Thursday, June 19, 2014

மனுவும்! மீனும்! - வனபர்வம் பகுதி 186

Manu and the fish! | Vana Parva - Section 185 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மீன் உருவத்தில் இருந்த பிரம்மனை வைவஸ்வத மனு வளர்த்தது, உலகை அழித்த பெருவெள்ளம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்...

பிறகு பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், அந்தணர் மார்க்கண்டேயரிடம், "இப்போது நீர் வைவஸ்வத மனுவின் வரலாற்றை உரைப்பீரா?" என்று கேட்டான்.

அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, {ஒரு காலத்தில்} வலிமைமிக்கப் பெருமுனிவர் {மன்னன்} ஒருவர் மனு என்ற பெயரில் இருந்தார். அவர் விவஸ்வானின் {சூரியனின்} மகனும், பிரம்மனின் புகழுக்கு ஒப்பானவரும் ஆவார். அவனது தந்தையையும், பாட்டனையும் பலத்திலும், வலிமையிலும், நற்பேறிலும், ஏன் தவச்சடங்குகளிலும் கூட அவர் {மனு} விஞ்சி நின்றார். உயர்த்திய கரங்களுடன் ஒற்றைக் காலில் நின்றபடி அந்த மனிதர்களின் தலைவன் {மனு} இலந்தைக் காடான விசாலையில் {பதரி} கடும் தவமிருந்தார். கீழ்நோக்கிய தலையுடனும் {தலைகீழாக நின்று கொண்டு}, நிலைத்த கண்களுடனும் அவர் கடுமையான உறுதியான தவத்தைப் பத்தாயிரம் வருடங்கள் செய்தார். ஒரு நாள், ஈர உடையுடனும், தலையில் சடாமுடியுடனும் தவம்பயின்று கொண்டிருந்த அவரிடம் {மனுவிடம்}, சீரிணீ நதியின் கரையை அடைந்த ஒரு மீன், "வணக்கத்திற்குரிய ஐயா, நான் ஆதரவற்ற ஒரு சிறு மீன். நான் பெரும் மீன்களைக் கண்டு அஞ்சுகிறேன்; ஆகையால், ஓ பெரும் பக்திமானே {மனுவே}, என்னைக் காப்பதே உமக்குத் தகும் என்பதை நினையும்; குறிப்பாகப் பலம்பொருந்திய மீன்கள் பலவீனமானவற்றை உண்பது ஒரு நிலையான வழிமுறையாக நிறுவப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பயங்கரக்கடலில் {நதியில்} நான் மூழ்கிப் போகமால் என்னைக் காப்பதே உமக்குத் தகும்! நான் நிச்சயம் உமது நற்செயலுக்கான ஈடு {மறு உதவி (அ) பிரதியுபகாரம்} செய்வேன்" என்றது.


அந்த மீனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட வைவஸ்வத மனு இரக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, அம்மீனை நீரில் இருந்து தனது கரங்களால் எடுத்தார். நிலவின் கதிர்களைப் போல ஒளிரும் உடல் கொண்ட அம்மீன், நீரில் இருந்து எடுக்கப்பட்டு, ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தில் போடப்பட்டது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி வளர்க்கப்பட்ட அம்மீன், உருவத்தால் வளர்ந்தது. மனுவும் அதைக் குழந்தையைப் போலக் கவனத்துடன் வளர்த்தார். பிறகு நீண்ட காலம் கழித்து, அந்த மீன், அது இருந்த பாத்திரம் கொள்ளாத அளவுக்கு வளர்ந்தது. அதன் பிறகு (ஒரு நாள்) மனுவைக் கண்ட அம்மீன் அவரிடம், "வணக்கத்திற்குரிய ஐயா, எனக்கு வேறு ஒரு சிறந்த வசிப்பிடத்தை நியமிப்பீராக" என்று கேட்டது. பிறகு எதிரிகளின் நகரங்களை வெல்லும் புகழத்தக்க மனு, அதைப் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு பெரிய குளத்திற்குக் கொண்டு சென்று அங்கே விட்டார். பிறகு அம்மீன் பல வருடங்கள் அங்கேயே வளர்ந்து வந்தது. அந்தத் தடாகம் இரண்டு யோஜனை நீளமும், ஒரு யோஜன அகலமும் கொண்டதாக இருந்தாலும் கூட, ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கேயும் அந்த மீனுக்கு விளையாடித்திரிய இடமில்லாமல் போனது.

