Thursday, October 02, 2014

சத்யவானைத் தொடர்ந்த சாவித்ரி! - வனபர்வம் பகுதி 294

Savitri followed Satyavan!  | Vana Parva - Section 294 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த தருவாயில், தனது தலைவனின் இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த சாவித்ரி மூன்று நாள் விரதமிருப்பது; நான்காவது நாளில் காட்டுக்குள் செல்ல கோடரியுடன் புறப்பட்ட கணவனிடம், தானும் வருவதாகச் சொல்வது; அவளது மாமனார், மாமியாரிடம் அனுமதி பெறுமாறு சத்யவான் சொல்வது; சத்யவானின் பெற்றோர் சாவித்ரி அவனுடன் செல்ல அனுமதிப்பது...


"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் என்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ! மன்னனின் மகளே {சாவித்ரி}, நீ நோற்கத் தொடங்கியிருக்கும் நோன்பு மிகவும் கடினமானது; தொடர்ச்சியாக மூன்று இரவுகள் {நாட்கள் என்றிருக்க வேண்டும்} உண்ணாதிருப்பது மிகவும் கடினமாகும்" என்றான் {தியுமத்சேனன்}.

[1] திரயோதசியில் ஆரம்பித்து, பிரதமையில் முடிக்கும் நோன்பு. திரிராத்ரா நோன்பினால், நோற்கும் பெண்ணுடைய கணவனின் வாழ்நாள் வளரும்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “தந்தையே {மாமனாரே தியுமத்சேனரே}}, நீர் வருந்தாதீர்! இந்த நோன்பை என்னால் நோற்க முடியும்! நிச்சயமாக நான் விடமுயற்சியுடன் இப்பணியை மேற்கொள்வேன். விடாமுயற்சியே நோன்பை வெற்றியுடன் முடிப்பதற்குக் காரணமாக இருக்கும்!" என்றாள். அவள் {சாவித்ரி} சொன்னதைக் கேட்ட தியுமத்சேனன், “விரதத்தைக் கைவிடு என்று, என்னால் ஒரு வகையிலும் சொல்லமுடியாது. மாறாக என்னைப் போன்ற ஒருவன், விரதத்தை நிறைவேற்று என்றே சொல்ல வேண்டும்" என்றான். இதை அவளிடம் சொன்ன உயர் ஆன்ம தியுமத்சேனன் {பிறகு} நிறுத்திக் கொண்டான். விரதத்தைத் தொடர்ந்த சாவித்ரி மரப்பொம்மையைப் போல (மெலிந்து) காணப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அவளது கணவன் நாளை இறந்துவிடுவான் என்று நினைத்துத் துயருற்றிருந்த சாவித்ரி, {நின்று கொண்டே} உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து, மிதமிஞ்சிய கவலையுடன் அந்த இரவைக் கழித்தாள்.

