Friday, July 04, 2014

மன்னன் சிபியிடம் வந்த புறாவும்! பருந்தும்!! - வனபர்வம் பகுதி 196

The pigeon and the hawk that came to King Sivi! | Vana Parva - Section 196 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

புறாவுக்குத் தசையீந்த சிபியின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஒரு நாள், தேவர்கள் அனைவரும் கூடி, உசீனரனின் மகனான, மன்னன் சிபியின் அறம் மற்றும் நற்செயல்களைக் காண பூமிக்கு இறங்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஒருவருக்கொருவர் "நல்லது" என்று சொல்லிக் கொண்ட அக்னியும், இந்திரனும் பூமிக்கு வந்தனர். புறாவின் உருவத்தில் இருந்த அக்னி, பருந்தின் உருவத்தில் தன்னைத் தொடர்ந்து விரட்டி வரும் இந்திரனிடம் இருந்து விலகிப் பறந்தோடி வந்தான். பிறகு அற்புதமான இருக்கையில் அமர்ந்திருந்த மன்னன் சிபியின் மடியில் அந்தப் புறா விழுந்தது. அப்போது அங்கிருந்த புரோகிதர், மன்னனிடம் {சிபியிடம்}, "பருந்துக்குப் பயந்தும், தனது உயிரைக் காக்க விரும்பியும், இந்தப் புறா உம்மிடம் பாதுகாப்பு நாடி வந்திருக்கிறது. ஒருவனின் உடல் மேல் புறா வந்து விழுவது என்பது பெரும் ஆபத்தை முன்னறிவிப்பது {தீய சகுனம்} எனக் கற்றோர் சொல்லியுள்ளனர். சகுனங்களைப் புரிந்து கொள்ளும் மன்னன், சுட்டிக்காட்டப்படும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செல்வத்தைத் தானம் செய்யட்டும்" என்றார் {புரோகிதர்}.


அந்தப் புறாவும் {அக்னி தேவனும்} மன்னனிடம் {சிபியிடம்}, "பருந்துக்குப் பயந்தும், எனது உயிரைக் காக்க விரும்பியும் நான் உன்னிடம் பாதுகாப்பு நாடியே வந்தேன். நான் ஒரு முனிவன். புறாவின் உருவைக் கொண்டு, உன்னிடம் பாதுகாப்பை நாடுபவனாக நான் வந்திருக்கிறேன். உண்மையில், நான் எனது உயிராக உன்னையே தேடி வந்தேன். நான் வேதமறிந்தவன்; பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொள்பவன்; தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} மற்றும் தவ அறங்கள் கொண்டவன் என்பதை அறிந்து கொள். மேலும் நான் எனது ஆசான் விரும்பாததை எப்போதும் பேசாதவன் என்றும், உண்மையில் அனைத்து அறங்களையும் கொண்டவன் என்றும் அறிந்து கொள். நான் வேதங்களைத் திருப்பிச் சொல்வேன், எனக்கு அவற்றின் உரைநடை {யாப்பிலக்கணம்} தெரியும். வேதங்களை நான் எழுத்து எழுத்தாகக் கற்றிருக்கிறேன். நான் புறா அல்ல. ஓ! என்னைப் பருந்திடம் கொடுத்து விடாதே. கற்ற, தூய அந்தணனைத் தானமாகக் கொடுப்பது நல்ல தானமாகாது" என்றது.

