Wednesday, July 09, 2014

யமலோகம் செல்லும் தூரம்! - வனபர்வம் பகுதி 199ஆ

The distance to Yamaloka! | Vana Parva - Section 199b | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

யமலோகம் செல்லும் பாதையில் யார் யார் எப்படிச் செல்வார்கள் என்றும், அறம் மற்றும் அறநெறிகள் குறித்தும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவை யாவையும் தனது தம்பிகளுடன் சேர்ந்து கேட்ட யுதிஷ்டிரன், ஆவலால் உந்தப்பட்டு, மீண்டும் உயர் ஆன்ம மார்க்கண்டேயரிடம், "ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்களின் உலகிலிருந்து யமனின் உலகம் இருக்கும் தூரம் எவ்வளவு? அதன் அளவு என்ன? எப்படி மனிதர்கள் அதைக் கடக்கிறார்கள்? எதன் மூலம் {கடப்பார்கள்}? ஓ! அனைத்தையும் எனக்குச் சொல்லும்!" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவர்களே, உங்கள் கேள்வி, ஒரு பெரும் மர்மத்துக்குத் தொடர்புடையது. அது புனிதமானது, முனிவர்களால் பாராட்டப்படுகிறது. இது அறம்சார்ந்ததும் ஆகும்; ஆகையால் நான் அது குறித்து உன்னிடம் பேசுவேன். மனிதர்களின் வசிப்பிடத்திலிருந்து யமனின் உலகம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்பத்தாறாயிரம் {86,000} யோஜனையாகும்! அந்த வழி ஆகாயத்து மேல் இருக்கிறது. {அவ்வழியில்} நீரில்லாமல் காணப் பயங்கரமாக இருக்கும்; அச்சாலையில் எங்கும் மரத்தின் நிழலோ, நீரோ, களைத்துப் போன பயணி சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படியான இடமோ இருக்காது. பூமியில் உயிருடன் இருக்கும் ஆண், பெண் என அனைவரும் யமனின் தூதுவர்களால் வலுக்கட்டாயமாக அவ்வழியில் அனுப்பப்படுகிறார்கள்.

கடும் மன்னனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தணர்களுக்குக் குதிரைகளும், இன்ன பிற வசதிகளை {வாகனங்களை} தானம் செய்தவர்கள், அந்த வழியில், அந்த விலங்குகள் அல்லது வாகனங்கள் மேல் செல்கிறார்கள். குடை கொடுத்தவர்கள், அந்த நீண்ட வழியில் சூரியக் கதிர்களைக் குடைகளால் புறம்தள்ளி செல்கிறார்கள். உணவைத் தானமாகக் கொடுத்தவர்கள், பசியில்லாமல் செல்கிறார்கள், உணவை தானம் கொடுக்காதவர்களோ பசியால் துன்பப்பட்டுச் செல்கிறார்கள். ஆடைகளைக் கொடுத்தவர்கள், அவ்வழியில் செல்லும்போது நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் செல்கிறார்கள். ஆடைகள் கொடுக்காதவர்கள் நிர்வாணமாகச் செல்கின்றனர். தங்கத்தைத் தானமாகக் கொடுத்தவர்கள், ஆபரணங்கள் பூண்டு மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். நிலம் கொடுத்தவர்கள், தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறிச் செல்கிறார்கள். தானியங்களைக் கொடுத்தவர்கள், எந்தத் தேவையுமில்லாமல், எந்தத் துயரமும் இல்லாமல் செல்கிறார்கள். வீடுகளைக் கொடுத்தவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தேர்களில் செல்கிறார்கள். குடிக்க ஏதாவது கொடுத்த மனிதர்கள், தாகத்தால் துயரடையாமல் மகிழ்ச்சியான இதயங்களுடன் செல்கின்றனர். விளக்குகள் கொடுத்தவர்கள், தங்கள் முன்பு செல்லும் பாதை பிரகாசிக்கச் செல்கிறார்கள். பசுக்களைத் தானம் கொடுத்தவர்கள், தங்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாகச் செல்கிறார்கள்.

