Monday, September 01, 2014

திரௌபதி கடத்தப்பட்டாள்! - வனபர்வம் பகுதி 266

Draupadi kidnapped!  | Vana Parva - Section 266 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்தது; ஜெயத்ரதன் திரௌபதியின் மேலாடையைப் பற்றியது; ஜெயத்ரதனைத் தள்ளிவிட்ட திரௌபதி; திரௌபதியை இழுத்துச் சென்று ஜெயத்ரதன் தேரில் ஏற்றியது; தௌமியர் ஜெயத்ரதனை எச்சரித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துருபதன் மகள் {திரௌபதி} இயற்கையாகவே அழகாக இருந்தாலும், கோபம் எழுந்ததால் {மிகவும்} சிவப்பாக இருந்தாள். எரியும் கண்களுடனும், கோபம் கொண்ட புருவங்களுடனும், அவள் சௌவீர ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நிந்தித்தாள். அவள் {திரௌபதி}, “ஓ! மூடனே,  இந்திரனுக்கு ஒப்பானவர்களும், கடும் போர்வீரர்களும், கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களிடம் போரிடும்போது கூடக் கலங்காதவர்களுமான அந்தக் கொண்டாடப்படுபவர்களை {பாண்டவர்களை} இத்தகு வார்த்தைகளால் அவமதிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ! சௌவீரா {ஜெயத்ரதா}, கல்வி அறிவு கொண்டு தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் கற்ற மனிதர்களை, அவர்கள் காட்டில் வாழ்ந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் நல்லவர்கள் தவறாகப் பேசுவதில்லை. உன்னைப் போன்ற குறுகிய புத்தி கொண்ட பாதகர்களே அப்படிச் செய்வார்கள். உனது பாதத்திற்கு அடியில் உள்ள குழிக்குள் விழப்போகும் உன்னைக் கைகொடுத்துக் காக்க கூடிய ஒருவனும் இந்த {உனது} க்ஷத்திரயக்கூட்டத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இமயத்தின் பள்ளத்தாக்குகளில் உள்ள யானைக்கூட்டத்தில், மதம் கொண்டு மதநீர் ஒழுகிய நிலையில் மலைச்சிகரத்தைப் போன்று இருக்கும் தலைமை யானையை, கையில் உள்ள குச்சியால் பிரித்து விடலாம் என்பது போல இருக்கிறது, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை வீழ்த்திவிடலாம் என்ற உனது நினைப்பு. சிறுபிள்ளை போன்று அறியாமையில் இருக்கும் நீ, உறங்கிக் கொண்டிருக்கும் சக்திமிக்கச் சிங்கத்தை உதைத்து விழிப்படையச் செய்து அதன் முகத்தில் இருக்கும் முடியைப் பிடித்திழுக்க நினைக்கிறாய். எனினும், பீமசேனரின் கோபத்தைக் கண்டால் நீ ஓடிவிடுவாய். சீற்றமிகு ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனரிடம்} நீ மோதினால், மலைக்குகையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெரும்பலம் வாய்ந்த, பயங்கரமான, முழுதும் வளர்ந்த சீற்றமிகு சிங்கத்தை உதைப்பதற்குச் சமமாகும். இரு அற்புதமான இளைஞர்களான இளம்பாண்டவர்களிடம் {நகுல சகாதேவர்களிடம்} மோதுவது குறித்து நீ பேசுகிறாய். அவர்களுடன் நீ மோதுவது, பிளந்த இரண்டு நாவுகள் கொண்ட, இரண்டு நஞ்சுமிகுந்த கருநாகங்களின் வால்களை வேண்டுமென்றே மிதிப்பதற்கு அது சமமாகும். மூங்கிலும், வாழையும், கோரையும் அழிவதற்காகவே கனி கொடுத்து, மேலும் வளராமல் இருக்கின்றன. தனது அழிவுக்காகவே கருவுறும் நண்டைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்க வீரர்களால் {பாண்டவர்களால்} பாதுகாக்கப்படும் என் மீது உனது கைகளை வைக்கிறாய்.” என்றாள் {திரௌபதி}.