புறா இப்படிச் சொன்னதும், பருந்து {இந்திரன்} அம்மன்னனிடம் {சிபியிடம்}, "இவ்வுலகில் வரும் உயிரினங்கள் அனைத்தும் ஒரே குறிப்பிட்ட வகையில் வருவதில்லை. படைப்பின் வரிசையில், முற்பிறவியில், நீ இந்தப் புறா மூலமே பிறந்தாய். ஓ! மன்னா {சிபியே}, (அது உனது தந்தையாக இருப்பினும்} இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம் எனது உணவில் தலையிடுவது உனக்குத் தகாது. இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி அந்த பருந்திடம்}, "இதற்கு முன், மனிதர்களின் தூய மொழியைப் பறவைகள் பேசுவதை யாராவது கண்டிருக்கிறார்களா? புறா சொல்வதையும், பருந்து சொல்வதையும் அறிந்த பிறகு, அறத்தின்படி நாம் இன்று எவ்வாறு செயல்படலாம்? பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், தனதுக்குப் பாதுகாப்புத் தேவைப்படும்போது அதை அடைய மாட்டான். உண்மையில், அவனுக்காகவே மேகங்கள் சரியான காலங்களில் மழையைப் பொழியாது. விதைகள் தூவப்பட்டாலும், அவை அவனுக்காக முளைக்காது. தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், பிள்ளைப்பருவத்திலேயே தனது வாரிசு சாவதைக் காண்பான். அத்தகைய மனிதனின் மூதாதையர்களால் சொர்க்கத்தில் வசிக்க முடியாது. உண்மையில், நெருப்பில் அழிக்கப்படும் தெளிந்த நெய்யினாலான அவிர்ப்பாகத்தைத் தேவர்களே ஏற்க மாட்டார்கள். தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களால் வஜ்ராயுதம் கொண்டு தாக்கப்படுவான். அவன் உண்ணும் உணவு புனிதமற்றதாக இருக்கும். அத்தகைய குறுகிய ஆன்மா கொண்டவன் விரைவில் சொர்க்கத்திலிருந்து விழுவான்.

ஓ! பருந்தே, சிபி குலத்தைச் சேர்ந்த மக்கள் உனக்கு முன்பாகச் சோற்றுடன் சமைக்கப்பட்ட காளையை இந்தப் புறாவுக்குப் பதிலாக வைக்க அனுமதி. நீ மகிழ்ச்சியாக வாழும் வகையில் அவர்கள் உன்னை இறைச்சி அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்திற்குச் சுமந்து செல்ல அனுமதி" என்று கேட்டான். இதைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, "ஓ! மன்னா {சிபியே}, இந்தப் புறாவுக்குப் பதிலாக நான் காளை மாட்டையோ, அல்லது, உண்மையில் எந்தப் பிற இறைச்சியையோ, அல்லது அளவில் அபரிமிதமான இறைச்சியையோ நான் கேட்க மாட்டேன். இது{புறா} எனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்டது. எனவே, இதன் மரணம் இன்று என விதிக்கப்பட்டுள்ளதன் விளைவால் இந்த உயிரினமே எனது இன்றைய உணவாகும். எனவே, ஓ! ஏகாதிபதியே {சிபியே}, அதை என்னிடம் கொடு" என்று கேட்டது {பருந்து}.

பருந்தால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி}, "எனது மக்கள் கவனமாக அந்தக்காளையை முழு உறுப்புகளுடன் உன்னிடம் கொண்டு வர அனுமதி. அந்தக் காளை, பயத்தால் துன்பப்படும் இந்த உயிரினத்துக்கு மாற்றுப் பொருளாக இருக்க அனுமதி. அது {காளை} என் கண் முன்பாகவே உன்னிடம் சுமந்து வரப்படட்டும். ஓ! இந்தப் புறாவைக் கொல்லாதே! நான் எனது உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேனேயன்றி, இந்தப் புறாவை உனக்குக் கொடுக்க மாட்டேன். ஓ! பருந்தே, இந்த உயிரினம் சோமச்சாறுடன் கூடிய வேள்வியைப் போலக் காணப்படுகிறது என்பதை நீ அறியவில்லையா? ஓ! அருளப்பட்டவனே {பருந்தே}, இதற்காக இவ்வளவு சிரமப்படுவதை நிறுத்து. எக்காரணம் கொண்டும் என்னால் இந்தப் புறாவை உனக்குத் தர முடியாது. அல்லது, ஓ! பருந்தே, உனக்குத் திருப்தியானால், உனக்கு ஏற்புடைய எதையும் நான் உனக்குச் செய்ய வேண்டுமானால், அதைச் செய்வதன் மூலம் சிபி குலத்தின் மக்கள் மகிழ்வடைந்து என்னைப் பாராட்டும்படியாக இருந்தால், அக்காரியத்தை எனக்குக் கட்டளையிடு. நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்வேன் என நான் உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றான் {மன்னன் சிபி}.

