Sunday, November 09, 2014

பீமனிடம் புலம்பிய திரௌபதி! - விராட பர்வம் பகுதி 18

Draupadi’s lament to Bhima | Virata Parva - Section 18 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 5)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் திரௌபதி புலம்புவது…

திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “யுதிஷ்டிரரைக் கணவனாகக் கொண்டவள் என்ன துயரத்தைத்தான் அடையமாட்டாள்? எனது துயரங்களனைத்தையும் அறிந்தும், ஏன் என்னிடம் கேட்கிறீர்? “அடிமையே” என்று அழைத்து, கூடியிருந்த சபை உறுப்பினர்களுக்கு மத்தியில் என்னைப் பிராதிகாமின் [1] இழுத்துச் சென்றான். ஓ! பாரதா {பீமரே}, என்னை அத்துயரம் {இன்னும்} எரித்துக் கொண்டிருக்கிறது. திரௌபதியைத் தவிர வேறு எந்த இளவரசி இத்தகு கடுந்துன்பங்களை அனுபவிப்பாள்? காட்டில் வசித்து வந்த போது, தீய சைந்தவனால் {ஜெயத்ரதனால்} இரண்டாம் முறையும் அவமானப்படுவதை, என்னைத் தவிர வேறு எவரால் தாங்கிக் கொள்ள முடியும்? மத்ஸ்யர்களின் தீய மன்னன் {விராடன்} கண்ணெதிரிலேயே, கீசகனால் உதைக்கப்பட்டும், எனது தகுதிக்குத் தக்கவர்களில் என்னைத்தவிர வேறு யாரால் உயிரோடு இருக்க முடியும்?


[1] சபா பர்வம் பகுதி 66ல் இக்கதை வருகிறது. ஆனால் அங்கே துச்சாசனனே திரௌபதியை இழுக்கின்றான். இங்கே திரௌபதி சொல்வது பிராதிகாமினை! திரௌபதி சொல்வது முரணா? அல்லது சபாபர்வத்தின் அந்தப் பகுதியில் இடையில் ஏதாவது விடுபட்டுள்ளதா என்பது தெரியவில்லை. கங்குலியின் படைப்பை முன்வைத்து மட்டுமே இதைச் சொல்கிறேன்.

ஓ! பாரதா {பீமரே}, ஓ! குந்தியின் மகனே {பீமரே}, இத்தகு துயரங்களில் நான் பாதிக்கப்பட்டாலும், நான் துயரத்தில் இல்லை என நீர் நினைத்தால் எனது உயிருக்குத்தான் என்ன மதிப்பிருக்கிறது? ஓ! பாரதா {பீமரே}, மன்னன் விராடனுக்கு மைத்துனனும், அவனது படைகளுக்குத் தளபதியும், இழிந்தவனும், கீசகன் என்ற பெயரில் அறியப்படுபவனுமான பொல்லாத பாதகன், ஓ! மனிதர்களில் புலியே {பீமரே}, அரண்மனையில் சைரந்திரியாக வசித்துவரும் என்னிடம், “நீ எனது மனைவி ஆவாயாக” என்று கோருகிறான். ஓ எதிரிகளைக் கொல்பவரே {பீமரே}, கொல்லத்தக்க அந்த இழிந்தவனால் {கீசகனால்} இப்படிக் கேட்கப்படும் போது, பருவத்தால் முதிர்ந்த பழம் வெடிப்பது போல, எனது இதயம் வெடிக்கிறது.

மோசமானப் பகடைக்கு அடிமையான உமது அண்ணனை {யுதிஷ்டிரரைக்} கண்டிப்பீராக! அவரது செய்கையின் விளைவாக மட்டுமே நான் இத்தகு துன்பத்தை அனுபவிக்கிறேன். அவரைத்தவிர வேறு எந்தத் தீவிரச் சூதாடி, நாட்டையும், தன்னுடன் கூடிய அனைத்தையும் கைவிட்டு, காட்டில் வாழும்படி, விளையாடுவான்? ஆயிரக்கணக்கில் நிஷ்கங்களையும் {தங்கம்}, கணிசமான மற்ற வகைச் செல்வங்களையும் காலையும் மாலையும் எனப் பலவருடங்கள் சேர்ந்தாற்போல, பந்தயமாக வைத்துச் சூதாடினாலும், அவரது {அவர் கொண்டிருந்த} வெள்ளியும், தங்கமும், ஆடைகளும், வாகனங்களும், அணிகளும், வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும், திரளான குதிரைகளும், கோவேறு கழுதைகளும் எவ்விதத்திலும் குறைந்திருக்காதே. ஆனால், இப்போதோ பகடைப்பகைமையின் மூலம் செழிப்பிழந்து, தனது சொந்தத் தவறுகளை நினைத்துக் கொண்டே மூடனைப் போல ஊமையாய் அமர்ந்திருக்கிறாரே. ஐயோ, யார் செல்லும்போது, தங்க மாலைகள் பூண்ட பத்தாயிரம் யானைகள் பின் தொடருமோ, அப்படிப்பட்டவர் இன்று பகடை வீசி தன்னைத் தாங்கிக் கொள்கிறாரே.

எவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தபோது, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட மன்னர்களால் புகழப்பட்டாரோ அந்த யுதிஷ்டிரர்; எவருடைய மடைப்பள்ளியில் {சமையலறையில்} ஒரு லட்சம் {1,00,000} பணிப்பெண்கள், கையில் தட்டுகளுடன், இரவும் பகலும் எண்ணிலடங்கா விருந்தினருக்கு உணவு படைத்தனரோ அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரர்}; (தினமும்) எவர் ஆயிரம் நிக்ஷங்கள் தானமளித்தாரோ அந்தத் தாராளவாதிகளில் சிறந்தவர் {யுதிஷ்டிரர்}; ஐயோ, தீமைக்கு வேரான சூதாட்டத்தின் விளைவாக, துன்பத்தில் மூழ்கி, இப்போது பகடை வீசி தன்னைத் தாங்கிக் கொள்கிறாரே!

பிரகாசமான ரத்தினங்கள் மின்னும், காது வளையங்களைப் பூண்டவர்களும், இனிமையான குரலைக் கொடையாகக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான புலவர்களும், துதிபாடிகளும், காலையிலும், மாலையிலும் அவரை {யுதிஷ்டிரரை} வணங்குவார்கள். ஐயோ, தவத்தகுதி படைத்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான ஆயிரம் தவசிகள் சபை உறுப்பினர்களாக இருந்து யாருக்காகத் தினமும் காத்திருந்தனரோ அந்த யுதிஷ்டிரர்; எண்பத்தெட்டாயிரம் {88,000} இல்லற ஸ்நாதகர்களையும், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நியமிக்கப்பட்டிருந்த முப்பது பெண் பணியாட்களையும், எந்தக் கொடையும் பெறாது, தங்கள் உயிர்வித்தை உயர் நோக்கச் செய்யும் பத்தாயிரம் யதிகளையும் பராமரித்த அந்த யுதிஷ்டிரர்; ஐயோ, அப்படிப்பட்ட வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரர்} இன்று மாறுவேடத்தில் வாழ்கிறாரே.

கருணை நிறைந்தவரும், ஒவ்வொரு உயிரினத்துக்கும் முறையாகக் கொடுப்பவரும், அற்புத குணங்களைக் கொண்டவரும், கெடுநோக்குகள் ஏதுமற்றவருமான அந்த யுதிஷ்டிரர், ஐயோ, இப்படி மாறுவேடத்தில் வாழ்கிறாரே. உறுதியும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமமும், அனைத்துயிருக்கும் முறையாகக் கொடுக்கும் குணம் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரர், இரக்கம் கொண்டு, தன் நாட்டில் வாழ்ந்த குருடர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், பெற்றோரற்றவர்கள் மற்றும் ஆட்சிகுட்பட்ட ஏனைய பிறரையும் இது போன்ற துயரங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பராமரித்தாரே. ஐயோ, அந்த யுதிஷ்டிர், மத்ஸ்யனைச் {விராடனைச்} சார்ந்து, அவனுக்குப் பணியாளாகி, அவனது சபையில் பகடை வீசுபவராகி, இப்போது தன்னைக் கங்கன் என்று அழைத்துக் கொள்கிறாரே.

இந்திரப்பிரஸ்தத்தில் வசித்துவந்தபோது, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்திற்குத் தக்க யாரிடம் கப்பம் கட்டுவார்களோ, ஐயோ அப்படிப்பட்டவர் வாழ்வாதாரத்திற்காக அடுத்தவர் கரங்களில் இப்போது பிச்சை எடுக்கிறாரே. யாரை அண்டி பூமியின் மன்னர்கள் இருந்தனரோ, ஐயோ, அந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, தனது சுதந்திரத்தை இழந்து, அடுத்தவரை அண்டி வாழ்கிறாரே. தனது சக்தியால் சூரியனைப் போல முழு உலகத்தையும் பளிச்சிட வைத்த அந்த யுதிஷ்டிரர், ஐயோ, இப்போது மன்னன் விராடனுக்குச் சபை உறுப்பினராக இருக்கிறாரே.

ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, மன்னர்களாலும், துறவிகளாலும் தாங்கப்பட்ட மரியாதைக்குரிய அந்தப் பாண்டவர் {யுதிஷ்டிரர்}, வேறொருவருக்காகக் காத்திருப்பதைப் {சேவகம் செய்வதைப்} பாரும்.

ஐயோ, அடுத்தவர் பக்கத்தில் உட்கார்ந்து, அடுத்தவரிடம் பல்லைக் காட்டிப் பேசும் சபை உறுப்பினராக யுதிஷ்டிரரைக் கண்டு வருத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு யாரால் உதவ முடியும்? வாழ்வாதாரத்திற்காக அடுத்தவரை அண்டி வாழும் உயர்ந்த விவேகியும், அறம் சார்ந்தவருமான யுதிஷ்டிரரைக் கண்டு வருத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு யாரால் உதவ முடியும்? உண்மையில், ஓ! வீரரே {பீமரே}, சபையில், முழுப் பூமியாலும் வழிபடப்பட்டவர், அடுத்தவரை வழிபடுவதைப் பாரும். ஓ! பாரதா {பீமரே}, கேவலமானவளைப் போல, துன்பக்கடலில் மூழ்கி, பல்வேறு கவலைகளால் பாதிக்கப்பட்டவளாக என்னை ஏன் கருதாமல் இருக்கிறீர்?” என்று கேட்டாள் {திரௌபதி}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்