அதற்கு ஜெயத்ரதன் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இவையாவையும் நான் அறிவேன். அந்த இளவரசர்களின் பராக்கிரமத்தை நான் நன்கு அறிவேன். ஆனால், இந்த அச்சுறுத்தல்களைக் கொண்டு எங்களைப் பயமுறுத்த முடியாது. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பதினேழு சக்திகளையும் {எட்டு கர்மங்களும் [1] ஒன்பது சக்திகளும் [2]}, ஆறு அரச குணங்களையும் [3] கொண்ட உயர்ந்த குலத்திலேயே நாங்கள் பிறந்திருக்கிறோம். எனவே, நாங்கள் பாண்டவர்களைத் தாழ்ந்தவர்களாவே கருதி, அவர்களை குனிந்து பார்க்கிறோம். எனவே, ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, இந்த யானையிலோ, அல்லது தேரிலோ விரைவாக ஏறு, உனது வார்த்தைகளை மட்டுமே கொண்டு எங்களைக் கலங்கடிக்க முடியாது. கர்வமற்றுப் பேசி, சௌவீர மன்னனிடம் {என்னிடம்} கருணையைப் பெற முயற்சி செய்" என்று மறுமொழி கூறினான் {ஜெயத்ரதன்}.

[1] கால்நடை வளர்த்தல், வர்த்தகம், சுங்கம், அணை கட்டுதல், யானை பிடித்தல், சுரங்கமெடுத்தல், கப்பம் வாங்குதல், பாழ்நிலங்களில் மக்களைக் குடியேற்றுதல் ஆகியன மன்னர்களுக்குப் பொருள் வருவாய்க்கான வழிகள்

[2] தலைமைசக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி, தலைமைசித்தி, மந்திரசித்தி, உற்சாகசித்தி, பிரபூதயம், மந்திரோதயம், உத்சஹோதயம் ஆகிய திறமைகள்

[3]சமாதானம், போர், அணிவகுப்பு, நிறுத்தல், முரண் விதைப்பு {ஏற்படுத்துதல்}, பாதுகாப்பு தேடுதல் ஆகியன ஒரு மன்னனின் ஆறு செயல்கள் ஆகும் என்று கங்குலி சொல்கிறார்.