ஒரு மாதம் உண்ணாநோன்பு {உபவாசம்} இருந்தவர்கள், அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் செல்கிறார்கள். ஆறு இரவுகள் உண்ணா நோன்பிருந்தவர்கள் மயில்களால் இழுக்கப்படும் தேரில் செல்கிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒரு வேளை மட்டும் உண்டு, இடைவேளைகளில் உண்ணாமல் மூன்று இரவுகளைக் கழிப்பவன், நோயிலிருந்தும், துயரத்தில் இருந்து விடுபட்ட உலகத்திற்குச் செல்கிறான். யமனின் உலகத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும் அற்புத குணம் நீருக்கு இருக்கிறது. நீரை தானமாகக் கொடுத்தவர்கள், அங்கே புஷ்போதகை என்ற பெயர் கொண்ட ஆற்றை அடைகிறார்கள். இவ்வுலகில் நீரைத் தானம் செய்தவர்கள், அந்த ஊற்றில் குளிர்ந்த அமுதம் போன்ற நீரைப் பருகுகிறார்கள். தீச்செயல்கள் செய்தவர்களுக்கு அங்கே சீழை {சீழ்} அடைகிறார்கள். இப்படியே, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆறு அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுகிறது. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (உன்னிடம் இருக்கும்) அந்தணர்களை உரிய முறையில் வணங்கு.

தான் நடந்த பாதையின் தூரத்தால் உறுப்புகள் பலவீனமடைந்து, நெடுஞ்சாலையின் புழுதி தன்மேல் பூசப்பட்டுச் செல்லும் ஒரு பயணி, அன்னதானம் செய்பவர் யார் என்று கேட்டு, நம்பிக்கையுடன் வீட்டுக்கு வருகிறான். அவனை மரியாதை மிகுந்த கவனிப்புடன் வணங்கு. உண்மையில் அவனே விருந்தினன்; அவனே அந்தணன் {பிராமணன்}. இந்திரனுடன் கூடிய தேவர்கள் அவனுக்கு முன்னே செல்கிறார்கள். அவன் வணங்கப்பட்டால், இந்திரனுடன் கூடிய தேவர்கள் திருப்தியடைகிறார்கள். அவன் வணங்கப்படாவிட்டால், தங்கள் தலைவனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்கள் உற்சாகமிழக்கிறார்கள். எனவே, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே (யுதிஷ்டிரா}, இந்த அந்தணர்களை உரிய முறையில் வணங்கு. நான் உன்னிடம் நூற்றுக்கணக்கான காரியங்களைப் பேசியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்?" என்றார் {மார்க்கண்டேயர்}.

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! குருவே, நீர் அறம் மற்றும் அறநெறிகளையும் அறிந்திருக்கிறீர். எனவே நான் திரும்பத் திரும்பக் கேட்க விரும்புவது அறம் மற்றும் அறநெறிகள் சார்ந்து நீர் சொல்லும் புனிதமானவற்றையே {கதைகளையே}" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நித்தியமான விருப்பங்கள் மற்றும் அனைத்துப் பாவங்களைக் கழுவ வல்ல வேறு புனிதமான காரியத்தை நான் இப்போது சொல்கிறேன். உன்னிப்பாகக் கேள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கபிலப் பசுவைத் {காராம்பசுவைத்} தானம் கொடுப்பதற்குச் சமமான தகுதியைக் கொடுக்க வல்ல ஜேஷ்ட-புஷ்கரம் {என்ற தீர்த்தம்} அந்தணர்களின் பாதங்களைக் கழுவுவதால் எழுகிறது. அந்தணனின் பாதம் தொட்ட நீரால் பூமி ஈரத்தன்மையுடன் இருக்கும் வரை, தாமரை இதழ்களால் ஆன குவளைகளில் பித்ருக்கள் நீர் குடிப்பார்கள். விருந்தினன் {நலவிசாரிப்புடன்} வரவேற்கப்பட்டால், நெருப்பு {அக்னி} தேவர்கள் மகிழ்கிறார்கள். அவனுக்கு ஆசனம் அளிக்கப்பட்டால், நூறு வேள்விகளைச் செய்த தேவனே {இந்திரனே} திருப்தியடைகிறான். அவனது பாதம் கழுவப்பட்டால், பித்ருக்கள் மகிழ்கிறார்கள்; அவனுக்கு உணவளிக்கப்பட்டால் பிரஜாபதி திருப்தியடைகிறான்.

