Monday, June 30, 2014

பரீக்ஷித்தும்! சுசோபனையும்! - வனபர்வம் பகுதி 191அ

Parikshit and Susobhana! | Vana Parva - Section 191a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மார்க்கண்டேயர் தவளைக்கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; பரிக்ஷித்து ஒரு பெண்ணை மணந்தது; அப்பெண் நீரில் மறைந்தது; அப்படி மறைந்ததற்குத் தவளைகளே காரணம் என்று பரிக்ஷித்துத் தவளைகளைக் கொல்ல உத்தரவிட்டது; தவளை மன்னன் ஆயு பரிக்ஷித்தைக் கண்டு, தனது மகளான சுசோபனையை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது....

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}  சொன்னான், "அந்தணர்களின் பெருமையைப் பலம்வாய்ந்த தவசியான மார்க்கண்டேயர் பாண்டுவின் மகன்களுக்கு விவரித்தது போன்றே நீர் எனக்கு முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்} மார்க்கண்டேயரிடம், "அந்தணர்களின் பெருமைகளை எனக்கு நீர் விவரிப்பதே உமக்குத் தகும்" என்று கேட்டான். மார்க்கண்டேயர், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் அந்தணர்களின் நடத்தை எவ்வாறு இருந்தது என்பதைக் கேள்" என்றார்.

மேலும் மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன், பரிக்ஷித் என்ற பெயரில் அயோத்தியாவில் இருந்தான். ஒருகாலத்தில் அந்தப் பரிக்ஷித் வேட்டையாடச் சென்றான். அவன் ஒரு மானைத் துரத்திக் கொண்டு சென்ற போது, அந்த விலங்கு {குதிரை}, அவனை (மனிதர்களின் வசிப்பிடங்களற்ற ஒரு இடத்துக்கு} நீண்ட தூரத்திற்கு இட்டுச் சென்றது. வெகு தூரம் சென்றதால் களைத்துப் போயிருந்த அவன் {மன்னன் பரிக்ஷித்}, பசியாலும் தாகத்தாலும் துன்புற்று அந்த நாட்டின் ஒரு பகுதியில் இருந்த இருள் நிறைந்த அடர்ந்த கானகத்துக்குச் சென்றான். அக்கானகத்தைக் கண்ட மன்னன் {பரிக்ஷித்}, அதற்குள் நுழைந்து காண்பதற்கினிய ஒரு குளத்தை அங்குக் கண்டான். அவனும் அந்த விலங்கும் {குதிரையும்} அங்குக் குளித்தனர். அங்குக் குளித்த குதிரை புத்துணர்ச்சி பெற்றது. அதன் முன் சில தாமரை இழைகளையும் தண்டுகளையும் இட்டபடி, அம்மன்னன் {பரிக்ஷித்} அந்தக் குளத்தின் அருகில் அமர்ந்தான்.


அங்கு அந்தக் குளத்தின் அருகில் அவன் {மன்னன் பரிக்ஷித்} இருந்தபோது, குறிப்பிட்ட வகை இனிமையான இசையைக் கேட்டான். அவ்விசையைக் கேட்ட அவன் தனக்குள், "இங்கு மனிதர்களின் கால்தடங்களை நான் காணவில்லை. இந்த இசை எங்கிருந்து யாரால் வருகிறது?" என்று நினைத்தான். அம்மன்னன் விரைவில் பூக்கள் சேகரித்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்த ஒரு அழகிய மங்கையைக் கண்டான். அம்மன்னன் {பரிக்ஷித்} அவளிடம், "அருளப்பட்டவளே, நீ யார்? நீ யாருடையவள்?" என்று கேட்டான். அதற்கு அவள், "நான் ஒரு கன்னிகை" என்றாள். அதற்கு அம்மன்னன், "நீ என்னுடையவள் ஆகும்படி நான் உன்னைக் கேட்கிறேன்" என்றான். அதற்கு அந்தக் கன்னிகை, "நீர் எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும், அப்போதுதான் என்னால் உம்முடையவள் ஆக முடியும். இல்லாவிட்டால் முடியாது" என்றாள். மன்னன் உறுதிமொழியைக் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்க, அவள், "நீங்கள் எனது கண்களால் நீரைக் காணச் செய்யக்கூடாது" என்றாள். மன்னனும் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவளை மணந்தான். இப்படி அவளை மணந்து கொண்ட பரிக்ஷித் (அவளுடன்} பெரும் மகிழ்ச்சியுடன் விளையாடி, அமைதியாக அவளுடன் அமர்ந்தான். மன்னன் அவளுடன் தங்கியிருந்தபோது, அவனது துருப்புகள் அந்த இடத்தை அடைந்தன. அந்த ஏகாதிபதியை {பரிக்ஷித்தை} கண்ட துருப்புகள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அவனது துருப்புகளின் இருப்பால் உற்சாகமடைந்த மன்னன், {பரிக்ஷித்} ஒரு அழகான வாகனத்தில் (புதிதாக) தான் மணந்த மனைவியுடன் சென்றான்.