அதற்குத் திரௌபதி {ஜெயத்ரதனிடம்}, “நான் சக்திமிக்கவளாக இருப்பினும், என்னை ஏன் சௌவீர மன்னன் {நீ} மிகவும் பலம் குறைந்தவளாக எண்ணுகிறான் {எண்ணுகிறாய்}? வன்முறை மீது கொண்ட பயத்தால் இளவரசனின் முன்னால் என்னை நான் இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன் என்பது நன்கு அறியப்பட்டதே. யாரைப் பாதுகாக்க கிருஷ்ணனும், அர்ஜுனரும் ஒரே தேரில் துரத்திக் கொண்டு வருவார்களோ அவளை {என்னை} இந்திரனாலேயே கடத்திச் செல்ல முடியாது. எதிரிகளைக் கொல்பவரான கிரீடி {அர்ஜுனர்}, என் காரியமாகத் தேரில் வந்தால், உங்கள் தலைவர்கள் இதயங்களில் பயத்தை உண்டாக்கி, கோடை காலத்தில் காய்ந்த புல்லை உட்கொள்ளும் நெருப்பைப் போல அனைத்தையும் எரித்துவிடுவார். யாரும் என்னைத் தீண்டினால், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு போர் செய்யும் அந்தகர்கள் மற்றும் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த இளவரசர்களும், கேகேய குலத்தின் வலிமைமிக்க வில்லாளிகளும் பெரும் உணர்ச்சி பொங்க எனக்காகத் தொடர்ந்து வருவார்கள். {அர்ஜுனரின்} கரத்தின் பலத்தால் காண்டீவத்தின் நாணில் இருந்து புறப்படும் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} பயங்கரமான கணைகள், பெரும் சக்தியுடன், காற்றில் பறந்து வந்து மேகங்களைப் போலக் கர்ஜிக்கும். காண்டீவத்திலிருந்து வெட்டுக்கிளிகள் பறப்பது போல அடர்த்தியான கணைமழையைப் பொழியும் அர்ஜுனரை நீ காணும்போது, உனது மூடத்தனத்திற்காக வருந்துவாய். சங்கை ஊதிக்கொண்டு, வில்லின் நாணொலியை எதிரொலிக்கும் கையுறைகளுடன் மீண்டும் மீண்டும் கணைகளால் அவர் {அர்ஜுனர்} உனது மார்பைத் துளைக்கும்போது நீ எப்படி உணர்வாய் என்பதை நினைத்துப்பார். கையில் கதாயுதத்துடன் பீமர் உன்னை நோக்கி வரும்போதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மாத்ரியின் இரண்டு மகன்கள் தங்கள் கோபம் எனும் நஞ்சைக் கக்கும்போதும், வலியை உணரும் நீ, அதற்காக எப்போதும் வருந்த நேரிடும். மனதால் கூட நான் எனது தகுதி வாய்ந்த கணவர்களுக்குப் பொய்மையுடன் {அவர்களை மீறி} நடந்து கொண்டதில்லை. நான் கொண்ட அந்தத் தகுதியால், பிருதையின் {குந்தியின்} மகன்களால் நீ வீழ்த்தப்பட்டு, இழுத்துச் செல்லப்படுவதைக் காணும் இன்பத்தை அடைவேன். குருவீரர்கள் என்னைக் கண்டுபிடித்ததும், தங்களுடன் என்னை மீண்டும் காம்யக வனத்திற்குத் திரும்ப அழைத்து வருவார்கள். அதனால், கொடூரமான நீ, வன்முறையுடன் என்னைச் சிறைப்பிடித்து அச்சுறுத்தமுடியாது. " என்றாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், “பிறகு அகன்ற கண்களையுடைய அந்த மங்கை {திரௌபதி}, வன்முறையுடன் தன் மீது கைவைக்கத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்டு, நிந்திக்கும் வகையில், “என்னைத் தொட்டு தீட்டுப்படுத்தாதீர்" என்று சொல்லி, பிறகு, பெரும் அச்சத்துடன், தங்கள் ஆன்ம ஆலோசகரான தௌமியரைக் அழைத்தாள். எனினும், ஜெயத்ரதன் அவளது மேலாடையைப் பற்றினான். ஆனால் அவள் பெரும் ஆவேசத்துடன் அவனைத் தள்ளினாள். அந்த மங்கையால் {திரௌபதியால்} தள்ளப்பட்ட அந்த இழிந்த பாவி வேரறுக்கப்பட்ட மரம் போலத் தரையில் விழுந்தான். எனினும், மீண்டும் அவனால் {ஜெயத்ரதனால்} பெரும் வன்முறையுடன் பிடிக்கப்பட்ட அவள் {திரௌபதி} மூச்சுத்திணற ஆரம்பித்தாள். அந்தப் பாவியால் இழுத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி}, தௌமியரின் பாதங்களை வணங்கி, கடைசியாக அவனது {ஜெயத்ரதனது} தேரில் ஏறினாள். பிறகு தௌமியர் ஜெயத்ரதனிடம், “ஓ! ஜெயத்ரதா, க்ஷத்திரயர்களின் பண்டைய வழக்கத்தைக் கைக்கொள்வாயாக. அந்தப் பெரும் வீரர்களை வீழ்த்தாமல் நீ இவளைத் தூக்கிச் செல்லக்கூடாது {இயலாது}. யுதிஷ்டிரனின் தலைமையிலான வீர மிகுந்த பாண்டுவின் மகன்களிடம் நீ மோதுகிறாய். உனது இத்தகு வெறுக்கத்தக்க செயலுக்கான வலிநிறைந்த கனிகளை நீ நிச்சயம் அறுப்பாய்" என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன தௌமியர், ஜெயத்ரதனின் காலாட்படைகளுக்கு மத்தியில் நுழைந்து, கடத்தல்காரனால் தூக்கிச் செல்லப்படும், அந்தப் புகழ்பெற்ற இளவரசியைத் {திரௌபதியைப்} பின்தொடர ஆரம்பித்தார்.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்