பரிசுத்தமான ஆன்மாவுடன் {இதயத்துடன்} ஒருவன், பசு (பிரசவ வேதனையில் இருக்கும்போது}, பிரசவிப்பதற்கு முன்னால், கன்றின் கால்களும் தலையும் காணப்படும்போது {அப்பசுவைத்} தானம் செய்ய வேண்டும். கருப்பையில் இருந்து பூமியில் விழும் கன்றுடன் கூடிய பசு, பூமிதேவிக்குச் சமமாகக் கருதப்படுகிறது. எனவே, அப்படிப்பட்ட பசுவை தானம் செய்யும் ஒருவன், பூமியை தானம் கொடுத்த தகுதியை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு பசுவைக் கொடுக்கும் ஒருவன், பல ஆயிரம் யுகங்களுக்கு, அதாவது அந்த விலங்கு மற்றும் அதன் குட்டியின் ஆகியவற்றின் உடலில் உள்ள ரோமங்களின் அளவு கொண்ட யுகங்களுக்குத் தேவலோகத்தில் வணங்கப்படுவான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தானமாகப் பெறப்பட்ட ஒன்றை, ஒருவன், உடனே அறம்சார்ந்த, நேர்மையான வேறு ஒரு மனிதனுக்கு அதைத் தானம் செய்தால், அவன் பெரும் தகுதியை அடைகிறான். சந்தேகமற, அவன் கடல்கள், குகைகள், மலைகள், கானகங்கள், வனங்கள் சூழ அனைத்து எல்லைகளையும் கொண்ட முழு உலகத்தையும் தானம் செய்த பலனைப் பெறுகிறான்.

முழங்கால்களுக்கு நடுவே கைகளை வைத்துக் கொண்டு, தட்டிலிருந்து எடுத்து அமைதியாக உண்ணும் அந்தணன், பிறரை மீட்பதில் வெற்றியடைவான். குடிப்பதை விலக்கிய அந்தணர்களும், குறையுள்ளவர்கள் என்று யாராலும் பேசப்படாதவர்களும், தினமும் சம்ஹிதைகளைப் படிப்பவர்களும், பிறரை மீட்பதற்கு இயன்றவர்கள். வேதம் கற்ற அந்தணனுக்குப் நீர்க்காணிக்கையான {பானபலியான} நெய்யையும், சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்க வேண்டும். நீர்க்காணிக்கையாக {பானபலியாக} நெருப்பிலிடப்பட்ட தெளிந்த நெய் வீண்போவதில்லை. அதே போல வேதம் கற்ற அறம்சார்ந்த அந்தணர்களுக்குத் தானம் கொடுப்பதும் வீண் போகாது. அந்தணர்கள் கோபத்தைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் எப்போதும் இரும்பு, எஃகாலான ஆயுதங்கள் கொண்டு போரிடுவதில்லை. உண்மையில் இந்திரன் தனது வஜ்ரத்தைக் கொண்டு அசுரர்களைக் கொல்வது போல, அந்தணர்கள் கோபத்தைக் கொண்டு கொல்கிறார்கள். இப்படியே அறம் மற்றும் அறநெறிகள் சம்பந்தமான சொற்பொழிவு இப்போது நிறைவடைகிறது. இதைக் கேட்ட நைமிஷ வன முனிவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். அத்தவசிகளும் இதைக் கேட்டதால் துன்பத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டார்கள். இதன் தொடர்ச்சியாக அவர்கள் தங்கள் அனைத்துப் பாவங்களையும் அழித்தார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்கும் மனிதர்கள், மறுபிறப்பு எனும் கடமையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்." என்றார் {மார்க்கண்டேயர்}. 
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்