Monday, February 02, 2015

பங்கைக் கொடு அல்லது போரிடு! - உத்யோக பர்வம் பகுதி 30

Give  my share or else fight! | Udyoga Parva - Section 30 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 30)
பதிவின் சுருக்கம் : தான் விடைபெற்றுக் கொள்வதாகச் சஞ்சயன் சொல்லி, தான் ஏதாவது குற்றமிழைத்திருந்தால் பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுவது; சஞ்சயன் எக்குற்றமும் செய்யவில்லை என்று சொல்லி ஹஸ்தினாபுரத்தில் உள்ளோரை தான் நலம் விசாரித்ததாகச் சொல்லச் சொல்லி, யுதிஷ்டிரன் ஒரு நீண்ட பட்டியலைச் சொல்வது; துரியோதனன் ஆசையை அடைவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லையென்றும், அதில் எந்த நீதியும் இல்லை என்றும், இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுப்பது அல்லது போரிடுவது என்பதே தீர்வாகும் என்றும் யுதிஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது...

சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களின் தெய்வீக ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நான் செல்கிறேன். வளமை உனதாகட்டும். நான், எனது இதய உணர்வுகளில் மெய்மறந்து தாக்கிப் பேசும் வகையில் எதையும் சொல்லவில்லை என நம்புகிறேன். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பீமன், அர்ஜுனன், மாத்ரியின் மகன், சாத்யகி, சேகிதானன் ஆகியோரிடமும் நான் விடைபெற்றுச் செல்கிறேன். அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுடையதாகட்டும். மன்னர்கள் அனைவரும் என்னைப் பாசமிக்கக் கண்களால் காணட்டும்” என்றான் {சஞ்சயன்}.


யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்}, “ஓ! சஞ்சயரே, உமக்கு விடை கொடுக்க எங்களை அனுமதிப்பீராக. அமைதி உமதாகட்டும்! ஓ! கற்றவரே, எங்களை நீர் ஒருபோதும் தவறாக நினைத்ததில்லை. அவர்களும் {கௌரவர்களும்}, நாங்களும், சபையில் இருப்போர் மத்தியில், உம்மை (குருக்களின்) தூய்மையான இதயம் கொண்டவராகவே அறிந்திருக்கிறோம். அதுதவிர, ஓ! சஞ்சயரே, இப்போது தூதராக வந்திருப்பது மட்டுமல்லாமல், எங்களது அன்புக்குரிய நீர் நன்றியுடையவராகவும், ஏற்புடைய {இனிமையான} பேச்சுடையவராகவும், அற்புத நடத்தை கொண்டவராகவும், எங்களிடம் பாசம் கொண்டவராகவும் இருக்கிறீர். உமது மனம் எப்போதும் {அஞ்ஞானத்தால்} மறைக்கப்பட்டது கிடையாது. கடினமாகப் பேசப்பட்டால் நீர் கோபத்துக்கு ஆளாக மாட்டீர். ஓ! சூதரே, வெட்டும் வகையில் மூர்க்கமான பேச்சுகளையோ, தவறான மற்றும் கசந்த பேச்சுகளையோ நீர் ஒருபோதும் பேச மாட்டீர். உமது சொற்கள் வன்மத்திலிருந்து {தீய நோக்கத்திலிருந்து} விடுபட்டு, எப்போதும் அறநெறியும் சார்ந்தே இருக்கும்.

அரசாங்கப் பிரதிநிதிகளில் {தூதர்களில்} நீரே எங்களுக்கு மிகவும் அன்புக்குரியவர். உம்மைத்தவிர வேறொருவரும் இங்கே வரக்கூடும். அவர் விதுரரே. முன்பெல்லாம், நாங்கள் எப்போதும் உம்மைக் காண்போம். உண்மையில், நீர் தனஞ்சயனைப் போன்றே எங்களுக்கு அன்புக்குரிய நண்பராவீர். ஓ! சஞ்சயரே, இங்கிருந்து விரைந்து சென்று, தூய சக்தியும், பிரம்மச்சரிய வகையின்படியான கல்விக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும், அதிலும் குறிப்பாக வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்து, இரவலர் {பிச்சைக்கார} வாழ்வை மேற்கொண்டிருக்கும் அந்தணர்களுக்காகவும், காட்டில் வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் துறவிகளுக்காகவும், பிற வகுப்புகளைச் {க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வகுப்புகளைச்} சார்ந்த முதிர்ந்தவர்களுக்காகவும் காத்திருந்து, ஓ! சஞ்சயரே, எனது பெயரால் அவர்களது நலம் உம்மால் விசாரிக்கப்படட்டும்.

