Monday, January 12, 2015

பிருஹஸ்பதியின் திட்டம்! - உத்யோக பர்வம் பகுதி 12

The deliberation of Vrihaspati! | Udyoga Parva - Section 12 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 12)

பதிவின் சுருக்கம் : தேவர்கள் நகுஷனை அமைதிப்படுத்துவது; நகுஷன் தேவர்களிடம் இந்திரன் அகலிகையை அடைந்ததைச் சொல்லி அவர்களை நிர்ப்பந்தித்தது; தேவர்கள் பிருஹஸ்பதியிடம் சென்றது; இந்திராணியான சச்சி பிருஹஸ்பதியிடம் அழுதது; அண்டியவர்களைக் கைவிடக்கூடாது என்று பிரம்மன் சொல்லியிருப்பதைப் பிருஹஸ்பதி எடுத்துரைப்பது; தேவர்கள் இதற்கு ஒரு திட்டத்தை வகுக்குமாறு பிருஹஸ்பதியிடம் வேண்டுவது; பிருஹஸ்பதியின் திட்டம்; இந்திராணி நகுஷனிடம் சென்றது...

இந்திராணியான சச்சி தேவி
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “கோபம் கொண்ட நகுஷனைக் {நஹுஷனைக்} கண்ட தேவர்கள், துறவியர் தலைமையில், கடுமுகம் கொண்ட தங்கள் மன்னனான அவனிடம் {நகுஷனிடம்} சென்று, “ஓ! தேவர்களின் மன்னா {நகுஷா}, உனது கோபத்தை விடு. ஓ! தலைவா, நீ கோபமடைந்தால், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும்பாம்புகளுடன் இருக்கும் அந்த அண்டமே நடுங்கும். நல்லவனே, உனது கோபத்தை விடு. உன்னைப் போன்றவர்கள் இத்தகு நிலையை அடையக்கூடாது. அந்தத் தேவி {சச்சி} வேறொருவரின் {இந்திரனின்} மனைவியாவாள். ஓ! தேவர்களின் தலைவா, அமைதியடைவாயாக! அடுத்தவர் மனைவியை அடையும் பாவத்திலிருந்து உனது மனதைத் திருப்பு. நீ தேவர்களின் மன்னனாவாய், உனக்கு வளம் உண்டாகட்டும்! உனது குடிகளை அறம்தழுவி காப்பாயாக!” என்றனர். இப்படிச் சொல்லப்பட்டும், காமத்தில் உணர்விழந்திருந்த அவன் {நகுஷன்} {அவர்களால்} சொல்லப்பட்டதைக் கவனித்தானில்லை. பிறகு அந்த மன்னன் {நகுஷன்}, தேவர்களிடம் இந்திரனைச் சுட்டும்படி, “துறவியின் மனைவியான களங்கமற்ற அகலிகையை {அஹல்யையை}, அவளது கணவர் உயிரோடிருந்தபோதே அடைந்தானே. நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? முற்காலத்தில் இந்திரனால் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற, அநீதியான, வஞ்சனையான செயல்கள் பலவாகும். நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? எனக்கு இன்பமானதை அந்தத் தேவி {சச்சி} செய்யட்டும்; அதுவே அவளுக்கு நிரந்தர நன்மையாகும். தேவர்களே, இதுவே உங்கள் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும்” என்றான் {நகுஷன்}.


