Wednesday, October 01, 2014

சத்யவான் சாவித்ரி திருமணம்! - வனபர்வம் பகுதி 293

The nupital ceremony of Satyavan and Savitri!  | Vana Parva - Section 293 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

காட்டில் வாழ்ந்த சால்வ மன்னன் தியுமத்சேனனின் ஆசிரமத்திற்கு மத்ர மன்னன் அஸ்வபதி சென்று, சாவித்ரியைச் சத்தியவானுக்குக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி தன் நகருக்குத் திரும்பியது; சாவித்ரி நல்ல மருமகளாகவும், நல்ல மனைவியாகவும் சால்வ ராஜகுடும்பத்துக்கு மனநிறைவைக் கொடுத்தது...

"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தனது மகளின் {சாவித்ரியின்} திருமணம் குறித்த (நாரதரின்) வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்த மன்னன் {அஸ்வபதி}, {தனது மகள் சாவித்ரியின்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். முதிர்ந்த அந்தணர்களையும், புரோகிதர்களுடன் கூடிய ரித்விக்குகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு மங்களகரமான நாளில் தன் மகளுடன் கிளம்பினான். அந்தப் புனிதமான காட்டில் இருந்த தியுமத்சேனனின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் {அஸ்வபதி}, இருபிறப்பாளர்களை {பிராமணர்களைத்} துணைக்கு அழைத்துக் கொண்டு, {தேரில் இருந்து இறங்கி} நடந்து சென்று அந்த அரசமுனியை {தியுமத்சேனனை} அணுகினான். அங்கே அவன் {மன்னன் அஸ்வபதி} பெரும் ஞானம் கொண்ட அந்தக் குருட்டு ஏகாதிபதி {தியுமத்சேனன்}, ஓர் ஆச்சா {சால} மரத்தினடியில் பரப்பப்பட்ட, தர்ப்பை மெத்தையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த அரச முனியை {தியுமத்சேனனை} முறையாக வணங்கிய அந்த மன்னன் {அஸ்வபதி}, அடக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.


அதன்பேரில் அவனுக்கு ஆர்க்கியாவும், ஆசனமும், ஒரு பசுவும் கொடுத்த அந்த ஏகாதிபதி {தியுமத்சேனன்}, தன் அரசவிருந்தினனிடம் {அஸ்வபதியிடம்}, “உமது வருகைக்கான காரணம் யாது?” என்று வினவினான். இப்படிக் கேட்கப்பட்ட மன்னன் {அஸ்வபதி}, சத்யவான் குறித்த தனது நோக்கம் மற்றும் காரணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தினான். பிறகு அஸ்வபதி, “ஓ! அரச முனியே {தியுமத்சேனரே}, இந்த அழகிய பெண், சாவித்ரி என்ற பெயர் கொண்ட எனது மகளாவாள். ஓ! அறநெறிகள் அறிந்தவரே, நமது {க்ஷத்திரிய} வகைக்கான வழக்கங்களின் படி எற்புடையதைச் செய்து, என்னிடம் இருந்து இவளை உமது மருமகளாகப் பெற்றுக் கொள்ளும்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன் {அஸ்வபதியிடம்}, “நாட்டை இழந்து, காட்டை வசிப்பிடமாகக் கொண்டு, அறப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் நாங்கள் கட்டுப்பாடான வாழ்வுடன் துறவிகளாக வாழ்கிறோம். கானக வாழ்வுக்குத் தகாத உமது மகள் எப்படி இந்தக் காடுறை ஆசிரமத்தில் வாழ்ந்து {எதிர்வரும்} இன்னல்களைத் தாங்கிக் கொள்வாள்?” என்று கேட்டான் {தியுமத்சேனன்}.

