Sunday, June 22, 2014

கலியுகத்தின் தன்மை! - வனபர்வம் பகுதி 187ஆ

The nature of Kali yuga! | Vana Parva - Section 185b | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

கலியுகத்தின் தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்...

ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அப்போது {கலியுகத்தின் போது} வேள்விகளையும், கொடைகளையும், நோன்புகளையும் முதன்மையானவர்கள் செய்யமால் அவர்களது பிரதிநிதிகள் செய்வார்கள். சூத்திரர்களுக்காக ஒதுக்கப்பட்ட செயல்களைப் பிராமணர்கள் செய்வார்கள், சூத்திரர்கள் செல்வம் சம்பாதிப்பார்கள். க்ஷத்திரியர்கள் அறச்செயல்கள் பயில்வார்கள். கலி யுகத்தில், பிராமணர்கள் வேள்விகள் செய்வதில் இருந்தும், வேதங்கள் பயில்வதிலிருந்தும் விலகி, தங்கள் கைத்தடிகளையும், மான்தோல்களையும் தூக்கி ஏறிந்து அனைத்தையும் உண்ணும் உணவு முறைக்கு மாறுவார்கள். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் வழிபாடுகள், தியானம் செய்வதிலிருந்து விலகுவதும், சூத்திரர்கள் அவர்களாகவே அதைக் கைக்கொள்வதும் நடக்கும். உலகம் நடக்கும் பாதையே முரணாகத் தெரியும், உண்மையில் இந்தக் குறிகள் அனைத்தும் பிரளயத்தின் முன்னறிவிப்பே ஆகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, எண்ணிலடங்கா மிலேச்ச மன்னர்கள் அப்போது {கலி காலத்தின் போது} பூமியை ஆள்வார்கள். அந்தப் பாவம் நிறைந்த ஏகாதிபதிகள், பொய்மைக்கு அடிமையாகி, தங்கள் குடிகளைப் பொய் தத்துவங்களின் பேரில் {அதைச் சொல்லி} ஆள்வார்கள். ஆந்தார்கள், சகர்கள், புலிந்தர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாஹ்லிகர்கள், ஆபிரர்கள் ஆகியோர், ஓ! மனிதர்களுள் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, வீரம் படைத்தவர்களாகப் பூமியை ஆள்வார்கள்.

