Wednesday, June 18, 2014

தார்க்ஷ்யர் சரஸ்வதி விவாதம்! - வனபர்வம் பகுதி 185அ

The discussion between Tarkshya and Saraswati! | Vana Parva - Section 185a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தார்க்ஷ்யர் மற்றும் சரஸ்வதிக்கு இடையில் நடந்த விவாதத்தைச் சொல்லி தானம், அக்னிஹோத்ரம் மற்றும் மோட்சம் குறித்து மார்க்கண்டேயர் உரைத்தல்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகை நகரத்தை வெல்பவனே, இது சம்பந்தமாகப் புத்தி கூர்மை கொண்ட தார்க்ஷ்யர் சரஸ்வதியைக் கேட்ட போது, அவளும் இதையேதான் சொல்லியிருக்கிறாள். நீ அவளது வார்த்தைகளைக் கேள். தார்க்ஷ்யர், "அற்புதமான மங்கையே {சரஸ்வதியே}, ஒரு மனிதன் கீழே இங்கே {இவ்வுலகில்} செய்வதற்கு எது சிறந்தது? அவன் அறத்தில் (அறப்பாதையில்) இருந்து வழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஓ! அழகான மங்கையே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. உனது உத்தரவின் பேரில் {நீ சொல்லும் காரணத்தால்} நான் அறத்தின் பாதையில் இருந்து விலகாமல் இருப்பேன். ஒருவன் நெருப்புக்கு எப்போது, எவ்வாறு காணிக்கையிட வேண்டும்? {எப்படி, எப்போது அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும்?}. மேலும், சமரசமில்லாத அறத்தோடு இருக்க அவன் {நெருப்பை} எப்போது வணங்க வேண்டும்? ஓ! அற்புதமான மங்கையே, ஆசைகள், ஏக்கம், விருப்பம் ஆகியவை இல்லாமல், நான் இந்த உலகத்தில் வாழ இவை அனைத்தையும் எனக்குச் சொல்" என்று கேட்டார்.


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உற்சாகமுடைய அந்த முனிவரால் {தார்க்ஷ்யரால்} இப்படிக்கேட்கப்பட்டு, கற்க ஆவலோடும், உயர்ந்த புத்தி கூர்மையோடும் இருக்கும் அவரைக் {தார்க்ஷ்யரைக்} கண்ட சரஸ்வதி, இந்தப் பக்தி மிக்க மங்களரமான வார்த்தைகளை அந்த அந்தணர் தார்க்ஷ்யரிடம் சொன்னாள்.

சரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, "எவன் வேத கல்வியில் ஈடுபட்டு, புனித தன்மையோடும், மன அமைதியோடும் கடவுள் தன்மையை முறையான வழியில் உணர்கிறானோ, அவன் தெய்வீக உலகங்களுக்கு உயர்ந்து, தேவர்களோடு சேர்ந்து தலைமையான பேரின்பத்தை அடைகின்றான். மீன்களும், மலர்களும், தங்க குவளை மலர்களும் நிறைந்த பல பெரிய, அழகிய, தெளிவான, புனிதமான தடாகங்கள் அங்கு இருக்கின்றன. அவை கோவிலைப் போன்றன. அவற்றைக் காண்பதே துன்பத்தை விலக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நன்கு அலங்கரிக்கப்பட்டு, தங்க நிறத்துடன் இருக்கும் அறம்சார்ந்த அப்சரஸ்களால் வழிபடப்படும் பக்தியுள்ள மனிதர்கள், அத்தடாகங்களின் கரைகளில் மனநிறைவோடு வசிக்கின்றனர்.

எவன் பசுவை (அந்தணர்களுக்கு) தானமளிக்கிறானோ அவன் உயர்ந்த உலகங்களை அடைகிறான்; எருதுகளைக் கொடுப்பவன் சூரிய உலகங்களை அடைகிறான்; உடைகள் கொடுப்பவன் சந்திர உலகத்தை அடைகிறான்; தங்கம் கொடுப்பவன் தேவர்களின் நிலையை {இறவா நிலையை} அடைகிறான். ஓடிப்போகாததும், எளிதாகப் பால் கறப்பதுமான அழகிய பசுவுடன் கன்றையும் சேர்த்துக் கொடுப்பவன், அந்த விலங்கின் உடலில் எத்தனை முடிகள் இருந்தனவோ, அவ்வளவு வருடங்கள் தேவ லோகத்தில் வாழ்வான். கலப்பை இழுக்கவும், சுமை தாங்கவும் இயன்ற பலமிக்க, சக்திவாய்ந்த, அழகிய இளம் எருதை தானமளிப்பவன், பத்துப் பசுக்களைத் தானம் கொடுத்தவன் அடையும் உலகங்களை அடைகிறான். கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபிலப் பசுவை தானம் கொடுத்துப் பின்பு பணத்தையும் கொடுப்பவனுக்கு, {அவன் இறந்த பின்னர்} அந்தப் பசுத் தனது சிறப்பு வாய்ந்த குணத்தாலே விரும்பியதைக் கொடுப்பதாக மாறி அவனையே வந்து அடைகிறது. பசுக்களைத் தானம் கொடுப்பவன், அந்த விலங்கின் மேனியில் இருந்த முடியின் எண்ணிக்கையளவுக்கு, தனது செயல்களுக்கான எண்ணற்ற கனிகளை அறுக்கிறான். மேலும் அவன், தனது மகன்கள், பேரன்கள் மற்றும் மூதாதையர் ஆகியோர் கொண்ட ஏழு தலைமுறைகளை அடுத்த உலகத்தில் (நரகத்தில் இருந்து) காக்கிறான். பொன்னால் செய்த அழகிய கொம்புகளுடனும், கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் எள்ளால் ஆன பசுவை {திலதேனுவை} அந்தணனுக்குப் பணத்துடன் தானமாகக் கொடுப்பவன் வசுக்களின் உலகங்களை எளிதில் அடைகிறான்.

தான் செய்த செயல்களின் மூலமே மனிதன், பெருங்கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட கப்பலைப் போல, தீய ஆவிகள் ஆக்கிரமித்திருக்கும் இருள்நிறைந்த பாதாள உலங்களுக்கு (தனது ஆசைகளாலேயே} வீழ்கிறான்; ஆனால் அந்தணர்களுக்கு அவன் கொடுத்த பசுத் தானம் அவனை அடுத்த உலகில் காக்கிறது. தனது மகளைப் பிரம்ம விவாக முறைப்படி கொடுப்பவனும், அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுப்பவனும், பிற பரிசுகளைத் தானமாகக் கொடுப்பவனும் புரந்தரனின் உலகங்களை அடைகிறார்கள். ஓ! தார்க்ஷ்யா, நியாயமுள்ளவனாக, அறம்சார்ந்த மனிதனாக எவன் தொடர்ந்து ஏழு வருடங்கள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்கிறானோ, அவன் மேலும் கீழுமான தனது ஏழு தலைமுறைகளைத் தனது செயல்கள் மூலம் தூய்மைப்படுத்துகிறான்" என்றாள் {சரஸ்வதி}.

தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ அழகிய மங்கையே, வேதங்கள் சொல்லியபடி புனித நெருப்பைக் காக்கும் விதிகளைக் கேட்டு நிற்கும் எனக்கு அதை விளக்குவாயாக. இப்போது நான் உன்னிடமிருந்து புனித நெருப்பைப் பேணுவதற்கான காலத்தால் புகழப்படும் விதிகளைக் கற்கப் போகிறேன்" என்றார்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்