Tuesday, January 13, 2015

மீண்டும் மறைந்த இந்திரன்! - உத்யோக பர்வம் பகுதி 13

Indra hid himself again! | Udyoga Parva - Section 13 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 13)

பதிவின் சுருக்கம் : சச்சி நகுஷனிடம் அவகாசம் கேட்பது; நகுஷன் சம்மதிப்பது; சச்சியின் நிலையைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்டுவது; விஷ்ணு இந்திரனுக்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்யச் சொன்னது; வேள்வி முடிந்ததும் இந்திரன் சுயநினைவை அடைவது; பலமிக்க நகுஷனைக் கண்ட இந்திரன் மீண்டும் ஒளிந்து கொள்வது; இதனால் துக்கமுற்ற இந்திராணி உபஸ்ருதி தேவியை வேண்டுவது...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தேவர்கள் மன்னனான நகுஷன் அவளை {இந்திரனின் மனைவியான சச்சியைப்} பார்த்து, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் மூன்று உலகங்களுக்கும் இந்திரனாவேன். ஓ! அழகிய தொடைகளும் அழகிய நிறமும் கொண்டவளே, என்னை உனது தலைவனாக ஏற்றுக் கொள்வாயாக!” என்றான். நகுஷனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய தேவி, பயந்து போய், தென்றல் {காற்று} வீசுமிடத்தில் இருக்கும் வாழைமரம் போல நடுங்கினாள். பிரம்மாவுக்குத் தலைவணங்கிய அவள் {சச்சி}, தனது கரங்களைக்கூப்பியபடி, தேவர்களின் மன்னனான கடுமுகம் கொண்ட நகுஷனிடம், “ஓ! தெய்வங்களின் தலைவா {நகுஷா}, நான் காலத்தைப் {அவகாசத்தைப்} பெற விரும்புகிறேன். இந்திரருக்கு என்ன நேர்ந்தது என்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் அறியப்படவில்லை. அவரைக் குறித்த உண்மையை விசாரித்த பின், ஓ! தலைவா, அவரை {இந்திரரைக்} குறித்த எந்தச் செய்தியையும் அடையவில்லையென்றால், நான் உம்மைச் சந்திக்கிறேன்; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள் {சச்சி}.


இந்திரனின் ராணி இப்படிச் சொன்னதும், நகுஷன் மகிழ்ந்தான். பிறகு நகுஷன் {சச்சியிடம்}, “ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். செய்திகளை உறுதி செய்து கொண்ட பின் நீ வருவாயாக. சாதகமற்ற உனது உண்மை நிலையை நீ நினைத்துப் பார்ப்பாய் என்று நான் நம்புகிறேன்” என்றான். நகுஷனால் அனுப்பப்பட்ட அந்த மங்கலகரமான பார்வை கொண்டவள் {சச்சி}, {அங்கிருந்து} வெளியே வந்தாள். அந்தப் புகழ்பெற்ற மங்கை {சச்சி} பிருஹஸ்பதியின் {பிரகஸ்பதியின்} இல்லத்திற்குச் சென்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அக்னியைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், அவளது {சச்சியின்} சொற்களைக் கேட்டதும், இந்திரனின் நலன்களை அறிய ஊக்கம் கொண்ட நோக்கத்துடன் {தங்களுக்குள்} கலந்தாலோசித்தனர். பிறகு அவர்கள் தேவர்களுக்குத் தேவனான வலிமைமிக்க விஷ்ணுவைச் சேர்ந்தனர் {சென்றடைந்தனர்}.

உரையாற்றுவதில் வல்லவர்களான தேவர்கள், அவனிடம் {விஷ்ணுவிடம்} வருத்தத்துடன், “தேவர்கள் அனைவருக்கும் தலைவனான இந்திரன், {பிராமணனைக் கொன்ற பாவத்தால் ஏற்பட்ட} பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களுக்குத் தலைவா {விஷ்ணுவே}, முதலில் பிறந்தவனும் {அனைத்திற்கும் முன்பு பிறந்தவனும்}, அண்டத்தின் ஆட்சியாளனும், எங்களின் புகலிடமும் நீயே. அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காகவே நீ விஷ்ணுவின் உருவை ஏற்றாய். உனது சக்தியால் விருத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரன் பிரம்மஹத்தி பாவத்தால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களில் சிறந்தவனே, அவனை {இந்திரனை} விடுவிக்க வேண்டிய வழிகளைப் பரிந்துரைப்பாயாக!” என்றனர் {தேவர்கள்}.

