Tuesday, September 30, 2014

அஸ்வபதியின் மகள் சாவித்ரி! - வனபர்வம் பகுதி 291

Savitri daughter of Aswapati!  | Vana Parva - Section 291 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வம்)

மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சாவித்ரியின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; மத்ர நாட்டு மன்னன் அஸ்வபதி காயத்ரிதேவியை வேண்டுவது; மன்னன் அஸ்வபதியிடம் மனநிறைவு கொண்ட காயத்ரிதேவி மன்னன் அஸ்வபதிக்கு வரத்தை அருள்வது; அஸ்வபதிக்கு சாவித்ரி பிறப்பது; பூப்படைந்த பின்னரும் யாரும் பெண் கேட்க வராததால், அஸ்வபதி தன் மகள் சாவித்ரியிடம், அவளே தனக்குகந்த மணாளனைத் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது...

"யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! வலிமைமிக்கத் தவசியே {மார்க்கண்டேயரே}, இந்தத் துருபதன் மகளுக்காக {திரௌபதிக்காக} வருந்துமளவுக்கு நான் எனக்காகவோ, இந்த எனது தம்பிகளுக்காகவோ, நாட்டை இழந்ததற்காவோ வருந்தவில்லை. அந்தத் தீயவர்களால் நடத்தப்பட்ட பகடையாட்டத்தால் நாங்கள் துன்புற்றிருந்தபோது, கிருஷ்ணையே {திரௌபதியே} எங்களை விடுவித்தாள். ஜெயத்ரதனால் அவள் இக்கானகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டாள். துருபதன் மகளைப் {திரௌபதியைப்} போல வேறு எந்தக் கற்புடைய மேன்மையான மங்கையையாவது இதுவரை நீர் கண்டதோ கேட்டதோ உண்டா?" என்று கேட்டான்.


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, கற்புடைய மேன்மையான மங்கையரின் தகுதிகளை, சாவித்ரி என்ற பெயர் கொண்ட இளவரசி எப்படி அடைந்தாள் என்பதை முழுமையாகக் கேள். மத்ரர்கள் {மத்ர நாட்டவர்கள்} மத்தியில் {among Madras}, அறம்சார்ந்த, உயர்ந்த பக்தி கொண்ட ஒரு மன்னன் {அஸ்வபதி} இருந்தான். அவன் எப்போதும் அந்தணர்களுக்கு நல்லதைச் செய்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த ஆன்மா கொண்டவனாக {மகாத்மாவாக}, உண்மையில் உறுதியுள்ளவனாக இருந்தான். அவன் புலன்களை நன்கு அடக்கியவனாகவும், வேள்விகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருந்தான். தானமளிப்பவர்களில் முதன்மையானவனாகவும், திறனுடையவனாகவும், குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் ஆகிய இருவராலும் விரும்பப்படுபவனாகவும் இருந்தான். பூமிக்குத் தலைவனாக இருந்த அவனது பெயர் அஸ்வபதி என்பதாகும். அவன் அனைத்து உயிர்களின் நன்மையையும் நோக்கமாகக் கொண்டவனாக இருந்தான். உண்மையான பேச்சும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களும் கொண்ட அந்த மன்னிக்கும் இயல்புடையவனுக்கு (அந்த ஏகாதிபதிக்கு), குழந்தையில்லாமல் இருந்தது. அவன் {அஸ்வபதி} முதிர்வயதினன் ஆன போது, இதன்காரணமாக {குழந்தையில்லாததால்} துயரத்திற்கு உள்ளானான். வாரிசையுண்டாக்கும் நோக்குடன் அவன் {அஸ்வபதி}, கடும் நோன்புகள் நோற்று, பிரம்மச்சரிய வகை வாழ்வியலின் உதவியைக் கொண்டு, புலன்களில் இருந்து விடுபட்டு, அற்ப உணவை உட்கொண்டு வாழத் தொடங்கினான்.