தலை நகரை {அயோத்தியாவை} அடைந்த அவன் {மன்னன் பரிக்ஷித்} அவளுடன் தனிமையில் வாழ ஆரம்பித்தான். மன்னனுக்கு அருகாமையிலேயே இருந்தவர்கள் கூட அவனைக் காண முடியவில்லை. இதுகுறித்துத் தலைமை அமைச்சர் மன்னனைப் பார்த்துக் கொண்ட பெண்களிடம் கேட்டான். அவன், "நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். அந்தப் பெண்கள், "நாங்கள் இங்கு ஒப்பற்ற அழகுடன் கூடிய ஒரு பெண்ணைக் காண்கிறோம். அவளுக்கு நீரைக் காண்பிப்பதில்லை என்ற உறுதிமொழி கொடுத்து அவளை மணந்து கொண்ட மன்னர் அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்" என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட தலைமை அமைச்சர், பல மரங்களும், அபரிமிதமான மலர்களும் கனிகளும் நிறைந்த ஒரு செயற்கை கானகத்தை உண்டாக்கி, அந்தக் காட்டிற்குள்ளேயே ஒரு பெரிய குளத்தை வெட்டச் செய்து, ஒதுங்கிய இடத்தில் இருந்த அதில் {குளத்தில்} அமிர்தம் போன்ற நீர் இருந்தது.

அந்தக் குளம் முத்து வலைகளால் நன்கு மூடப்பட்டிருந்தது. ஒரு நாள் மன்னனைத் தனிமையில் சந்தித்த அவர் {தலைமை அமைச்சர்}, "இது நீரில்லாமல் இருக்கும் நல்ல காடு. நீர் இங்கு இன்பமாக விளையாடலாம்" என்றான். அமைச்சரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {பரிக்ஷித்} அந்தக் காட்டுக்குள் தனது புகழ்மிக்க மனைவியுடன் நுழைந்தான். அந்தக் காண்பதற்கினிய கானகத்தில் அவளுடன் விளையாடிய மன்னன், பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைத்துப் போனான். அம்மன்னன் {பரிக்ஷித்}, அங்கே ஒரு முல்லைக் கொடிப் பந்தலைக் கண்டு, தனது அன்பிற்குரியவளுடன் அந்தப் பந்தலுக்குள் நுழைந்தான். அங்கே அம்மன்னன், அமிர்தம் போன்ற பிரகாசத்துடன் தெளிவுடனும் நீர் நிரம்பிய ஒரு குளதைக் கண்டான். அந்தக் குளத்தின் கரையில் தன் மனைவியுட்ன அமர்ந்த அவன், தன் வணங்கத்தக்க மனைவியிடம், "இந்த நீரில் உற்சாகமாக மூழ்கு" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவள் அந்தக் குளத்திற்குள் மூழ்கினாள். ஆனால் நீருக்குள் மூழ்கிய அவள் மறுபடியும் மேற்பரப்பில் காணப்படவில்லை. மன்னன் அவளைத் தேடினான், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை.

