Sunday, December 21, 2014

வடதிசை நோக்கி ஓடிய கர்ணன்! - விராட பர்வம் பகுதி 60

Karna fled in a northernly direction! | Virata Parva - Section 60 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 35)






பதிவின் சுருக்கம் : கர்ணனுக்குச் சவால் விட்ட அர்ஜுனன்; அர்ஜுனனை இகழ்ந்த கர்ணன்; ஏற்கனவே கர்ணன் தன்னிடம் இருந்து தப்பி ஓடியதைச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; அர்ஜுனன் கர்ணனின் மார்பைத் துளைத்தது; கர்ணன் போர்க்களத்தை விட்டு வடதிசை நோக்கி ஓடி மீண்டும் புறமுதுகிடுவது...

அர்ஜுனன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, போரில் உனக்குச் சமமான எவனும் இல்லை என்று சபா மண்டபத்தின் மத்தியில் நீ பேசிய இறுமாப்பான பேச்சுக்கு நல்லது செய்யும் நேரம் {இதோ} வந்துவிட்டது. இன்று, ஓ! கர்ணா, என்னிடம் நீ மோதப் போகும் இந்தப் பயங்கர மோதலால், உனது சொந்த பலத்தை நீ அறிந்து கொள்வாய்; இதற்கு மேலும் யாரையும் நீ அவமதிக்கமாட்டாய். நற்பிறப்பைத் துறந்து, நீ பல கொடுஞ்சொற்களைப் பேசியிருக்கிறாய். ஆனால், இப்போது நீ செய்ய முயலும் இது, மிகக் கடுமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, குருக்களின் {கௌரவர்களின்} பார்வையில் என்னிடம் மோதும் நீ, இதற்கு முன் என்னை அவமதித்ததற்கு நல்லது செய்வாயாக. {அந்த வார்த்தைகளை உண்மையென நிரூபிப்பாயாக}.


சபையின் நடுவில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} தீயவர்களின் அட்டூழியத்திற்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டாயே, {நீயும் அதற்கொரு காரணமாய் இருந்தாயே}, அந்த உனது செயலுக்கான கனியை {பலனை} இப்போது அறுவடை செய்வாயாக. முன்பு, அறநெறியின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததால், அப்போது நான் பழிவாங்கவில்லை. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அந்தக் கோபத்தின் கனியை நடக்கப் போகும் இம்மோதலில் இப்போது நீ காண்பாய். ஓ! தீயவனே {கர்ணனே}, அந்தக் காட்டில் முழுப் பனிரெண்டு {12} வருடங்களும் பெருந்துன்பத்தை நாங்கள் அனுபவித்தோம். நீ இன்று அந்தச் செறிவூட்டப்பட்ட பழியுணர்வின் {concentrated vengeance} கனிகளை {பலன்கள்} அறுவடை செய்வாயாக. வா, ஓ! கர்ணா, வந்து போரில் என்னைச் சமாளி. இந்தக் கௌரவ வீரர்கள் இம்மோதலைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொற்களால் நீ சொல்வதையெல்லாம் செயலால் சாதிப்பாயாக. நீ சாதிக்கும் செயலைவிட நீ அதிகமாகப் பேசுவாய் என்பதை இவ்வுலகம் அறியும். உனது இயலாமையின் காரணமாக எதையும் செய்ய முடியாத நிலையிலேயே நீ முன்பு பொறுமையாக இருந்தாய். இப்போதாவது உனது பராக்கிரமத்தை சாட்சியாக நாங்கள் கண்டால், அக்கூற்று உண்மை என நாங்கள் அங்கீகரிக்கூடும். அறநெறிக்கு நீ கட்டுப்பட்டதால் கடந்த காலத்தில் {பழிதீர்க்காமல்} பொறுத்தாயென்றால், {அக்கட்டில் இருந்து} விடுபட்டவன் என்று உன்னை நீயே நினைத்துக் கொண்டாலும், இப்போதும் அதற்குச் சமமாகக் கட்டுப்பட்டே இருக்கிறாய். நீ சொன்னவாறே, உனது வாக்குறுதியின்படி கடும் விதிமுறைகளுடன் உனது வனவாசத்தை நீ கழித்திருந்தாலும், அந்தத் தவ வாழ்வின் பலனாகப் பலவீனமடைந்து இருக்கும் நீ, இப்போது என்னுடன் போரிட விரும்புவது எவ்வாறு? ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, உனது பக்கத்தில் இருந்து சக்ரனே (இந்திரனே} போரிட்டாலும் கூட, எனது பராக்கிரமத்தைக் காட்டுவதில், நான் எந்தத் தயக்கமும் கொள்ளமாட்டேன். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உனது விருப்பம் நிறைவேறப் போகிறது. என்னுடன் இப்போது போரிட்டு, எனது பலத்தை நீ காண்பாயாக” என்றான் {கர்ணன்}.

