Friday, November 07, 2014

பீமசேனரே, மரித்தவர் போல் ஏன் கிடக்கிறீர்? - விராட பர்வம் பகுதி 17

Bhimasena, Why dost thou lie down as one dead? | Virata Parva - Section 17 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 4)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: சுதேஷ்ணையிடம் இருந்து விடைபெற்ற திரௌபதி, தனது இருப்பிடம் செல்வது; துன்பத்தில் இருந்த அவள் இரவில் எழுந்து, பீமன் இருந்த மடைப்பள்ளிக்குச் சென்றது; அங்கே தூங்கிக் கொண்டிருந்த பீமனை எழுப்பியது; திரௌபதி தன்னை எழுப்பிய காரணத்தைப் பீமன் கேட்பது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதனின் மகனால் {கீசகனால்} இப்படி அவமதிக்கப்பட்ட சிறப்புமிக்க இளவரசியான அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, விராடனுடைய தளபதியின் {கீசகனின்} அழிவை ஆவலோடு விரும்பி, தனது இருப்பிடத்திற்குச் சென்றாள். பிறகு, கரிய நிறமும், கொடியிடையும் கொண்ட அந்தத் துருபதன் மகள் {திரௌபதி}, தன்னை {முறைப்படி} சுத்தம் செய்து கொண்டாள். தனது உடலையும், ஆடைகளையும் நீரால் கழுவிய கிருஷ்ணை {திரௌபதி}, தனது வருத்தத்தை அகற்றும் வழிவகைகளை அழுது கொண்டே சிந்திக்கத் தொடங்கினாள். அவள் தனக்குள்ளேயே, "நான் என்ன செய்ய வேண்டும்? நான் எங்கே செல்வது? எனது நோக்கத்தை எப்படி நினைவேற்றுவது?" என்று நினைத்தாள். அப்படி அவள் {திரௌபதி} சிந்தித்துக் கொண்டிருந்த போதே, பீமனை நினைவு கூர்ந்த அவள், "எனது இதயத்தில் இருக்கும் நோக்கத்தை இன்று நிறைவேற்றக்கூடியவர், பீமரைத் தவிர வேறு எவரும் இல்லை" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

பெரும் துயரத்தால் பாதிக்கப்பட்டவளும், வலிமைமிக்கப் பாதுகாவலர்களை {பாண்டவர்களைக்} கொண்டவளும், அகன்ற கண்களையுடையவளுமான புத்திசாலி கிருஷ்ணை {திரௌபதி}, இரவில் எழுந்து, தனது படுக்கையைவிட்டு அகன்று, தனது தலைவனைக் காண விரும்பி, பீமசேனன் இருக்கும் இடம் நோக்கி வேகமாகச் சென்றாள். அறிவுக்கூர்மை கொண்ட அந்தத் துருபதனின் மகள் {திரௌபதி}, "இன்று இதை (குற்றச்செயலை) இழைத்த பிறகும், எனது எதிரியான விராடப்படையின் இழிந்த தளபதி {கீசகன்} வாழ்கிறானே! எப்படி உம்மால் தூங்க முடிகிறது?" என்று சொல்லிக்கொண்டே தனது கணவன் இருக்கும் இடத்திற்குள் நுழைந்தாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிம்மத்தைப் போலக் கடினமாக மூச்சுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பீமன் இருந்த கூடம் {Chamber}, துருபதன் மகளின் {திரௌபதியின்} அழகால் நிறைந்து, உயர் ஆன்ம பீமனால் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இனிய புன்னகை கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை மடைப்பள்ளியில் {சமையலறையில் - in cooking apartment} கண்டு, காட்டில் வளர்ந்த மூன்று வயதுள்ள ஒரு பசு, தனது முதல் பருவகாலத்தில், வலிமைமிக்கக் காளையை அணுகுவது போலவோ, நீர்நிலைக்கு அருகே வாழும் பெண் கொக்கு இணைசேரும் காலத்தில் தனது துணையை அணுகுவது போலவோ அவனை {பீமனை} அணுகினாள்.

கோமதி நதிக்கரையில் பெரிதாக வளர்ந்திருக்கிற ஓர் ஆச்சா மரத்தை ஒரு கொடி அணைத்துக் கொள்வதைப் போல, பாஞ்சால இளவரசி {திரௌபதி} பாண்டுவின் இரண்டாவது மகனை {பீமனை} அணைத்துக் கொண்டாள். தனது கரங்களால் அவனை {பீமனை} அணைத்துக் கொண்ட களங்கமற்ற குணங்கள் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, பாதைகளற்ற வனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சிம்மத்தை எழுப்பும் பெண் சிங்கத்தைப் போல அவனை {பீமனை} எழுப்பினாள். வலிமைமிக்கத் தனது பெரும் இணையை அணைத்துக் கொள்ளும் பெண் யானையைப் போல, பீமசேனனை அணைத்துக் கொண்ட களங்கமற்ற பாஞ்சாலி, தந்தி வாத்தியத்தின் காந்தாரவொலி போன்ற இனிய குரலில் அவனிடம் {பீமனிடம்} பேசினாள். அவள் {திரௌபதி}, “எழும், எழும்! ஓ! பீமசேனரே, மரித்தவர் போல ஏன் கிடக்கிறீர்? இறக்காதவன், தனது மனைவியை அவமதித்த இழிந்த பாவி வாழ நிச்சயம் பொறுக்கமாட்டான்” என்றாள் {திரௌபதி}.

அந்த இளவரசியால் {திரௌபதியால்} எழுப்பப்பட்ட பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமன், எழுந்திருந்து, அந்த ஆடம்பர படுக்கையில் விரிக்கப்பட்டிருந்து மெத்தையில் அமர்ந்தான். பிறகு அந்தக் குரு குலத்தவன் {பீமன்}, தனது அன்புக்குரிய மனைவியான அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்}, “என்ன நோக்கத்திற்காக, நீ இவ்வளவு அவசரமாக இங்கே வந்தாய்? உனது நிறம் போய்விட்டதே {மங்கிவிட்டதே}. மெலிந்து வெளிறிப்போயல்லவா காணப்பப்படுகிறாய்! அனைத்தையும் விவரமாகச் சொல். மகிழ்ச்சிகரமானதோ, வலிநிறைந்ததோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ, அஃது எதுவாக இருப்பினும் அனைத்தையும் என்னிடம் சொல். நான் உண்மையை அறிய வேண்டும். அனைத்தையும் கேட்ட பிறகு, நான் தீர்வை ஏற்படுத்துவேன். ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, நானே உன்னை அபாயத்தில் இருந்து மீண்டும் மீண்டும் காக்கிறேன். எனவே, அனைத்து வகையிலும் உனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நானே. உனது விருப்பம் என்னவென்பதையும், நீ கருத்தில் கொண்டிருக்கும் நோக்கம் என்னவென்பதையும் என்னிடம் விரைவாகச் சொல்லி, பிறர் விழிக்கும் முன்னே உனது படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக” என்றான் {பீமன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்