பிறகு மன்னன் {பரிக்ஷித்}, அந்தக் குளத்தின் நீரையெல்லாம் வாரி இரைக்கச் சொன்னான், கடைசியாக ஒரு வளையின் வாயிலில் ஒரு தவளை அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட மன்னன், "எனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் உள்ள தவளைகள் கொல்லப்படட்டும். யாரெல்லாம் என்னைச் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்கள் இறந்த தவளைகளுடன் என்னிடம் வரட்டும்" என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். இப்படித் தவளைகள் கொல்லப்பட்ட போது, அதற்கு அஞ்சிய அனைத்து தவளைகளும் தங்கள் மன்னனிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டன. பிறகு தவளைகளின் மன்னன் தவசியின் ஆடைகளைத் தரித்துக் கொண்டு மன்னன் பரிக்ஷித்தின் முன்னிலையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகிய பிறகு, "ஓ! மன்னா, கோபத்திற்கு ஆளாகாதே! அருள் புரிவாயாக. அப்பாவி தவளைகளைக் கொல்வது உனக்குத் தகாது" என்றது. [இங்கே இரு பாடல்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன (அவை): - ஓ மங்கா புகழ் கொண்டவனே, தவளைகளைக் கொல்லாதே! உனது கோபத்தை அடக்கு! தங்கள் ஆன்மாவை அறியாமையில் வைத்திருப்பவர்களின் செழிப்பும் தவத்தகுதிகளும் குன்றும்! தவளைகளிடம் கோபம் கொள்வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடு! இப்படிப்பட்ட பாவத்தை இழைக்கும் உனக்கு என்ன தேவை இருக்கிறது! தவளைகளைக் கொல்வதால் உனது எந்தக் காரியம் நிறைவேறும்" என்று கேட்டது.

அன்புக்குரியவளின் மரணத்தால் மன்னன் பரிக்ஷித்தின் ஆன்மா துயரத்தில் நிரம்பியிருந்தது. அவன் {மன்னன் பரிக்ஷித்}, "நான் தவளைகளை மன்னிக்க மாட்டேன். மறுபுறம் அவைகளைக் கொல்வேன். இந்த இழிந்த தீயவைகள் {தவளைகள்} எனது அன்பிற்குரியவளை விழுங்கிவிட்டன. எனவே, என்னால் எப்போதும் கொல்லப்பட்ட இந்தத் தவளைகள் தகுந்தனவே. ஓ! கற்றவனே, இதில் உன் சார்பாக நீ தலையிடுவது உனக்குத் தகாது" என்றான். பரிக்ஷித்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தவளை மன்னன், மனதால் துன்புற்று, "ஓ மன்னா அருள்புரிவாயாக! நான் ஆயு என்ற பெயர் கொண்ட தவளைகள் மன்னனாவேன். உனது மனைவியாக இருந்தவள், எனது மகளான சுசோபனையே ஆவாள். உண்மையில், இது அவளது கெட்ட நடத்தையாலேயே நிகழ்ந்தது. இதற்கு முன், பல மன்னர்கள் அவளால் {இப்படி} ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதற்கு அம்மன்னன் {பரிக்ஷித்}, நான் அவளை அடைய விரும்புகிறேன். நீர் அவளை எனக்கு அளிப்பீராக!" என்றான்.

அதன்பேரில் தவளைகள் மன்னன் {ஆயு} தனது மகளைப் பரிக்ஷித்துக்கு அளித்து, அவளிடம் {சுசோபனையிடம்}, "மன்னனுக்காகக் காத்திருந்து அவனுக்குச் சேவை செய்" என்றான். இப்படித் தனது மகளிடம் பேசிய அவன் {தவளை மன்னன்}, மேலும் அவளிடம் கோபமாக, "நீ பல மன்னர்களை ஏமாற்றியிருப்பதால், உனது உண்மையற்ற நடத்தையின் காரணமாக, உனது வாரிசுகள் அந்தணர்களிடம் மரியாதை குறைவாக நடப்பார்கள்" என்றான். ஆனால் அவளை அடைந்த மன்னர் மிகவும் மகிழ்ந்து, மூவுலகங்களும் கிடைத்தது போல இன்புற்று இருந்தான். அவன் {மன்னன் பரிக்ஷித்} தவளைகள் மன்னனை {ஆயுவை} மரியாதையுடன் உரிய முறையில் வணங்கி மகிழ்ச்சியால் ஏற்பட்ட கண்ணீருடனும் அடைபட்ட குரலுடனும், "நான் உம்மால் உதவி பெற்றேன்" என்றான். பிறகு தவளைகள் மன்னன் தனது மகளிடம் விடைபெற்று, அவன் எங்கிருந்து வந்தோனோ அங்கேயே சென்றான். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்