Thursday, October 09, 2014

குந்திபோஜன் குந்திக்கிட்ட கட்டளை! - வனபர்வம் பகுதி 301

The command of Kuntibhoja to Kunti!  | Vana Parva - Section 301 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

குந்திபோஜனிடம் சென்ற துர்வாசர்; துர்வாசரைத் தனது அரண்மனையில் வசிக்க வைத்த குந்திபோஜன்; குந்திக்கு குந்திபோஜனின் கட்டளை...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன? அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை? அந்தக் கவசம் என்ன வகை? அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன்! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.


பெரும் துறவுத்தகுதி கொண்ட அந்த மனிதர் மன்னன் குந்திபோஜனிடம், “ஓ கர்வமற்றவனே {குந்திபோஜா}, உணவை உன்னிடம் பிச்சையாகப் பெற்று, உனது இல்லத்தில் விருந்தினனாக வாழ விரும்புகிறேன்! உனது தொண்டர்களோ, நீயோ எப்போதும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்! ஓ! பாவமற்றவனே {குந்திபோஜா}, இதில் உனக்கு விருப்பமென்றால், நான் உனது இல்லத்தில் வாழ்வேன்! நான் விரும்பும் போது உனது இருப்பிடத்தில் இருந்து செல்வேன்; விரும்பும்போது திரும்பவும் வருவேன். ஓ! மன்னா {குந்திபோஜா}, எனது உணவிலோ, படுக்கையிலோ யாரும் எனக்குக் குற்றமிழைக்கக்கூடாது" என்றார்.

பிறகு குந்திபோஜன் அவரிடம் உற்சாகமான வார்த்தைகளால், “அப்படியே ஆகட்டும். இன்னும் சிறப்பாக ஆகட்டும்" என்றான். பிறகு அவன் அவரிடம் மீண்டும், “ஓ பெரும் ஞானியே, எனக்குப் பிருதை {குந்தி} என்ற பெயரில் சிறப்புவாய்ந்த மகளொருத்தி இருக்கிறாள். அவள், நோன்பு நோற்று, கற்பு, கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள், அற்புத குணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாள். அவள் உம்மைக் கவனித்துக் கொண்டு, உமக்குத் தேவையானதை மரியாதையுடன் செய்வாள். அவளது மனநிலையைக் கண்டு நீர் மகிழ்ச்சியடைவீர்!” என்றான். அந்த அந்தணரிடம் இப்படிச் சொல்லி, அவரை முறையாக விருந்தோம்பிய மன்னன் {குந்திபோஜன்}, அகன்ற கண்களுடைய தனது மகள் பிருதையிடம் சென்று, “ஓ குழந்தாய், பெரிய பக்திமானான இந்த அந்தணர் எனது இல்லத்தில் வசிக்க விரும்புகிறார். ஓ குழந்தாய், உனது தகுதி மற்றும் பணிவிடை செய்யும் திறன் ஆகியவற்றை நம்பி, அவரது கோரிக்கையை "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி நான் ஏற்றுக் கொண்டேன். எனவே எனது வார்த்தைகள் பொய்க்காதபடி நடந்து கொள்வதே உனக்குத் தகும். வேத கல்வியில் ஈடுபட்டு தவத்தகுதியைக் கொண்டிருக்கும் இந்த மரியாதைக்குரிய அந்தணர் என்ன கேட்டாலும் அதைச் சுறுசுறுப்பாகச் செய். இந்த அந்தணர் கேட்கும் எதுவும் உற்சாகத்துடன் கொடுக்கப்படட்டும். ஓர் அந்தணன் என்பவர் தலைமையான ஆற்றலுக்கு உருவகமாக உள்ளார். உயர்ந்த தவத்தகுதியின் உருவகமாகவும் அவர் உள்ளார். அந்தணர்களின் அறப்பயிற்சிகளின் தொடர்ச்சியாகவே வானத்தில் சூரியன் ஒளிர்கிறது. மரியாதைக்குத் தகுதியுடைய அந்தணர்கள் அவமதிக்கப்பட்டதாலேயே, பலமிக்க அசுரன் வாதாபியும், தாலஜங்கனும் அந்தண சாபத்தால் அழிக்கப்பட்டனர். ஓ குழந்தாய், தற்போது அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த அறம்சார்ந்தவரே உனது பராமரிப்பில் விடப்பட்டுள்ளார்.

