்டான்.

பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} சரியான நோன்புகளுடனும், உறுதியான மனத்துடனும், மௌனமாக நீதிதேவனின் மனித உடலாக இருந்து பிரகாசித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது அன்புத் தம்பியான குந்தியின் மகன் ஜெயன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வனத்தில் கடும் தவம் இருப்பதை அறிந்து மிகவும் துன்பமடைந்தான். துயரத்தால் எரியும் இதயத்துடன் இருந்த பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பெரும் வனத்தில் ஆறுதல் வேண்டி, அவனுடன் வாழ்ந்துவந்த, பலவகை ஞானம் கொண்ட அந்தணர்களிடம் கலந்துரையாடினான்.

******************நளோபாக்யான பர்வம் முற்றிற்று******************


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்