ஓ! சூதரே, மன்னர் திருதராஷ்டிரரின் புரோகிதரிடமும், அவரது ஆசான்களிடமும், ரித்விக்குகளிடமும் சென்று அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. நல்ல பிறப்பு பிறக்காவிடினும், முதிர்ந்த வயதும், சக்தியும், நல்ல நடத்தையும், பலமும் உள்ளவர்கள் மற்றும் எங்களை நினைவுகூர்ந்து பேசுபவர்களிடமும், தங்கள் சக்திக்குத் தக்க சிறு அறத்தையேனும் பயில்பவர்களிடமும், எனது அமைதிக்கான செய்தியை முதலில் சொல்லிவிட்டு, ஓ! சஞ்சயரே, பிறகு அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. வணிகம் செய்து நாட்டில் வாழ்பவர்களிடமும், நாட்டின் முக்கிய அலுவல்களைச் செய்து வாழ்பவர்களின் நலத்தை நீர் அவர்களிடம் விசாரிப்பீராக.

அறநெறிகளை முழுவதும் அறிந்தவரும், எங்களது ஆலோசகரும், வேதங்களில் நிபுணத்துவம் பெற்றுப் பிரம்மச்சரியம் நோற்பவரும், ஆயுத அறிவியலை மீண்டும் முழுமையாகவும் நிறைவாகவும் செய்தவரும், எங்களிடம் எப்போதும் அருள்கூர்ந்து இருப்பவரும், எங்கள் அன்புக்குரிய ஆசானுமான துரோணரிடம், எங்கள் பெயரால் நீர் வணக்கங்களைத் தெரிவிப்பீராக.

பெரும் கல்வி கற்றவரும், பிரம்மச்சரிய வகை வாழ்வை நோற்று வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரும், பெரும் சுறுசுறுப்பு கொண்டவரும், கந்தர்வ குலத்தின் இளைஞனைப் போல இருப்பவரும், அதுவும் தவிர ஆயுத அறிவியலை மீண்டும் முழுமையாகவும் நிறைவாகவும் செய்தவருமான அஸ்வத்தாமரின் நலத்தை நீர் அவரிடம் விசாரிப்பீராக.

ஓ! சஞ்சயரே, பெரும் தேர்வீரரும், தன்னறிவு {சுயஞானம்} கொண்டவர்களில் முதன்மையானவரும் சரத்வானின் மகனுமான கிருபரின் வசிப்பிடத்திற்குச் சென்று, எனது பெயரால் வணங்கி, உமது கையால் அவரது பாதத்தைத் தொடுவீராக.

வீரமும், ஊறிழையாமையும் {அஹிம்சையும்}, தவமும், ஞானமும், நல்ல நடத்தையும், வேத கல்வியும், பெரும் சிறப்பும், உறுதியும் யாரிடம் உள்ளதோ, அந்தக் குருக்களில் முதன்மையான பீஷ்மரிடம், அவரது பாதங்களைத் தொட்டு நான் நலமாக இருப்பதாகச் சொல்வீராக.

ஞானமுள்ளவரும், பெருமைக்குரியவரும், பெரும் கல்வி கற்றவரும், முதியோராலும் மதிக்கப்படுபவரும், குருக்களின் தலைவருமான கண்பார்வையற்ற {குருட்டு} மன்னரையும் (திருதராஷ்டிரரையும்} நீர் வணங்குவீராக.

ஓ! சஞ்சயரே, தீயவனும், அறியாமை கொண்டவனும், ஏமாற்றுக்காரனும், சீர்கெட்டவனும், முழு உலகத்தையும் இப்போது ஆட்சி செய்பவனும், திருதராஷ்டிரர் மகன்களில் மூத்தவனுமான சுயோதனனின் {துரியோதனனின்} நலத்தையும், ஓ! அய்யா {சஞ்சயரே}, நீர் விசாரிப்பீராக.

வலிமைமிக்க வில்லாளியும், குருக்களில் வீரனும், துரியோதனனுக்கு இளையவனும், தனது அண்ணனைப் போன்ற குணத்தையே உடையவனுமான தீயவன் துச்சாசனனின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

ஓ! சஞ்சயரே, பாரதர்கள் மத்தியில் எப்போதும் அமைதி நில வேண்டும் என்பதைத்தவிர வேறு விருப்பங்களைப் பேணாதவரான, பாஹ்லீகர்களின் ஞானமிக்கத் தலைவரையும் நீர் வணங்குவீராக.