அதற்குத் தேவர்கள் {நகுஷனிடம்}, “ஓ! சொர்க்கத்தின் தலைவா {நகுஷா}! நீ கட்டளையிட்டதுபோலவே, நாங்கள் இந்திரனின் ராணியைக் {சச்சியை} கொண்டுவருகிறோம். ஓ! வீரமிக்க ஆன்மாவே {நகுஷா}, இந்தக் கோபத்தை விடு! ஓ! தேவர்கள் தலைவா, நீ அமைதியடைவாயாக!” என்றனர்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அவனிடம் {நகுஷனிடம்} பேசிய பிறகு, தேவர்களும் துறவிகளும் இச்செய்தியைத் தெரிவிப்பதற்காகப் பிருஹஸ்பதியிடமும் {பிரகஸ்பதியிடமும்}, இந்திரனின் ராணியிடமும் {சச்சியிடமும்} சென்றனர். அவர்கள், “ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, இந்திரனின் ராணி {சச்சி} தனது பாதுகாப்புக்காக உமது வீட்டை தானே வந்து அடைந்தாள். ஓ! தெய்வீகத் துறவியரில் சிறந்தவரே {பிருஹஸ்பதியே}, நீரும் அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்திருக்கிறீர். ஆனால், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, இந்திரனின் ராணியை {சச்சியை} நகுஷனுக்கு அளிக்குமாறு தேவர்கள், கந்தர்வர்கள், துறவிகள் ஆகிய நாங்கள் உம்மிடம், வேண்டுகிறோம். தேவர்கள் மன்னனான பெரும் பிரகாசம் மிக்க நகுஷன், இந்திரனுக்கும் மேன்மையானவனாவான். தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமும் நிறமும் கொண்ட அந்த மங்கை {இந்திராணியான சச்சி}, அவனைத் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்கட்டும்!” என்றனர். இப்படிச் சொல்லப்பட்டதும், அந்தத் தேவி, கண்ணீர் வடித்து, இரக்கப்படும்படியான பரிதாபகரமான சொற்களில் விண்ணப்பிக்கும் வகையில் அழுதாள். அவள் {சச்சி} பிருஹஸ்பதியிடம், “ஓ! தெய்வீகத் துறவியரில் சிறந்தவரே {பிருஹஸ்பதி}, நகுஷனை எனது தலைவனாக நான் விரும்பவிலை. ஓ! அந்தணரே, நான் உமது பாதுகாப்பில் இருக்கிறேன். இந்தப் பெரும் அபாயத்தில் இருந்து என்னைக் காப்பாற்றும்!” என்றாள் {சச்சி}.

அதற்குப் பிருஹஸ்பதி, “எனது பாதுகாப்பை அடைந்திருக்கும் ஒருவரை நான் கைவிடமாட்டேன். இதுவே எனது தீர்மானம். ஓ! களங்கமற்ற வாழ்வு கொண்டவளே {இந்திராணியான சச்சியே}, அறமும் உண்மையும் கொண்ட உன்னை நான் கைவிடேன். அறவிதிகளை அறிந்தவனும், உண்மையின் மீது மதிப்பு கொண்டவனும், அதிலும் குறிப்பாக நீதி எது என்பதை அறிந்தவனுமான ஓர் அந்தணனாக நான் இருப்பதால், ஒரு முறையற்ற செயலைச் செய்ய நான் விரும்பேன். நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

