Friday, July 11, 2014

ஆத்மாவும்! பரமாத்மாவும்!! - வனபர்வம் பகுதி 199இ

Soul and the Supreme Soul! | Vana Parva - Section 199c | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுத்தங்கள் குறித்தும், ஆத்மா மற்றும் பரமாத்மா குறித்தும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே {மார்க்கண்டேயரே}, அந்தணன் தன்னை எப்போதும் சுத்தனாக வைத்துக் கொள்வதற்கு என்ன சுத்திகரிப்பு முறை உள்ளது?! ஓ அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் அதை உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பேச்சுச் சுத்தம், செயல் சுத்தம், நீரைப் பயன்படுத்துவதால் வரும் சுத்தம் எனச் சுத்தம் மூன்று வகைப்படும். இந்த மூன்று வகைச் சுத்திகரிப்புகளையும் செய்யும் ஒருவன் சந்தேகமற சொர்க்கத்தை அடைகிறான். காலையிலும் மாலையிலும் சந்தியா தேவியை வணங்கி {சந்தியா வந்தனம் செய்து}, வேதங்களின் தாயான புனிதமான காயத்ரி தேவியைத் தியானத்தன்மையோடு உரைக்கும் {காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்} அந்தணன், அவளால் சுத்திகரிக்கப்பட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். கடல்களோடு கூடிய இந்த முழு உலகையும் அவன் தானமாகப் பெற்றிருந்தாலும், அதன்காரணமாக அவன் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க மாட்டான்.


சூரியன் உள்ளிட்ட தெய்வீகக் கோள்கள் அமங்களமாகி, ஒருவனுக்குப் பகையாக இருந்தாலும், இது போன்ற அவனது செயல்களால் அவை விரைவில் மங்களகரமானவையாகவும், சாதகமாகவும் மாறும். அதே வேளையில், ஏற்கனவே மங்களகரமாகவும் சாதகமாகவும் அந்த நட்சத்திரங்கள் இருந்தால், இதுபோன்ற அவனது செயல்களால், அவை மேலும் அதிக மங்களகரமாகவும், அதிகச் சாதகமாகவும் மாறும். விலங்குகளை உணவாக உண்ணும் பயங்கரமான ராட்சசர்களும், கடும் முகம் படைத்தவர்களும், பருத்த உடல் உடையவர்களும் இதுபோன்ற தூய்மையைப் பயிலும் அந்தணனுக்குத் தீங்கு செய்ய இயலாது.

அந்தணர்கள் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்றவர்கள். கல்வி கொடுப்பதாலோ, வேள்வி நடத்துவதாலோ, தானம் பெறுவதாலோ அவர்கள் எந்தக் குறைவும் அடைய மாட்டார்கள். அந்தணன் வேதமறிந்திருக்கிறானோ, அறியாதிருக்கிறானோ, சுத்தமாக இருக்கிறானோ, அசுத்தமாக இருக்கிறானோ, அந்தணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் என்பதால், எப்போதுமே அவர்கள் அவமதிக்கப்படக் கூடாது. இறந்தவர்களின் உடலை எரிக்க இடப்படும் நெருப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படுவதில்லை. அதே போல, ஒரு அந்தணன் கற்றவனோ, அறியாதவனோ அவன் எப்போதும் சுத்தனே ஆவான். அவன் பெரியவனும், தேவனுமாவான். சுவர்களாலும், வாயில்களாலும், அரண்மனைகளாலும் நிறைந்த நகரங்கள், அந்தணர்களற்று இருந்தால், தங்களது அழகை இழக்கும். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் வகைக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்து, கல்வி கற்று, தவத்தகுதியுடன் இருக்கும் வேதமறிந்த அந்தணர்கள் வசித்தால்தான் அது நகரமாகும். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, கற்ற அந்தணன் வசிக்கும் இடம், காடாகவோ, புல்வெளியாகவோ இருந்தால்கூட அது நகரம் என்று அழைக்கப்படும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவ்விடம் தீர்த்தமாகவும் ஆகும்.

