Wednesday, June 18, 2014

நெருப்பு காணிக்கை {அக்னி ஹோத்ரம்}! - வனபர்வம் பகுதி 185ஆ

Agni Hotra! | Vana Parva - Section 185 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, "சக்தியற்றவன், தனது கரங்களைச் சோதிக்காதவன், வேதங்களை அறியாதவன், வேதங்களின் பொருளை அறிந்தும் அதைக் கடைப்பிடிக்காதவன் ஆகியோர் நெருப்பில் காணிக்கையிடுவதைச் செய்யக்கூடாது. பிறர் மனதை அறிய விரும்பும் பரிசுத்தர்களான தேவர்கள் முயற்சியற்றவர்களிடம் இருந்து காணிக்கைகளைப் பெற மாட்டார்கள். வேதம் ஓதாதவனைத் தேவர்களுக்குக் காணிக்கையிடும் ரித்விக்காக நியமிக்கக்கூடாது. மேற்கண்டவற்றை நிறைவேற்றுபவனே வேள்வி செய்யத்தக்கவன். ஓ! தார்க்ஷ்யா! தன்னை ஓதாதவனை வேதம் குலமும் ஒழுக்கமும் அற்றவன் என்று சொல்கிறது. மேற்கண்டவற்றை நிறைவேற்றாதவன் நெருப்பில் காணிக்கையிட்டு வேள்வி செய்யக்கூடாது. முயற்சியுடன் உண்மையையே நோன்பாகக் கொண்டவர்களும், வேள்வியில் மிஞ்சுவதை உண்பவர்களும் நெருப்பில் காணிக்கையிட்டால், அவர்கள் புண்ணிய உலகங்களை அடைந்து நிகரற்ற பிரம்மனையும், பின்பு பிரம்மத்தையும் அடைகிறார்கள்" என்று சொன்னாள் {சரஸ்வதி}.


தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ! மகிமையுள்ளவளே {சரஸ்வதியே}, பரமாத்மாவின் உருவமும், ஆத்ம ரூபமும், பல வித காரியங்களில் புத்திக்கூர்மையுடையவளும், ஞானத்தின் உருவமுமான உன்னை ஆத்ம தத்துவம், கர்ம தத்துவம் ஆகிய இரண்டையும் பிரகாசிக்கச் செய்பவளாக உணர்ந்து உன்னிடம் கேட்கிறேன். ஓ! அழகிய உருவமுள்ளவளே {சரஸ்வதி}, நீ யார்?" என்று கேட்டார், அதற்குச் சரஸ்வதி, "அந்தணர்களின் சந்தேகங்களைப் போக்கவே நான் நெருப்பில் {அக்னி ஹோத்ரத்திலிருந்து} இருந்து உதித்திருக்கிறேன். உள்ளத்தில் நிலைத்திருந்த நான் வெளியே வந்து, உன்னிடம் வந்து கேட்ட காரியங்களின் உண்மையான பொருளை உரைத்தேன்" என்றாள் {சரஸ்வதி}.

தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ! சரஸ்வதி, உனக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. நீ லட்சுமியைப் போல அபரிமிதமான பிரகாசம் கொண்டிருக்கிறாய். உன்னுடைய உருவம் தேவர்களைப் போல முடிவற்ற ஒளியுள்ளதாக இருக்கிறது. பிரகாசிக்கும் அறிவையும் நீ கொண்டிருக்கிறாய்" என்றார். அதற்குச் சரஸ்வதி, "ஓ! மனிதர்களில் பெருமையுடையவனே, கற்றறிந்தவனே! அந்தணனே! வேள்வி செய்பவர்கள் நல்ல சுரத்துடன் {ஸ்வரம்} உச்சரிக்கும் சிறந்த மந்திரங்களால், நான் நன்றாக வளர்ந்து, திருப்தி அடைந்து, அழகான உருவத்தை அடைகிறேன். ஓ! அறிஞனே, நெருப்பில் காணிக்கையிடும்போது மரத்திலோ, இரும்பிலோ, மண்ணிலோ செய்யப்பட்ட பாத்திரங்கள் உபயோகிக்கப்படுவதால் நான் தெய்வீக உருவமும், உள்ளுணர்வும் பெற்றவளாகிறேன்" என்றாள் {சரஸ்வதி}

தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, "ஓ! சரஸ்வதி, மிகப் புகழ்பெற்ற முனிவர்கள் எதைச் சிறந்த நன்மை என்று எண்ணி முயற்சிக்கிறார்கள், அறிஞர்கள் எந்த சிறந்த  நிலையை அடைகிறார்களோ, துயரமற்ற நிகரில்லாத அந்த மோட்சத்தை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். யோகிகளும் முனிவர்களும் எதை மிக நன்மையானது என்று அறிகிறார்களோ, அந்தப் புராதானமான நிலையை நான் அறியவில்லையே" என்று கேட்டார். அதற்குச் சரஸ்வதி, "ஓ! தார்ஷ்யா, வேதத்தை அறிந்தவர்களும், தவத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், துயரமற்றவர்களும், உலகியல் வாழ்வில் இருந்து விடுபட்டவர்களுமான நன்மக்கள், வேதத்தைத் தியானித்து, தானம் செய்து, விரதங்களாலும், புண்ணியங்களாலும், யோகங்களாலும் உள்ளவற்றில் சிறந்ததைக் காட்டிலும் உயர்ந்த புகழ்பெற்ற நிலையை அடைகிறார்கள். அதன் மத்தியில் நறுமணமிக்க, ஆயிரம் கிளைகளைக் கொண்ட பிரய நீர் நொச்சமரம் பிரகாசிக்கிறது. அதன் அடியில் இருந்து தேன் போன்ற சுவை கொண்ட நீர்ப்பெருக்குள்ள மிகப் புண்ணியமான ஆறுகள் பெருகுகின்றன. அதன் ஒவ்வொரு கிளையில் இருந்தும் இறைச்சியும், கீரைகளும், பாயசம் போன்ற சேறும், பெரும் நதிகளின் மணல் பாங்கான தசைகளில் ஓடுகின்றன. முனிவனே! அக்னியைத் தலைவனாகக் கொண்டவர்களும், இந்திரனோடு கூடியவர்களும், மருத்துக்கள், கணங்களோடு கூடியவர்களான தேவர்கள் எந்த இடத்தில் சிறந்த வேள்விகளைச் செய்தார்கள் அந்த இடம் நிகரற்றது" என்றாள் {சரஸ்வதி}" என்றார் {மார்க்கண்டேயர்}

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்