இதைக்கேட்ட அர்ஜுனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இப்போது கூட என்னுடனான போரில் நீ {தோற்று} ஓடினாயே. அதனால்தானே, உன் தம்பி கொல்லப்பட்டாலும், நீ {இன்னும்} உயிருடன் இருக்கிறாய். தன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டு களத்தைவிட்டு ஓடிய பிறகும், உண்மையான நல்ல மனிதர்களுக்கு மத்தியில் நின்று தற்பெருமை பேசுபவன், உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைக் கர்ணனிடம் சொன்ன ஒப்பற்ற பீபத்சு {அர்ஜுனன்}, அவனிடம் விரைந்து சென்று, கவசத்தை ஊடுருவி செல்லும் கணைகளைச் சரமாரியாக அடித்தான். ஆனால், வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பெரும் சுறுசுறுப்புடன், மேகத்தின் பொழிவு போன்ற தனது கணை மழையால் அவற்றைத் தடுத்தான். கணைகளின் அந்தக் கடும் ஊற்று அனைத்துப் புறங்களையும் மூடி, குதிரைகளையும், கரங்களையும், போராளிகளின் தோலுறைகளையும் பல இடங்களில் துளைத்தன. அந்தத் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத அர்ஜுனன், தனது நேரான கூரிய கணையால் கர்ணனுடைய அம்பறாத்தூணியின் கயிறுகளைத் துண்டித்தான்.

உடனே தனது அம்பறாத்தூணியில் இருந்து மற்றொரு கணையை எடுத்த கர்ணன், அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} வில் தாங்கிய கரங்கள் தளரும் வகையில் அவற்றைத் துளைத்தான். பிறகு வலிமையான கரங்கள் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் வில்லைத் துண்டுகளாக {சுக்குநூறாக} வெட்டிப்போட்டான். பிறகு கர்ணன், தனது எதிரியின் {அர்ஜுனனின்} மீது ஒரு பராசத்தை வீசினான். ஆனால் அர்ஜுனன் தன் கணைகளால் அதைத் துணித்தான். பிறகு ராதையின் மகனைப் {கர்ணனைப்} பின்தொடர்ந்து வந்த வீரர்கள் கூட்டமாக அர்ஜுனனிடம் விரைந்தனர். ஆனால் பார்த்தன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளின் மூலம் அவர்கள் அனைவரையும் யமனுலகு அனுப்பி வைத்தான்.

வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அடிக்கப்பட்ட கூரிய கடும் கணைகளால் கர்ணனின் குதிரைகளைப் பீபத்சு {அர்ஜுனன்} கொன்றான். அவை {அக்குதிரைகள்} உயிரற்றுத் தரையில் கீழே விழுந்தன. பெரும் சக்தி கொண்ட சுடர்மிகும் மற்றொரு கூரிய கணையை எடுத்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கர்ணனின் மார்பைத் துளைத்தான். அந்தக் கணை அவனது {கர்ணனின்} கவசத்தைப் பிளந்து கொண்டு அவனது உடலைத் துளைத்தது. இதனால் கர்ணனின் பார்வை தடைபட்டு, அவனது உணர்வுகள் அவனை விட்டகன்றன. பிறகு உணர்வுகள் மீண்ட அவன் {கர்ணன்}, பெரும் வலியை உணர்ந்து, போர்க்களத்தை விட்டு வடதிசையை நோக்கி ஓடினான். இதனால், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் மற்றும் உத்தரன் ஆகிய இருவரும் அவனிடம் {கர்ணனிடம்} தரக்குறைவாகப் பேசத் தொடங்கினர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்