அந்த மன்னர்களில் சிறந்தவன் {அஸ்வபதி}, (தினமும்) நெருப்பில் பத்தாயிரம் பலியுணவை இட்டு, சாவித்ரிதேவியை [1] மதிக்கும் வண்ணம் மந்திரங்களைச் சொல்லி, {அந்த நாளின்} ஆறாவது காலத்தில் [2] மிதமாக உண்டான். இது போன்ற நோன்புகளைப் பயின்றே அவன் பதினெட்டு {18} வருடங்களைக் கடத்தினான். பதினெட்டு வருடங்கள் முழுமையாக முடிந்ததும் சாவித்ரி (அவனிடம்) நிறைவு கொண்டாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் மகிழ்ச்சியுடன் வெளிப்பட்டு, அக்னிஹோத்ர நெருப்பில் இருந்து உருவம் கொண்டு வந்த அந்தத் தேவி {goddess}, மன்னனுக்குக் காட்சி கொடுத்தாள். வரங்களை அளிக்கும் நோக்குடன் இருந்த அவள் {சாவித்ரி}, அந்த ஏகாதிபதியிடம் {அஸ்வபதியிடம்}, "ஓ! மன்னா {அஸ்வபதி}, உனது பிரம்மச்சரிய பயிற்சிகளாலும், உனது தூய்மையிலும், சுய அடக்கத்திலும், நீ நோற்ற நோன்புகளிலும், உனது அனைத்து முயற்சிகளிலும், வணக்கத்திலும் நான் மனநிறைவு கொண்டேன். ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! அஸ்வபதி, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். எனினும், நீ எவ்வகை அறத்திலும் அலட்சியம் கொள்ளக்கூடாது" என்ற வார்த்தைகளைச் சொன்னாள்

[1] காயத்ரி என்றும் அழைக்கப்படும் {சாவித்ரி} பிரம்மனின் மனைவியாவாள் என்கிறார் கங்குலி.

[2] ஒரு பகலை எட்டாகப் பிரித்து, அதில் வரும் ஆறாவது காலத்தில் அஸ்வபதி உண்டான் என்று கொள்ள வேண்டும்.

அதன்பேரில் அஸ்வபதி, "அறத்தை அடையும் பொருட்டே நான் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஓ! தேவி, எனது குலத்தின் தகுதிக்கு ஏற்ப பல மகன்கள் எனக்குப் பிறக்க வேண்டும்! ஓ! தேவி, நீ என்னிடம் நிறைவு கொண்டாயானால், நான் இந்த வரத்தையே உன்னிடம் கேட்பேன். வாரிசை அடைவதிலேயே பெரும் தகுதி இருக்கிறது என்று இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} என்னிடம் உறுதி கூறியுள்ளனர்!" என்றான். அதற்குச் சாவித்ரி, "ஓ! மன்னா, உனது இந்த நோக்கத்தை ஏற்கனவே அறிந்தே, நான் தலைவரான பெருந்தகப்பனிடம் {பிரம்மாவிடம்} உனது மகன்களைக் குறித்துப் பேசினேன். அந்தச் சுயம்புவால் அருளப்படும் உதவியாலேயே, பெரும் சக்தி கொண்ட ஒரு மகள் இந்தப் பூமியில் உனக்கு விரைவாகப் பிறப்பாள். இதற்கு மறுமொழி கூறுவது உனக்குத் தகாது. பெரும்பாட்டனின் {பிரம்மாவின்} உத்தரவின் பேரில் மிகுந்த மனநிறைவுடன் இருக்கும் நான் உனக்கு இதைச் சொல்கிறேன்" என்று மறுமொழி கூறினாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "சாவித்ரியின் வார்த்தைகளை ஏற்று, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்த மன்னன் {அஸ்வபதி} அவளை மீண்டும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவளிடம் {சாவித்ரியிடம்}, "இது விரைவாக நடக்கட்டும்!" என்றான். சாவித்ரி மறைந்த பிறகு, அந்த ஏகாதிபதி தனது நகரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த வீரன், தனது குடிகளை நேர்மையான முறையில் ஆண்டு, தனது நாட்டில் வாழ ஆரம்பித்தான். சில காலம் கழிந்த பிறகு, நோன்புகள் நோற்ற அந்த மன்னன் {அஸ்வபதி}, அறப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த தனது மூத்த ராணியிடம் வாரிசை உண்டாக்கினான் {கர்ப்பத்தை உண்டாக்கினான்}. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த மால்வ இளவரசியின் கருவறையில் இருந்த கரு, வானத்தில் வளர்பிறையின் போது வளரும் நட்சத்திரங்களின் தலைவனைப் {சந்திரனைப்} போல வளர்ந்தது.

