Thursday, March 20, 2014

புறாவுக்குத் தசையீந்த உசீநரன்! - வனபர்வம் பகுதி 131

Usinara gave his flesh for the pigeon! | Vana Parva - Section 131 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் உருவம் கொண்டு மன்னன் உசீநரனிடம் வருதல்; மன்னன் புறாவைப் பாதுகாத்தல்; புறாவுக்கீடாக மன்னனின் தசையைப் பருந்து கேட்டல்; மன்னனுன் உவகையுடன் தனது தசையை அறுத்துத் துலாக்கோலில் வைத்தல்; புறாவின் எடை கூட இருந்ததால் மன்னன் முழுமையாகத் தன்னைக் கொடுத்தல்...

பருந்து{இந்திரன்} {உசீநராவிடம்}, "பூமியின் அனைத்து மன்னர்களும் உன்னைப் பக்தியுள்ள ஆட்சியாளன் என்று சொல்கின்றனர். ஓ! இளவரசே {உசீநரா}, அப்படிப்பட்ட நீ, விதி எனக்கு அனுமதித்திருக்கும் செயலை ஏன் தடுத்தாய்? நான் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அறத்திற்குச் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு தெய்வத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரையைப் {எனக்குக் கொடுக்காமல்} பறிக்காதே. அப்படிச் செய்தால் நீ அறத்தைக் கைவிட்டவனாவாய்" என்று சொன்னது.


அதற்கு அந்த மன்னன் {உசீநரன்}, "ஓ! இறகு படைத்த குலத்தில் சிறந்தவனே {பருந்தே}, உன்மீது கொண்ட பயத்தால் பாதிக்கப்பட்டு, உனது கரங்களில் இருந்து தப்பிய இந்தப் பறவை {புறா}, அவசரத்துடன் என்னிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் இந்தப் புறா எந்தன் பாதுகாப்பைக் கோரியிருக்கும்போது, அதை நான் உனக்குத் தராமல் இருப்பதே உயர்ந்த அறம் என்பதை ஏன் நீ காணவில்லை? இப்புறா, பயத்தால் நடுங்கி, துயரத்துடன், என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டிருக்கிறது. ஆகையால் இதைக் {புறாவைக்} கைவிடுவது நிச்சயமாகப் பழியையே கொடுக்கும். அந்தணனைக் கொல்பவனும், அனைத்து உலகங்களுக்கும் தாயான பசுவைக் கொல்பவனும், தன்னிடம் பாதுகாப்பு கோரியவனைக் கைவிடுபவனும் சம பங்கு பாவிகளே" என்றான் {உசீநரன்}.

அதற்கு அந்தப் பருந்து {இந்திரன்}, "ஓ! பூமியின் தலைவா, உணவாலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்வைப் பெற்று வளர்கின்றன. உயிரைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு மனிதன் தனக்கு மிகவும் விருப்பமானதைக் கைவிட்டு நீண்ட காலம் வாழ்ந்து விடலாம். ஆனால் உணவைத் தவிர்த்துவிட்டு அவனால் வாழ முடியாது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {உசீநரா}, உணவை இழந்த நான் நிச்சயம் எனது உடலைவிட்டு, இது போன்ற தொல்லைகளை அற்ற அறிய முடியாத உலகங்களை அடைந்துவிடுவேன். ஓ! பக்தியுள்ள மன்னா {உசிநரா}, ஆனால், நீ இந்த ஒரு புறாவைக் காப்பாற்றுவதால் ஏற்படும் எனது மரணத்தினால், எனது மனைவியும் மக்களும் அழிந்து போவார்கள். ஓ இளவரசே! அப்போது நீ பல உயிர்களைக் காக்காமல் விடுகிறாய். அறத்தின் பாதையில் குறுக்கே நிற்கும் மற்றொரு அறம் நிச்சயம் அறமாகாது. உண்மையில் அது நேர்மையற்ற செயலாகும். ஆனால், ஓ மன்னா {உசீநரா}, சத்தியத்தைப் பராக்கிரமமாகக் கொண்டவனே, எந்த அறம் மற்ற அறங்களுக்குக் குறுக்கே நிற்காமல் இருக்குமோ அதுவே அறம் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்ததாகும். ஓ! பெரும் இளவரசே {உசீநரா}, எதிர்க்கும் {முரண்பட்ட} அறங்களுக்கிடையே ஒரு ஒப்பாய்வைச் செய்த பிறகு, ஒவ்வொன்றின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு, எது தீமையில்லையோ அந்த அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! மன்னா, ஆகையால், அறங்களைத் துலாக்கோலில் ஏற்றி, முதன்மையானதை {நல்லறத்தை} ஏற்றுக் கொள்" என்றது {பருந்து-இந்திரன்}.

இதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, "ஓ பறவைகளில் சிறந்தவனே, நீ மிகவும் நன்மை நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதால், நீ பறவைகளின் ஏகாதிபதியான சுபர்ணன் {கருடன்} என்று நினைக்கிறேன். நீ அறத்தின் வழிகளைக் குறித்து முழுதும் அறிந்தவன் என்பதைத் தீர்மானிக்க நான் சிறிதும் தயக்கப்பட வேண்டியதில்லை. நீ அறம் குறித்து ஆச்சரியப்படும் வகையில் பேசுவதால், நீ அறியாத எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உதவி நாடி வந்தவனைக் கைவிடும் ஒருவனை எப்படி அறம்சார்ந்தவன் என்று நீ கருத முடியும்? ஓ! விண்ணதிகாரியே, இக்காரியத்தில் உனது முயற்சி உணவைத் தேடுவதுதானே. உன்னால் வேறு உணவையோ, வேறு அதிகமான உணவையோ உண்டு உனது பசியைப் போக்கிக் கொள்ள முடியுமே. மாடு, பன்றி, மான் அல்லது எருமை என இன்னும் சுவைநிறைந்த வேறு எந்த உணவைக் கேட்டாலும் நான் அதை உனக்காகப் பெற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அதற்கு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, "ஓ! பெரும் மன்னா, பன்றி, மாடு அல்லது வேறு எந்த வகையின் விலங்கையும் {விலங்கின் இறைச்சியையும்} உண்ண விரும்பவில்லை. வேறு வகை உணவால் எனக்கு என்ன பயன்? ஆகையால், க்ஷத்திரியர்களில் காளையே, சொர்க்கத்திலிருந்து இன்று எனக்கான உணவாக விதிக்கப்பட்ட அந்தப் புறாவை எனக்குக் கொடு. ஓ! பூமியின் தலைவா {உசீநரா}, புறாக்களைப் பருந்துகள் தின்பது என்பது தொன்றுதொட்ட வழக்கம்தானே. ஓ! இளவரசே, வாழைமரத்தின் பலத்தை அறியாமல், ஆதரவுக்காக அதைக் {வாழைமரத்தைக்} கட்டிப்பிடிக்காதே.

அதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, "விண்ணதிகாரியே, நான் எனது குலத்துக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை உனக்கு அளிக்க விரும்புகிறேன். அல்லது நீ விரும்பும் எதையும் கொடுக்கச் சித்தமாகி இருக்கிறேன். எனது பாதுகாப்பை நாடி வந்திருக்கும் இந்தப் புறாவை மட்டும் விட்டுவிட்டு, நீ எதைக்கேட்டாலும் நான் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். இந்தப் பறவையின் {புறாவின்} விடுதலைக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரிவி. ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் இதை {இப்புறாவை} நான் உனக்கு அளிக்க மாட்டேன்" என்றான்.

அதற்கு அந்தப் பருந்து , "ஓ மனிதர்களின் பெரும் ஆட்சியாளா, உனக்கு இந்தப் புறாவின் மீது அவ்வளவு ஆசை இருந்தால், உனது தசையின் ஒரு பகுதியை அறுத்து, அந்தப் புறாவின் எடைக்கேற்ப துலாக்கோலில் நிறுத்து. புறாவின் எடைக்குத் தக்க துலாக்கோல் நிற்பதாக நீ கருதினால் அதுவே எனக்குத் திருப்தியைக் கொடுத்துவிடும்" என்றது. அதற்கு அந்த மன்னன், "ஓ! பருந்தே, இந்த உனது கோரிக்கையை, எனக்கான உதவியாக நான் கருதுகிறேன். ஆகையால், துலாக்கோலில் நிறுத்திய பிறகு நான் எனது தசையை உனக்குக் கொடுப்பேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன பிறகு, உயர்ந்த அறம் சார்ந்த அந்த மன்னன் {உசிநரன்} தனது தசைப்பகுதியை வெட்டியெடுத்து, புறாவின் எடைக்கெதிராகத் துலாக்கோலில் நிறுத்தினான். தனது தசையை விடப் புறவின் எடை அதிகமாக இருப்பதாகக் கண்டான். பிறகு மேலும் தனது தசை அறுத்து, ஏற்கனவே இருப்பதோடு வைத்தான். பகுதிக்குப் பின் பகுதியாக அவன் வைத்தாலும் புறாவே எடை கூடியதாக இருந்தது. அவனது உடலில் வேறு தசையும் இல்லை. ஆகையால் தசைகளற்ற அவன் தானே அந்தத் துலாக்கோலில் ஏறி அமர்ந்து கொண்டான்.

பிறகு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, "ஓ அறம்சார்ந்த மன்னா, நான் இந்திரன். தெளிந்த வேள்வி நெய்யைச் சுமப்பவனான அக்னியே இந்தப் புறா. உனது தகுதியைச் சோதிப்பதற்காகவே நாங்கள் இந்த வேள்விக்களத்திற்கு வந்தோம். நீ உனது உடலில் இருந்து உனது தசையை அறுத்துக் கொடுத்ததால், உனது புகழ் எப்போதும் நிலைத்திருப்பதோடு மட்டுமின்றி, இந்த உலகத்தில் மற்ற அனைவரின் புகழை விடவும் விஞ்சியே நிற்கும். ஓ மன்னா, மனிதர்கள் உன்னைக் குறித்துப் பேசும் காலம் வரை, உனது புகழும் ஓங்கி உயர்ந்து நிற்கும். நீ உயர்ந்த புனிதமான உலகங்களில் வசிப்பாய்" என்றான். மன்னனிடம் இதைச் சொன்ன இந்திரன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அந்த அறம்சார்ந்த மன்னன் உசீநரன், தனது பக்தி நிறைந்த செயல்களால் சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து, ஒளிரும் உடலுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த உன்னத இதயம் கொண்ட ஏகாதிபதியின் {உசீநரனின்} வசிப்பிடத்தைப் பார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கே புனிதமான தவசிகளும், தேவர்களும் ஒன்றாக அறம்சார்ந்த உயர் ஆன்ம அந்தணர்களுடன் காணப்படுவார்கள்" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்