எண்ணற்ற அற்புத குணங்களைக் கொண்டவரும், ஞானியும், இரக்கமிக்க இதயம் கொண்டவரும், குருக்களிடம் கொண்ட பாசத்தால், அவர்களிடம் கோபமடையாதவருமான சோமதத்தரையும் நீர் வழிபடுவீராக.

சோமதத்தரின் மகன், குருக்கள் மத்தியில் பெரும் மரியாதைக்குரிய தகுதி படைத்தவனாவான். அவன் எனக்கு நண்பனும், எங்களுக்குச் சகோதரனும் ஆவான். வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அவன் அனைத்து வகையிலும் தகுதியுடையவனே. ஓ! சஞ்சயரே, அவனது நலத்தை விசாரித்த பிறகு, அவனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடைய நலத்தையும் விசாரிப்பீராக.

குருக்கள் {கௌரவர்கள்} மத்தியில் கருத்தில் கொள்ளத்தக்கவர்களும், இளவயது கொண்ட பிறரும், மகன்கள், பேரர்கள், சகோதரர்கள் போன்ற உறவுமுறையை எங்களிடம் கொண்டோரும் அங்கே இருக்கிறார்கள். ஓ! சூதரே, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தகுந்தது என்று நீர் கருதும் வார்த்தைகளைப் பேசி அவர்களது நலத்தை விசாரிப்பீராக.

பாண்டவர்களுடன் போரிடுவதற்காகத் திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} கூட்டப்பட்டிருக்கும் கேகயர்கள், வசாதிகள், சால்வகர்கள், அம்பஷ்டர்கள், திரிகார்த்தர்கள் ஆகியோரும், கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் இருந்து பெரும் வீரத்துடன் வந்திருப்பவர்களும், உண்மையில், இவர்கள் அனைவரைக் காட்டிலும், கொடுமையற்றவர்களும், நல்ல வாழ்வு வாழ்பவர்களுமான மலை நாட்டுக்காரர்களுடைய மன்னர்களின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றைச் செலுத்தும் யாவரும், தரைப்படையில் போரிடுவோரும் சேர்ந்த, மதிப்புமிக்க மனிதர்கள் நிறைந்த அந்த வலிமைமிக்கப் படையிடம், நான் நலத்துடன் இருப்பதாகச் சொல்லி விட்டு, பிறகு அவர்களது சொந்த நலத்தை விசாரிப்பீராக.

மன்னருக்கு, வருவாய்க்கான காரியங்களிலோ, அவரது {மன்னரின்} வாயில் காப்போராகவோ, அவரது துருப்புகளின் தலைவர்களாகவோ, அவரது வரவு செலவு கணக்குகளைக் கவனிப்பவர்களாகவோ, மற்ற முக்கிய விவகாரங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதில் ஈடுபடும் அலுவலர்களாகவோ சேவையாற்றுபவர்கள் அனைவரையும் நீர் விசாரிப்பீராக.

ஓ! அய்யா, பிழையில் விழாதவனும், பெரும் ஞானம் கொண்டவனும், அனைத்து அறங்களையும் கொண்டவனும், இந்தப் போரை ஒருபோதும் விரும்பாதவனும், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனின் மகனானவனுடைய {யுயுத்சுவின்} நலத்தையும் விசாரிப்பீராக.

பகடையின் தந்திரங்களில் ஒப்பற்றவனும், பிறர் கண்டுபிடிக்க இயலாத தந்திரங்களை உடையவனும், பகடையைக் கையாளும் கலையில் நிபுணனும், போரிலன்றி விளையாட்டில் வீழ்த்தப்பட முடியாதவனுமான [1] சித்திரசேனனின் நலத்தையும் நீர் கேட்பீராக.

[1] இந்த இடத்தில், வடமொழியில், “யோதூஜயோ தேவரதே நஸங்கயே” என்று வருவதாகவும், அதற்கு, “தேவரதனாலே கூட வெல்லப்பட முடியாதவனான சித்திரசேனன்” என்ற பொருளே வரும் எனவும் சொல்லப்படுகிறது. இங்கே கங்குலி “தேவரதே” என்பதற்கு, “சூதாட்டத்தில்” என்று பொருள் கொண்டிருக்கிறார்.