பாதுகாப்பைக் கொடுக்கும் மன்னனையும், தவத்தகுதி படைத்த அந்தணனையும் அணுகி, அந்த இருவருக்கும் வழிபாட்டைச் செலுத்தும் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தையும் உடனே அழிக்கிறான்.
நீர்க்காணிக்கைகள்
{பானபலி}
புனிதத் தீர்த்தங்களின் நீர்க்காணிக்கைகள் {பானபலி} செலுத்துவதையும், புனிதமானவர்களின் பெயர்களைச் சொல்வதையும், நல்லவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்களுடன் உரையாடுவதையும் பாராட்டுக்குரிய தகுதிவாய்ந்த செயல்கள் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள். அறம்சார்ந்து நேர்மையாக இருப்பவர்கள், தங்களைப் போன்றோருடன் இருக்கும் தங்கள் தோழமையை எப்போதும் பரிசுத்தமான நீரால் புண்ணியமாக்கப்பட்ட புனிதத் தொடர்பாகக் கருதுகிறார்கள். திரி தண்டம் சுமந்து , நோன்புகள் பயின்று, நீர்க்காணிக்கைகள் கொடுத்து, நெருப்பை வணங்கி, கானகத்தில் வசித்து, உடல் மெலிந்து போவதெல்லாம், ஒருவன் இதயச் சுத்தம் இல்லாமல் இருந்தால் பயனில்லாமலேயே போகும். இன்ப நுகர் பொருட்களில் சுத்தம் எதிர்பார்க்கப்படவில்லையென்றால், அதில் ஆறு புலன்களின் {அறிவுகளின்} ஈடுபாடு எளிதானதே. எனினும், சுத்தம் இல்லாமை கடினமானதே; சுத்தமில்லாமல் கிடைக்கும் சுகம் எளிதானது கிடையாது {சுத்தமில்லாமல் சுகம் கிடைக்காது. அது மோட்சத்தைக் கொடுக்காது}.

ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, ஆறு புலன்களின், மனது மட்டுமே எளிதாகத் தூண்டப்படும். அதுவே மிக ஆபத்தானதும் கூட வார்த்தையாலோ, செயலாலோ, ஆன்மாவாலோ பாவமிழைக்காத உயர் ஆன்ம மனிதர்கள் தவங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய, உடலை அழிக்கும் உபவாசங்களையோ நோன்புகளையோ அவர்கள் செய்வதில்லை. தனது உறவினர்களிடம் அன்பில்லாத ஒருவன், தனது உடலை சுத்தமாக வைத்திருந்தாலும் பாவத்திலிருந்து விடுபட மாட்டான். கடும் இதயமே ஒருவனது தவத்திற்கு எதிரியாகும். தவம் என்பது உலக இன்பங்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல. எப்போதும் சுத்தமாகவும், அறம்சார்ந்தும் இருப்பவனும், தனது வாழ்நாள் முழுவதும் அன்பைப் பயில்பவனும் இல்லற வாழ்வு வாழ்ந்தாலும் முனிவரே ஆவர். அப்படிப்பட்ட மனிதன் தனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான். உபவாசங்களும், பிற நோன்புகளும் பாவங்களை அழிக்காது. இருப்பினும், அவற்றைப் பலமிழக்கச் செய்யும். மேலும் உடலின் சதைகளையும் இரத்தத்தையும் சுண்டச் செய்யும்.

புனிதமற்ற இதயம் கொண்டவன், நோன்புகளின் பொருளை உணராமல் அவற்றை மேற்கொள்வது, தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்வதாகும். அத்தகு செயல்களைச் செய்வதால் அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபடுவதில்லை. அவன் வழிபடும் நெருப்பு, அவனது பாவங்களை உட்கொள்வதில்லை. புனிதத்தன்மையாலும், அறத்தாலும் மட்டுமே ஒரு மனிதன் அருள் உலகங்களை அடைகிறான். உபவாசங்களும் நோன்புகளும் பயனற்றுப் போகும். கனிகளும், கிழங்குகளும் மட்டுமே உண்பது, மௌன விரதமிருப்பது, காற்றை மட்டுமே உண்பது, சிகை மழித்து {மொட்டையடித்து} இருப்பது, நிலையான வீட்டைப் புறக்கணிப்பது, தலையில் சடா முடி தரிப்பது, வானம் பார்க்கப் படுப்பது, தினமும் உபவாசம் இருப்பது, நெருப்பை வழிபடுவது, நீரில் மூழ்குவது, வெறுந்தரையில் படுப்பது ஆகியன மட்டுமே அதுபோன்ற பலனைத் தராது {அருள் உலகங்களை அடைய முடியாது}. அறிவாலும் செயலாலும் புனிதத்தன்மையடைபவர்கள் மட்டுமே, நோய், பலவீனம், மரணம், உயர்ந்த நிலையை அடைதல் ஆகியவற்றை வெல்கிறார்கள். நெருப்பால் சுடப்பட்ட விதைகள் முளைக்காததைப் போல, அறிவால் சுடப்பட்ட வலிகள் ஆன்மாவைப் பாதிக்காது. குறைந்த காலம் வாழும் கடலின் நுரை போலவே, ஆன்மா இல்லாத செயலற்ற {மந்தமான} உடலும் மரக்கட்டை போன்றதே.