அவர்களது சொற்களைக் கேட்ட விஷ்ணு  {தேவர்களிடம்}, “இந்திரன் எனக்கு வேள்வியைக் காணிக்கையாக்கட்டும். அப்போது நான் அந்த வஜ்ரதாங்கியை {இந்திரனைச்} சுத்திகரிப்பேன். புனிதமான குதிரை வேள்வியைச் செய்யும் அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்}, தேவர்கள் தலைவனாக மீண்டும் தனது கண்ணியத்தை அடைவான். தீய மனம் கொண்ட நகுஷன், தனது தீச்செயல்களால் அழிவை நோக்கி வழிநடத்தப்படுவான். தேவர்களே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார் {விஷ்ணு}.

உண்மையான சொற்களான, காதுகளுக்கு இனிமையான அமுதம் போன்ற அந்த விஷ்ணுவின் சொற்களைக் கேட்ட தேவர்கள், கவலையுடனும் அச்சத்துடனும் இந்திரன் இருந்த பகுதிக்குத் தங்கள் ஆசான் மற்றும் முனிவர்கள் ஆகியோருடன் சென்றனர். அங்கே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த மனம் கொண்ட பெரும் இந்திரனைச் சுத்திகரிப்பதற்காகப் பிரம்மஹத்தியை நீக்க வல்ல பெரும் குதிரை வேள்வி செய்யப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, மரங்கள், நதிகள், மலைகள், பூமி மற்றும் பெண்கள் ஆகியோருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவத்தைப் பகிர்ந்தளித்தான். இப்படி அந்த உயிரினங்களுக்கு அதைப் {பிரம்மஹத்தியைப்} பிரித்தளித்து, அதில் இருந்து விடுபட்ட இந்திரன், நோயில் இருந்து விடுபட்டான். இப்படியே அதை {பிரம்மஹத்தியை}, அந்த உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்தளித்து அதில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, நோயில் இருந்தும் விடுபட்டான். பாவத்தில் இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, தன்னிலையை அடைந்தான். பிறகு, அசையும் உயிரினங்கள் அனைத்தின் பலத்தை உறிஞ்சுபவனும், முனிவர்கள் அளித்த வரத்தின் அறத்தால் அணுகமுடியாதபடி இருந்தவனுமான நகுஷனைக் கண்டு வலாசுரனைக் கொன்றவன் {இந்திரன்} நடுங்கினான்.

பிறகு, அந்தச் சச்சியின் கணவன் {இந்திரன்}, மீண்டும் பார்வையில் இருந்து மறைந்து போனான். உயிரினங்கள் அனைத்தின் பார்வைக்கும் மறைந்தபடி, காலத்தை எதிர்பார்த்து அவன் {இந்திரன்} உலவி கொண்டிருந்தான். இந்திரன் மறைந்ததும், சச்சி {இந்திராணி} துயரத்தில் விழுந்தாள். பிறகு, பெரும் துன்பமடைந்த அவள் {சச்சி}, “ஐயோ! ஓ! இந்திரரே, நான் ஏதாவது கொடையளித்திருந்தால், தேவர்களுக்குக் காணிக்கை அளித்திருந்தால், எனது ஆன்மிக வழிகாட்டிகளை மனநிறைவு கொள்ளச் செய்திருந்தால், என்னில் ஏதாவது உண்மை இருந்தால், எனது கற்புக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என நான் வேண்டிக் கொள்வேன். புனிதமானவளும், தூய்மையானவளும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் [1] சென்று கொண்டிருப்பவளுமான {உத்தராயணக் காலத்தில் நடப்பவளும்} இந்த இரவின் தேவியை, எனது விருப்பம் நிறைவேற்றுவதற்காக வணங்குகிறேன்” என்றாள் {சச்சி}.

[1] “குளிர் காலத்தில் இருந்து கோடைகாலத்திற்குள் நுழையும் சூரியனின் பாதை {உத்தராயணக் காலம்}” என்கிறார் கங்குலி.

இதைச் சொன்ன அவள் {சச்சி}, தன் உடலையும், ஆன்மாவையும் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இரவின் தேவியை வழிபட்டாள். தனது கற்பு மற்றும் உண்மையின் {சத்தியத்தின்} பெயரால் அவள் {சச்சி}, குறிசொல்பவளிடம் {சந்தேகத்தைத் தெளிவிக்கும் அந்தத் தேவியான உபஸ்ருதியிடம்} [2] கேட்டாள். அவள் {சச்சி}, “தேவர்களின் தலைவர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாயாக. உண்மை உண்மையாலேயே சரிபார்க்கப்படட்டும்” என்றாள். இப்படியே அவள் {சச்சி}, குறிசொல்லும் தேவியிடம் {இரவின் தேவியான உபஸ்ருதியிடம்} பேசினாள்.

[2] “இரவில் நட்சத்திரங்களின் குறிப்புகளைக் கொண்டு {பழங்காலத்தில்} நடைமுறையில் பயிலப்பட்ட குறிகேட்பு முறையாகும்” என்கிறார் கங்குலி
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்