Sunday, August 31, 2014

ஜெயத்ரதனின் சிறுமை! - வனபர்வம் பகுதி 265

The wretchedness of Jayadratha!  | Vana Parva - Section 265 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ஜெயத்ரதன் திரௌபதியை அணுகியது; திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்து, நீண்ட பேச்சுகளால் தாமதம் செய்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோடிகாக்கியன் {கோடிகன்}, கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} தனக்கும் இடையில் நடந்தவற்றை, காத்திருந்த {ஜெயத்ரதன் உட்பட்ட} அந்த இளவரசர்களுக்குச் சொன்னான். கோடிகாக்கியனின் வார்த்தைகளைக் கேட்ட சிபி குலக் கொழுந்தான ஜெயத்ரதன், “அவள் பேசியதை மட்டுமே கேட்ட என் இதயம், அந்தப் பெண்குல ரத்தினத்தின் மேல் காதல் கொள்கிறது. இப்படியிருக்கும்போது, நீ ஏன் (வெற்றியடையாமல்) திரும்பினாய்? நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கோடிகா}, இந்தப் பெண்ணை ஒரு முறை கண்ட பிறகு, மற்ற பெண்களெல்லாம் எனக்கு {பெண்} குரங்குகளைப் போலத் தெரிகிறார்கள். நான் இவளைக் கண்டவுடன், இவள் எனது இதயத்தைக் கொள்ளையிட்டுவிட்டாள். ஓ! சைப்பியா {கோடிகா}, இந்த அற்புதமான மங்கை, மனித வகையைச் சேர்ந்தவள்தானா என்று எனக்குச் சொல்?" என்று கேட்டான். அதற்குக் கோடிகன், “இந்த மங்கை புகழ்பெற்ற இளவரசியான கிருஷ்ணையாவாள் {திரௌபதியாவாள்}. இவள் துருபதனின் மகளும், பாண்டுவின் ஐந்து மகன்களுக்கும் பிரபலமான மனைவியுமாவாள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} இவள் மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய, கற்புடைய மனைவியாவாள். இவளை உன்னுடன் சௌவீரத்திற்கு எடுத்துச் செல்" என்றான்.




வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிந்து, சௌவீரம் மற்றும் பிற நாடுகளுக்கு மன்னனான தீய மனம் கொண்ட ஜெயத்ரதனுக்கு இப்படிச் சொல்லப்பட்டதும், அவன் {ஜெயத்ரதன்}, “நான் திரௌபதியைப் பார்க்க வேண்டும்" என்றான். பிறகு, ஆறு பேருடன், அந்தத் தனிமையான ஆசிரமத்திற்குள், சிங்கக் குகைக்குள் நுழையும் ஓநாய் போல நுழைந்தான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} கிருஷ்ணையிடம் {திரௌபதி}, “உனக்கு வாழ்த்துகள், அருமையான மங்கையே! யாருடைய செழிப்பை நீ எப்போதும் விரும்புகிறாயோ அந்த உனது கணவர்கள் நன்றாக இருக்கிறார்களா?” என்று கேட்டான். அதற்குத் திரௌபதி, “குந்தியின் மகனும், குரு குலத்தைச் சேர்ந்தவருமான மன்னர் யுதிஷ்டிரரும், அவரது தம்பிகளும், நானும், நீர் விசாரிக்கும் அனைவரும் நலமாக இருக்கின்றோம். உமது நாடு, உமது அரசு,  அந்த அரசின் நிதிக் கருவூலம், உமது படைகள் ஆகியன நலமா? தனிப்பெரும் ஆட்சியாளராக, சைப்பியம், சிபி, சிந்து மற்றும் உமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வளமை மிகுந்த நாடுகள் அனைத்தையும் நீதியுடன் ஆட்சி செய்கிறீரா? ஓ! இளவரசரே, உமது பாதங்களைக் கழுவி கொள்ள இந்த நீரைப் பெற்றுக் கொள்ளும். இந்த இருக்கையில் அமரும். உமது படை அணியினரின் காலை உணவுக்காக நான் ஐம்பது விலங்குகளைத் தருகிறேன். இது போக, குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மான்குட்டிகளையும் {Porcine deer = பன்றி போன்ற மான்கள்}, நயங்குமான்களையும், புள்ளி மான்களையும், இரலைகளையும் {கலைமான்களையும்}, எண்காற்புட்களையும் {சரபங்களையும் = சிங்கத்தையே கொல்லவல்ல எட்டுக் கால் பறவைகளையும்}, முயல்களையும், ருருமான்களையும், கரடிகளையும், சம்பரமான்களையும், கவயங்களையும், இன்னும் பல விலங்குகளையும், காட்டுப்பன்றிகளையும், காட்டெருமைகளையும், நான்கு கால் கொண்ட விலங்குகள் பலவற்றையும் உமக்குக் கொடுப்பார்" என்றாள்.

இதைக்கேட்ட ஜெயத்ரதன், “என்னிடம் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கின்றன. எங்களுக்குக் காலை உணவு அளிக்க முன்வந்து, உண்மையில் நீ அதை ஒருவகையில் கொடுத்துவிட்டாய் {By offering to provide our breakfast, thou hast in a manner actually done it.}. இப்போது வா. என் தேரில் பயணித்து, முழுமையான மகிழ்ச்சியை அடைவாயாக. நாடு பறிக்கப்பட்டு, சிறிதளவும் மாற்றமடைய முடியாதப் பேறைப் பெற்று, ஆற்றல்கள் முடங்கி, காட்டில் பரிதாபகரமான நிலையில் வாழும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நீ எதற்காகவும் பொருட்படுத்த வேண்டியதில்லை. உன்னைப் போன்ற அறிவுள்ள பெண் ஏழைக் கணவனுடன் இணைந்திருக்கமாட்டாள். அவள் {உன்னைப் போன்ற அறிவுள்ள பெண்} தனது தலைவன் வளமையில் இருக்கும்போது அவனைத் தொடர வேண்டும். ஆனால், கேடுகாலத்தில் அவனைக் கைவிட வேண்டும். பாண்டுவின் மகன்கள், தங்கள் உயர்ந்த நிலையில் இருந்து விழுந்துவிட்டனர். காலத்திற்கு அவர்களது நாட்டைத் தொலைத்துவிட்டார்கள். எனவே, அவர்களிடம் மதிப்புக் கொண்டு,  அவர்களது துன்பத்தில் நீ பங்கு கொள்ள வேண்டியதில்லை. எனவே, ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி}, பாண்டுவின் மகன்களைக் கைவிட்டு, எனது மனைவியாகி மகிழ்ச்சியடைந்து, என்னுடன் சிந்து மற்றும் சௌவீர நாடுகளைப் பகிர்ந்து கொள்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} தொடர்ந்தார், “சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை அவ்விடத்தில் இருந்து விலகி, புருவங்களை நெறித்து முகம்சுழிதாள். அவனது வார்த்தைகளைப் பெரிதும் அவமதித்து, அலட்சியம் செய்த அந்த மெல்லிடையாளான கிருஷ்ணை {திரௌபதி}, சிந்து மன்னனிடம் {ஜெயத்ரதனிடம்}, “மீண்டும் அப்படிப் பேசாதே! உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைப் பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாள். தனது கணவன் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றமற்ற குணம் கொண்ட மங்கை {திரௌபதி}, நீண்ட நேரம் {அவனிடம்} பேசி, அவனை முழுமையாக ஏமாற்றத் தொடங்கினாள்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்