மன்னனின் இம்முறையீட்டைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, "ஓ! மன்னா {சிபியே}, இந்தப் புறாவின் எடைக்குச் சமமான சதையை உனது வலது தொடையில் இருந்து நீ அறுத்துத் தந்தால், இந்தப் புறா உன்னால் பாதுகாக்கப்பட்டதாகும்; அப்படிச் செய்தாயானால் எனக்குஏற்புடையதைச் செய்தவனாவாய்; சிபி குலத்தின் மனிதர்கள் உன்னைப் புகழும் வண்ணம் நடந்து கொண்டவனாவாய்" என்றது {பருந்து}.

இதற்கு உடன்பட்ட மன்னன், தனது வலது தொடையில் இருந்து சதையை அறுத்து, புறாவாக்கு எதிராக {தராசில்} நிறுத்துப் பார்த்த்தான். ஆனால் புறா எடை மிகுந்ததாக இருந்தது. அதன்பேரில் மன்னன் தனது சதையின் மற்றுமொரு பகுதியை வெட்டி எடுத்தான். இருப்பினும் புறா எடைமிக்கதாகவே இருந்தது. பிறகு அம்மன்னன் தனது உடல் முழுவதும் இருந்து சதைகளை அறுத்துத் தராசில் வைத்தான். இருந்தாலும் அந்தப் புறா அதைவிட அதிகமான எடை இருந்தது. பிறகு மன்னன் தானே தராசு தட்டில் ஏறி அமர்ந்தான். இதனால் அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இதைக் கண்ட பருந்து "(புறா) காக்கப்பட்டது" என்று சொல்லி மறைந்து போனது.

அம்மன்னன் {சிபி} புறாவிடம், "ஓ! புறாவே, அந்தப் பருந்து யார் என்பதை இந்த சிபிக்கள் {சிபி குல மக்கள்} அறியட்டும். அண்டத்தின் தலைவனைத் தவிர வேறு யாராலும், அவன் செய்ததைப் போலச் செய்ய முடியாது. ஓ! புனிதமானவனே, எனது கேள்விக்கான விடையைச் சொல்" என்று கேட்டான். அப்புறா, "நான் புகையைப் பதாகையாகக் {கொடியாகக்} கொண்ட வைஸ்வநரன் என்று அழைக்கப்படும் அக்னியாவேன். வஜ்ரம் தாங்கிய சச்சியின் தலைவனே {இந்திரனே} பருந்தாக வந்தான். ஓ! சுரதையின் மகனே {மன்னன் சிபியே}, நீ மனிதர்களில் காளையாவாய். நாங்கள் உன்னை நன்கு அறியவே வந்தோம். ஓ! மன்னா {சிபியே}, என்னைக் காப்பதற்காக இந்த உனது உடலில் இருந்து இந்தச் சதைத்துண்டுகள் வாள் கொண்டு அறுத்து எடுக்கப்பட்டதால் உனது உடலில் வெட்டுக்காயங்களை உண்டாக்கிவிட்டன. நான் இந்தக் குறிகளை {காயக்குறிகள் இருக்கும் இடங்களை} மங்களகரமாவையாக, அழகானவையாக, தங்க நிறம் கொண்டவையாக, இனிய நறுமணம் கொண்டவையாக ஆக்குவேன். பெரும் புகழை ஈட்டி, தேவர்களாலும் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, உனது குடிகளை நீண்ட காலம் ஆள்வாய். உனது விலாவில் இருந்து கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகன் உதிப்பான். ஓ! மன்னா. நீ கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகனை உனது உடலில் இருந்து பெறுவாய். அவன் {கபோதரோமன்} சுரதை குலத்தவரில் முதன்மையானவனாக, வீரனாகப் பெரும் அழகு படைத்தவனாகத் திகழ்வதைக் காண்பாய்.


இதே கதையை லோமசர் யுதிஷ்டிரனுக்கு வனபர்வத்தின் 131வது பகுதியில்  சொல்கிறார். அதன் லிங்க்-link இதோ - புறாவுக்குத் தசையீந்த உசீநரன்! - வனபர்வம் பகுதி 131

இரு கதைகளுக்கும் சில பல வேறுபாடுகள் இருக்கின்றன.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்