Friday, August 08, 2014

கந்தன் துதி! - வனபர்வம் பகுதி 230ஈ

Skanda Eulogy!  | Vana Parva - Section 230d | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஸ்கந்தனின் பல்வேறு பெயர்களைக் குறித்து யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது; மார்க்கண்டேயர் ஸ்கந்தனின் வேறு பெயர்களுடன் சேர்த்து கந்தனை வழிபடும் துதியையும் சொன்னது...

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! புகழத்தக்க நல்ல அந்தணரே, மூவுலகங்களிலும் பல்வேறு பெயர்களால் அந்த உயர் ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} கொண்டாடப் படுகிறான். நான் அந்தப் பெயர்களை அறிய விரும்புகிறேன்" என்றான்.


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த முனிவர்கள் கூட்டத்தில் அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்} இப்படிப் பேசியதும், அந்த வணங்கத்தக்க உயர்ந்த தவத்தகுதி படைத்த மார்க்கண்டேயர், "ஆக்னேயன் (அக்னியின் மகன்), ஸ்கந்தன் (கைவிடப்பட்டவன்), தீப்தகீர்த்தி (சுடர்விட்டெரிபவன்), ஆனாமயன் (எப்போதும் ஆரோக்கியமாக இருப்பவன்), மயூரகேது (மயில் கொடி கொண்டவன்), தர்மாத்மன் (அறம்சார்ந்த ஆன்மா கொண்டவன்), பூதேசன் (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்), மஹிஷார்த்தனன் (மஹினைக் கொன்றவன்), காமஜித் (ஆசைகளை அடக்குபவன்), காமதன் (விருப்பங்களை நிறைவேற்றுபவன்), காந்தன் (அழகன்), சத்தியவாகு (உண்மை பேசுபவன்), புவனேஸ்வரன் (அண்டத்தின் தலைவன்), சிசு (குழந்தை), சீக்கிரன் (விரைவானவன்), சுச்சி (சுத்தமானவன்), சண்டன் (கடுமையானவன்), தீப்தவர்ணன் (பிரகாசமான நிறம் கொண்டவன்), சுபானன் (அழகிய முகம் கொண்டவன்), அமோகன் (கலங்கடிக்கப்பட முடியாதவன்), அனகன் (பாவமற்றவன்), ரௌத்ரன் (பயங்கரமானவன்), பிரியன் (விருப்பமானவன்), சந்திரானனன் (நிலவைப் போன்ற முகம் கொண்டவன்), தீப்தசஷ்டி (சுடர்விடும் ஈட்டியைத் {வேல்-ஐ) தாங்கியவன்), பரசாந்தாத்மன் (அமைதியான ஆன்மா கொண்டவன்), பதரகிரித் (நன்மை செய்வபவன்), குக்குடமோஹனன் (தீயவர்களுக்கும் அறையாக {புகலிடமாக} இருப்பவன்) (The chamber of even the wicked), ஷஷ்டிபிரியன் (ஷஷ்டிக்குப் பிடித்தமானவன்), பவித்ரன் (புனிதமானவன்), மாத்ருவத்ஸலன் (தாய்க்கு மரியாதையளிப்பவன்), கன்யாபர்திரன் (கன்னிகைகளைக் காப்பவன்), விபக்தன் (அண்டத்தைச் சிதறடிப்பவன்), ஸ்வாஹேயன் (சுவாகையின் புதல்வன்), ரேவதீசுதன் (ரேவதியின் புதல்வன்), பிரபு (தலைவன்), நேதன் (தலைவன்), விசாகன் (விசாகனால் வளர்க்கப்பட்டவன்), நைகமேயன் (வேதத்தில் இருந்து உதித்தவன்), சுதுஸ்சரன் (அமைதிப்படுத்த முடியாத கடுமையானவன்), சுவிரதன் (அற்புத நோன்புகள் கொண்டவன்), லலிதன் (அழகானவன்), பாலகக் கிரீடநகப்பிரியன் (பொம்மைகளை விரும்புபவன்), கசாரின் (வானத்தில் உலவுபவன்), பிரம்மச்சாரி (கற்புடையவன்), சூரன் (வீரம் கொண்டவன்), சரவணோத்பவன் (புதர்க்காட்டில் பிறந்தவன்), விஸ்வாமித்ரபிரியன் (விஸ்வாமித்திரருக்குப் பிடித்தமானவன்), தேவசேனாப்பிரியன் (தேவ சேனைக்குப் பிடித்தமானவன்), வாசுதேவப்பிரியன் (வாசுதேவனுக்குப் பிடித்தமானவன்), பிரியகிருத் (ஏற்புடையவற்றைச் செய்பவன்) என்பவையே கார்த்திகேயனின் {ஸ்கந்தனின்) தெய்வீகப் பெயர்களாகும். இதைத் திரும்பச் சொல்பவர்கள் சந்தேகமற புகழையும், செல்வத்தையும், முக்தியையும் அடைவார்கள்.

