Wednesday, July 30, 2014

அஷ்டகபாலச் சடங்குகள்! - வனபர்வம் பகுதி 220

Ashtakapala rites!  | Vana Parva - Section 220 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பரதன், பானு, பிருகத்பானு, மனு, ஆகிய நெருப்புகளின் சந்ததிகளையும், அக்னிகளுக்குள் ஏற்படும் தொடர்புகளால் விளையும் தோஷங்களை நிவர்த்தி செய்ய அஷ்டகபாலச் சடங்கு செய்வது ஆகியவற்றையும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பரதன் என்று அழைக்கப்பட்ட நெருப்பு, தவத்தின் கடும் விதிகளால் கட்டப்பட்டு இருந்தான். அவனது நெருப்புக்கு புஷ்டிமதி என்று மற்றொரு பெயரும் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் புஷ்டியைக் (வளர்ச்சியைக்) கொடுப்பதால் அவன் திருப்தி அடைகிறான். அதன் காரணமாகவே அவன் பரதன் (அல்லது பேணிக் காப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். சிவன் என்ற பெயர் கொண்ட மற்றொரு நெருப்பானவன், சக்தி (இயற்கை சக்திகளின் தலைமை தெய்வம்) வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். துயரத்தில் சிக்கியிருக்கும் அனைத்து உயிர்களையும், துன்பங்களில் இருந்து விடுவிப்பதால் அவன் சிவன் (நல்லதைக் கொடுப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். பெரும் தவச் செல்வத்தை தபஸ் பெற்றிருந்ததால்  {தபன் என்று அழைக்கலாம்}, அதை {தவச்செல்வத்தை} அடைவதற்காகப் புரந்தரன் என்ற பெயர் கொண்ட புத்திசாலி மகன் பிறந்தான். ஊஷ்மா என்ற இன்னொரு மகனும் பிறந்தான். இந்த நெருப்பு {ஊஷ்மா} அனைத்துப் பொருட்களின் ஆவியிலும் {vapour உஷ்ணமாக} காணப்படுகிறது. மேலும் மூன்றாவதாக மனு என்ற மகன் பிறந்தான். அவன் பிரஜாபதியாக அதிகாரம் செய்தான்.


பிறகு, வேதங்களைக் கற்ற அந்தணர்கள், சம்பு என்ற நெருப்பின் {நான்காவது புதல்வனின்} சுரண்டல்களைப் பேசுகின்றனர். அதன்பிறகு பிரகாசமான ஆவஸ்த்தியன் என்ற நெருப்பைக் {ஐந்தாவது மகன்} குறித்து அந்தணர்கள் பேசுகின்றனர். இப்படியே தபன், தங்கம் போன்ற பிரகாசமுடைய ஐந்து  நெருப்புகளைப் படைத்தான். இவர்கள் அனைவரும் வேள்விகளில் அளிக்கப்படும் சோம பானத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். (ஒரு பகலின் உழைப்புக்குப் பிறகு) களைத்துப் போன சூரிய தேவன், பிரசந்த நெருப்பாக அறியப்படுகிறான். அவனே பூமியில் உள்ள பயங்கரமான அசுரர்களையும், இன்னும் பலவகைப்பட்ட பிற உயிரினங்களையும் படைத்தவனாவான். அங்கிரசும், தபனின் மகனான பானுவைப் பிரஜாபதியாகப் படைத்தான். வேதங்களைக் கற்ற அந்தணர்களால் அவன் {பானு}, பிருகத்பானு (பெரும் பானு) என்றும் அழைக்கப்படுகிறான். பானு சுப்ரஜா என்பவளையும், பிருகத்பானு சூரியனின் மகளையும் திருமணம் செய்தனர். அவர்கள் ஆறு மகன்களைப் பெற்றனர்; அவர்களது சந்ததியைக் குறித்துக் கேள்.

பலவீனமானவர்களுக்குப் பலத்தைக் கொடுப்பவன் பலதன் (பலத்தைக் கொடுப்பவன்) என்ற நெருப்பாவான். அவன் பானுவின் முதல் மகனாவான். அனைத்து கூறுகளும் {சக்திகளும்} அமைதியான நிலையில் இருக்கும்போது பயங்கரமாகத் தெரியும் மற்றுமொரு நெருப்பு மஞ்சுமான் {மன்யுமான்} என்று அழைக்கப்படுகிறான். அவன் பானுவின் இரண்டாவது மகனாவான். தர்சா மற்றும் பௌர்ணமஸ்யா வேள்விகளின் யாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாகத் தெளிந்த நெய் காணிக்கையாகத் தரப்படுகிறதோ, அவன் இவ்வுலகில விஷ்ணு (பானுவின் மூன்றாவது மகன்) என்று அறியப்படுகிறான். அவன் அங்கிரஸ் என்றும் திருத்திமான் என்றும் அழைக்கப்படுகிறான். ஆக்கிரயணம் என்ற காணிக்கை, இந்திரனுடன் சேர்ந்து யாருக்கு அளிக்கப்படுகிறதோ அவன் ஆக்கிரயணன் நெருப்பு என்று அழைக்கப்படுகிறான். அவன் பானுவின் (நாலாவது) மகனாவான். அக்கிரஹன் பானுவின் ஐந்தாவது மகனாவான். சாதுர்மாஸ்ய (நான்கு மாத) சடங்குகளின் தினமும் காணிக்கைகளின் ஊற்றாக இருப்பவன் அவனே {ஆக்கிரஹன்}. ஸ்துபன் என்பவன் பானுவின் ஆறாவது மகனாவான்.