அனைவருக்குள்ளும் வசிக்கும் ஆன்மா; அந்த ஆன்மாவின் காட்சி {தரிசனம்} பெற்றவன், (வேதங்களின்} ஒரு தாள வரி {ஸ்லோகம் எனக் கொள்க} அல்லது பாதியின் உதவி பெற்றவன் ஆகியோருக்கு வேறு எதன் தேவையுமில்லை. சிலர் (வேதங்களின்} இரண்டே எழுத்துகளால் பரமாத்மாவின் அறிவைப் பெறுகிறார்கள்; சிலர் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான தாள வரிகளால் {சுலோகங்களால்} முக்தியை அடைகிறார்கள். பரமாத்மாவை அறிதலே {அறியும் அறிவே} முக்திக்கான குறியீடாகும். தனித்தன்மையான ஞானம் கொண்ட பழங்கால மனிதர்கள், சந்தேகங்களால் சலனப்படுபவனுக்கு இவ்வுலகமும் கிடையாது; அடுத்த உலகமும் கிடையாது; அருளுலகமும் கிடையாது என்று சொல்கின்றனர். பரமாத்மாவில் தன்னைக் காண்பவனின் நம்பிக்கையே முக்திக்குக் குறியீடாகும். வேதங்களின் உண்மையான பொருளை அறிந்தவன், அதன் உண்மையான பயன்பாட்டைப் புரிந்து கொள்கிறான். அப்படிப்பட்ட மனிதன், எரியும் காட்டைப் பார்க்கும் மனிதனைப் போல, வேதச் சடங்குகளைப் {வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களைப் {செயல்களைப்]} பார்த்து அஞ்சுகிறான்.

வறண்ட சொற்போர்களைத் தவிர்த்து, சுருதி மற்றும் ஸ்மிருதிகளில் ஆர்வம் செலுத்து. அறிவின் துணை கொண்டு, இரண்டாவதற்ற அழிவற்றவனை {பரமாத்மாவை} அறி. (அதை அறிந்த பிறகு) ஒருவனின் தேடல், குறைபாடுடைய வழிமுறைகளின் மூலம் வீணாகிறது. எனவே, ஒருவன் வேதங்களின் துணை கொண்டு அந்த அறிவை அடைய முயல வேண்டும். வேதங்களே பரமாத்மா; அவையே அவனது உடல்; அவையே உண்மை. விலங்கின் தன்மையால் கட்டுப்பட்டுள்ள ஆன்மா, வேதங்களில் கலந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} அறிய இயலாததாக இருக்கிறது. எனினும், அந்தப் பரமாத்மா சுத்தமான அறிவால் அறியத்தக்கவனாவான். வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தேவர்களின் இருப்பும், உடல்களால் செய்யப்படும் செயல்களின் திறனும், செயல்பாட்டின் திறனும் அனைத்து யுகங்களிலும் கவனிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட்டுவிடுவதும், நிர்மூலமாக்குவதும் புலன்களின் {அறிவுகளின்} சுத்தத்தால் கோரப்படுகிறது. எனவே, புலன்களின் செயல்பாட்டை இடைநிறுத்தம் செய்வதே {நிறுத்துவதே} உண்மையான உபவாசமாகும். ஒருவன் தவத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம். ஒருவன் தானம் செய்வதால் இன்பநுகர் பொருட்களை அடையலாம். தீர்த்தங்களில் நீர்க்கடன் செலுத்துவதால் ஒருவனின் பாவங்கள் அழிக்கப்படலாம். ஆனால், முழுமையான விடுதலை என்பது, ஞானத்தைத் தவிர வேறெதாலும் அடைய முடியாது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்