Thursday, August 07, 2014

தீய ஆவிகள்! - வனபர்வம் பகுதி 229

Evil spirits!  | Vana Parva - Section 229 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஏழு முனிவர்களின் மனைவியரை ஸ்கந்தன் அன்னையாக ஏற்றது; இந்திரன் விண்மீன் கூட்டத்தில் கிருத்திகைக்கான இடத்தைக் கோரியது; ஸ்கந்தன் அதற்கு அருளியது; வினதை உட்பட்ட தாய்மார் தீய ஆவிகளாகி குழந்தைகளைக் கொல்லும் வரத்தை ஸ்கந்தனிடம் கேட்டது; தீய ஆவிகளின் தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஏழு முனிவர்களின் ஆறு மனைவியரும், மஹாசேனன் {ஸ்கந்தன்} நற்பேறு பெற்றதையும், தேவர்கள் படையின் தலைமை ஏற்றதையும் அறிந்து, அவனது {ஸ்கந்தனின்} இருப்பிடத்திற்கு வந்தனர். உயர்ந்த அறத்தகுதி படைத்த அந்த அறம்சார்ந்த மங்கையர் அந்த முனிவர்களால் கைவிடப்பட்டு இருந்தனர். தேவர்ப்படை தலைவனைச் சந்திப்பதில் காலந்தாழ்த்தாமல், அவனிடம் {முருகனிடம்} சென்று, "ஓ! மகனே, தேவர்களைப் போன்ற எங்கள் கணவர்களால் எந்தக் காரணமும் இன்றி நாங்கள் கைவிடப்பட்டோம். சில மனிதர்கள் நாங்கள் தான் உன்னைப் பெற்றதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்தக் கதையை உண்மை என்று நம்பிய அவர்கள் {எங்கள் கணவர்கள்} பெரிதும் கோபித்துக் கொண்டு, எங்கள் புனித இடங்களில் இருந்து எங்களை வெளியேற்றிவிட்டனர். இந்த அபகீர்த்தியில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா} நாங்கள் உன்னை எங்கள் மகனாகச் சுவீகரிக்க எண்ணுகிறோம். உனது ஆதரவை அடைந்தால் நித்திய அருளை அடைந்து பாதுகாப்பாக இருப்போம். இதைச் செய்து கடனைத் தீர்த்தவனாவாயாக" என்றனர்.

ஸ்கந்தன், "ஓ! குறையற்ற குணம் கொண்ட மங்கையரே, நீங்கள் எனது தாய்மாரே ஆவீர்கள். நான் உங்களது மகனே! நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அடைவீர்கள்" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பின்பு சக்ரன் {இந்திரன்} ஸ்கந்தனிடம் ஏதோ சொல்ல விரும்ப, ஸ்கந்தன் அவனிடம் {இந்திரனிடம்}, "என்ன அது?" என்று கேட்டான். ஸ்கந்தனால் பேசச் சொல்லிக் கேட்டுக் கொள்ளப்பட்ட வாசவன் {இந்திரன்}, "ரோகிணியின் தங்கையான அபிஜித் என்ற மங்கை, அவளது {ரோகிணியின்} மூப்பில் பொறாமை கொண்டு, {தானே மூத்தவளாக வேண்டும் என்று எண்ணி} தவம் செய்யக் கானகம் சென்றிருக்கிறாள். இப்படி விழுந்த நட்சத்திரத்திற்கு {அபிஜித்துக்கு = உத்திராடம் நட்சத்திரத்திற்கு} ஒரு மாற்று கண்டு கண்டுபிடிக்க முடியாமல் இழப்புடன் நான் இருக்கிறேன். உனக்கு நற்பேறு உண்டாகட்டும். இந்தப் பெரும் விண்மீன் கூட்டத்தை (அந்தக் காலி இடத்தைப் பூர்த்திச் செய்ய) சரி செய்ய, பிரம்மனிடம் நீ ஆலோசனை செய்வாயாக. தனிஷ்டம் {அவிட்டம்} மற்றும் பிற விண்மீண்கள் பிரம்மனால் படைக்கப்பட்டது. ரோகிணியும் இதுபோன்ற ஒரு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாள்" என்றான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} ஆலோசனைப் படி வானத்தில் கிருத்திகைக்கு ஒரு இடம் ஒடுக்கப்பட்டது. அக்னியைத் தலைமையாகக் கொண்ட அந்த நட்சத்திரம் {கார்த்திகை} ஏழு தலைகளுடன் ஒளிர்கின்றது. வினதை என்பவள் ஸ்கந்தனிடம், "நீ எனக்கு மகனைப் போன்றவன். ஈமச்சடங்கில் எனக்குப் பிண்டம் அளிக்கத்தக்கவன். என் மகனே, நான் எப்போதும் உன்னுடனே வாழ விரும்புகிறேன்" என்றாள்.