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உலகத்தின் இந்நிலை, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கலிகாலத்தின் அந்தி காலமாகும்! தனி ஒரு பிராமணன் கூடத் தனது கடமைகளைச் செய்ய மாட்டான். க்ஷத்திரியர்களும், வைசியர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் வகைக்கு முரணான காரியங்களைப் பயில்வார்கள். மனிதர்களின் ஆயுள், பலம், சக்தி வீரம் ஆகிய அனைத்தும் குறையும்; குறைந்த பலமும், பலவீனமான உடலும் கொண்ட அவர்கள் உண்மையை அரிதாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். நாடுகளின் பெரும் பகுதிகள் முறிந்து போகும். பூமியின் பகுதிகளும், வடக்கும் தெற்கும். கிழக்கும் மேற்குமான திசைகள் அனைத்தும் ஊனுண்ணும் விலங்குகள் நிரம்பி இருக்கும். இந்தக் காலத்தில் பிரம்மத்தை உச்சரிப்பவர்களு கூட, அதை வீணாகவே செய்வார்கள். சூத்திரர்கள் பிராமணர்களை 'அடே' {Bho} என்று அழைப்பார்கள், அதே வேளையில் பிராமணர்கள் சூத்திரர்களை "மதிப்பிற்குரிய ஐயா" {ஆர்யா} என்று அழைப்பார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுகத்தின் மூடிவில் விலங்குகள் பன்மடங்கு பெருகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மணம் மற்றும் நறுமணத் திரவியங்கள் நம் நுகர்தல் உணர்வுக்கு உடன்படாது, மேலும் ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, பொருட்களின் சுவையும், அந்தக் காலங்களில் {கலி யுகத்தில்} நமது சுவை உறுப்புகளுக்குத் தகுந்ததாக இராது.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, குறைந்த தரம் கொண்ட பல குழந்தைகளுக்குத் பெண்கள் தாயாக இருப்பார்கள். அவர்கள் {பெண்கள்}, நற்குணமும், நன்னடத்தையுமின்றி இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் வாய்களை இனப்பெருக்க உறுப்பின் நோக்கங்களுக்காகப் {கலவி இன்பத்திற்காகப்} பயன்படுத்துவார்கள். மனிதர்கள் வசிக்கும் இடங்களில் பஞ்சம் தாக்கும். நெடுஞ்சாலைகள் தவறான புகழ் பெற்றிருக்கும் பெண்களால் தொற்றப்பட்டிருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அது போன்ற காலத்தில் பெண்கள் பொதுவாகத் தங்கள் தலைவர்களுக்கும் {கணவர்களுக்கு} பகையாகவும், அடக்கமற்றவர்களாகவும் இருப்பார்கள்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அது போன்ற காலங்களில், பசுக்கள் குறைவான பாலையே தரும், மரங்களில் கூட்டம் கூட்டமாகக் காக்கைகள் இருக்கும், அவை மலர்களோ கனிகளோ உற்பத்தி செய்யாது. ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களைக் கொன்ற பாவத்தின் களங்கத்தோடு உள்ள மறுபிறப்பாள வர்க்கங்கள் {Regenerate classes} {பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்க்கங்கள்}, பேச்சில் பொய்மைக்கு அடிமையான ஏகாதிபதிகளிடமிருந்து பரிசுகளைப் பெறுவார்கள். பேராசையும், அறியாமையும் நிரம்பிய அவர்கள், வெளிப்புறத்திற்கு அறக்குறிகள் தாங்கி, கைமாறு கருதாதவர்கள் போல வெளியே சுற்றித் திரிந்து, பூமியின் மக்களைத் துன்புறுத்துவார்கள். இல்லற வாழ்வு வாழும் மக்களோ, வரிகளின் சுமைக்கு அஞ்சி, ஏமாற்றுக்காரர்களாவார்கள். அதேவேளையில் பிராமணர்கள் துறவிகளின் ஆடையுடுத்தி, வெட்டாத ஒழுங்கற்ற நகங்களுடனும் தலை முடியுடனும், வணிகம் செய்து, அதன் மூலம் செல்வமீட்டுவார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இருபிறப்பாள வர்க்கங்களைச் சார்ந்தவர்கள் {பிராமண, க்ஷத்திரிய, வைசியர்கள்}, செல்வத்தின் மீது கொண்ட பேராசையால், அறம் சொல்லி பிச்சையெடுக்கும் {போலி} பிரம்மச்சாரி ஆவார்கள்.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அக்காலங்களில் வாழ்வுமுறைகளில் முரண்பாடு கொண்டவர்களாகவும், போதையூட்டும் பானங்களுக்கு அடிமைகளாகவும், குருவின் படுக்கையைக் களங்கப்படுத்த இயன்றவர்களாகவும் மனிதர்கள் இருப்பார்கள். உடலையும், இரத்தத்தையும் விருத்தி செய்யும் உலகம் சார்ந்த விருப்பங்களையே அவர்கள் கொண்டிருப்பார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதுபோன்ற ஒரு காலத்தில் துறவிகளின் ஆசிரமங்கள், எப்போதும் யாரையாவது சார்ந்திருந்து அனைத்தையும் பாராட்டும் பயமற்ற இழிந்தவர்களும், பாவிகளும் நிறைந்ததாக இருக்கும். பகனைத் தண்டிக்கும் சிறப்புமிக்கவன் {இந்திரன்}, உரிய காலத்தில் மழையைப் பொழியவே மாட்டான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தூவும் விதைகள் அனைத்தும் முளைக்காது. புனிதமற்ற செயல்களும், மனமும் கொண்ட மனிதர்கள் பொறாமை கொண்டு பிறருக்குக் கெடுதல் செய்து மகிழ்வார்கள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, பூமி முழுவதும் பாவமும், ஒழுக்கக்கேடும் நிறைந்ததாகும். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தக் காலங்களில் அறம் சார்ந்தவனாக இருப்பவன் நீண்ட காலம் வாழ மாட்டான். உண்மையில் உலகம், அனைத்து விதங்களிலும் அறத்தை இழக்கும்.

