Sunday, November 02, 2014

கிரந்திகனான நகுலன்! - விராட பர்வம் பகுதி 12

Nakula as Granthika! | Virata Parva - Section 12 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 12)


இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : நகுலன் விராடன் சந்திப்பு; நகுலனை தனது குதிரைகளின் காப்பாளராக மன்னன் விராடன் நியமிப்பது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சிறிது நேரம் கழித்து, பாண்டுவின் மற்றொரு பலமிக்க மகன் {நகுலன்} மன்னன் விராடனிடம் விரைவாகச் சென்ற காட்சி காணப்பட்டது. அவன் {நகுலன்} அப்படி முன்னேறிச் செல்கையில் மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போல அனைவருக்கும் தெரிந்தான். அவன் {நகுலன்} சுற்றிலும் இருந்த குதிரைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} தனது தொண்டர்களிடம், “தேவனைப் போன்ற பிரகாசமிக்க அந்த மனிதன் எங்கிருந்து வந்தான், என்று அதிசயிக்கிறேன். அவன் எனது குதிரைகளைக் கவனமாக நோக்குகிறான். நிச்சயமாக அவன் குதிரை சாத்திரங்களில் கைதேர்ந்தவனாக இருக்க வேண்டும். விரைவில் அவனை எனது முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள். அவன் போர்வீரனாகவும் தேவனாகவும் தெரிகிறான்!” என்றான் {விராடன்}. அந்த எதிரிகளை அழிப்பவன் {நகுலன்} மன்னனிடம் {விராடனிடம்} சென்று, “ஓ! மன்னா {விராடரே}, வெற்றி உமதாகட்டும். நீர் அருளப்பட்டிரும். குதிரை பயிற்சியாளராக, நான் எப்போதும் மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கிறேன். நான் உமது குதிரைகளைப் புத்திசாலித்தனமாகப் பாதுகாப்பேன்" என்றான் {நகுலன்}.


விராடன் {நகுலனிடம்}, “நான் உனக்கு வாகனங்களையும், செல்வத்தையும், பரந்த இடங்களையும் கொடுப்பேன். நீ எனது குதிரைகளைப் பார்க்கும் மேலாளராவாய். ஆனால் முதலில் நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்? நீ எப்படி இங்கு வந்தாய்? என்பனவற்றைச் சொல். நீ நிபுணத்துவம் கொண்ட கலைகள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்" என்று கேட்டான் {விராடன்}. அதற்கு நகுலன் {விராடனிடம்}, “ஓ! எதிரிகளைச் சிதைப்பவரே {விராடரே}, பாண்டு மகன்கள் ஐவரில் யுதிஷ்டிரரே மூத்த அண்ணன் என்பதை அறிந்து கொள்ளும். முன்பு நான் அவரால் {யுதிஷ்டிரரால்} குதிரை பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருந்தேன். குதிரைகளின் குணங்களை நான் நன்கு அறிவேன். அவற்றை உடைக்கும் கலையை முறையாக நான் அறிவேன். தீய குதிரைகளைச் சரி செய்வது எப்படி என்பதையும், அவற்றின் நோய்களைத் தீர்க்கும் முறைகளையும் நான் அறிவேன். என் கைகளில் இருக்கும் எந்த விலங்கையும் பலவீனமோ நோயோ அண்டாது. குதிரைகளைப் பற்றிப் பேச வேண்டாம்; என் கைகளில் இருக்கும் பெண்குதிரைகள் கூடத் தீயதாக அறியப்படாது. மக்கள் என்னைக் கிரந்திகன் {Granthika}என்ற பெயரில் அழைத்தார்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரும் என்னை அப்படியே அழைத்தார்" என்றான் {நகுலன்}.

விராடன் {நகுலனிடம்}, “நான் கொண்டிருக்கும் குதிரைகள் அனைத்தும் இன்றிலிருந்து உனக்கு அளிக்கப்படுகின்றன. குதிரைகளைக் காப்பவர்கள் அனைவரும், எனது தேரோட்டிகள் அனைவரும் இன்றிலிருந்து உனக்குத் துணைவர்களாக இருப்பார்கள். இது உனக்குத் தகுந்ததாக இருந்தால், நீ என்ன ஊதியம் விரும்புகிறாய் என்பதைச் சொல். ஆனால், ஓ! தேவனைப் போன்றிருப்பவனே {கிரந்திகா}, குதிரை அதிகாரியின் அலுவல் உனக்குத் தகாது. நீ மன்னனைப் போலத் தெரிகிறாய். நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். யுதிஷ்டிரனே இங்கு இருப்பது போல உனது தோற்றம் என்னை மகிழச் செய்கிறது. இகழத்தகாத அவன் {யுதிஷ்டிரன்} பணியாட்கள் இல்லாமல் காட்டில் வசித்து எப்படி உலவிக் கொண்டிருக்கிறானோ" என்றான் {விராடன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கந்தர்வர்கள் தலைவனைப் போல இருந்த அந்த இளைஞன் {{Granthika - கிரந்திகனான நகுலன்}, மகிழ்ச்சி நிறைந்த மன்னன் விராடனால் இப்படியே மரியாதையுடன் நடத்தப்பட்டான். யார் காட்சி கிடைத்தால் எந்தக் காரியமும் கனியற்றது ஆகாதோ {பலனற்றது ஆகாதோ} அந்தப் பாண்டுவின் மகன்கள், இந்த வகையில் தான் மத்ஸ்யர்களின் நாட்டில் வாழ்ந்தனர்.
*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின் தலைவர்கள் {பாண்டவர்கள்}, வருந்தத்தக்க துன்பங்கள் ஒருபுறமிருப்பினும் தங்கள் உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருந்து, தங்கள் மறைநிலை நாட்களைப் பெரும் அமைதியுடன் கழித்தார்கள்.{என்றார் வைசம்பாயனர்}.

*********பாண்டவ பிரவேச பர்வம் முற்றிற்று*********

*********************************************************************************
குறிப்பு:
*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின்..........

இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம். வியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையே அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம். 

தற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில... இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்