ஸ்கந்தன், "அப்படியே ஆகட்டும்! அனைத்துப் புகழும் உங்களையே சாரட்டும்! தாயின் பாசத்தோடு என்னை வழிநடத்தி, உங்கள் மருமகளால் மதிக்கப்பட்டு என்னுடன் எப்போதும் வாழ்ந்து வாருங்கள்" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்தப் பெரும் தாய்மார்கள் ஸ்கந்தனிடம், "கற்றோரால் எங்கள் அனைத்து உயிரினங்களின் தாய்மாராவோம். ஆனால், நாங்கள் உனது தாய்மாராக விரும்புகிறோம். எங்களைப் பெருமைப்படுத்துவாயாக" என்றனர்.

ஸ்கந்தன், "நீங்கள் அனைவரும் எனது தாய்களே. நான் உங்கள் மைந்தன். உங்களைத் திருப்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றான்.

அதற்கு அந்தத் தாய்மார்கள், "பழங்காலத்தில் உலகத்திற்குத் தாய்மார்களாக அந்த (பிராம்மி, மகேஸ்வரி உட்பட்ட) மங்கையர் நியமிக்கப்பட்டார்கள். ஓ! பெரும் தேவா {ஸ்கந்தா}, அவர்களிடம் இருந்து அந்தக் கண்ணியத்தைப் பறிமுதல் செய்து, அந்த இடத்தில் எங்களை நியமிக்க வேண்டும் என்றும், அவர்களை விட்டு உலக மக்கள் எங்களை வழிபட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். உன் நிமித்தமாக அவர்களால் {எங்கள் கணவர்கள் எங்கள் மீது கோபம் கொண்டு தள்ளி வைத்ததால} நாங்கள் இழந்த சந்ததியை எங்களுக்கு நீ மீட்டுத் தா" என்றனர்.

ஸ்கந்தன், "ஏற்கனவே ஒரு முறை கொடுக்கப்பட்டுவிட்டதை {உலக அன்னையர் என்ற கண்ணியத்தை} நீங்கள் அடைய முடியாது. ஆனால், நீங்கள் விரும்பினால், உங்களுக்கு வேறு வாரிசுகளை என்னால் தர முடியும்" என்றான். அதற்கு அந்தத் தாய்மார், "நாங்கள் உன்னுடன் வாழ்ந்து கொண்டே, பலதரப்பட்ட உருவங்களைக் கொண்டு, அந்தத் தாய்மார் {பிராம்மி, மகேஸ்வரி உட்பட்ட அன்னையர்} மற்றும் அவர்களின் பாதுகாவலர்களின் சந்ததிகளை உண்ணும் சக்தி பெற விரும்புகிறோம். நீ எங்களுக்கு இந்த உதவியைச் செய்வாயாக" என்றனர்.

ஸ்கந்தன், "என்னால் உங்களுக்குச் சந்ததியைத் தர முடியும். ஆனால், இப்போது நீங்கள் சொன்னது மிகவும் வலி மிகுந்த ஒன்றாகும். செழிப்படைவீர்களாக! அனைத்துப் புகழும் உங்களைச் சேரட்டும் மங்கையரே, நீங்கள் அவர்களுக்கு {அவர்களது சந்ததிகளுக்கு} உங்கள் பாதுகாப்பை அருளுங்கள்" என்றான்.

அதற்கு அந்தத் தாய், "ஓ! ஸ்கந்தா, நீ விரும்பியபடியே நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம். நீ செழிப்படைவாயாக? ஆனால், ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நாங்கள் எப்போதும் உன்னுடன் வாழ விரும்புகிறோம்" என்றனர்.

