Thursday, July 31, 2014

அத்புத நெருப்பு! - வனபர்வம் பகுதி 221

Adbhuta Fire!  | Vana Parva - Section 221 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அத்புத நெருப்பின் மகிமையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சுவாகா என்ற {இங்கு குறிப்பிடப்படுவது ஆண்பால் - மற்ற பதிப்புகளில் ஸஹன் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது} நெருப்பின் விருப்பமான மனைவியான முதிதை, நீரில் வாழ்பவள் ஆவாள். பூமி மற்றும் வானத்தின் பிரதிநிதியான சுவாகா, தனது மனைவியிடத்தில், அத்வந்தன் {Advanta} என்ற உயர்ந்த புனிதமான நெருப்பைப் பெற்றான். இந்த நெருப்பானவன் {அத்வந்தன்}, அனைத்து உயிரினங்களுடைய அக ஆன்மாவின் ஆட்சியாளன் எனக் கற்றறிந்த அந்தணர்களுக்கு மத்தியில் ஒரு மரபு {ஐதீகம்} உள்ளது. அவன் {அத்வந்தன்} வழிபடத்தகுந்தவன், பிரகாசமுடையவன், இங்குள்ள அனைத்து பெரும் பெரும் பூதங்களின் தலைவனுமாவான். கிரகபதி {Grihapati} என்று அழைக்கப்படும் நெருப்பானவன், அனைத்து வேள்விகளிலும் எப்போதும் வழிபடப்பட்டு, இவ்வுலகில் படைக்கப்படும் காணிக்கைகள் அனைத்தையும் தெரிவிப்பவனாவான். சுவாகாவின் பெருமைமிக்க மகனான பெரும் அத்புதன் {Adbhuta} என்ற நெருப்பு நீர்நிலைகளின் {கடலின்} ஆன்மாவாகவும், வானின் இளவரசனாகவும், பெரியன அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்.

அவனது {அத்புதனின்} (மகன்) பரதன் எனும் நெருப்பு, அனைத்து உயிரினங்களின் சடலங்களையும் உட்கொள்கிறான். அக்னிஷ்டோமா வேள்வியில் அவனது {பரதனின்} முதல் கிராது நியதா என்ற அழைக்கப்படுகிறது. தன்னை அணுகும் நியதனைக் காணும், தலைமை நெருப்பான சுவாகா, மாசு குறித்த பயத்தால் கடலுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். (முன்பொருமுறை) அவனை எல்லாத் திக்குகளிலும் தேடிய தேவர்களால், அவனைக் {சுவாகாவைக்} காண முடிவில்லை. அப்போது அவன் {சுவாகா} அதர்வன் {Atharvan} என்ற நெருப்பைக் கண்டு அவனிடம், "ஓ! வீரனே, நீ தேவர்களுக்கான காணிக்கைகளைச் சுமந்து வா! நான் பலவீனமடைந்து இயலாத நிலையில் இருக்கிறேன். சிவப்புக் கண் கொண்ட நெருப்பாக உன்னத நிலையை அடைந்து, எனக்கு ஆதரவளி" என்று கேட்டான். இப்படி அறிவுறுத்தப்பட்ட அதர்வன் என்ற நெருப்பாவேன் வேறு இடத்திற்குச் சென்று விட்டான். ஆனால் அவன் மறைந்திருந்த இடத்தை மீன்கள் உரைத்தன. அதற்கு அந்த நெருப்பானவன் {அதர்வன்}, "அனைத்து உயிர்களுக்கும், நீங்கள் பல வகைகளிலும் உணவாவீர்கள்" என்று அந்த மீன்களுக்குச் சாபமிட்டான்.

பிறகு காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் {சுவாகா} அதர்வனிடம் (முன்பு போலவே) சொன்னாலும், தேவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அவன் {அதர்வன்} அவர்களுக்கான காணிக்கைகளைத் தொடர்ந்து சுமந்து செல்ல சம்மதிக்கவில்லை. அதன்பிறகு அவன் {அதர்வன்} உணர்வற்றுப் போய் உடனே தனது ஆவியை விட்டான். தனது பூதவுடலை விட்ட அவன் {அதர்வன்}, பூமியின் குடலுக்குள் சென்றான். பூமியினுடன் ஏற்பட்ட தொடர்பால், அவன் வித்தியாசமான உலோகங்களைப் படைத்தான். அவனது சீழில் {சீழ்} இருந்து சக்தியும் {கந்தமும்} வாசனையும் எழுந்தன; எலும்புகளிலிருந்து தேவதாரு மரங்களும்; சளியிலிருந்து {கபத்திலிருந்து} கண்ணாடிகளும் {ஸ்படிகங்களும்}; நிண நீரிலிருந்து {பித்தத்திலிருந்து} மரகதக் கற்களும்; கல்லீரலில் இருந்து கருப்பு இரும்பும் {உருக்கும்} எழுந்தன. உலகம் இந்த மூன்று பொருட்களால் {மரம், கல் மற்றும் இரும்பு} அலங்கரிக்கப்பட்டன. மேகங்கள் அவனது நகங்களிலிருந்தும், பவளங்கள் அவனது நரம்புகளிலிருந்தும் உண்டாக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனது உடலிலிருந்து பலதரப்பட்ட வேறு உலோகங்களும் உருவாக்கப்பட்டன.

