Thursday, February 20, 2014

நாராயணனைத் தஞ்சமடைந்த தேவர்கள்! - வனபர்வம் பகுதி102

Gods sought Narayana's refuge! | Vana Parva - Section 102| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கடலுக்குள் ஒளிந்திருந்த காலகேயர்கள் இராப்பொழுதுகளில் முனிவர்களைக் கொன்று பகல் பொழுதில் மறுபடி கடலுக்குள் ஒளிதல்; இதை மனிதர்கள் அறிய இயலாதது; தேவர்கள் நாராயணனிடம் சென்று முறையிடல்...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "வருணனின் இருப்பிடமான நீரின் கொள்கலத்தில் {கடலில்}, அண்ட அழிவுக்கான தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். கோபம் கொண்ட தைத்தியர்கள் இரவின் இருளில், கானகங்களிலும் புனித இடங்களிலும் கண்ட முனிவர்களை விழுங்கத் தொடங்கினர். அந்தத் தீய பாவிகள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த நூற்று எட்டு {108} அந்தணர்களையும், மேலும் ஒன்பது {9} தவசிகளையும் விழுங்கினர். பிறகு பல பிரம்மச்சாரிகள் இருந்த சியவனரின் ஆசிரமத்திற்குச் சென்று கனிகளையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்த நூறு {100} அந்தணர்களை விழுங்கினர்.


இவையனைத்தையும் இரவின் இருளிலேயே செய்தனர், பகலில் கடலின் ஆழங்களுக்குள் நுழைந்தனர். பரத்வாஜர் ஆசிரமத்தில் ஆன்மாக்களை அடக்கி பிரம்மச்சரிய வாழ்வு வாழ்ந்து, நீரும் காற்றும் மட்டுமே உண்டு வாழ்ந்த அனைத்து அந்தணர்களையும் கொன்றனர். இப்படியே காலகேயர்கள் என்ற அந்தத் தானவர்கள் {அசுரர்கள்} தங்கள் கரங்களின் பலத்தால் போதையுண்டு, தங்கள் ஆயுள் தீர்வதை உணராமல், முனிவர்களின் ஆசிரமங்களில் இரவின் இருளில் நுழைந்து, எண்ணிலடங்கா அந்தணர்களைக் கொன்றனர். ஓ மனிதர்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரா} கானகத்தில் இருந்த தவசிகளிடம் இவ்வாறெல்லாம் தானவர்கள் நடந்து கொண்டாலும், அவர்களைக் குறித்த எதையும் அறிந்து கொள்வதில் மனிதர்கள் தோல்வியுற்றனர்.

தினமும் காலையில் மாண்ட முனிவர்களின் மிச்ச சொச்ச உடல்கள் தரையில் கிடப்பதை மக்கள் கண்டனர். அவற்றில் பல உடல்கள் சதையோ இரத்தமோ அற்றிருந்தன. எலும்புகளற்று, உறுப்புகளற்று கிடந்தன. சிப்பிகளின் குவியல் போலத் தரையெங்கும் எலும்புக் குவியல் அங்கும் இங்கும் கிடந்தன. பூமி முழுவதும் வேள்விக்காக முனிவர்கள் வைத்திருந்த ஜாடிகளும், நெய்யூற்றும் கரண்டிகளும் உடைந்து ஆங்காங்கே கிடந்தன. காலகேயர்கள் குறித்த பயத்தில் இருந்த அண்டத்தில் வேத கல்வியும் வஷத்துகளும், வேள்விச்சடங்குகளும், தர்மச் சடங்குகளும் நின்று போய் உற்சாகமற்றதாகச் சூழ்நிலை இருந்தது.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் இப்படி அழிந்து கொண்டிருக்கையில், மீதம் இருந்தவர்கள் பயத்தால் எல்லாத் திக்குகளுக்கும் ஓடினர், சிலர் பெரிய குகைகளுக்கும், சிலர் மலை நீரூற்றுகளுக்கும் ஓடைகளுக்கும் சென்றனர். சிலர் செத்துவிடுவோமோ என்ற பயத்திலேயே ஏதுவும் நடக்காமலேயே இறந்தனர். வீரமும் பலமும் கொண்ட சில வில்லாளிகள் உற்சாகமாக அந்தப் பெரும் இக்கட்டில் தானவர்களத் தேடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்களால் கடலுக்கடியில் தஞ்சமடைந்திருந்த அசுரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, தேடுதலில் திருப்தியடைந்த பிறகு அந்த வீரர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.

ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அண்டம் இப்படி அழிந்து கொண்டிருந்தபோது, வேள்வி விழாக்களும், தர்மச் சடங்குகளும் நின்று போன போது, தேவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்திரனை மத்தியில் கொண்டு கூடிய அவர்கள் பயத்தால் ஒருவர் ஆலோசனையை மற்றவர் கேட்டனர். பிறகு வைகுண்டத்தின் வீழ்த்தப்பட முடியாத, மேன்மையான, படைக்கப்படாத {சுயம்புவான} தெய்வமான நாராயணனின் பாதுகாப்பைத் தேவர்கள் நாடினர்.

அந்த மதுவைக் கொன்றவனை {மதுசூதனனை} வணங்கிய தேவர்கள் அவனிடம், "ஓ தலைவா, நீயே எங்களையும் அண்டத்தையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவனாக இருக்கிறாய். இந்த அண்டத்தில் இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் படைத்தவன் நீயே. ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே, பழங்காலத்தில் உயிர்களின் நன்மைக்காக நீயே கடலில் மூழ்கிய பூமியை பன்றி {Boar = பன்றி, வராகம்} ரூபமெடுத்து மீட்டுக் கொண்டு வந்தாய். ஓ! ஆடவரில் சிறந்தவனே, பிறகு பாதி மனிதனாகவும், பாதிச் சிங்கமாகவும் உரு கொண்டு பழங்காலத்தில் பெரும் பலமும் பராக்கிரமும் நிறைந்த ஹிரண்யகசிபு என்ற தைத்தியனை {அசுரனைக்} கொன்றாய். மேலும் பலி என்ற பெயர் கொண்ட யாராலும் அழிக்க முடியாத பெரும் அசுரனை, குள்ளனின் (Dwarf = குள்ளமனிதன், வாமனன்} உருவம் கொண்டு மூன்று உலகங்களில் இருந்தும் கடத்தினாய். ஓ! தலைவா, பெரும் வில்லாளியும் எப்போதும் வேள்விகளுக்குத் தடை ஏற்படுத்துபவனுமான ஜம்பன் என்ற தீய அசுரன் உன்னாலேயே கொல்லப்பட்டான். உன்னால் செய்யப்பட்ட இதுபோன்ற சாதனைகளை எண்ணிக்கையில் அடக்க முடியாது. ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, நாங்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். நீயே எங்களுக்குப் புகலிடம், ஓ தேவர்களுக்குத் தேவா இதன் காரணமாகவே நாங்கள் தற்போதைய இடர்களை உனக்குத் தெரிவித்தோம். உலகங்களையும், தேவர்களையும், சக்ரனையும் பெரும்பயத்திலிருந்து காப்பாயாக" என்றனர் {தேவர்கள்}"


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்