ஸ்கந்தன், "மனிதர்களின் குழந்தைகள், இளமை நிலையான பதினாறு வயதை அடையாத வரை, நீங்கள் உங்கள் பல்வேறு உருவங்களால் அவர்களைத் துன்புறுத்தலாம். அளவற்ற கடுமைநிறைந்த ஆவியை {என் சக்தியை} நானும் உங்களுக்கு வழங்குகிறேன். அதைக் கொண்டு நீங்கள் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு ஸ்கந்தனின் உடலில் இருந்து கடுமையும் பலமும் மிக்க ஒருவன், மனிதர்களின் சந்ததிகளை விழுங்கும் காரணத்திற்காக வந்தான். {அப்படி வந்தவன்}, பசியால் உணர்வற்றுத் தரையில் விழுந்தான். ஸ்கந்தனால் உத்தரவிடப்பட்ட அந்தத் தீய மேதை ஒரு பயங்கர உருவத்தை எடுத்தான். நல்ல அந்தணர்கள் மத்தியில் அவன் ஸ்கந்தாபஸ்மாரன் என்ற பெயரால் அறியப்படுகிறான். பெரும் பயங்கரம் கொண்ட வினதை சகுனி கோள் {கிரகம்} {தீமையின் ஆவி} என்று சொல்லப்படுகிறாள். பூதனா ராட்சசி என்று கற்றோரால் அழைக்கப்படுபவள் பூதனா என்ற கோளாகும் {பூதன கிரகமாகும்}. அருவருப்பான தோற்றமும், பார்ப்பதற்குக் கடுமையும் பயங்கரமும் நிறைந்த அந்தப் பிசாசமானவள், சீதபூதனை என்றும் அழைக்கப்படுகிறாள். அந்தக் கடும்தோற்றம் கொண்ட ஆவியே {சீதபூதனையே} மங்கையரின் கருச்சிதைவுக்குக் காரணமாவாள். ரேவதி என்ற பெயராலும் அதிதி அறியப்படுகிறாள்; குழந்தைகளைத் துன்புறுத்தும், ரைவதம் என்று அழைக்கப்படும் பயங்கரமான கோள் அவளது {அதிதி [அ] ரேவதியின்} தீய ஆவியே ஆகும். தைத்தியர்களின் (அசுரர்களின்) தாயான திதி, முகமண்டிகை என்றும் அழைக்கப்படுகிறாள். அந்தப் பயங்கரி சிறு குழந்தைகளின் இறைச்சியை மிகவும் விரும்புபவளாவாள்.

ஓ! கௌரவா {யுதிஷ்டிரா}, ஸ்கந்தனால் பெறப்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தீய ஆவிகளாவர். அவர்கள் கருப்பையில் உள்ள கருவை அழிப்பவர்களாவர். இவர்களே (குமாரர்களே) அந்த மங்கையருக்குக் கணவர்களாக அறியப்படுகிறார்கள். இந்தக் கொடுமையான ஆவிகளால், குழந்தைகள், எதிர்பாராத நேரத்தில் அபகரிக்கப்படுகிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மாட்டினத்தின் {மாடுகளின்} தாய் என்று அழைக்கப்படும் சுரபி {காமதேனு}, சகுனி என்றழைக்கப்படும் தீய ஆவியால் நன்கு விரட்டப்படுகிறாள் {சகுனி காமதேனுவை வாகனமாகக் கொண்டிருக்கிறான்}. அப்படி அவளின் {சுரபியின்} துணையுடன் அவன் {சகுனி}, பூமியில் உள்ள குழந்தைகளை விழுங்குகிறான். நாய்களுக்கெல்லாம் தாயான சரமாவும், கருவில் இருக்கும் மனிதர்களைக் {குழந்தைகளைக்} கொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாள். மரங்களனைத்துக்கும் தாயானாவள் கரஞ்ச {புங்கை [புன்கு]} மரத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கிறாள். அவள் எப்போதும் வரங்களைக் கொடுப்பவளாவும், நல்ல உருவமுள்ளவளாகவும், அனைத்து உயிரினங்களிடத்தில் தயை உள்ளவளாகவும் இருக்கின்றாள். எனவே, குழந்தைகளை விரும்பும் மனிதர்கள், கரஞ்ச {புங்கை} மரத்தில் அமர்ந்திருக்கும் அவளை வணங்குகிறார்கள்.