இப்படித் தனது பூதவுடலை விட்ட அவன் {அதர்வன்}, ஒப்பற்ற தவத்தில் இருந்தான். பிருகு மற்றும் அங்கிரசின் தவத்தின் மூலம் அவன் {மீண்டும்} எழுப்பப்பட்டான். இப்படித் தவத்தால் திருப்தியடைந்த அந்தப் பலமிக்க நெருப்பு {அதர்வன்}. உடனே சுடர்விட்டு எரிந்தான். ஆனால் முனிவர்களைக் கண்ட அவன் (அதர்வன்), மீண்டும் நீர்க்கழிவுகளின் பாதுகாப்பை நாடினான். அந்த நெருப்பானவன் ஒளிந்து போனதும், முழு உலகமும் அச்சமடைந்து, அதர்வனின் பாதுகாப்பை நாடின. தேவர்களும் மற்றவர்களும் அவனை வழிபட ஆரம்பித்தனர். எதிர்பார்ப்பு ஆர்வமுமாக இருந்த மனிதர்கள் மத்தியில் அதர்வ முனி கடல் முழுவதையும் ஆராய்ந்து தேடி {கடைந்து} அந்த நெருப்பைக் {அதர்வா நெருப்பை} கண்டுபிடித்துப் படைப்புத் தொழிலை ஆரம்பித்தான்.

இப்படியே பழங்கலாத்தில் நெருப்பு அழிக்கப்பட்டு, மீண்டும் உயிரோடு வழிபடத்தக்க அதர்வனால் அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது அவன் {நெருப்பு} அநேகமாக அனைத்து உயிரினங்களின் காணிக்கைகளையும் சுமந்து செல்கிறான். கடலில் வாழ்ந்து கொண்டு, பலதரப்பட்ட நாடுகளுக்குப் பயணிக்கும் அவன், வேதங்களில் குறிக்கப்படும் பலதரப்பட்ட நெருப்புகளைப் படைக்கிறான்.

சிந்து நதி {Indus}, (பஞ்சாபின்} ஐந்து நதிகள், சோணம் {Sone}, தேவிகை {Devika}, சரஸ்வதி {Saraswati}, கங்கை {Ganga}, சதக்கும்பை {Satakumbha}, சரயு {Sarayu}, கண்டகி {Gandaki}, சர்மண்வதி {Charmanwati}, மஹி {Mahi}, மேதை {Medha}, மேதாதிதி {Medhatithi}, மூன்று நதிகளான தாமராவதி {Tamravati}, வேத்திரவதி {Vetravati}, கௌசிகி {Kausiki}, தமசை {Tamasa}, நர்மதை {Narmada}, கோதாவரி {Godavari}, வேணை {Vena}, உப வேணை {Upavena}, பீமை {Bhima}, வடவை {Vadawa}, பாரதி {Bharati}, சுப்ரயோகை {Suprayoga}, காவேரி {Kaveri}, மர்முரை {Murmura}, துங்கவேணி {Tungavenna}, கிருஷ்ணவேணி {Krishnavenn}, கபிலை {Kapila} ஆகிய நதிகள், ஓ! பாரதா {யுதிஷ்டிரா} நெருப்புகளுக்கு அன்னையராவர் என்று சொல்லப்படுகிறது!

அத்புதன் {Adbhutha} என்ற அழைக்கப்பட்ட நெருப்புக்கு பிரியா {Priya} என்று பெயரில் ஒரு மனைவி இருந்தாள்; அவள் {பிரியா} மூலமாக அவனுக்குப் பிறந்த மகன்களின் விபூ {Vipu} என்ற பெயரில் மூத்த மகன் ஒருவன் இருந்தான். எத்தனை நெருப்புகள் முன்பு சொல்லப்பட்டனவோ அந்த அளவுக்குப் பலவிதமான சோம வேள்விகளும் உண்டு. இந்த நெருப்புக் குலங்கள் அத்தனையும், பிரம்மனின் ஆவியில் முதலில் பிறந்தவர்களும், அத்ரியின் குலத்தில் இருந்து எழுந்தவர்களும் ஆவர். படைப்புகளை விரிவாக்கம் செய்ய எண்ணிய அத்ரி தனது சுய மனதால் இந்த மகன்களைப் பெற்றார். இச்செயலால், அந்த நெருப்புகள் அத்தனையும் அவரது சொந்த பிரம்ம உடல் கட்டமைப்புக்குள் இருந்து வெளிப்பட்டன. நான் இந்த நெருப்புகளின் மூலம் குறித்த வரலாற்றை உனக்கு விவரித்துவிட்டேன். அவை, பெரும் பிரகாசமும், நிகரற்ற சக்தியும், கொண்ட அவர்கள் {நெருப்புகள்} பெரியவர்களாவர். அவர்களே இருளை அழிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நெருப்புகளின் சக்திகள், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அத்புத நெருப்பைப் போன்றனவே என்பதை அறிந்து கொள். இந்த நெருப்புகள் அத்தனையும் ஒன்றே. ஜோதிஷ்டோமா வேள்வியில் வருவதைப் போல, அங்கிரசின் உடலில் இருந்து பலதரப்பட்ட உருவத்தில் வந்ததால், முதலில் பிறந்த அந்த வழிபடத்தகுந்தவன் {அத்புதன்} முதன்மையானவன் என்பதை அறிய வேண்டும். மந்திரங்களால் முறையாக வழிபட்டால், அனைத்து உயிர்களின் காணிக்கைகளைத் தேவர்களுக்குச் சுமந்து செல்லும் அக்னியுடைய {நெருப்புகளுடைய} பெரும் குலத்தின் வரலாற்றை, இப்படியே உனக்கு நான் விவரித்துவிட்டேன்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்