ஓ! அய்யா, காந்தாரர்கள் மன்னனும், மலைநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவனும், ஏமாற்றுகரப் பகடையாட்டங்களில் ஒப்பற்றவனும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} செருக்கை மேம்படுத்துபவனும், இயல்பாகவே பொய்மையை அடையும் அறிவுடையவனுமான சகுனியின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

போரில் யாரும் தாக்கத் துணியாத பாண்டவர்களைத் எந்தத் துணையுமின்றி, தனது தேரில் ஏறித் தனியொருவனாகவே வீழ்த்தத் தயாராக இருப்பவனும், ஏற்கனவே தவறான வழியில் செல்பவர்களை மேலும் தவறாக வழிநடத்துவதில் ஒப்பற்றவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணனின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

ஓ! அய்யா, எங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒரே ஒருவரும், எங்கள் ஆசானும், எங்களை வளர்த்து உருவாக்கியவரும், எங்களுக்குத் தந்தையும், தாயும், நண்பருமாய் இருப்பவரும், எதிலும் தடங்கலற்ற புரிதல் கொண்டவரும், தொலைநோக்கு பார்வை கொண்டவரும், எங்கள் ஆலோசகருமான விதுரரின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

அனைத்து முதிர்ந்த சீமாட்டிகள், தகுதியுடையவர்களாக அறியப்பட்டவர்கள் {மாதர்}, எங்களுக்குத் தாயைப் போன்றோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடும்போது அவர்களைச் சந்தித்து நீர் வணங்குவீராக. ஓ! சஞ்சயரே, அவர்களிடம் முதலில் நீர், “வாழும் மகன்களுக்குத் தாயாக இருப்போரே, உங்கள் மகன்கள் உங்களிடம் அன்பாகவும், கவனமாகவும், தகுந்த வழியிலும் நடந்து கொண்டு, உங்களை வசதியாக வைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன்” என்று சொன்ன பிறகு, “யுதிஷ்டிரன் தனது மகன்களுடன் நன்றாக இருக்கிறான்” என்று அவர்களிடம் நீர் சொல்வீராக.

ஓ! சஞ்சயரே, எங்கள் மனைவிமார் என்ற தகுதியிலுள்ள மங்கையரிடம் {சகோதரர் முறைகொண்டோரின் மனைவியராக இருக்க வேண்டும்} {ராஜபாரியைகளிடம்}, அவர்களது நலத்தை விசாரிக்கும் நீர், இவ்வார்த்தைகளில், “நீங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் நற்புகழுக்கு எந்தக் களங்கமும் ஏற்படவில்லை என நான் நம்புகிறேன். பழிக்கு ஆளாகாமல், கவனமாக உங்கள் வசிப்பிடங்களுக்குள் வாழ்கிறீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் மாமனாரிடம் அன்பாகவும், புகழத்தக்க வகையிலும், கவனமான வழியிலும் நடந்து கொண்டு உங்களை வசதியாக வைத்துக் கொண்டுள்ளீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் கணவனின் அனுகூலம் கிட்டும்படி நிலையான நடைத்தையை நீங்கள் மேற்கொள்வீராக” எனச் சொல்வீராக.

உமக்கு மருமகள் என்பது போன்ற உறவை எங்களிடம் கொண்ட இளம் மங்கையரிடம் {எங்கள் மருமகள்கள் போன்றோரிடம்}, ஓ! சஞ்சயரே, அவர்களது நலத்தை என் சார்பாக நீர் கேட்பீராக. அவர்களிடம் நீர், “உங்கள் கணவர்கள் அன்பாகவும், ஏற்புடையவர்களாகவும் இருக்கட்டும்; நீங்கள் உங்கள் கணவர்களுக்கு ஏற்புடையவராக இருப்பீராக; ஆபரணங்கள், ஆடைகள், நறுமணப் பொருட்கள் தூய்மை ஆகிவற்றை நீங்கள் பெறுவீராக; மகிழ்ச்சியாக இருப்பீராக; உங்கள் விருப்பத்தின் பேரில் வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பீராக; உங்கள் பார்வை அழகாகவும், உங்கள் பேச்சு இனிமையாகவும் இருக்கட்டும்” என்று சொல்லி, ஓ! அய்யா {சஞ்சயரே}, வீட்டில் இருக்கும் பெண்களின் நலத்தை நீர் விசாரிப்பீராக.