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, சூழ்ச்சி நிறைந்த வியாபாரிகளும், வர்த்தகர்களும், பொய் எடை மற்றும் அளவுகள் கொண்டு பெரும் அளவிலான பொருட்களை விற்பார்கள். {வியாபாரத்தில்} அறம் சார்ந்து இருப்பவர்கள் செழிப்படைய மாட்டார்கள்; அதே வேளை, பாவிகள் அபரிமிதமாகச் செழிப்பார்கள். அறம் தனது பலத்தை இழப்பாள், அதே வேளையில் பாவம் பலமடையும். அறத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பவர்கள் ஏழைகளாகவும், குறைந்த வாழ்நாள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; அதே வேளையில் பாவிகள் நீண்ட வாழ்நாள் கொண்டவர்களாகவும், செழிப்பை வெல்பவர்களாகவும் இருப்பார்கள். அதுபோன்ற காலங்களில், நகரங்களில் நடக்கும் பொதுவான கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மக்கள் பாவிகளாகவே நடந்து கொள்வார்கள். மனிதர்கள் தங்கள் முடிவான சாதனைகளைச் செய்வதற்குப் பாவ வழிகளிலேயே முயற்சிப்பார்கள். மிகக் குறைவான நற்பேறையே அடைந்தாலும், மக்கள் செல்வத்தின் மீது கொண்டிருக்கும் கர்வத்தால் போதையுண்டு இருப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தக் காலங்களில் பல மனிதர்கள், கமுக்கமாக {இரகசியமாக} நம்பிக்கையுடன் தங்களிடம் கொடுக்கப்பட்ட செல்வங்களைத் திருட முயற்சிப்பார்கள். பாவம் நிறைந்த காரியங்களைச் செய்யும் அவர்கள், வெட்கங்கெட்டுப் போய், தங்களிடம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பார்கள்.

புனிதமான இடங்களிலும், நகரங்களில் பொதுக் கேளிக்கைகள் நடக்கும் இடங்களிலும் இரை தேடும் விலங்குகளும், பிற விலங்களும், நீர் வாழ்வனவும் கிடப்பதை கவனிக்கலாம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஏழு அல்லது எட்டு வயது கொண்ட பெண் பிள்ளைகள் கருவுறுவார்கள், அதேவேளையில் பத்து அல்லது பனிரெண்டு வயது ஆண்பிள்ளைகள் வாரிசுகளைப் பெறுவார்கள். தங்களது பதினாறாவது வயதில் முதுமையடைந்து, அவர்களது வாழ்நாள் விரைவாக ஓடிவிடும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி மனிதர்கள் குறுகிய வாழ்நாள் கொண்டவர்களாகும் போது, இளைஞர்கள் முதியவர்களைப் போல நடந்து கொள்வார்கள்; அதே வேளையில் இளைஞர்களிடம் காணப்படும் அனைத்தும் முதிவர்களிடமும் காணப்படும். பெண்கள் நடத்தை கெட்டவர்களாகவும், தீய நடத்தை கொண்டவர்களாகவும் இருந்து, சிறந்த கணவர்களைக் கூட ஏமாற்றி, குற்றேவலர் {வேலையாள்}, அடிமைகள் மற்றும் விலங்குகளிடம்கூடத் தன்னை மறந்து இருப்பார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களின் மனைவியராக இருக்கும் பெண்கள் கூட, தங்கள் கணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, பிற ஆடவரின் துணையை நாடி தன்னை மறந்து இருப்பார்கள். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்