இரண்டு கை {இரண்டு முழ} உயரத்திற்குச் சூரியன் உதித்தெழுந்த போது, சாவித்ரி தனக்குள், “இன்றே அந்த நாள்" என்று நினைத்துக் கொண்டு, தனது காலைச் சடங்குகளை முடித்து, சுடர்விடும் நெருப்புக்கு காணிக்கைகளை அளித்தாள். முதிர்ந்த அந்தணர்களையும், தனது மாமனார், மாமியாரையும் வணங்கிய அவள் {சாவித்ரி}, அவர்கள் முன்னிலையில் கூப்பிய கரங்களுடன் புலன்களை ஒருமுகப்படுத்தினாள். ஆசிரமத்தில் தங்கியிருந்த துறவிகள் அனைவரும், சாவித்ரியின் நன்மையைக் கருதி, அவள் {சாவித்ரி} கைம்மை {விதவையாகி} துன்பம் அடையக்கூடாது என்ற மங்கல வாழ்த்துகளை உச்சரித்தனர். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த சாவித்ரி, துறவிகளின் அவ்வார்த்தைகளை "அப்படி ஆகட்டும்" என்று மனப்பூர்வமாக ஏற்றாள். நாரதரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த மன்னனின் மகள் {சாவித்ரி}, அந்தக் காலத்தையும், நேரத்தையும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, மனம் நிறைந்த அவளது மாமனாரும் மாமியாரும் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அந்த இளவரசியிடம், “குறித்த நோன்மை நீ முடித்துவிட்டாய். நீ உணவு உட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது; எனவே, எது சரியானதோ அதைச் செய்!” என்றனர். அதற்குச் சாவித்ரி, “எனது நோன்பை இப்போது முடித்துக் கொண்ட நான், சூரியன் கீழே இறங்கியதும் உண்பேன். இதுவும் எனது இதயத்தின் தீர்மானமே. இது எனது நோன்புமாகும்!” என்றாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது உணவைக் குறித்துச் சாவித்ரி பேசிய போது, சத்யவான், கோடரியை எடுத்துத் தோள்களில் இட்டு, காட்டுக்குப் புறப்பட்டான். அதன்பேரில் சாவித்ரி தனது கணவனிடம், “நீர் தனியாகச் செல்வது தகாது! நானும் உம்மோடு வருகிறேன். உம்மிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான், “இதற்கு முன்னர் நீ காட்டுக்குச் சென்றதில்லை. ஓ பெண்ணே {சாவித்ரி}, காட்டுப்பாதைகள் கடப்பதற்குக் கடினமானவையாகும்! மேலும் உனது நோன்பின் காரணமாக உண்ணாவிரதம் இருந்து நீ மெலிந்திருக்கிறாய். எனவே, நீ கால்களால் எவ்வாறு நடப்பாய்?” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி, “நான் விரதத்தின் தளர்வை உணரவில்லை; சோர்வையும் உணரவில்லை. {உம்முடன்} வருவதற்கு நான் எனது மனதைத் தயார் செய்து விட்டேன். எனவே, என்னைத் தடுப்பது உமக்குத் தகாது!” என்றாள். அதற்குச் சத்யவான், “நீ வருவதற்கு விரும்பினால், நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுவேன். எனினும், தவறு செய்துவிட்டதாக நான் குற்ற உணர்வுக்கு ஆளாகாதவாறு, நீ எனது பெற்றோரிடம் அனுமதி பெறு!” என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது தலைவனால் சொல்லப்பட்ட பெரும் நோன்புகள் நோன்ற சாவித்ரி, தனது மாமனாரையும், மாமியாரையும் வணங்கி, அவர்களிடம், “பழங்களைப் பெற எனது கணவர் காட்டுக்குச் செல்கிறார். எனது மரியாதைக்குரிய மாமியார் மற்றும் மாமனாரின் அனுமதியுடன் நான் அவருடன் செல்வேன். இன்று அவரிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் மகன் வேள்வி நெருப்புக்காவும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்காகவும் செல்கிறார். எனவே, உங்கள் அறிவுரையால் அவரை {தீர்மானத்தை} மாற்ற முடியாது. உண்மையில, வேறு எந்தக் காரியத்திற்காகவும் அவர் காட்டுச்சென்றால் அவருக்கு அறிவுரை கூறலாம். என்னைத் தடுக்காதீர்கள்! நான் அவருடன் {சத்யவானுடன்} காட்டுக்குள் செல்வேன். நான் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்று குறைந்தது ஒரு வருடம் ஆகிறது. உண்மையில், பூத்துக்குலுங்கும் வனத்தைக் காண நான் மிகவும் விரும்புகிறேன்!” என்றாள்.

சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன், “சாவித்ரி, அவளது தந்தையால், எனக்கு மருமளாக அளிக்கப்பட்டது முதல், எப்போதும் என்னிடம் தனக்கெனக் கோரும் வார்த்தைகளை என்னிடம் பேசியதாக எனக்கு நினைவில்லை. எனவே, எனது மருமகளின் விருப்பம் இக்காரியத்தில் நிறைவேறட்டும். எனினும், ஓ மகளே {சாவித்ரி}, சத்யவானின் வேலை புறக்கணிக்கப்படாத வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்!” என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இருவரின் அனுமதியையும் பெற்ற சிறப்புமிக்கச் சாவித்ரி, இதயத்தில் துன்பத்தால் வருந்தினாலும் புன்னகையுடன் தனது தலைவனுடன் சென்றாள். அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண், அழகிய காட்சிகளையும், மயில் கூட்டம் நிறைந்த கானகத்தையும் கண்டவாறே சென்று கொண்டிருந்தாள். சத்யவான், சாவித்ரியிடம் இனிமையாக, “புனித ஊற்றுகள் கொண்ட இந்த ஆறுகளையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அற்புத மரங்களையும் பார்!” என்றான். ஆனால், குற்றமற்ற அந்தச் சாவித்ரி, தனது தலைவனின் அனைத்து மனநிலைகளிலும் அவனைக் கவனித்தும், தெய்வீக தவசியின் {நாரதரின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்தும், தனது கணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினாள். இரண்டாகப் பிளந்த இதயத்துடன் இருந்த அந்த மங்கை {சாவித்ரி}, தனது தலைவனுக்கு மென்மையாகப் பதில் கூறி, அந்தக் காலத்தை {காலனை} எதிர்பார்த்து அவனைத் {சத்யவானைத்} தொடர்ந்து சென்றாள்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்