தேவர்களில் சிறந்தவர்களே நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம். இக்காரியம் குறித்து முன்பே பிரம்மன் பாடியிருப்பதைக் கேளுங்கள். அச்சத்தில் பாதுகாப்பை நாடி வரும் ஒருவரை எதிரியிடம் விடுபவன், தனக்குப் பாதுகாப்புத் தேவையாக இருக்கும்போது எந்தப் பாதுகாப்பையும் அடையமாட்டான். அவனது விதை {அவன் விதைத்த விதை} முளைக்க வேண்டிய காலத்தில் முளைக்காது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் அவனிடம் மழை வராது. அச்சத்தில் பாதுகாப்பை நாடி வரும் ஒருவரை எதிரியிடம் விடுபவன், தான் செய்யும் எந்தக் காரியத்திலும் வெல்லமாட்டான்; உணர்வற்ற அவன், அங்கங்கள் அசைவிழந்து சொர்க்கத்தில் இருந்து விழுவான்; அவனால் கொடுக்கப்படும் காணிக்கைகளை தெய்வம் மறுக்கும். அவனது சந்ததி அகால நேரத்தில் இறக்கும். அவனது முன்னோர்கள் எப்போதும் (தங்களுக்குள்} சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்திரனோடு கூடிய தேவர்கள் அவன் மீது வஜ்ரத்தை அடிப்பார்கள். இதுவும் {இந்தக் காரியமும்} அப்படிப்பட்டதே என்பதை அறிந்தும், இந்திரனுக்கு விருப்பமான மனைவி என உலகில் பிரபலமானவளும், அவனது {இந்திரனின்} ராணியுமான இந்தச் சச்சியை நான் {எதிரியிடம் [நகுஷனிடம்]} விட மாட்டேன்” என்றார் {பிருஹஸ்பதி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு தேவர்களும், கந்தர்வர்களும், அந்தத் தேவர்களின் ஆசானிடம் {பிருஹஸ்பதியிடம்} இச்சொல்லைச் சொன்னார்கள், “ஓ! பிருஹஸ்பதி, தகுதியான ஏதாவதொரு உரத்த கொள்கையைத் திட்டமிடுவீராக! {வலுவான திட்டத்தை வகுப்பீராக!}” என்றனர். அதற்குப் பிருஹஸ்பதி {தேவர்களிடம்}, “மங்கலகரமான தோற்றம் கொண்ட இந்தத் தேவி {இந்திராணியான சச்சி}, {தன்னைக் கோரும்} அவனது {நகுஷனது} முன்மொழிவுக்கு {ஆசைக்குத்} தன்னைத் தயார் செய்வதற்காக நகுஷனிடம் சிறிது காலத்தை {அவகாசத்தைக்} கேட்கட்டும். இதுவே இந்திரனின் ராணிக்கும், நம் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். தேவர்களே, காலம் பல இடையூறுகளை எழுப்பும். {இந்தத் தேவியான சச்சி, கேட்கும்} காலமே {நகுஷனின்} காலத்தைக் கடத்தும். அவனுக்கு அருளப்பட்டுள்ள வரத்தின் அறத்தால் நகுஷன் கர்வம் உள்ளவனாகவும் பலவானாகவும் இருக்கிறான்!” என்றார் {பிருஹஸ்பதி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிருஹஸ்பதி இப்படிப் பேசியதும், தேவர்கள் மகிழ்ந்து, “ஓ! அந்தணரே, நன்று சொன்னீர். இதுவே தேவர்கள் அனைவருக்கும் நன்மையைத் தரும். இதில் ஐயமில்லை. இந்தத் தேவி {சச்சி} அமைதியேற்படச் செய்யட்டும்” என்றனர். பிறகு அக்னியின் தலைமையிலான அந்தத் தேவர்களின் கூட்டம் அனைத்து உலகங்களின் நன்மைக்கான நோக்கத்துடன், இந்திரனின் ராணியிடம் {சச்சியிடம்} அமைதியான முறையில் பேசினர். அந்தத் தேவர்கள் {சச்சியிடம்}, “இந்த முழு அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிவற்றைத் தாங்குபவள் நீயே. கற்பும், உண்மையும் கொண்ட நீ, நகுஷனிடம் செல்வாயாக! உன்னிடம் காமங்கொண்டிருக்கும் அந்தத் தீயவன் {நகுஷன்}, விரைவில் விழுவான்; ஓ! தேவி {சச்சி}, இந்திரன் தேவர்களின் அரசாட்சியை {மீண்டும்} அடைவான்!” என்றனர். அந்த ஆழ்ந்த ஆய்வின் விளைவுகளை உறுதி செய்து கொண்ட இந்திரனின் ராணி {சச்சி}, தனது முடிவை அடைய விரும்பி, கடுமுகம் கொண்ட நகுஷனிடம் கூச்சத்துடன் சென்றாள். அந்தத் தீய நகுஷனும், காமத்தால் அறிவற்றவனாகி, அவள் {சச்சி} எப்படிப்பட்ட இளமையையும் அழகையும் கொண்டவள் என்பதைக் கண்டு மிகுந்த மனநிறைவு கொண்டான்.

************************

தொடர்புடைய பதிவுகள்

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்