அதற்கு அஸ்வபதி {தியுமத்சேனனிடம்}, “இன்பமும் துன்பமும் (நிலையற்றதாகிய அந்த இரண்டும்) வரும், போகும் என்பதை நானும், எனது மகளும் {சாவித்ரியும்} அறிந்திருக்கும்போது, இத்தகு வார்த்தைகளை என்னைப் போன்ற ஒருவனிடம் நீர் பயன்படுத்துவது தகாது! ஓ! மன்னா {தியுமத்சேனரே}, நான் மனதில் தீர்மானத்துடனே இங்கு வந்திருக்கிறேன். நட்பினால் நான் உம்மை வணங்கினேன்; எனவே, எனது நம்பிக்கையை அழிப்பது உமக்குத் தகாது! அன்பினால் உம்மிடம் வந்திருக்கும் என்னை அவமதிப்பதும் உமக்குத் தகாது! என்னுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள நீர் எனக்குச் சமமானவரும் தகுந்தவரும் ஆவீர். உண்மையில், நான் உம்மிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, உமக்குச் சமமானவனாகவும் தகுந்தவனாகவும் இருக்கிறேன். எனவே, எனது மகளை உமது மருமகளாகவும், நல்லவனான சத்யவானின் மனைவியாகவும் ஏற்றுக் கொள்ளும்" என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன் {அஸ்வபதியிடம்}, “முன்பொரு காலத்தில் நான் உம்மிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், அதைத் தொடர்ந்து நான் எனது நாட்டை இழந்ததால் {கேட்கத்} தயங்கினேன். எனவே, நான் முன்பே விரும்பிய உமது விருப்பம், இந்த நாளே நடக்கட்டும். உண்மையில், நீர் எனது விருந்தாளியாக வரவேற்கப்படுகிறீர்" என்றான்.

பிறகு, அந்தக் காட்டின் ஆசிரமங்களில் வசித்த அனைத்து இருபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்} அழைத்த அந்த இரு மன்னர்களும், முறையான சடங்குகளுடன் அந்த இணைப்பு விழாவை {திருமணத்தை} நடத்தினர். தகுந்த உடைகளுடனும், ஆபரணங்களுடனும் தனது மகளை {சாவித்ரியை} அளித்த அஸ்வபதி, பெரும் மகிழ்ச்சியுடன் தனது வசிப்பிடம் திரும்பினான். அனைத்து குணங்களையும் கொண்ட ஒரு மனைவியை அடைந்த சத்யவான், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தனது இதய விருப்பத்தின் படி கிடைத்த கணவனால் அவளும் {சாவித்ரியும்} பெருமகிழ்ச்சியடைந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} சென்ற பிறகு, தன் ஆபரணங்கள் அனைத்தையும் களைந்த அவள் {சாவித்ரி}, மரவுரியாலும், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட துணிகளையும் {காஷாய வஸ்திரங்களையும்} உடுத்திக் கொண்டாள்.

அவளது சேவைகளாலும், அறங்களாலும், அவளது மென்மையாலும், சுய மறுப்பாலும், அனைவருக்கும் ஏற்புடைய தனது செய்கைகளாலும் அவள் {சாவித்ரி} அனைவருக்கும் மனநிறைவைத் தந்தாள். ஆடைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து, தானே தனிப்பட்ட முறையில் தனது மாமியாரைக் கவனித்து, அவளை {தனது மாமியாரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். தனது பேச்சை அடக்கி, தனது மாமனாரையே தெய்வமாக வழிபட்டு அவரையும் {தியுமத்சேனனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தாள். தேன் போன்ற தனது பேச்சாலும், அனைத்து வகை வேலையிலும் தான் கொண்ட நிபுணத்துவத்தாலும், சமநிலை கொண்ட மனநிலையாலும், தனிமையில் தனது காதல் குறிப்புகளாலும் தனது கணவனை {சத்யவானை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். இப்படியே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பக்தி கொண்ட கானக வாசிகள், தங்கள் ஆசிரமத்தில் வாழ்ந்து, சில காலம் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், சாவித்ரியின் துன்பகரமான மனதில், இரவும் பகலும் நாரதரின் வார்த்தைகள்  ஒலித்துக்கொண்டே இருந்தன."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்