Friday, June 20, 2014

யுக விளக்கம்! - வனபர்வம் பகுதி 187அ

The description of yugas! | Vana Parva - Section 185a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

நான்கு யுகங்களின் காலம், தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்

பிறகு அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் மிகுந்த பணிவுடன் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம், "ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறீர். இவ்வுலக்கத்தில் உம்மளவுக்கு யாரும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை! ஓ! பரமாத்மாவின் ஞானத்தை அடைந்தவர்களுள் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, மிக உயர்ந்த இடத்தில் வாழ்ந்து வரும் பெரும் மனம் படைத்த பிரம்மனைத் தவிர நீர் வாழ்ந்த வருடங்களை விஞ்ச வேறு யாரும் இல்லை. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, பெரும் அண்டப் பிரளயத்திற்குப் பிறகு இவ்வுலகம் வானமற்று, தேவர்களற்று, தானவர்களற்று இருந்த போது நீர் பிரம்மனை வழிபட்டவர். ஊழிப் பெருவெள்ளம் முடிவுக்கு வந்து, பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்தபோது, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, பிரம்மன் திசைப்புள்ளிகளைக் காற்றால் நிறைத்து, நீர் நிலைகளைச் சரியான இடத்தில் அமர்த்தி, நால்வகை உயிரினங்களையும் மறுபடி படைத்த போது, நீர் மட்டுமே அதைக் கண்டீர். ஓ! பெரும் அந்தணரே {மார்க்கண்டேயரே}, அவர் {பிரம்மனின்} முன்னிலையில் நீர், அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனை {நாராயணனை} ஆன்ம ஒன்றுதலுடன் தியானித்து, அவனால் {நாராயணனால்} விழுங்கப்பட்டீர்! ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நீர் உமது கண்களால் பல முறை, படைப்பின் ஆரம்பச் செயல்களைக் கண்டிருக்கிறீர். கடும் ஆன்ம தவங்களில் மூழ்கிய நீர் பிரஜாபதிகளையே விஞ்சி நிற்கிறீர்!

அடுத்த உலகத்தில் நீரே நாராயணனுக்கு மிக நெருக்கமானவர் என்று மதிக்கப்படுகிறீர். பழங்காலத்தில் நீர் பல முறை அண்டத்தின் தலைமை படைப்பாளரை {நாராயணனை}, ஆன்ம கவனம், துறவு ஆகிய கண்களைக் கொண்டும், தாமரை போன்ற, சுத்தமான உமது இதயத்தை முற்காலத்தில் திறந்தும் கண்டிருக்கிறீர். அண்ட ஞானத்தின் உருவமான {அண்ட ஞானமான} பலஉருவம் கொண்ட விஷ்ணுவை உமது இதயத்தில் மட்டுமே காண முடியும்! இதன் காரணமாகவே ஓ! கற்ற முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் கடவுளின் அருளைப் பெற்றவராதலால், அனைத்தையும் அழிக்கும் மரணத்துக்கோ, உடலைக்கெடுக்கும் மூப்புக்கோ உம்மீது எந்த அதிகாரமும் செலுத்த இயலவில்லை. சூரியனோ, சந்திரனோ, நெருப்போ, பூமியோ, காற்றோ, வானமோ இல்லாமல் அழிக்கப்பட்ட முழு உலகமும் பெருங்கடலைப் போலக் காட்சியளிக்கும்போது, தேவர்களும் அசுரர்களும், பெரும் உரகர்களும் முற்றிலும் அழிந்து போகும்போது, அனைத்து உயிர்களின் தலைவனான பெரும் மனம்படைத்த பிரம்மன் தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டு அதில் துயிலும்போது, நீர் மட்டுமே அவரை {பிரம்மனை} வழிபட மிஞ்சியிருந்தீர்! ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நீர் இவை அனைத்தையும் முன்பே உமது கண்களால் கண்டிருக்கிறீர். நீர் மட்டுமே பல பொருட்களைப் புலன்களால் கண்டிருக்கிறீர். அனைத்து உலகங்களிலும் நீர் அறியாதது ஒன்றுமில்லை! எனவே, பொருட்களின் காரணங்கள் குறித்து நீர் மேற்கொள்ளும் எந்த உரையையும் கேட்பதற்காக நான் நெடுங்காலமாகக் காத்திருக்கிறேன்!" என்றான் {யுதிஷ்டிரன்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறப்பற்றவனும், மூல முதல்வனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், கற்பனைக்கெட்டாதவனும், குணங்களை உடனே ஏற்பவனும், அதை உடனே விட்டு குணங்களற்றவனாகவும் ஆகிறவனைத் {பரமாத்மாவைத்} தொழுது அனைத்தையும் நான் நிச்சயம் விவரிப்பேன். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தியிருக்கும் இந்த ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} பெரும் அசைவாளனாகவும், அனைத்தையும் படைப்பவனாகவும், அனைத்தையும் வடிவமைப்பவனாகவும், அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்! இவன் பெரிதானவன் என்றும், புரிந்துகொள்ளப்பட முடியாதவன் என்றும், அற்புதமானவன் என்றும், தூய்மையானவன் என்றும் அழைக்கப்படுகிறான். இவன் தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} அற்றவன்; உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன்; மாற்றமில்லாதவன்; மேலும் அழிவில்லாதவனாக இருக்கிறான். இவனே அனைத்தையும் படைப்பவன், ஆனால் இவன் பிறப்பற்றவன்; இவன் {கிருஷ்ணன்} சக்தி அனைத்துக்கும் காரணகர்த்தனாகவும் இருக்கிறான். அனைத்துத் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் கொண்டவன் இவன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அண்டம் அழிந்தபிறகு, அற்புதமான படைப்புகளான இவை அனைத்தும் {மீண்டும்} உயிர் பெறுகின்றன.

கிருத யுகம் {தேவ வருடங்களில்} நாலாயிரம் வருடங்களைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நானூறு வருடங்கள் அடங்கியது. திரேதா யுகம் மூவாயிரம் வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் முன்னூறு வருடங்கள் அடங்கியது. அதற்கு அடுத்து வரும் யுகம் துவாபர யுகம் என்று அழைக்கப்படுகிறது. அது இரண்டாயிரம் வருடங்களைக் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் இருநூறு வருடங்கள் அடங்கியது. கலி என்று அழைக்கப்படும் அடுத்த யுகம் ஆயிரம் {தேவ} வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நூறு வருடங்கள் அடங்கியது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு யுகத்துக்கும் வைகறையும், அந்திப்பொழுதும் சமமான காலத்தைக் கொண்டவை என்பதை அறிந்து கொள். கலியுகம் முடிந்ததும், மீண்டும் கிருத யுகம் வரும்.

இப்படி வரும் யுகங்களின் சுழற்சி ஒன்று பனிரெண்டாயிரம் {தேவ} வருடங்கள் கொண்டதாகும். இப்படி முழுமையான ஆயிரம் சுழற்சிகள் கொண்டதே பிரம்மனின் ஒரு பகல் ஆகும். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த அண்ட மனைத்தும் திரும்பப் பெறப்பட்டுப் படைப்பாளனின் இல்லத்திற்குள் {பிரம்மனின் இல்லத்துக்குள்} மறைத்து வைக்கப்படுவதே, கற்றவர்களால் பிரளயம் என்று அழைக்கப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஆயிரம் வருடங்களின் கடைசிக் காலத்தின் போது, அதாவது அந்தச் சுழற்சி முடிவடையும் தருவாயில் மனிதர்கள் பொதுவாகப் பொய்மைக்கு அடிமையாக இருப்பார்கள். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்