கந்தனின் பெயர்களை அடைப்புக்குறிகள் இல்லாமல் படிக்க விரும்புகிறவர்களுக்கு : ஆக்னேயன், ஸ்கந்தன், தீப்தகீர்த்தி, ஆனாமயன், மயூரகேது, தர்மாத்மன், பூதேசன், மஹிஷார்த்தனன், காமஜித், காமதன், காந்தன், சத்தியவாகு, புவனேஸ்வரன், சிசு, சீக்கிரன், சுச்சி, சண்டன், தீப்தவர்ணன், சுபானன், அமோகன், அனகன், ரௌத்ரன், பிரியன், சந்திரானனன், தீப்தசஷ்டி, பிரசாந்தாத்மன், பதரகிரித், குக்குடமோஹனன், ஷஷ்டிபிரியன், பவித்ரன், மாத்ருவத்ஸலன், கன்யாபர்திரன், விபக்தன், ஸ்வாஹேயன், ரேவதீசுதன், பிரபு, நேதன், விசாகன், நைகமேயன், சுதுஸ்சரன், சுவிரதன், லலிதன், பாலககிரீடநகப்பிரியன், கசாரின், பிரம்மச்சாரி, சூரன், சரவணோத்பவன், விஸ்வாமித்ரபிரியன், தேவசேனாப்பிரியன், வாசுதேவப்பிரியன், பிரியகிருத் {மொத்தம் 51 பெயர்கள்}

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குரு குலத்தின் வீரமிக்கக் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்படும் அந்த நிகரற்ற, பலமிக்க, ஆறுமுகம் கொண்ட, வீரமிக்கக் குஹனிடம், அவனது வேறு பெயர்களைக் கணக்கிட்டுச் சொல்லி, முறையான பக்தியோடு நான் இப்போது வேண்ட {வணங்கப்} போகிறேன். நீ அதைக் கேள் : பிரம்மனால் படைக்கப்பட்டு, பிரம்மனுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து பிரம்மம் குறித்த புதிர்களை அறிந்தவன் நீ. பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையான நீ பிரம்மசாயன் என்று அழைக்கப்படுகிறாய். பிரம்மத்தை விரும்புபவன் நீ, அந்தணர்களைப் போன்ற தவமுடையவன் நீ, பிரம்மத்தைக் குறித்த பெரும் புதிரை அறிந்தவன் நீ, பிராமணர்களுக்குத் தலைவன் நீயே. சுவாகா நீயே, சுவதையும் நீயே, புனிதமானவற்றிலும் புனிதமானவன் நீயே, நீ மந்திரங்களால் எழுப்பப்படுகிறாய். நீ ஆறு சுடர் கொண்ட நெருப்பாகக் கொண்டாடப்படுகிறாய்.