நீ எப்போதும் இந்த அந்தணரைக் குவிந்த மனதுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓ மகளே {குந்தி}, அந்தணர்களையும், பெரியோர்களையும், உறவினர்களையும், பணியாட்களையும், நண்பர்களையும் உனது குழந்தைப்பருவத்தில் இருந்து நீ எப்படி உனது தாய்மாரைப் போலவும், என்னைப் போலவும் நினைத்துக் கவனித்து வருகிறாய் என்பதை நான் அறிவேன். உன்னை நீயே நன்று தாங்கிக் கொள்வாய் என்றும், அனைவருக்கும் சரியானதை அளிப்பாய் என்றும் நான் அறிவேன். ஓ குற்றமில்லா அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, எனது நகரத்திலும் அந்தப்புரத்திலும் உனது நடத்தையில் அதிருப்தி கொண்டோர் பணியாட்களுக்கு மத்தியில் கூட இருக்கமாட்டார்கள். எனவே, கோபக்கார அந்தணர்களுக்காகக் காத்திருப்பதற்கு நீயே தகுதியானவள் என்று நினைத்தேன்.

ஓ பிருதை, நீ ஒரு பெண். என்னால் மகளாக எடுத்து வளர்க்கப்பட்டு வருபவள். நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவள். நீ சூரனுக்குப் பிடித்தமான மகள். ஓ பெண்ணே {குந்தி}, உன்னை உனது தந்தை எனக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தார். பிறப்பால் வசுதேவனுக்குத் தங்கையான நீ எனது குழந்தைகளில் முதன்மையானவள் ஆவாய். “எனக்கு முதலில் பிறக்கும் குழந்தையைக் கொடுப்பேன்" என்று உறுதி கூறிய உனது தந்தை, நீ குழந்தையாக இருக்கும்போதே உன்னை என்னிடம் கொடுத்தார். அதன்காரணமாகவே நீ எனது மகளாக இருக்கிறாய். அத்தகு குலத்தில் பிறந்து, இத்தகு குலத்தில் வளர்க்கப்பட்ட நீ ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருந்து மறு மகிழ்ச்சியான நிலைக்கு வந்து ஒரு தாமரையில் இருந்து மறுதாமரைக்கு மாற்றப்பட்டவள் போல இருக்கிறாய்.

ஓ மங்களகரமான பெண்ணே, குறிப்பாக இழிந்த வகையில் பிறந்த பெண்களைச் சிரமத்துடன் பாதுகாத்தாலும், அவர்களது முதிராத வயதின் தொடர்ச்சியாக நடத்தை கெடுகிறார்கள். ஆனால், ஓ பிருதை, நீ அரச குலத்தில் பிறந்து, அழகால் இயல்புக்குமிக்க நிலையில் இருக்கிறாய். ஓ பெண்ணெ, மேலும் நீ அனைத்தையும் கொண்டிருக்கிறாய். எனவே, ஓ மங்கையே, பெருமை, கர்வம், சுயமுக்கியத்துவம்ஆகிய உணர்வுகளைக் கைவிட்டு, வரமளிக்கும் அந்தணரை வழிபட்டு அவருக்காகக் காத்திருந்து, அதனால், ஓ பிருதை மங்களகரமான நிலையை அடைவாயாக! ஓ மங்களகரமான பாவமற்ற பெண்ணே, அப்படி நடந்து கொண்டால், நீ நிச்சயம் மங்களகரமான நிலையை அடைவாய்! ஆனால் மாறாக, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் கோபத்தைத் தூண்டினாலோ, எனது மொத்த குலமும் அவரால் எரிக்கப்படும்!” என்றான் குந்திபோஜன்.



இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்