Monday, February 16, 2015

தனி மரம் தோப்பாகாது! - உத்யோக பர்வம் பகுதி 36இ

A single tree cannot be a grove?| Udyoga Parva - Section 36c | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 10}
பதிவின் சுருக்கம் : நெருப்பு போல இருக்கும் யுதிஷ்டிரன் தனது மகன்களை அழித்துவிடுவான் என்று தான் அஞ்சுவதாகத் திருதராஷ்டிரன் சொல்வது; அச்சத்தைத் தவிர்க்கும் வழிவகைகளை விதுரன் சொல்வது; உறவினர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைச் சொல்வது; ஒற்றுமையின் வலிமை குறித்துச் சொல்வது; கொல்லத்தகாதவர்கள் யார்? உடல்நலத்தின் முக்கியத்துவம், சினத்தின் தன்மை ஆகியவற்றைச் சொல்லி வலிமை மற்றும் மென்மையுடன் கூடிய செழிப்பை அடைவதே உண்மையான கொள்கை எனச் சொல்வது;  சூதாட்டத்தின் போது தான் எச்சரித்ததையும், திருதராஷ்டிரன் அதை ஏற்காததையும் சொல்லி, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்பும்படி விதுரன் சொல்வது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “நெருப்புச்சுடர் போன்ற மன்னன் யுதிஷ்டிரன் என்னால் ஏமாற்றப்பட்டான். அவன் நிச்சயம் எனது மகன்களைப் போர்க்களத்தில் அடியோடு அழிப்பான். எனவே, அனைத்தும் ஆபத்து நிறைந்ததாகவே எனக்குத் தெரிகிறது. என் மனம் முழுவதிலும் கவலையே இருக்கிறது. ஓ! பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனே {விதுரா}, என் கவலைகளை அகற்றும் வகையிலான சொற்களை எனக்குச் சொல்வாயாக” என்றான்.


அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, அறிவு மற்றும் தவத்தைத் தவிர, புலன்களை அடக்குவதைத் தவிர, பேராசையைக் கைவிடுவதைத் தவிர வேறு எதிலும் நான் நன்மையைக் காணவில்லை. தன்னறிவால் {ஆன்ம ஞானத்தால்}, அச்சம் அகலுகிறது; தவத்தால், பெரியதும் மதிப்புமிக்கதும் வெல்லப்படுகிறது; பெரியோருக்காகக் காத்திருப்பதால் {பெரியோருக்குப் பணிவிடை செய்வதால்}, கல்வி அடையப்படுகிறது, தன்னடக்கத்தால் {புலனடக்கத்தால்}, அமைதி பெறப்படுகிறது.

கொடையாலோ, வேதச் சடங்குகளைப் பயில்வதாலோ கிடைக்கும் தகுதியை அடையாமல், விடுதலையை {முக்தியை} விரும்புவோர், கோபம் மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டு வாழ்வைக் கடத்துவதில்லை. சிறந்த வழியில் கிடைக்கும் கல்வியாலும், அறம்சார்ந்த போராட்டத்தாலும், கடுமையாகச் செய்யப்பட்ட தவத்தாலும் கிடைக்கும் மகிழ்ச்சி, இறுதிக்காலம் வரை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

{உறவினர்கள் 1}


தன் உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள், நன்கு தயாரிக்கப்பட்ட படுக்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உறக்கத்தைப் பெறுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் {உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள்} பெண்களிடத்திலோ, புலவர்கள் {மாகதர்கள்} மற்றும் துதிபாடிகளின் {சூதர்களின்} துதி பாடல்களிலோ கூட மகிழ்ச்சியை அடைவதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் அறம் பயிலவே முடியாது. இவ்வுலகில் மகிழ்ச்சி அவர்களுடையதாக இருக்காது.

எந்தச் சிறப்பும் அவர்களுடையதாக இருக்க முடியாது. அமைதி அவர்களிடம் எந்த அழகையும் கொடுப்பதில்லை. தங்களுக்கு நன்மை தரும் ஆலோசனைகள் அவர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. அவர்களிடம் இல்லாததை அவர்கள் பெறுவதுமில்லை, தங்களிடம் உள்ளதையும் அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவும் இயலாது. ஓ! மன்னா, அத்தகு மனிதர்களுக்கு அழிவைத் தவிர வேறு எந்த முடிவும் கிடையாது.

{ஒற்றுமையின் வலிமை}


பசுக்களிடம் பாலும், அந்தணர்களிடம் தவமும், பெண்களிடம் நிலையாமையும் {உறுதியற்ற தன்மையும்} உண்டாவதைப் போல, உறவினர்களிடம் அச்சமும் உண்டாக வேண்டும். ஒன்றாகச் சேர்க்கப்பட்ட சம நீளம் கொண்ட, எண்ணற்ற மெல்லிய நூல்கள், தங்கள் எண்ணிக்கையின் பலத்தால், தங்கள் மேல் முன்னும் பின்னும் நிலையாக உருண்டு கொண்டிருக்கும் உருளையைத் தாங்க முடிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நல்ல உறவினர்களின் காரியத்திலும் இதுவே வழக்கு. {அதாவது, நல்ல உறவினர்களுடன் ஒற்றுமையாக இருப்பதே, பெரும் பாரத்தைச் சுமக்கும் வலிமையைத் தரும்}.