பிறகு மீண்டும் மனுவைக் கண்ட அது {மீன்} {மீண்டும்}அவரிடம், , "ஓ!பக்திமிக்கப் புகழத்தக்க தந்தையே {மனுவே}, என்னைக் கடலுக்குப் பிடித்தமான மனைவியான கங்கைக்கு {கங்கை நதிக்கு} எடுத்துச் செல்லும். நான் அங்கு நீண்ட காலம் வாழ்வேன்; அல்லது நீர் விரும்பியவாறு செய்யும். ஓ! பாவமற்றவரே, நான் இந்த அளவு வளர்வதற்கு உமது உதவியே காரணம், நான் உமது கட்டளையை மகிழ்ச்சியாக நிறைவேற்றுவேன்" என்றது. இப்படிச் சொல்லப்பட்ட நேர்மையும் அடக்கமும் கொண்ட வழிபாட்டுக்குரிய மனு, அந்த மீனைக் கங்கை நதிக்கு எடுத்துச் சென்று தனது கைகளாலேயே அதை அந்நதியில் விட்டார். அங்கேயும், ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அம்மீன் சிறிது காலத்தில் வளர்ந்து மீண்டும் மனுவைக் கண்டு, "ஓ! தலைவா, நான் எனது பெருத்த உடலால் கங்கையில் நகர்வதற்கு இயலாமல் இருக்கிறேன்; எனவே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, தயவு செய்து விரைவாக என்னைக் கடலுக்கு எடுத்துச் செல்லும்" என்றது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு மனு அதை {மீனை} கங்கையில் இருந்து எடுத்து, கடலுக்குச் சுமந்து சென்று, அங்கே அதை {கடலிடம்} ஒப்படைத்தார். அது பெருத்த உருவம் கொண்டதாக இருந்தாலும், மனு அதை எளிதாக எடுத்துச் சென்றார். அதன் ஸ்பரிசமும், மணமும் அவருக்கு இனிமையாக இருந்தது.

{மீன்} மனுவால் கடலுக்குள் வீசப்பட்டபோது, அது புன்னகையுடன், "ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் என்னைச் சிறப்புக் கவனத்துடன் பாதுகாத்தீர்; தக்க காலம் வரும்போது நீர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேளும்! ஓ! நற்பேறு பெற்றவரே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, அசைவன மற்றும் அசையாதன கொண்ட இவ்வுலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வுலகத்தைக் களையெடுப்பதற்கான வேளையும் கனிந்துவிட்டது. எனவே, உமக்கு நன்மை எதுவோ அதை இப்போது விவரிக்கிறேன்! படைப்பில் அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைப் பயங்கரமான பேரழிவு அணுகுகிறது. நீண்ட கயிறுடன் கூடிய ஒரு பலமிக்க மகத்தான பேழையை {கப்பல் - build a strong massive ark) நீர் செய்யும். ஓ! பெருமுனியே {மனுவே}, ஏழு முனிவர்களுடன் {சப்த ரிஷிகளுடன்} நீர் அதில் ஏறி, பழங்காலத்தில் மறுபிறப்பாள அந்தணர்களால் பட்டியலிடப்பட்ட பலவிதமான விதைகளை உம்முடன் எடுத்துச் சென்று, அதைத் {விதைகளைத்} தனியாகவும் கவனத்துடனும் பாதுகாத்து வாரும். ஓ! முனிவர்களில் அன்பிற்குரியவரே {மனுவே}, அதைச் செய்துவிட்டு எனக்காகக் காத்திரும். நான் உம்மிடம் தந்தம் கொண்ட {கொம்பு கொண்ட} ஒரு விலங்காக {மீனாகத்தான் இருக்க வேண்டும்} வருவேன். அதைக் கொண்டு, ஓ! தவசியே {மனுவே}, என்னை அடையாளம் கண்டு கொள்ளும். இப்போது நான் உம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். நீர் நான் சொன்னவாறு நடந்து கொள்ளும். என்னுடைய துணை இல்லாமல் உம்மால் அந்தப் பெரு வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இயலாது" என்றது {மீன்}.