இந்தப் பதினெட்டு தீய ஆவிகளும் இறைச்சியையும், மதுவையும், அதே வகையான பிறவற்றையும் விரும்பி, பத்து நாட்களுக்கு {சூதிகா கிரகத்தில் = இறைச்சி & மது இருக்கும் இடத்தில்} தவிர்க்க முடியாமல் தங்குகின்றன. கத்ரு என்பவள் நுட்பமான உடல் கொண்டு கர்ப்பத்திற்குள் நுழைகிறாள். அங்கு அவள் {கத்ரு} கருவின் அழிவுக்குக் காரணமாகிறாள். அந்தத் {கருவுற்ற} தாய், நாகத்தை (பாம்பை) {அங்கக் குறைவுள்ள [அ] அங்கங்கள் சிதைந்த மனிதர்களான நாகர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்} பெற்றெடுக்கிறாள். கந்தர்வர்களின் தாய் கருவைக் கவர்ந்து செல்கிறாள். இதன்காரணமாக அந்த {கருவுற்ற} பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்சரசுகளின் தாய் கருவறையில் உள்ள கருவை அகற்றுகிறாள். இதன்காரணமாக, கற்றவர்கள் அந்தக் கருவை, வளர்ச்சி குறைந்த கரு என்கின்றனர். சிவப்புக் கடல் {லோஹிதம் [கடல்]} தேவனின் மகள் ஸ்கந்தனுக்கு அமுதூட்டியவள் என்று சொல்லப்படுகிறாள். கடம்ப மரங்களில் இவள் லோஹிதாயணி என்ற பெயரால் வழிபடப்படுகிறாள். ஆண்களிடம் ருத்திரன் என்ன செய்கிறானோ, அதே செயலையே பெண்களிடம் ஆர்யை செய்கிறாள். இவளே {ஆர்யை} அனைத்துக் குழந்தைகளின் தாயாவாள். அவர்களது {குழந்தைகளின்} நன்மைக்காகத் தனித்துவமாக இவளே {ஆர்யை} வழிபடப்படுகிறாள். நான் விவரித்திருக்கும் இவர்கள் இளம் குழந்தைகளின் விதிகளை ஆதிக்கம் செலுத்தும் தீய ஆவிகளாவர். குழந்தைகள் பதினாறு வயதை அடையும் வரை இந்த ஆவிகள், அவர்களுக்குத் தீமையும், அதன் பிறகு நன்மையும் செய்கின்றன.

நான் விவரித்திருக்கும் ஆண், பெண் ஆவிகளான இவர்கள் அனைவரும் மனிதர்களால் ஸ்கந்தனின் ஆவிகள் என்றே வகுக்கப்பட்டுள்ளனர். நெருப்பிலிடப்படும் காணிக்கைகள் {தகனபலிகள்}, உறுப்புகள்சுத்தம் {அங்கசுத்தம்}, தைலங்கள் {வாசனை திரவியங்கள்}, வேள்விகள், பிற காணிக்கைகள், குறிப்பாக ஸ்கந்தன் வழிபாடு ஆகியவை அவர்களின் {அந்த தீய ஆவிகளின்} கோபத்தைத் தணிக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் உரிய முறையில் மதிக்கப்பட்டு, வணங்கப்பட்டால், மனிதர்கள் விரும்பும் அனைத்து நன்மைகளையும், வீரத்தையும், நீண்ட வாழ்நாளையும் {ஆயுளையும்} அளிக்கிறார்கள். மகேஸ்வரனை வணங்கி, பதினாறு வருடம் கடந்த பிறகு, மனிதர்களின் {அந்தக் குழந்தைகளின்} விதியில் ஆதிக்கம் கொள்ளும் அந்த ஆவிகளின் இயல்புகளைச் நான் இப்போது சொல்கிறேன்.