ஓ! திருதராஷ்டிரரே, அந்தணர்கள், பெண்கள், உறவினர்கள், பசுக்கள் ஆகியோர் மீது கொடுங்கோன்மை செலுத்துபவர்கள், கனிந்த கனிகள் விழுவதைப் போல, தங்கள் நிலையில் இருந்து விரைவில் விழுகிறார்கள்.

தனியாக நிற்கும் ஒரு மரம், என்னதான் பெரியதாக, பலமாக, ஆழமான வேர்கள் உடையதாக இருந்தாலும், பலத்த காற்று வீசும்போது, அதன் அடிமரம் திசை திரும்பவும், நொறுங்கவும் செய்கிறது. எனினும், நெருக்கமாகவும், கச்சிதமாகவும் வளரும் மரங்கள், {பரஸ்பரம்} ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கும் தங்கள் தகுதியின் காரணமாக, மிகப் பெரிய கடுமையான காற்றையும் எதிர்த்து நிற்கின்றன.

எனவே, {யாரோடும் சேராமல்} தனியாக இருக்கும் ஒருவன், அனைத்து அறங்களுடனும் இருந்தாலும், காற்றால் வீழ்த்தப்படும் தனி மரம் போல, எதிரிகளால் வீழ்த்தப்படக் கூடியவனே என்று கருதப்படுகிறான். அதே போல, உறவினர்கள், ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் விளைவாக, தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டுகளைப் போல இணைந்தே வளர்கின்றனர். {உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ்பவன், அவர்களோடு சேர்ந்து தானும் வளர்கிறான்}.

{கொல்லத்தகாதவர்கள்}


அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், உணவிட்டோர், பாதுகாப்பு கோரி சரணடைந்தோர் ஆகியோர் {எப்போதும்} கொல்லப்படவே கூடாது.

{உடல் நலம்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, செல்வமில்லாமல், ஒருவனுக்கு மேனியில் நல்ல தரம் இருக்காது. எனினும் நீர் உடல்நலத்தோடு இருந்தால், நீர் உமது நன்மையை அடைய முடியும். உடல்நலமற்று நோயாளியாய் இருப்பவன் பிணமே.

{சினம்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம், அதன் கசப்பு, காரம், உறைப்பு, சூடு ஆகியவற்றால் வலிநிறைந்த விளைவுகளையே கொடுக்கும். அது {கோபம்}, எந்த உடல் நோயாலும் உண்டாகாத ஒருவகைத் தலைவலியாகும். அறிவற்றவர்களால் அவற்றைச் செரிக்கவே முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் {அறிவுள்ளவராகையால்} அதை விழுங்கி {கோபத்தைச் செரித்து = அடக்கி} அமைதி அடைவீராக. பிணியால் வதைக்கப்படுவோர் {துன்பப்படுவோர்} எந்த இன்பங்களையும் விரும்புவதில்லை, செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அவர்கள் விரும்புவதில்லை}. எனினும், நோய்வாய்ப்பட்டவர், கவலையால் நிறைந்து, மகிழ்ச்சி என்ன என்பதையோ, செல்வத்தால் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதையோ அறியமாட்டார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் திரௌபதி வெல்லப்படுவதைக் கண்டு, “நேர்மையானவர்கள், விளையாட்டில் ஏமாற்றுத்தனத்தைத் தவிர்ப்பார்கள். எனவே, துரியோதனனை நிறுத்தும்” என்ற சொற்களை முன்பே நான் உம்மிடம் சொன்னேன். எனினும், எனது சொற்களின் படி நீர் செயல்படவில்லை. வலிமை என்பது, மென்மைக்கு எதிரானது அல்ல. {மென்மையானவர்களை எதிர்ப்பவர்கள் பலசாலிகளல்ல}. மறுபுறம், வலிமையுடன் கலந்த மென்மையே, எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய உண்மையான கொள்கையைக் கொண்டுள்ளது.

{செழுமை}


நேர்மையற்றதனத்தை {கொடுமையை} மட்டுமே சார்ந்திருக்கும் செழுமை, அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த செழுமை, {ஒருவனின்} மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது. எனவே, உமது மகன்கள் பாண்டவர்களைப் பேணிக் காக்கட்டும். பாண்டவர்களும் உமது மகன்களைப் பேணிக் காக்கட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே நண்பர்களையும், எதிரிகளையும் பெற்ற குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இருவரும், மகிழ்ச்சியுடனும் செழுமையுடனும் ஒன்றாக {ஒற்றுமையாக} வாழட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்று, குருக்களின் மகன்களுக்கு நீரே புகலிடம்.

உண்மையில், குருவின் குலம், ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உம்மையே சார்ந்து {நம்பி} இருக்கிறது. ஓ! அய்யா, உமது புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து, கடுமையான வனவாச துன்பத்தை அனுபவித்த பாண்டுவின் பிள்ளைகளைப் பேணிக் காப்பீராக. உமது எதிரிகள் உம்மிடம் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்காதிருக்கட்டும். ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உண்மைக்குத் {சத்தியத்துக்குத்} தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்புவீராக” ,என்றான் {விதுரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்