நேரம் வந்தபோது, அவள் {மால்வ இளவரசி} தாமரை போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {அஸ்வபதி}, வழக்கமான சடங்குகளை அவள் சார்பாக மகிழ்ச்சியாக நடத்தினான். அவள், சாவித்ரி தேவியை மதித்துப் பலியுணவுகளைக் காணிக்கையாக இட்ட அறத்தால், அவளால் {சாவித்ரி தேவியால்} மகிழ்ச்சியாக வழங்கப்பட்டவள் ஆதலால், அவளது தந்தையும் {அஸ்வபதியும்}, அந்தணர்களுக்கு அவளுக்குச் சாவித்ரி என்ற பெயரைச் சூட்டினர். அந்த மன்னனின் மகள் உருவமெடுத்து வந்த ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வளர்ந்து வந்தாள். குறித்த நேரத்தில், அந்தக் காரிகை {அஸ்வபதியின் மகள் சாவித்ரி} பூப்படைந்தாள். மெல்லிடையும், பருத்த பின்புறமும் கொண்டு தங்கச் சிலை போன்ற இருந்த அந்த அருள் நிறைந்த மங்கையைக் கண்ட மக்கள், "நாம் ஒரு தேவ கன்னிகையைப் {goddess} பெற்றுள்ளோம்" என்று நினைத்தனர். எரியும் பிரகாசம் கொண்ட அவளது சக்திக்குக் கட்டுப்பட்ட ஒருவராலும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணை மணமுடிக்க முடியவில்லை.

பிறகு ஒரு பருவ காலத்தில் நோன்பிருந்து, தலைக்குக் குளித்த அவள், தன்னைத் தனது (குல) தெய்வத்தை வணங்கி, உரிய சடங்குகளுடன் அந்தணர்களை வேள்வித்தீயில் பலியுணவுகளைக் காணிக்கையாக்கச் செய்ய நேர்ந்தது. தெய்வத்துக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட மலர்களை எடுத்த ஸ்ரீயைப் போன்ற அழகுடைய அந்த மங்கை {சாவித்ரி}, தனது உயர் ஆன்ம {மகாத்மாவான} தந்தையிடம் {அஸ்வபதியிடம்} சென்றாள். தன் தந்தையின் பாதத்தை வணங்கி, அவனுக்குத் தான் கொண்டு வந்திருந்த மலர்களைக் கொடுத்த அந்தப் பெரும் அருள் நிறைந்த கன்னிகை, கூப்பிய கரங்களுடன் மன்னனுக்கு {அஸ்வபதியின்} அருகில் நின்றாள். பூப்படைந்த தனது மகள் தெய்வீக காரிகையைப் போல இருப்பதையும், மக்கள் அவளைக் கோராததையும் {வரன்களால் வேண்டப்படாததைக்} கண்ட மன்னன் சோகமானான்.

பிறகு அந்த மன்னன் {அஸ்வபதி}, {சாவித்ரியிடம்} ,"மகளே, உன்னை {ஒருவனுக்கு} அளிக்கும் நேரம் வந்துவிட்டது! ஆனால் யாரும் உன்னைக் கேட்கவில்லை. (எனவே) உனது குணங்களுக்கு நிகரான ஒரு கணவனை நீயே தேடிக் கொள்! உன்னால் விரும்பப்படும் அந்த மனிதனை நீ எனக்குச் சொல். நீ விரும்பியவாறு உனது கணவனை நீ தேர்வு செய். நான் நன்கு ஆராய்ந்த பிறகு உன்னைக் {அவனுக்குக்} கொடுப்பேன். தேவர்களின் நிந்தனைக்கு உள்ளாகாதபடி நீ நடந்து கொள்ள வேண்டும்!" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இந்த வார்த்தைகளைத் தனது மகளுக்கும், தனது முதிர்ந்த ஆலோசகர்களுக்கும் {அமைச்சர்களுக்கும்} சொன்ன அவன் {அஸ்வபதி}, தனது பணியாட்களிடம் அவளைத் தொடர்ந்து போகும்படி "செல்லுங்கள்!" என்று சொன்னான். அதன்பேரில், நாணத்துடன் தனது தந்தையின் பாதங்களை வணங்கிய அந்தப் பணிவான பெண் {சாவித்ரி}, எந்தத் தயக்கமும் இன்றி, தனது தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க வெளியே சென்றாள். ஒரு தங்கத் தேரில் ஏறிய அவள் {சாவித்ரி}, அரச முனிகள் இருந்த ஒரு காண்பதற்கினிய ஆசிரமத்திற்கு, தனது தந்தையின் முதிர்ந்த அமைச்சர்களுடன் சென்றாள். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே முதிர்ந்தவர்களின் பாதங்களை வழிபட்ட அவள் {சாவித்ரி}, படிப்படியாகக் கானகமெங்கும் உலவ ஆரம்பித்தாள். இப்படி அந்த மன்னனின் {அஸ்வபதியின்} மகள் {சாவித்ரி} அனைத்து புனிதமான பகுதிகளிலும் செல்வத்தைத் தானமளித்து, இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களுக்குச் சொந்தமான பலதரப்பட்ட இடங்களுக்குச் சென்றாள்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்