பானு என்ற பெயரால் அறியப்படும் மனுவின் மற்றுமொரு {மூன்றாவது} மனைவியின் பெயர் நிசை. அவள் {ரோஹிணி என்கிற} ஒரு மகளையும், இரண்டு அக்னிசோமன்களையும் {என்ற இரு மகன்களையும்}, மேலும் ஐந்து பிற அக்னி தேவர்களையும் பெற்றெடுத்தாள். மேக தேவர்களுடன் {மேகங்களின் தேவர்களுடன்} சேர்த்து முதல் காணிக்கையால் மரியாதை செய்யப்படும் பிரகாசமிக்க நெருப்பு {அக்னி} தேவன் வைஸ்வானரன் என்று அழைக்கப்படுகிறான். உலகங்கள் அனைத்துக்கும் தலைவன் என்று அழைக்கப்படும் மற்றுமொரு நெருப்பு விஸ்வபதி என்று அழைக்கப்படுகிறான். அவன் மனுவின் இரண்டாவது மகனாவான். மனுவின் மகள், சுவிஷ்டகிருத் என்று அழைக்கப்படுகிறாள். அவளுக்குச் செலுத்தப்படும் காணிக்கையால் ஒருவன் பெரும் தகுதிகளை அடைவதால் அவளுக்கு அப்பெயர் ஏற்பட்டது. அவள் ஹிரண்யகசியுவின் மகளாக இருப்பினும், தனது தீச்செயல்களால் அவள் அவனுக்கே {ஹிரண்யகசிபுவுக்கே} மனைவியானாள். இருப்பினும் அவள் பிரஜாபதிகளில் ஒருவராக இருக்கிறாள். உடலுக்கு அசைவைக் கொடுத்து, அனைத்து உயிர்களின் உயிர்க்காற்றை இருக்கையாகக் கொண்ட மற்றொரு நெருப்பு சன்னிஹிதன் என்று அழைக்கப்படுகிறான். ஒலி மற்றும் உருவம் சம்பந்தமான நமது கருத்துகளுக்கு அவனே காரணமாவான். நெருப்புக்கு ஆதரவாக இருந்து, கருப்பு வெள்ளை கறைகளால் குறிக்கப்படும் தெய்வீக ஆவி, பாவமற்றவனாக இருப்பினும், விரும்பிய கர்மத்தை சாதிப்பவனாக இருக்கிறான். அவனை ஞானம் கொண்டோர் கபில நெருப்பாகவும் பெரும் முனிவரகாவும் கருதுகின்றனர். அவனே சாங்கிய யோக முறையைத் தோற்றுவித்தவனாவான்.

எந்த நெருப்பின் மூலம், உலகின் பிற உயிரினங்கள் செய்யும் விசித்திரமான சடங்கில் ஆக்கிரம் என்று அழைக்கப்படும் தங்கள் காணிக்கைகளை அடிப்படை ஆவிகளானவர்கள் பெறுகிறார்களோ, அந்த நெருப்பானவன் அக்கிரணி என்று அழைக்கப்படுகிறான். அக்னி ஹோத்ர சடங்குகளுக்குக் குறைபாடுகளால் அழிவு ஏற்படும்போது அதைக் களைய உண்டான இந்தப் பிற பிரகாசமான நெருப்புகள் உலகில் புகழுடன் இருக்கின்றனர். காற்றின் செயலால் இந்த நெருப்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால், அந்தத் தோஷத்தைக் களைய, சுச்சி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். தெற்கு நெருப்பு {தக்ஷிணாக்னி} மற்ற இரண்டு நெருப்புகளுடன் {கார்ஹபதத்தோடும், ஆஹவனீயத்தோடும்} தொடர்பு கொண்டால், விதி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். தங்கள் இடத்தில் இருக்கும் நெருப்புகளான நிவேசம், தேவாக்னி என்ற நெருப்புடன் தொடர்பு கொண்டால், அந்தத் தோஷத்தைக் களைய, சுச்சி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும்.

நிலைத்த நெருப்பானது, தனது மாதாந்திர காலத்தில் ஒரு பெண்ணால் தொடப்பட்டால், அந்தத் தோஷத்தைக் களைய, தஸ்யுமான் என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். அக்னிஹோத்திர சடங்குகள் செய்யப்படும் போது, எந்த உயிரினத்தின் இறப்பைப் பற்றிப் பேசினாலோ, விலங்குகள் இறந்தாலோ, சுரபிமான் என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்து அந்தத் தோஷம் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும். நோயால் துன்புறும் அந்தணன், மூன்று இரவுகள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்க முடியாவிட்டால், வடக்கு நெருப்பை {உத்திராக்னியை} மதித்து அஷ்டகபால சடங்கைச் செய்து அதைத் திருத்த வேண்டும். தர்சத்தையும், பௌர்ணமாஸ்ய சடங்குகளையும் செய்தவன், பதிகிருத் நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கைச் செய்து நிவர்த்திச் செய்து கொள்ள வேண்டும். படுக்கையறையில் இருக்கும் நெருப்புக்கும், நிலைத்தப் புனித நெருப்புக்கும் தொடர்புண்டானால், அக்னிமான் நெருப்பை மதித்து அஷ்டகபாலச் சடங்குகளைச் செய்து அது நிவர்த்திச் செய்யப்பட வேண்டும்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்