உறங்கும்போதோ, விழித்த நிலையிலோ தேவர்களைக் காணும் ஒரு மனிதன் விரைவில் பைத்தியமாகிறான். எந்த ஆவியின் ஆதிக்கத்தால் இந்தப் பிரமைகள் நடக்கின்றனவோ அது தேவ ஆவி என்று அழைக்கப்படுகிறது. வசதியாக அமர்ந்திருக்கும்போதோ, படுக்கையில் கிடக்கும்போதோ இறந்த தனது மூதாதையர்களைக் காணும் ஒரு மனிதன், விரைவில் தனது அறிவை இழக்கிறான். இந்த அறிவுணரும் மாயைக்குக் காரணமான ஆவி மூதாதையர்களின் ஆவி என்று அழைக்கப்படுகிறது. சித்தர்களை அவமதிக்கும் ஒருவன், பதிலுக்கு அவர்களால் சபிக்கப்பட்டு, விரைவில் பைத்தியமாகிறான். இந்தத் தீய ஆதிக்கத்தைக் கொண்டுவரும் ஆவி சித்த ஆவி என்று அழைக்கப்படுகிறது.

எந்த ஆவியின் ஆதிக்கத்தால் ஒரு மனிதன் நறுமணத்தை உணர்ந்து, பல்வேறு சுவைகளை {நறுமணம் பரப்புகிற அல்லது சுவையான பொருட்கள் இல்லாத போதே} அறிந்து, வேதனையடைகிறானோ, அந்த ஆவி, ராட்சச ஆவி என்று அழைக்கப்படுகிறது. எந்த ஆவியின் செயலால், தேவ இசைக்கலைஞர்கள் (கந்தர்வர்கள்), ஒரு மனிதனின் உடலமைப்புக்குள் தன் இருப்பைக் கலந்து வெகு விரைவில் பைத்தியம் பிடிக்க வைக்கிறதோ அந்த ஆவி கந்தர்வ ஆவி என்று அழைக்கப்படுகிறது. எந்த ஆவியின் ஆதிக்கத்தால் மனிதர்கள் பிசாசுகளால் எப்போதும் வேதனையடைகிறார்களோ அந்த ஆவி பைசாச ஆவி என்று அழைக்கப்படுகிறது. ஒரு விபத்தின் காரணமாக மனிதனின் உடலமைப்புக்குள் நுழைந்து, அம்மனிதனை உணர்வை இழக்கச்செய்யும் ஆவி, யக்ஷ ஆவி என்று அழைக்கப்படுகிறது.

தீமைகளின் காரணமாக அறம் பிறழ் மனம் கொண்ட ஒரு மனிதன் தனது உணர்வுகளை இழந்து, குறுகிய காலத்தில் பைத்தியக்காரன் ஆவான். அவனது நோயை சாத்திரங்கள் பரிந்துரைக்கும் முறைகளின் படி குணப்படுத்த வேண்டும். குழப்பம், பயம், அருவருப்பான காட்சிகளைக் காணுதல் ஆகியவற்றாலும் ஒரு மனிதன் பைத்தியமாகிறான். மனதை அமைதிப்படுத்துவதிலேயே அவர்களுக்கான தீர்வு இருக்கிறது. ஆவிகளில் சில விளையாட்டிலும், சில உண்பதிலும், சில காமத்திலும் விருப்பம் கொண்டிருக்கும். இப்படி ஆவிகளில் மூன்று வகுப்புகள் உள்ளன. மூன்று இலக்கத்துடன் சேர்த்து பத்து வயது {110 வயது என்று நினைக்கிறேன்} {70 வயது என்றும் வேறு உரை கண்டிருக்கிறேன்} {ஆங்கிலத்தில் Until men attain the age of three score and ten என்று கங்குலி சொல்கிறார்} ஆகும்வரை மனிதர்கள் இந்தத் தீய ஆவிகளின் ஆதிக்கம் வேதனைப்படுத்தும். பின்னர்ப் புலன்றிவாற்றலுள்ளவர்களைத் தாக்கும் தீய ஆவியாகக் காய்ச்சல் மட்டுமே இருக்கிறது. புலன்களை அடக்கியவர்கள், சுயக்கட்டுப்பாடு உடையவர்கள், சுத்தமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள், தெய்வத்துக்கு அஞ்சுபவர்கள், சோம்பலற்றவர்கள், களங்கம் இல்லாதவர்கள் ஆகியோரை எப்போதுமே இத்தீய ஆவிகள் தவிர்த்து விடுகின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களின் விதிகளை உருவாக்கும் தீய ஆவிகளைக் குறித்து உனக்கு விவரித்துவிட்டேன். மகேஸ்வரனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உங்களுக்கு அவர்கள் {அந்தத் தீய ஆவிகள்} மூலம் தொந்தரவே ஏற்படாது" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்