Sunday, December 21, 2014

அம்பறாத்தூணி தீர்ந்த அஸ்வத்தாமன்! - விராட பர்வம் பகுதி 59

Aswatthama’s quiver exhausted! | Virata Parva - Section 59 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 34)






பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! வலிமைமிக்க மன்னா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அர்ஜுனனுடன் மோதினான். கணைகளை மழையெனப் பொழிந்து, மோதலுக்கு விரைந்து வந்த அவனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, கணைகளின் மேகத்தால் அவனை {அஸ்வத்தாமனை} வரவேற்றான். தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று, அந்த மோதல், பயங்கரமாக இருந்தது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருத்திரனையும் வாசவனையும் {இந்திரனையும்} போலக் கணைகளை அடித்துக் கொண்டனர். கணைகளைக் கொண்டு ஆகாய விரிவின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்து, சூரியனை முழுமையாக மறைத்து, காற்றே நின்று போகும்படி போரிட்டனர்.


ஓ! எதிரி நகரங்களை வெல்பவனே {ஜனமேஜயா}, அப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்களில் எழுவது போல உரத்த ஒலிகள் அங்கே எழுந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அஸ்வத்தாமனின் குதிரைகள் குழப்பத்தில் ஆழ்ந்து, எந்தத் திக்கில் செல்ல வேண்டும் என்பதில் நிலை குலைந்து நின்றன. அப்படிப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} களத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, துரோணரின் பலமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டுபிடித்து, குதிரை லாடத்தின் உருவிலான ஒரு கணையால், காண்டீவத்தின் நாணை அறுத்தான். அந்த இயல்புக்குமிக்கச் சாதனையைக் கண்ட தேவர்கள் அவனை {அஸ்வத்தாமனை} உயர்வாகப் புகழ்ந்தனர்.

“நன்று செய்தாய்! நன்று செய்தாய்!” என்று ஆச்சரியப்பட்ட துரோணர், பீஷ்மர், கர்ணன், வலிமைமிக்க வீரரான கிருபர் ஆகிய அனைவரும் அவனது அந்தச் சாதனையைப் பெரிதும் பாராட்டினர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தனது அற்புதமான வில்லை வளைத்து, கங்கப்பறவையின் இறகுகளைக் கொண்ட கணைகளால், வீரர்களில் காளையான பார்த்தனின் {அர்ஜுனனின்} மார்பில் அடித்தான். அதன் பேரில், உரக்கச் சிரித்த, வலிமையான கரங்களைக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் புதிய வலிமையான நாணைப் பொருத்தினான். பிறகு, பிறைச்சந்திரனை ஒத்திருந்த தனது நெற்றியில் இருந்த வியர்வையால், தனது வில்லின் நாணை ஈரப்படுத்திய பிருதையின் மகன் {அர்ஜுனன்}, யானைகள் மந்தையின் சீற்றமிகு தலைவன் மற்றொரு யானையை நோக்கி விரைவதைப் போலத் தனது எதிரியை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்த ஒப்பற்ற இரு வீரர்களுக்கிடையில் நடந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அதைக் கண்டவர்களுக்கு அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இரு வலிமைமிக்க யானைகள் போல, அந்த இரு வீரர்களும் போரிட்டபோது, குருக்கள் {கௌரவர்கள்}, அதை ஆச்சரியத்துடன் கண்டனர். மனிதர்களில் வீரமிக்கக் காளைகளான அவர்கள், பாம்பு மற்றும் சுடர் மிகும் நெருப்பைப் போன்ற வடிவங்களிலான கணைகளைக் கொண்டு, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாண்டவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமான அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாக இருந்ததால், அவ்வீரன் {அர்ஜுனன்} அசையாத மலையென அந்தப் போர்க்களத்தில் நின்றான். அந்த மோதலில் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்ததின் விளைவாக அஸ்வத்தாமனின் கணைகள் விரைவாகத் தீர்ந்தன. இதனாலேயே அர்ஜுனன், தனது எதிரியை {அஸ்வத்தாமனை} வெற்றிக் கொண்டான்.

பிறகு, தனது பெரிய வில்லை எடுத்து கர்ணன் நாணொலி எழுப்பினான். அப்போது, அங்கே, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஆச்சரிய ஒலிகள் எழுந்தன. வில்லின் நாண் சுண்டப்பட்ட இடத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் முன்னே ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டான். அந்தக் காட்சியால் அவனது கோபம் பெரிதும் தூண்டப்பட்டது. சினமும், கர்ணனைக் கொல்லும் விருப்பமும் தூண்டப்பட்ட அந்தக் குரு குலத்தின் காளை {அர்ஜுனன்}, நிலைத்த பார்வையுடனும், உருளும் கண்களுடனும், அவனை {கர்ணனை} வெறித்துப் பார்த்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமனிடம் இருந்து திரும்புவதைக் கண்ட குரு {கௌரவ} வீரர்கள், அவன் {அர்ஜுனன்} மீது ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தனர். அந்த எதிரிகளைக் கொல்பவனான வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விட்டுவிட்டு, திடீரெனக் கர்ணனை நோக்கி விரைந்தான். கோபத்தால் கண்கள் சிவக்க, கர்ணனை நோக்கி விரைந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அவனுடன் தன்னந்தனியாக {ஒற்றைக்கு ஒற்றையாகப்} போரிட விரும்பி, இந்த வார்த்தைகளைச் சென்னான்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்