குருக்களுடையவர்களாக இருப்பினும், பெண் பணியாட்களிடமும், ஆண் பணியாட்களிடமும், அவர்களில் இருக்கும் கூனர்கள் முடவர்கள் ஆகிய பலரிடமும், நான் நன்றாக இருப்பதாகச் சொல்லிய பிறகு, அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. அவர்களிடம் நீர், “திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} இன்னும் உங்களுக்கு அதே வகையான பழைய வாழ்வாதாரங்களைக் கொடுத்துக் கவனிக்கிறான் எனவும் உங்கள் வாழ்வுக்குத் தேவையான வசதிகளையும் கொடுக்கிறான் என நம்புகிறேன்” என்று சொல்வீராக.

அங்கக்குறை உள்ளவர்களிடமும், பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர்களிடமும் மனிதாபிமானம் கொண்டு, திருதராஷ்டிரர் கொடுக்கும் ஆடைகளையும், உணவையும் பெறும் குள்ளர்களிடமும் {உடல் வளர்ச்சி குறைந்தோரிடமும்}, குருடர்களிடமும் {பார்வையற்றோரிடமும்}, முதிர்ந்தவர்கள் அனைவரிடமும், கால்களற்று கைகளை மட்டுமே பயன்படுத்துவோர் பலரிடமும், நீர், “நான் நன்றாக இருக்கிறேன்” என்றும், “நான் அவர்களது நலத்தை விசாரித்தேன்” என்றும் சொல்லி, பின்வரும் சொற்களால், “அஞ்சாதீர்கள், துன்பங்கள் நிறைந்த உங்கள் மகிழ்ச்சியற்ற வாழ்வைக் கண்டு உற்சாகம் இழக்காதீர்கள்; ஐயங்கொள்ளாதீர்கள், உங்கள் முற்பிறவியில் நீங்கள் பாவங்களைச் செய்திருக்கலாம். எனது எதிரிகளைத் தண்டித்து, நண்பர்களை நான் மகிழச் செய்யும்போது, உணவையும், ஆடைகளையும் பரிசளித்து, நான் உங்களை மனநிறைவு கொள்ளச் செய்வேன்” என்று சொல்வீராக.

ஓ! அய்யா {சஞ்சயரே}, தலைவனற்றவர்கள், பலமற்றவர்கள், பொருளீட்ட வாழ்வில் வீணாக முயல்பவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், உண்மையில், பரிதாபகரமான சூழ்நிலைகளில் இருக்கும் மக்கள் அனைவரிடமும், நீர் நலத்தை விசாரிப்பீராக. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பல பகுதிகளில் {நாடுகளில்} இருந்து திருதராஷ்டிரர்களின் பாதுகாப்பை நாடி வந்திருப்பவர்கள், எங்கள் வணக்கங்களுக்கு உரியவர்கள் ஆகிய பிறரையும் சந்தித்து அவர்களது நலத்தையும் அமைதியையும் விசாரிப்பீராக.

குருக்களிடம் தானாகவோ, அழைக்கப்பட்டோ வந்தவர்களிடமும், அனைத்துத் தரப்புகளில் இருந்து வந்திருக்கும் அனைத்து தூதர்களிடமும் அவர்களது நலத்தை விசாரித்து, நான் நன்றாக இருப்பதாகச் சொல்வீராக.

திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} அடையப்பட்ட வீரர்களைப் பொறுத்தவரை, இந்தப் பூமியில் அவர்களுக்கு {அந்த வீரர்களுக்கு} நிகரானவர்கள் எவரும் இல்லை. எனினும், அறமே நித்தியமானது. எனது எதிரிகளை அழிப்பதற்கான எனது பலமும் அந்த அறமே.

ஓ! சஞ்சயரே, திருதராஷ்டிரர் மகனான சுயோதனனிடம் நீர், “பகையில்லாமல் குருக்களை ஆளவேண்டும் என்று உனது இதயத்தை வேதனைக்குள்ளாக்கும் அந்த விருப்பத்திற்கு நடைமுறைச்சாத்தியமே இல்லை. அதில் எந்த நீதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, உனக்கு ஏற்பில்லாத எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்! ஓ! பாரத வீரர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, எனக்குச் சொந்தமான இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிடு, இல்லையேல் என்னோடு போரிடு!” என்று சொல்வீராக.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்