பிறகு மனு அந்த மீனிடம், "ஓ! பெருமைமிக்க உயிரினமே, நீ சொல்வதில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. நீ சொன்னது போலவே நடப்பேன்" என்றார். இப்படி ஒருவர் மற்றவரிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் சென்று விட்டனர். ஓ பெரும் பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெல்பவனே, மீனால் வழிகாட்டப்பட்டது போலப் பலவிதமான விதைகளை எடுத்துக் கொண்டு, நல்ல ஓடத்திலே பெரிய அலைகளுடன் கூடிய கடலில் {சப்த ரிஷிகளுடன் கூடிய மனு} மிதந்தார். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மீனை நினைத்தார். ஓ! எதிரிகளை வெல்பவனே, பாரதக் குலத்தின் முதன்மையான வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்த மீனும் அவரது மனதை அறிந்து, கொம்புகள் கொண்ட தலையுடன் அங்கே தோன்றியது. பிறகு, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, கொம்பு கொண்ட மீன் ஒன்று பாறையின் உருவத்தில் கடலில் வருவதைக் கண்டதும், ஏற்கனவே அவர் உயர்த்திப் பிடித்திருந்த கயிற்றுச் சுருக்கை அதன் தலையில் மாட்டினார். அச்சுருக்கால் இறுக்கப்பட்ட அம்மீன், ஓ! மன்னா, எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியுடன் அப்பேழையை {ஓடத்தை} உப்பு நீரில் இழுத்துச் சென்றது. கூத்தாடும் அலைகளும், நிறைந்த நீரின் கர்ஜிப்பும் கொண்ட அக்கடலில் அவ்வோடம் {பேழை} இழுத்துச் செல்லப்பட்டது. ஓ! உனது எதிரிகளையும், பகை நகரங்களையும் வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட அவ்வோடம் {பேழை}, ஒரு குடிகார விலைமகள் போல ஆடிச் சென்றது.

பூமிக்கும், நான்கு திசைப்புள்ளிகளுக்கும்  வித்தியாசம் தெரிவில்லை.எங்குக் காணினும் நீராக இருந்தது. அந்நீர் வானத்தையும், தேவலோகத்தையும் நிறைத்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமியை பெருவெள்ளத் சூழ்ந்த போது, மனுவைத் தவிர ஏழு முனிவர்களும் அம்மீனும் மட்டுமே காணப்பட்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப்பெருவெள்ளத்தில் அம்மீன் அவ்வோடத்தைப் {அப்பேழையைப்} பல வருடங்கள் விடாமுயற்சியுடன் இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பாரதக் குலத்தின் ஆபரணமே, அது {மீன்} அவ்வோடத்தை {அப்பேழையை} இமயத்தின் உயர்ந்த சிகரத்திற்கு இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! பாரதா, அம்மீன் அந்த ஓடத்தை {பேழையை} இமயத்தின் அச்சிகரத்தில் கட்டச் சொன்னது. மீனின் வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அம்மலையின் சிகரத்தில் அவ்வோடத்தைக் {அப்பேழையைக்} கட்டினார்கள். ஓ! குந்தியின் மகனே, பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, இமயத்தின் உயர்ந்த சிகரம் இன்றும் நௌபந்தனம் (துறைமுகம்) என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள். பிறகு அம்மீன் அம்முனிவர்களிடம், "நானே அனைத்து உயிரினங்களுக்கும் தலைமையான பிரம்மம் ஆவேன். என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை. மீனின் உருவைக் கொண்டு, நான் உம்மை இந்தப் பேரிடரில் இருந்து காத்தேன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும், அசைவன, அசையாதன ஆகிய படைப்பின் பிரிவுகளையும் (மீண்டும்) {வைவஸ்வத மனு} மனு படைப்பான். கடும் தவங்களைப் பயின்றும் எனது அருளாலும், அவன் அச்சக்தியை அடைவான். மாயை அவன் மீது எந்தச் சக்தியையும் செலுத்த முடியாது" என்றது {மீன்}.

இப்படிச் சொன்ன அம்மீன் உடனே மறைந்தது. வைவஸ்வத மனு உலகத்தைப் படைப்பதற்கு மனதில் விருப்பம் கொண்டார். படைப்புத் தொழில் செய்யும் இவ்வேலையின் போது மாயை அவரை ஆட்கொண்டது, ஆகையால் அவர் பெருந்தவம் பயின்றார். தவத்தகுதியுடைய அந்த மனு, ஓ! பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, மீண்டும் சரியான மற்றும் முறையான வரிசையில் உயிரினங்களைப் படைத்தார்.

நான் {மார்க்கண்டேயரான நான்} உனக்குச் {யுதிஷ்டிரனான உனக்குச்} சொன்ன மீனின் புராணமான இந்தக் கதையைக் கேட்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கிறது. மனுவின் ஆதி வரலாறான இதைத் தினமும் கேட்பவன் மகிழ்ச்சியை அடைந்து, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சொர்க்கத்தை அடைகிறான்" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்