வருடம் நீயே, ஆறு காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பாதி (சந்திர) மாதங்கள் {பக்ஷங்கள்} {பிறைநாட்கள்} நீயே, பகல் மற்றும் திசைகள் நீயே. தாமரைக் கண் கொண்டவன் நீயே. அல்லி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே. நீ ஆயிரம் முகங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்டிருகிகறாய். அண்டத்தின் ஆட்சியாளன் நீயே, பெரிய காணிக்கை நீயே, தேவர்களையும் அசுரர்களையும் அசைய வைக்கும் ஆவி நீயே. படைகளின் பெரும் தலைவன் நீயே. பிரசண்டன் {சீற்றம் கொண்டவன்} நீயே, தலைவன் நீயே, பெரும் ஆசானும், எதிர்களை வீழ்த்துபவனும் நீயே. (பல உருவங்கள் கொண்ட) சஹஸ்ரபு, சஹஸ்ரதுஷ்டி (ஆயிரம் மடங்கு மனநிறைவு கொண்டவன்), சகஸ்ரபுகன் (அனைத்தையும் விழுங்குபவன்), சகஸ்ரபாதன் (ஆயிரம் கால்கள் கொண்டவன்) நீயே, பூமியும் நீயே. எண்ணற்ற உருவங்களையும், ஆயிரம் தலைகளையும், பெரும் பலத்தையும் நீ கொண்டிருக்கிறாய். உனது விருப்பத்தின் பேரிலேயே நீ கங்கை, சுவாகா, மஹி அல்லது கிருத்திகைகளுக்கு மகனாகத்தோன்றினாய்.

ஓ! ஆறுமுகத் தேவா {ஸ்கந்தா}, சேவலுடன் விளையாடிக் கொண்டு, பல்வேறு உருவங்களை உனது விருப்பத்திற்கு ஏற்ப ஏற்பவன் நீ. நீயே எல்லாக் காலங்களுக்கும் தக்ஷன், சோமன் {சந்திரன்}, மருதன், தர்மன், வாயு, மலைகளின் இளவரசன், இந்திரன் ஆவாய். பலமிக்கவன், நித்தியமானவற்றில் அதி நித்தியமானவன், தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன் நீ. உண்மையைத் {சத்தியத்தைத்} தழைக்க வைப்பது, திதியின் சந்ததியை (அசுரர்களை) அழிப்பது ஆகியவற்றைச் செய்பவன் நீயே. தேவர்களின் எதிரிகளை வீழ்த்துபவன் நீயே. நீயே அறத்தின் வடிவம். பெரியவனாகவும், நுட்பமானவனாகவும் நீயே இருக்கிறாய். அறச் செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும், பிரம்மத்தின் புதிர்களையும் அறிந்தவன் நீயே. ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அண்டத்தின் உயர் ஆன்மத் தலைவனே, இந்த முழுப் படைப்பும் உனது சக்தியால் நிரப்பப்பட்டுள்ளது. எனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு நான் உன்னை வழிபட்டேன். பனிரெண்டு கண்களும், பல கரங்களும் கொண்ட உன்னை நான் வணங்குகிறேன். மீதமுள்ள உனது குணங்கள் என் புரிதல் சக்திக்கு மீறியவையாக இருக்கின்றன {இதற்கு மேற்பட்ட உனது குணங்களை நான் அறியவில்லை}.

ஸ்கந்தனின் பிறப்பு சம்பந்தமான இந்தக் கதையைக் கவனத்துடன் படிக்கும் அந்தணன், அல்லது அந்தணர்களுக்கு உரைப்பவன், அல்லது மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} சொல்லப்படும்போது கேட்பவன் ஆகியோர் செல்வம், நீண்ட வாழ்நாள், புகழ், குழந்தைகள், வெற்றி, செழிப்பு, மனநிறைவு, ஸ்கந்தனின் துணை ஆகியவற்றைப் பெறுவர்" என்றார் {மார்க்கண்டேயர்.}.

********* மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம் முற்றிற்று *********

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்