Monday, February 02, 2015

ஐந்து கிராமங்களையாவது கொடு! - உத்யோக பர்வம் பகுதி 31

Give atleast five villages! | Udyoga Parva - Section 31 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 31)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனை வணங்கி, அவனது நலத்தை விசாரிக்குமாறும், பாண்டவர்களிடம் அவன் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டது; பீஷ்மரிடம் பேரர்களின் ஒற்றுமையைப் பேணத் தீர்மானிக்கச் சொன்னது; விதுரரிடம் அமைதிக்காக ஆலோசிக்கச் சொன்னது; துரியோதனனிடம், அவன் செய்த தீங்குகள் அனைத்தையும் தாங்கள் மன்னித்து விடுவதாகவும், தங்களுக்கு ஐந்து கிராமத்தையாவது கொடுக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் சொல்லச்சொன்னது; அமைதிக்கும், போருக்கும், மென்மைக்கும், கடுமைக்கும் தான் தகுந்தவனாகவே இருப்பதாகவும் சொன்னது...

யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீதிமிக்கவர்கள், நீதியற்றவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பலமற்றவர்கள், பலமிக்கவர்கள் ஆகியோர் அனைவரும் படைப்பாளனின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர். சிறுவருக்கு ஞானத்தையும், கற்றோருக்கு மூடத்தனத்தையும் தன்விருப்பப்படி அந்தப் பரம்பொருளான கடவுளே கொடுக்கிறான். எங்களது பலம் குறித்து உம்மிடம் திருதராஷ்டிரர் கேட்டால், இங்கிருப்போர் அனைவரிடமும் உற்சாகமாகக் கேட்டு, உண்மையை உறுதி செய்து கொண்டு, அவரிடம் அனைத்தையும் உண்மையாகச் சொல்லும்.


ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, வலிமைமிக்க திருதராஷ்டிரரின் பாதங்களைத் தொட்டு வணங்கி, எங்கள் பெயரால் அவரது நலத்தை விசாரிப்பீராக. குருக்கள் மத்தியில் அமர்ந்திருக்கும்போது, அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! மன்னா, பாண்டுவின் மகன்கள், உமது ஆற்றலின் விளைவாக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஓ! எதிரிகளை அடக்குபவரே, இளம் வயதுடைய அந்தப் பிள்ளைகள் {பாண்டவர்கள்} உமது கருணையினாலேயே ஒரு நாட்டை அடைந்தனர். முதலில் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரு நாட்டை அளித்துவிட்டு, எப்போதும் நீர் அவர்களிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது. அதனால் {அப்படி நடந்தால்} அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} அழிவு ஏற்படும்!” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.

ஓ! சஞ்சயரே, இந்த முழு நாடும் ஒருவருக்கே சொந்தமென்பது பொருந்தாது. மீண்டும் அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! அய்யா, நாங்கள் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறோம். எதிரிகளால் வீழ்த்தப்படும் நிலைக்கு நீங்கள் பாதிப்படைய வேண்டாம்” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.

ஓ சஞ்சயரே, பாரதர்களின் பாட்டனும் {பிதாமகரும்}, சந்தனுவின் மகனுமான பீஷ்மரிடம் என் பெயரால் நீர் தலைவணங்க வேண்டும். எங்கள் பாட்டனை {பீஷ்மரை} வணங்கிய பிறகு, அவரிடம், “சந்தனுவின் குலம் அழிவின் விளிம்பில் இருந்த போது, நீரே அதைப் புதுப்பித்தீர். எனவே, ஓ! அய்யா, உமது பேரர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நல்லுறவுடன் வாழ, உமது தீர்மானத்தின்படியே வழிவகை செய்யும்” என்பது சொல்லப்பட வேண்டும்.

பிறகு, குருக்களின் ஆலோசகரான விதுரரிடம், “ஓ! இனிமையானவரே, யுதிஷ்டிரனுக்கு நன்மை செய்யும் விருப்பத்துடன் அமைதியை ஆலோசியும்” என்று நீர் சொல்லும்.

பொறுமையற்ற இளவரசனான துரியோதனனிடம், அவன் குருக்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும்போது, “குருக்கள் கொல்லப்படுவதைக் காண மனம் இல்லாத காரணத்தால், அப்பாவியும், ஆதரவற்றவளுமான திரௌபதிக்கு சபையின் மத்தியில் நீ செய்த அவமதிப்புகளை, நாங்கள் அமைதியாகப் பொறுத்துக் கொள்வோம்” என்று மீண்டும் மீண்டும் மன்றாடுவீராக.

பழிதீர்க்கும் வலிமையைப் பாண்டுவின் மகன்கள் பெற்றிருந்தாலும், அதற்கு முன்பும் பின்பும் இரு சமயங்களிலும் செய்யப்பட்ட பிற தீங்குகளையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும், உண்மையில், கௌரவர்கள் அறிவார்கள். ஓ! இனிமையானவனே {துரியோதனா}, மான் தோலுடுத்தச் செய்து எங்களை நாடு கடத்தவும் செய்தாய். குருக்கள் கொல்லப்படுவதை விரும்பாத நாங்கள் அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.

குந்தியை அலட்சியம் செய்து, உனக்குக் கீழ்ப்படிந்தே கிருஷ்ணையைத் {திரௌபதியை} துச்சாசனன் இழுத்தான். அச்செயலையும் நாங்கள் மன்னிப்போம். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, நாட்டின் முறையான பங்கை நாங்கள் பெற வேண்டும். ஓ! மனிதர்களில் காளையே, பிறருக்குச் சொந்தமானவற்றில் இருந்து உனது பேராசை கொண்ட இதயத்தைத் திருப்பு. ஓ! மன்னா, அப்போதே மகிழ்ச்சி ஏற்பட்டு, நமக்கு மத்தியில் அமைதி நிலவும்.

நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்; {எனவே} பேரரசின் ஒரு மாகாணத்தையாவது எங்களுக்குக் கொடு. குசஸ்தலம் {அவிஸ்தலம்}, விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் ஆகியவற்றையும், ஐந்தாவதாக நீ விரும்பும் ஏதாவதொன்றையும் கூடக் கொடு. இது கூட நமது சச்சரவை {வீண் சண்டையை} முடிவடையச் செய்யும். ஓ! சுயோதனா, உனது ஐந்து சகோதரர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடு” என்று சொல்லி மீண்டும் மீண்டும் நீர் வேண்டிக் கொள்வீராக.

ஓ! சஞ்சயரே, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எங்களுக்கும், எங்களது சகோதரர்களுக்கும் இடையில் அமைதி ஏற்படட்டும்.

அவனிடம் {துரியோதனனிடம்}, “சகோதரர்கள் சகோதரர்களைத் தொடரட்டும், தந்தையர் மகன்களுடன் ஒற்றுமையாக இருக்கட்டும். மகிழ்ச்சியானச் சிரிப்பில் குருக்களுடன் {கௌரவர்களுடன்} பாஞ்சாலர்கள் கலக்கட்டும். குருக்களையும், பாஞ்சாலர்களையும் மொத்தமாகவும் பலமாகவும் காணவே நான் விரும்புகிறேன். ஓ! பாரத குலத்தின் காளையே, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நாம் அமைதியடைவோமாக” என்றும் சொல்லும்.

ஓ! சஞ்சயரே, போருக்கும் அமைதிக்கும் சமத்திறன் கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் செல்வத்தை அடையவும், அறத்தை ஈட்டவும் தயாராக இருக்கிறேன். மென்மைக்கும் கடுமைக்கும் பொருத்தமானவனாகவே நான் இருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்