Saturday, August 30, 2014

திரௌபதியைக் கண்ட ஜெயத்ரதன்! - வனபர்வம் பகுதி 262

Jayadratha beheld Draupadi!  | Vana Parva - Section 262 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்றது; அவ்வேளையில் ஜெயத்ரதன் திரௌபதியைக் காண்பது; அவளைக் கண்டு மயங்கிய அவன், அவளைப் பற்றி அறிய கோடிகனை அனுப்பியது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாரதக் குலத்தைச் சார்ந்த இத்தகுப் பெரும் வீரர்கள் காம்யகம் எனும் பெரும் காட்டில் தேவர்களைப் போலச் சுற்றிக் கொண்டும், வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டும், நாட்டின் எண்ணிலடங்கா காட்டுபகுதிகளையும், அழகான மலர்கள் பூக்கும் காலம் கொண்ட கானகத்தின் பரந்த பகுதிகளையும் மகிழ்ச்சியுடன் கண்டனர். ஒவ்வொருவரும் இந்திரனைப் போல இருந்து, எதிரிகளுக்குப் பயங்கரத்தைக் கொடுக்கும் அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அங்கே சிறிது காலம் தங்கினர். ஒரு நாள், எதிரிகளை வெல்லும் அந்தப் பராக்கிரமசாலிகள் {பாண்டவர்கள்}, தங்களுடன் இருந்த அந்தணர்களுக்கு உணவு கொடுப்பதற்காக, அனைத்து பக்கங்களுக்கும் வேட்டையாடச் சென்றனர். தவ மகிமை கொண்ட பெரும் துறவியான திருணபிந்துவிடமும், தங்கள் ஆன்ம வழிகாட்டியான தௌமியரிடமும் அனுமதி கேட்டு, திரௌபதியைத் தனியாக ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர்.


அதே வேளையில், சிந்துவின் புகழ்பெற்ற மன்னனான, விருத்தக்ஷத்ரனின் மகன் {ஜெயத்ரதன்}, திருமணம் செய்து கொள்ளும் நோக்குடன், சிறந்த அரச உடைகள் உடுத்தி, எண்ணற்ற இளவரசர்களின் துணையுடன் சால்வ நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். காம்யக வனத்தில் அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} நின்றான். அந்த ஒதுங்கிய இடத்தில், பாண்டவர்களின் கொண்டாடப்படும் அன்பிற்குரிய மனைவியான அழகிய திரௌபதி, ஆசிரமத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகிய வடிவத்தால் பிரம்மாண்டமாக இருந்த அவள், கரிய மேகக் குவியலைப் பிரகாசிக்க வைக்கும் மின்னலைப் போல, அந்த வனத்தைச் சுற்றி ஒரு காந்தியைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளை {திரௌபதியைக்} கண்ட எவரும், “இது அப்சரசா? தேவர்களின் மகளா? அல்லது தேவ மாயையா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டனர். இந்த எண்ணத்தால் அவர்களது கரங்களும் குவிந்தன. அவர்கள் களங்கமற்ற வடிவழகு கொண்டவளை நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விருத்தக்ஷத்ரனின் மகனும், சிந்துவின் மன்னனுமான ஜெயத்ரதன், களங்கமற்ற அழகுடைய அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி, தீய நோக்கத்தால் பீடிக்கப்பட்டான். ஆசை கொழுந்து விட்டெரிய அவன் {ஜெயத்ரதன்} கோடிகன் என்ற இளவரசனிடம், “களங்கமற்ற வடிவம் கொண்ட இந்த மங்கை யாருடையவள்? இவள் மனித வகையைச் சார்ந்தவள்தானா? இந்தப் பேரழகியை அடைய முடிந்தால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை [1]. அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு எனது வசிப்பிடத்திற்குத் திரும்புவேன். ஓ! ஐயா {கோடிகா}, இவள் யாரென்றும், இவள் எங்கிருந்து வந்திருக்கிறாள் என்றும், இந்த மென்மையானவள் முட்கள் நிறைந்த இந்தக் கானகத்திற்கு ஏன் வந்தாள் என்றும் அறிந்து வா. பெண் வகையில் ரத்தினமான இந்தக் கொடியிடையாள், பெரும் அழகு படைத்த இந்த மங்கை, அழகிய பற்களும், நீண்ட கண்களும் கொண்ட இவள் என்னைத் தலைவனாக ஏற்பாளா? இந்த அற்புதமான மங்கையின் கரங்களை அடைந்தால், நான் நிச்சயம் என்னை வெற்றியடைந்தவனாகக் கருதிக் கொள்வேன். போ, கோடிகா {கோடிகாஸ்யா}, இவளது தலைவன் யார் என்பதை விசாரித்து வா" என்றான் {ஜெயத்ரதன்}. இப்படிக் கேட்கப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்த கோடிகன், தனது தேரில் இருந்து குதித்து, ஒரு நரி பெண் புலியை அணுகுவதைப் போல அவளின் {திரௌபதியின்} அருகில் வந்து, இந்த வார்த்தைகளைப் பேசினான்.

[1]  இங்கே I have no need to marry if I can secure this exquisitely beautiful creature. என்று ஜெயத்ரதன் சொல்வதாகவே கங்குலியில் உள்ளது. ஒருவேளை இதன்பிறகே ஜெயத்ரதன் துச்சலையை மணந்திருக்க வேண்டும் என்று யூகித்தால் வனபர்வம் பகுதி 269ல் யுதிஷ்டிரன், தன் தங்கை துச்சலையை நினைவுகூர்ந்து ஜெயத்ரதனிடம் கருணை காட்டுகிறான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்